Posts Tagged ‘தமிழ்நாடு’

ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய் இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.

********
செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர் இவ்வாறு தீர்ப்பு கூறினார்,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”

********

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டான்.தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து  வைத்து விட்டாயே!”என்றானே பார்க்கலாம்!

Courtesy: தென்றல்

அந்த பக்கம் போகாதீங்க.ஏதோ ஆர்ப்பாட்டம் நடக்கிறது.”

ஆனால் அந்த பக்கம் போனால்தான் வீடுக்கு சீக்கிரம் போகலாம்.இது சுற்று வழி.

எப்படியோ ஆர்ப்பாட்டத்தில் நுழைந்து சமாளித்துப்போய் விட வேண்டியதுதான்.எதிர் வந்தவர் கூறியதை காற்றில் பறக்க விட்டேன்.
வேகமாக நடை போட்டேன்.

ஒரே பெண்கள் கூட்டம்.ஆவேசமாக கூக்குரல்[ அவர்கள் மொழியில் கோசம்] போட்டுக்கொண்டிருந்தனர்.
ஏதாவது மாதர் சங்கமாக இருக்கும்.எங்காவது பெண் பாலியல் பலாத்காரம் விவகாரமாக இருக்கலாம்.

ஆனால் கோசங்கள் சற்று வேறுமாதிரி இருந்தது.கவனித்தேன்.
“வெறும் சம்பளம் மட்டும் போதாது.விலைவாசிப் புள்ளிகளுக்கேற்ப அகவிலைப்படி வேண்டும்,,வேண்டும்,
ஆண்டுக்கொருமுறை மிகை ஊதியம் போனஸ் வேண்டும்,,வேண்டும்.”
அடடா.சத்துணவு பெண்களாக இருக்காலாம்.அல்லது அங்கன்வாடி இனத்தவர்களாக இருக்கலாம்.மகளிர் காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொன்டிருப்பது பார்வையில் பட்டது.

அது யார் .?

ஒரு ஓரமாக.காசி போல் தெரிகிறதே.
அது நண்பன் காசியேதான்.

ஏன் ஒரு ஓரமாக ஒளிந்து நிற்பது போல் இருக்கிறான்.என்னைப் பார்த்து விட்டான்.

கையை அசைத்து ரகசியமாக அல்லது பயத்துடன் கூப்பிடுவது தெரிந்தது.
வேகமாக அதே நேரம் அவனின் ரகசியத்துக்கு ஈடு கொடுத்து கள்ளக்காதலியை நெருங்கும் காதலன் போல் சென்றேன்.
“பேசாமல் அந்தவழியில் போயிருக்கலாம்லே”?
ஏன்?என்ன விசயம்.?
“இந்த ஆர்ப்படத்தில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதில்லையா?
“என்ன ஆர்ப்பாட்டம்.சத்துணவா,மகளிர் சங்கமா?இதில் நாம் மாட்டி என்ன ஆகப்போகிறது?”
“அங்கே பாருடா மடையா?”
நானும் மடையன்போல் பார்த்தேன்.அட எனது மனைவி.அருகில் காசியின் பத்தினி.அருகில் பார்க்க பார்க்க திகைப்பு.
தெருவில் உள்ள அத்தனை மனைவிகளும்.அங்கு இருந்து கோசமிட்டனர்.

என்ன இழவு போராட்டம்.?

“மனைவிகளுக்கு மாதா,மாதம் சம்பளம் கொடுக்க நீதிமன்றம் உத்திரவிட்டு விட்டது அல்லவா?
இவங்களுக்கு சம்பளம் மட்டும் போதாதாம்.அகவிலைப்படி.மிகை ஊதியம்,கொடுபடா ஊதியம்.இன்னமும் எத்தனைவகை ஊதியம் உள்ளதோ அத்தனையும் வேண்டுமாம்.அதான் இந்த ஆர்ப்பாட்டம்.’ காசி கிசு,சிசுத்தான்.எனக்கோ தலையை சுற்றிவந்தது.கீழே விழுந்து விடும் அபாயம் தெரிந்தது.
ஆனால் விழும் இடம் சாலை போட பல ஆண்டுகளுக்குமுன்பே கொட்டி வைத்த கற்குவியல்.
அதில் விழாமல் இருக்கவும் ,அதன் மீது அமர்ந்து சற்று சிரமபரிகாரம் செய்து கொள்ளும் எண்ணத்திடன் அருகில் போனேன்.

கால் செருப்பில் சிறு கல்.உறுத்தியது.

ஆர்ப்பாட்டத்தை சோகத்துடன் பார்த்துக்கொண்டே ,செருப்பினூடே புகுந்த சுண்டைக்காய் அளவு கல்லை எடுக்க முயற்சித்தேன்.செருப்பு கீழே கழன்று விழுந்து விட்டது.செருப்பை எடுத்தேன்.

“ஆர்ப்பாட்டத்தில் செருப்பையா வீசுகிறாய்?’
கழுத்தில் கை விழ திரும்பினேன்.பெண் காவலர்.சும்மா சொல்லக்கூடாது பார்த்தாலே பயம் வரும் தடித்த உருவம்.

‘நான்.செருப்பு,கல்லு,”

போலிசை பார்த்தாலே பயம்.
அதிலும் இது பெண் போலீசு.வார்த்தைகள் தடுமாற ஒருகையில் செருப்பும்-மறுகையில் கல்லுமாக கையும் -களவுமாக,

மாட்டிக்கொண்ட நிலை.காசியைப்பார்த்தேன்.பாவி பறந்து போய் பத்து நிமிடம் ஆகியிருக்கும் போல் தெரிந்தது.
செருப்பு கையோடே ஏதோ கசாப்பை பிடித்து விட்ட பெருமிதத்துடன்.தர,தர வென காலரை பிடித்து இழுக்க

‘நான் சும்மா,நான்,செருப்பு,நான் கல் .நான் இல்லை”

என தொடர்புகளே அற்ற வார்த்தை உளறல்களுடன் இழுபட்டு சென்றேன்.
சாதாரண பெண்ணை விட்டு தப்பிக்க இயலா அளவு பயம்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கல் ஒரு கண்ணாடிஅளவுக்கு என்னைப் பார்த்து கோபத்துடன் முன்னேற, அதிலும் எனது பத்தினி முகம் அதிகோரமாக தெரிய

“நான் இல்லை.நான் கல்.நான் செருப்பு ” என்ற உளறல் அதிகரித்தது.

‘நான் ஈ ‘என்று கூட சொன்ன ஞாபகம்.
—————————————————-
“என்ன.சொல்றீங்க .நீங்க இல்லீனா யாரிந்த நூறு ரூபாயை எடுத்தாங்க.”
மனைவி உலுக்க தூக்கம் கலைந்தது.

“என்ன.நூறு ரூபாய்?”

“உங்க சம்பளத்தை இந்த மாதம் எடுக்க ஏடிஎம் போய் பார்த்தால்.சம்பளத்தில் வழக்கத்தை விட நூறு ரூபாய் குறையா கணக்கு சீட்டு வருகிறதே”
அட தூக்கத்தில் என்னவோ கெட்ட கனவு.

“ஆபீசிலே ஒருத்தர் வீட்டு கல்யாணம்.எல்லோரும் நூறு ரூபாய் மொய் ஒரு ஆள்கிட்டே கொடுத்து விட்டோம்.அதான்.
உங்கிட்டே சொல்லனும்னு இருந்தேன் மறந்துட்டு.”அசடு வழிந்தேன்.

“வர,வர வெட்டி செலவு அதிகமாயிட்டு.பஸ்-காபி செலவுக்கு கொடுக்கிறதை குறைச்சாத்தான் சரி வருவீங்க.”

கோபம் வர தூக்கி எறிந்தேன்.தலயணையைத்தான்.
அதுவும் அவள் போய் விட்டாள் என்று நிச்சயம் ஆன பின்புதான்.

யாராவது மாதமானால் சம்பளத்தை அல்லது ஏடிஎம் அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு நம்  மாத செலவுக்கு பணம்தர மறுக்கும் பெண்சாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டீர்களா?

நான் முழு ஒத்துழைப்பு தர தயார்.

மனதளவில் தான்.

ஒன்று படுவோம்,

-போராடுங்கள்-

வெற்றி பெறுவோம்.

யாருங்க அது தங்கமணிக்கு லிங்க் அனுப்ப பாக்கிறது? எழுதினது நான் இல்லங்க: இவரு  தான்: http://suransukumaran.blogspot.in

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம பொன்ராஜ் .

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.
“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம பொன்ராஜ் க்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி – “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், பொன்ராஜ் .

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” – செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம பொன்ராஜ் .

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” – மனசுக்குள் பொன்ராஜ் .

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

பொன்ராஜ் அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

பொன்ராஜ் ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” – கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

—–
தமிழன்டா !!!!!

நீதி :- ஹாஹாஹா…! விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!

Courtesy: Sukumar Swaminathan

வருடம் : கி .பி 2150 , இடம் : தமிழ் நாடு

” பொது மக்கள் துணி காயபோடுறதுக்கு வசதியா தெருவெல்லாம் கல் தூணை நட்டு வச்சு , அதுக்கு குறுக்கால கம்பி கெட்டி வச்சிருக்காங்களே அந்த கால ஆட்சியாளர்கள்..அவங்கல்லாம் சிறந்த ஆட்சியாளர்கள்தானே டீச்சர்….! ”

” அப்படி இல்லை தம்பி , அந்த காலத்தில் இதற்கு பெயர் எலெக்ட்ரிக் போஸ்ட்..இதன் வழியாகத்தான் மின்சாரம் என்னும் பொருளை கொண்டு சென்றார்கள்..
அதைதான் நாம் துணி காயபோட பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.. ”

Courtesy: Facebook

இப்ப உள்ள சூழ்நிலையில் நம்ம அரசியல் தலைவர்களின் செல்போன் ரிங் டோன்ஸ் என்னவா இருக்கும்னு ஒட்டு கேட்டதுல இருந்து…..

ஜெயலிதா –  “நான் யாரு? எனக்கேதும் தெரியலியே? என்ன கேட்டா நான் சொல்ல வழியில்லையே!

ஓ.பி.எஸ் –    “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!”

ஜெயகுமார் – “சட்டி சுட்டதடா கை விட்டதடா…புத்தி கெட்டதடா!”

செங்க்ஸ்    –   “பொன்னான மனமே பூவான மனமே வைக்காத பொண்ணுமேல ஆச..”

நத்தம் விஸ்வு – “மின்சாரம் என்மீது பாய்கின்றதே….!”

சைதை துரைசாமி – “இது மௌனமான நேரம்..இளமனதில் என்ன பாரம்!”

கருணாநிதி – “என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே… ஆமா தாய்க்குலமே!”

ஸ்டாலின் –   “அண்ணன் என்ன தம்பி என்ன..சொந்தம் என்ன பந்தம் என்ன!”

அழகிரி –        “கூண்டுக்குள்ள என்ன வச்சு கூடி நின்ன ஊற விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன?”

கனிமொழி – “உலக வாழ்க்கையே ஒரு ஜெயிலு வாழ்க்கைதான்”

சீமான் – “பச்ச்ச்ச…..பச்ச மஞ்ச செவப்பு தமிழன் நான்…….”

கேப்டன் – “ஆண்டவன பார்க்கணும்..அவனுக்கும் ஊத்தணும்”

ராமதாஸ் – “எனக்கென ஒருவருவரும் இல்லாமல் போனாலும் உனக்கென நானிருப்ப்பேன்”

அன்புமணி – “எங்குத்தமா உங்குத்தமா ?யார நானும் குத்தம் சொல்ல?”

வைகோ – “நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?”

நாஞ்சில் சம்பத் – “போடாங்..கோ…..போடாங்..கோ ”

படித்ததில் பிடித்தது: வைகை ..

ஒரு நாள் முல்லா சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.எதிரே வந்த நண்பர்,முல்லாவின் முகத்தைப் பார்த்து அவர் எதோ வலியினால் அவதிப்படுவதுபோல உணர்ந்தார்.”என்ன முல்லா,தலை வலியா,வயிற்று வலியா?ஏன் என்னவோபோல இருக்கிறீர்கள்?”என்று கேட்டார்.முல்லா சொன்னார்,”வேறொன்றுமில்லை,நான் அணிந்திருக்கும் செருப்புக்கள் என் காலுக்கு மிகச் சிறியவையாக இருப்பதால் பாதத்தில் வலி எடுக்கிறது.””பின் ஏன் அவற்றை அணிந்திருக்கிறீர்கள்?என்று நண்பர் கேட்க,முல்லா சொன்னார்,”இந்த செருப்பினால் தான் ஒவ்வொரு நாளும் நிம்மதி அடைகிறேன்.நாள் முழுவதும் இந்த சிறிய செருப்புக்களை அணிந்து நடந்துவிட்டு பாதங்களில் வலியுடன்  வீட்டிற்குச் சென்று அவற்றைக் கழட்டியவுடன் கிடைக்கும் ஒரு விடுதலை உணர்வு இருக்கிறதே,அதற்கு இணை எது?இது ஒன்றுதான் நான் அடையும் மகிழ்ச்சி.எனவே இந்த செருப்புக்களை நான் விட மாட்டேன்.”

Courtesy: Google.

ஆமாங்க.சும்மா சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘ சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு.
‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்.

·         ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் என்ன செய்தாய்?”என்று கேட்டால் அவன் கூறுவான் “சும்மாதான் இருந்தேன்.” என்று.அப்படியென்றால் “சும்மா” என்பது இங்கு எதையுமே செய்யாமல் வெட்டியாக இருந்ததை குறிக்கிறது.
·         ஒருவன் ஒரு பெண்ணை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பெண் அவனிடம் “எதுக்கு என்னை பார்த்தாய்?” என்று கேட்டால் அவன் கூறுவது “சும்மாதான் பார்த்தேன்” என்பதாகத்தான் இருக்கும்.இங்கு அவன் அந்த பெண்ணிடமிருந்து தப்பிக்க ஏதோ கூறவேண்டுமென்று ‘சும்மா’என்கிறான்.
·         “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டால் அதற்கு மற்றொரு கேள்வியை கேட்பீர்கள் “எதற்காக கேட்கிறாய்?”என்று.அதற்கு ஒரு சிலர் “சும்மாதான் கேட்கிறேன்” என்று பதில் அளிப்பார்கள்.இங்கு ‘சும்மா’ என்றால் ‘தெரிந்து கொள்ள’ என்ற அர்த்ததில் வருகிறது.
·         “என்ன பன்ற?”
“சும்மா,படிச்சுக்கிட்டு இருக்கேன்”
இங்கு ‘சும்மா’ என்பது கருத்தோடு ஒரு செயல் செய்வதை குறிக்கிறது.
·         “என்ன திடீரென்று என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?”
“சும்மா,இந்த பக்கம் வேலை இருந்தது.அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்”
இங்கு ‘சும்மா’ என்பது எதேர்ச்சையாக நடைபெற்ற செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
·         “நேர்க்காணல் என்னவாயிற்று?”
“வழக்கம் போலதான்.வேலை கிடைக்காது என்று தெரியும்.சும்மாதான் போயிட்டு வந்தேன்.”
இங்கு ‘சும்மா’ என்பது நடக்கப் போவதை தெரிந்துகொண்டே செய்வதை குறிக்கிறது.
·         “புது பேனாவா?”
“ஆமாம்.இந்த புத்தகத்தை வாங்கும்போது சும்மா கெடச்சுது.”
‘சும்மா’ என்பதற்கு ‘இலவசம்’ என்றும் பொருள் வருகிறது.
·         “இந்த குழந்தை சும்மா சும்மா அழுவுது” என்று நாம் கூறுவதுண்டு.இங்கு ‘சும்மா சும்மா’ என்றால் ‘அடிக்கடி’ என்று பொருள்படுகிறது.
·         “சும்மா இருக்கிறவனை ஏண்டா வம்புக்கு இழுக்குற?”
‘சும்மா’ என்றால் வம்புக்கு போகாமல் தன் வேலையைப் பார்த்தால் என்பது அர்த்தம்.
·         வகுப்பறையில் வாத்தியார் “எல்லாம் பேசாம சும்மா இருங்க” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.
·         யாராவது உங்களை தொந்தரவு செய்துகொண்டிருந்தால் “கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா?” என்று கேட்போம்.அதாவது “என்னை தொந்தரவு செய்யாதே” என்பதற்கு மாற்றாக அதை கேட்கிறோம்.
·         “அந்த பையில ஏதாவது இருக்கா?”
“இல்ல.சும்மாதான் இருக்கு.”
அதாவது காலியாக இருக்கிறது.
·         வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் உங்களுக்கு எதுவும் எடுத்து வரவில்லை என்றால் “வெளிநாட்டிலிருந்து வருகிறீர்கள்.சும்மாவா வருவது?” என்று கேட்போம். ‘சும்மா’ என்பது வெறும் கையோடு வந்ததை குறிக்கிறது.
·         “அய்யோ! பாம்பு!”
“அய்யோ! எங்க?”
“ஏய்! பயந்துட்டியா? சும்மா சொன்னேன்.”
‘சும்மா’ என்பது ‘பொய்’ என்று பொருள் தருகிறது.

இந்த மாதிரி ‘சும்மா’ என்ற வார்த்தை நேரம் மற்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது அர்த்தத்தை மாற்றிக்கொள்கிறது.‘சும்மா’பற்றி இன்னும் எழுதவேண்டும் என்றால் சும்மா எழுதிக்கிட்டே போகலாம். ஆனா உங்களுக்கு கடுப்பாகுமே!
அப்புறம் ஏன் இத எழுதினேன்னா கேக்கிறீங்களா? அது ஒன்னும் இல்லைங்க.நானும் வீட்டில சும்மாதான் இருக்கேன்.அதான் சும்மா எழுதினேன்.
சும்மா உக்காந்து யோசிச்சது: http://tamilcrazy.blogspot.in

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து மது இல்லாத மாநிலமாக மாற்றினால் எப்படி இருக்கும் நம்ம ஊர்….???

1. 20 சதவீத குடிகாரர்களுக்கு கை நடுங்கும்
2. சாக்கனாக் கடையில் அதிக விலை என்று புலம்பத்தேவையில்லை
3. சிக்னலில் போலீசார் வாயை ஊத சொல்ல மாட்டாங்க
4. பொஞ்சாதிக்கு பம்பீட்டு வீட்டுக்குள் போகத்தேவையில்லை
5. பக்கத்து வீட்டுக்காரனிடம் சண்டைக்கு போவது குறையும்
6. மப்புல மனைவியிடம் அடி வாங்கியவர்கள் இனி தப்பித்துக்கொள்ளலாம்
7. ஞாயிற்றுக்கிழமை போலீசார் அரசு மருத்துவமனை டாக்டர்ஸ் நிம்மதியாக இருப்பார்
8. எப்ப வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக இரத்தம் வாங்கலாம்…
9. ஓவராக்குடிச்சு ரோட்டோரம் மட்டையாவது இருக்காது..
10. பேருந்தில் பயணம் செய்யும் போது சரக்கடித்தவர் நாற்றம் தாங்கமுடியாமல் தவிர்த்து நிற்போம் இனி அது இருக்காது…
11. பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா சுற்றுலா செல்வது அதிகரிக்கும்…
12. அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும்.
13. காதல் தோல்வியில் சிக்கியவர்கள் மாற்று வழி இன்றி அலைவார்கள்

Sathish Sangkaviக்கு தோணியது இவ்வளவுதான்… மேலும் இருப்பதை சொல்லுங்க

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

<<< SHARE THIS >>>

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்…

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

நன்றி – ஏகலைவன். Sangoothara Vayasula Sangeetha  #facebook

Courtesy: ம அசோக் குமார்

ஒரு மனிதன் ஒரு காரை ஓட்டுவதுபோல கற்பனையான ஸ்டீரிங்கை
இயக்கிக் கொண்டு காலை ஆக்சிலேடரை மிதிப்பதுபோல பாவனை செய்து கொண்டே நடந்து வந்தான்.அவனுடன் உதவியாளன் போல ஒருவனும் வந்தான்.முதல் மனிதனின் வித்தியாசமான நடவடிக்கை கண்டு அங்கு ஒரு
கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நடவடிக்கையைப் பார்த்து கூட்டத்தில் ஒருவர் அந்த உதவியாளரிடம் விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்,”இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகுந்த ஆசை.நிறையப் போட்டிகளில் கூடக் கலந்து பரிசுகள் வாங்கியிருக்கிறார்.
துரதிருஷ்ட வசமாக அவருக்கு மன நோய் ஏற்பட்டு விட்டது.அதனால் அவரைக் கார் ஓட்ட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.என்றாலும் பழக்க தோசத்தின் காரணமாக தினசரி இங்கு இதேபோல வந்து இந்தக் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்குக்குப்போவார்.பிறகு வந்து காரை எடுத்துசெல்வதுபோல
செல்வார்.”கூட்டத்தில் ஒருவர் கேட்டார்,”ஏனப்பா,நீயாவது நிலையை அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இதைத் தடுக்கப் பார்க்கலாமே?”
அவன் உடனே படபடப்புடன் சொன்னான்,”தயவு செய்து சப்தம் போட்டுப் பேசாதீர்கள்.அவர் தினசரி காரை நிறுத்துவது போல் செய்து விட்டு என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்க சொல்வார்.நானும் அதுபோல நடித்து நூறு ரூபாய் வாங்கி என் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதைக் கெடுத்து விடாதீர்கள்.”கூட்டம் வாயைப் பிளந்தது.

courtesy: http://jeyarajanm.blogspot.in

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாது அப்பா
இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு?
நீதி: சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை.

ஆங்கில மூலம்: http://rammalar.wordpress.com

அப்ப என் பையன் 2nd Std
படிச்சிட்டு இருந்தான்..

அவனுக்கு Quarterly Exams
நடந்துட்டு இருந்தது..

அடுத்த நாள் SOCIAL Exam.
அதுக்கு சொல்லி குடுக்க
சொல்லி என்கிட்ட வந்தான்.

” ஆண்டவா என் பையனை நீதான்
காப்பாத்தணும்னு ” வேண்டிகிட்டு
பாடத்தை சொல்லி குடுத்துட்டு
இருந்தேன்..!

அதுல ஒரு கேள்வி..

” Which Animal is called as
Ship of the Desert..? ”

Ans : CAMEL

இந்த ” CAMEL ” ங்குற வார்த்தை
அவனுக்கு தகராறாவே இருந்தது..
” டக்னு ” ஞாபகம் வராம தடுமாறினான்..

உடனே எனக்கு ஒரு யோசனை..
இதுக்கு ஒரு ஷார்ட் – கட் சொல்லி
குடுத்தா என்னான்னு..

( Camel-க்கு எல்லாமா ஷார்ட் கட்டானு
தானே யோசிக்கறீங்க..?

ஹி., ஹி., ஹி… நாங்கல்லாம் படிக்கிற
காலத்துல எலி போட்டுக்குற Pant = Elephant-னு
ஷார்ட் கட்ல படிச்சவங்களாக்கும்..!!! )

உடனே அவனை கடைக்கு கூட்டிட்டு
போயி ஒரு Camlin பென்சில் வாங்கி
குடுத்தேன்..

அதுல சின்னதா ஒரு ஒட்டகம் படம்
போட்டு இருக்கும்.. அதை காட்டி…

” ஒரு வேளை அந்த கேள்விக்கு உனக்கு
Answer தெரியலைன்னா.. இந்த பென்சிலை
திருப்பி பாரு.. ஞாபகம் வந்துடும்னு ”
சொன்னேன்..!

அவனும் சந்தோஷமா தலையை ஆட்டினான்.

அடுத்த நாள் : காலை 9.30 மணி

டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்..
நான் வாங்கி குடுத்த அந்த Camlin பென்சில்
டேபிள் மேலயே இருந்தது..

எனக்கு ” பக்னு ” ஆகிடுச்சு

என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

” அவன் பென்சிலை மறந்துட்டு
போயிட்டானா..? ”

” இல்லங்க.. இந்த பென்சில் லைட்டா
எழுதுதுன்னு சொன்னான்… அதான்
Apsara பென்சில் குடுத்து இருக்கேன்..! ”

( ஐயையோ அப்ப Ship of Desert கேள்விக்கு
” Apsara “னு எழுதி வைப்பானோ..?! அவ்வ்வ்..! )

நேத்து நடந்த Short-Cut மேட்டரை
என் Wife கிட்ட சொன்னேன்..

” ஏங்க உங்க குறுக்கு புத்தியை
அவனுக்கும் கத்து தர்றீங்க..? ”

” நோ குறுக்கு புத்தி., இது Short-Cut..! ”

” ம்ம்ம்..! இன்னிக்கு மட்டும் அவன்
தப்பா பதில் எழுதிட்டு வரட்டும்.. அப்ப
இருக்குது உங்களுக்கு..!! ”

Evening ஸ்கூல்ல இருந்து வந்ததும்.,
அவன் Question Paper-ஐ வாங்கி பாத்தா..
அந்த பாழாப்போன கேள்வி இருந்தது..

அவனை கேட்டேன்…

” டேய். அம்மா உனக்கு வேற பென்சில்
குடுத்துட்டாங்களே.. இதுக்கு எப்படிடா
பதில் எழுதின..? ”

” அதனால என்னப்பா..? எனக்கு தான்
Answer நல்லா மனப்பாடம் ஆகிடுச்சே..! ”

( அப்பாடா.. தப்பிச்சேன்டா..! )

” சரி என்ன பதில் எழுதின..? ”

” CAMLIN ”

” ?!!?!?? “

” ஒரு மனுஷனுக்கு எந்த கஷ்டம்
வேணாலும் வரலாம்.. – ஆனா…

பொங்கி வர்ற சந்தோஷத்தை
Control பண்ணிட்டு சோகமா
இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்குற
நிலைமை மட்டும் வரவே கூடாது…! ”

சரி., நாம மேட்டர்க்கு போவோம்..

எங்க மாமனார் வீட்ல நானும் ,
என் சகலையும் ஒரு கோடு கிழிச்சா…
அதை யாரும் தாண்ட மாட்டாங்க..

( அது மேலயே நடந்து போவாங்க..
அது வேற விஷயம்..)

போன வாரம் என் மச்சானுக்கு
பொண்ணு பார்க்க போயிருந்தோம்..

பொண்ணை பாத்துட்டு.. எல்லோரும்
டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க..

ஆனா எங்க ரெண்டு பேரையும்
கண்டுக்கவே ஆள் இல்ல.. நாங்களும்
என்ன தான் பண்றாங்கன்னு வேடிக்கை
பாத்துட்டு இருந்தோம்.. ( வேற வழி..?! )

கொஞ்ச நேரம் கழிச்சி., என் மச்சான்,
என் சகலை Wife, என் Wife மூணு பேரும்
எங்க கிட்ட வந்து..

” ஏங்க பொண்ணு ஓ.கேவா..? ”

” மாப்ள பக்கத்துல தானே இருக்கான்..
அவனை கேளுங்க…! ”

” இந்த லூசு.. நீங்க ரெண்டு பேரும்
ஓ.கே சொன்னாதான் ஓ.கேன்னு
சொல்லிடுச்சு..! ”

( ஆஹா.. தெய்வ மச்சான்..! )

இதை கேட்டதும் நான்…

” இப்படி டக்னு கேட்டால்லாம் எங்களால
பதில் சொல்ல முடியாது.. ஒரு வாரம்
டைம் வேணும்..! இல்லியா சகலை..”

” என்னாது ஒரு வாரமா..? ” எங்க மச்சான்
டென்ஷன் ஆகிட்டான்..

இப்ப என் சகலை திருவாய் மலர்ந்தாரு..

” ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல..
அதுக்குதான் ஒரு வாரம் டைம் கேக்கறோம்..
அப்படித்தானே சகலை…?! ”

( ஆஹா.. கோத்து விட்டுட்டான்யா..! )

ஹும்ம்.., இப்ப பதிவோட
முதல் ரெண்டு வரியை
மறுபடியும் படிச்சிக்கோங்க..
.
.

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

அப்பாவி நண்டும் பொல்லாத தேள்கள் இரண்டும்

அந்த நண்டுக்கு ஒரு தேளுடன் கலியாணம் ஆனது ; அதெப்படி என்று யோசிக்காமல் மேலே படிக்கவும்.

இரண்டு பேரும் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தனர்.. அதன் அடையாளமாகவும் இந்த விநோத தம்பதியினரின் மகிழ்ச்சியாகவும் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.. அதுவும் தேளாகவே இருந்தது.. இந்த குடும்பமானது ஒரு வலையில் குடியிருந்தது.

சின்னத் தேளானது மிகவும் மகிழ்ச்சியாகவும் , பெரிய தேள், நண்டு இவற்றின் பராமரிப்பில் மிகவும் செல்லமாகவும் வளர்ந்தது. ஆனாலும் சின்னத் தேளுக்கு ஒரு குறையிருந்தது.. தினசரி இரவு தூங்கப் போகும் போது, நண்டிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தது.. காரணம் ஒன்றும் பெரிசில்லை.. அந்த நண்டானது கொழுத்த உடம்பு கொண்டதாக இருந்தபடியால் தூங்கும் போது சின்னதாக குறட்டை ஒலி எழுப்பி தூங்குவதை வழக்கம் கொண்டிருந்தது.. இதனால் தனது தூக்கம் கெடுவதாகவும் சின்னத் தேளானது பெரும் சண்டை போடத் தொடங்கினது.. பெரிய தேளானது இந்த சங்கதியில் சின்னத் தேளுடன் ஒத்துப் போவதாகவே இருந்தது..

இந்த இரண்டு தேள்களும் சேர்ந்து கொண்டு, அந்த அப்பாவி நண்டை நடு நிசியில் எழுப்பி குறட்டை ஒலி எழுப்பாமல் தூங்கும் படிக்கு வற்புறுத்துவதும், அந்த அப்பாவி நண்டு தூக்கம் கலைந்து அழுவதுமாகத் தொடர்ந்தது

இந்தக் கதையினை மேலே தொடர்ந்து எழுதுவதற்குள் ஒரு ஃபோன் கால் வந்தது.. அதனைக் கவனித்து வருவதற்குள் , இதனை என் மனைவி படித்து விட்டு பெரிய தேள், சின்ன தேள் என்பது விருச்சிக ராசிக்காரர்களான அவளையும் என் மகளையும் குறிப்பதாகவும் , நண்டு என்பது கடகராசியான என்னை சொல்வதாகவும் சண்டைக்கு வந்ததோடு, கதையின் தலைப்பை பொல்லாத நண்டும், அப்பாவி தேள்களும் என்று மாற்றும்படி சொல்கிறாள்

என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள்

G+ இல் Chandramowleeswaran. V

தங்கமணி: ஜவ்வரிசி வாங்கிட்டு வந்தோம்ல

ரங்கமணி: ஆமா

தங்கமணி: அதை வச்சி இது வரை ஒண்ணும் செய்யல

ரங்கமணி: என்ன பண்ணலாம்

தங்கமணி: இன்னைக்கு உன் ஃப்ரண்ட் xxxxxக்குப் பொறந்தநாளுல்ல

ரங்கமணி: ஆமா

தங்கமணி: அதனால பாயசம் செய்றேன், ஆஃபிஸ் முடிஞ்சு வந்து அவருக்குக் கொண்டு போய் கொடு

ரங்கமணி: சரி ஒகே. என்ன திடீர்னு என் ஃப்ரண்ட் மேல இவ்வளவு அக்கறை?

தங்கமணி: உன் தம்பி yyyy ஊருக்குப் போனதுலேர்ந்து நம்ம சமையலை டெஸ்ட் பண்ண ஒரு சரியான ஆடு கிடைக்கல. இன்னைக்கு xxxxx தான் அந்த ஆடு

#மனைவி அமைவதெல்லாம் _____________

Courtesy: கேவி ஆர்

இரண்டு கழுதைகள் ரொம்ப நெருங்கி நண்பர்களாக இருந்தன. ஒன்றை ஒரு பெரிய பணக்காரர் வாங்கினார். இன்னொன்றை ஒரு பெரிய வியாபாரி வாங்கினார்.

பணக்காரர் அவரோட கழுதையை அவரோட குழந்தை மாதிரி நடத்தினார். ஆனா வியாபாரியோ அவரோட கழுதையை மோசமா நடத்தினார், சரியா சாப்பாடு போடக் கூட மாட்டார், ஆனா கடுமையா வேலை வாங்குவார்.

சில வருடங்களுக்கு இரண்டு கழுதைகளும் சந்தித்து கொண்டது. இரண்டும் பேசிகிட்டு இருந்தப்ப, பணக்காரரோட கழுதை, தன் நண்பன் படுற கஷ்டத்தை நினைச்சு கஷ்டப்பட்டு சொல்லிச்சு “என் முதலாளியால உன்னை உன் முதலாளிகிட்ட வாங்க முடியும். உனக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும்”

ஆனா வியாபாரியோட கழுதை சொல்லிச்சு. “வேண்டாம், எனக்கும் அங்க ஒரு நம்பிக்கை இருக்கு”

“என்ன நம்பிக்கை?”

“வியாபாரிக்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள். அவன் ஏதாவது தப்பு பண்ணும்போதெல்லாம், வியாபாரி அவகிட்ட சொல்வார்- இதே மாதிரி செஞ்சிகிட்டு இருந்தன்னா உன்னை இந்த கழுதைக்கு கல்யாணம் செஞ்சு வச்சிடுவேன்”

G+ இல் மாணவன் சிலம்பு பகிர்ந்து கொண்டது

இன்றே கடைசி, மதியத்துக்குள் குடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் குடுக்க வேண்டிய விண்ணப்பத்தைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பெயர், பிறந்த தினம், கல்வித்தகவல்கள், முகவரி, அலைபேசி எண். எல்லாம் சரியாகவே இருந்தது. விண்ணப்பத்தின் கூடவே சமர்பிக்க வேண்டிய சான்றிதழ் நகல்களின் பட்டியலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன். கிளம்ப எத்தனிக்கையில்தான் அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. “All the Certificate photocopies must be duly attested” . அட, இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கின்றது. பல்கலைக்கழகத்துக்கு எட்டு கிலோமீட்டர் போக வேண்டும். இன்று சனிக்கிழமை வேறு. எங்கு போய் attestation வாங்குவது. யாரிடம் வாங்குவது. இதே நெல்லையாய் இருந்தால், attestation போடுவதற்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன், எனது அம்மா அப்பா இருவருமே கூட ஓய்வு பெறும் வரையில் பலருக்கும் attest பண்ணியிருக்கிறார்கள்.. ஆனால் சென்னையில எனது பழக்கம் எல்லாமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களோடே என்பதால் Attestation போடுமளவிற்கு அரசு துறையில் உள்ளவர்கள் யாரும் பழக்கம் இல்லை. என்ன செய்வது? தோன்றியது, வீட்டின் அருகில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்தில் போய் கேட்டுப் பார்க்கலாம். பொறியாளர் எவரேனும் இருந்தால் போடுவார்கள். எல்லாச் சான்றிதழ்களின் அசலையும் நகலையும் எடுத்துக் கொண்டு அங்கே போனேன்.

கையில் பைலோடு உள்நுழைவதைப் பார்த்த கடைநிலை சிப்பந்தி ஒருவர் வழிமறித்தார்.

“யாரு சார்? என்ன வேணும்?”

“AE,  ADE யாராவது இருக்காங்களா? பாக்கணும்”

“கமெர்ஷியல் கனெக்ஷன் தான? மொதல்ல என்கிட்ட சொல்லுங்க சார்.. நேரா AEயப் பாக்க முடியாது.”  – பைலைப் பார்த்து தப்பாக நினைத்திருந்தார்.

“கனெக்ஷன்லாம் இல்லீங்க. Attestation வாங்கனும். அதான்..”

” Attestationஆ… போங்க… உள்ளார யாராவது இருந்தா போய்ப்பாருங்க.” சில்லறை தேறாது என்ற கடுப்பில் தலையைச் சொறிந்து கொண்டு போனார்.

இன்னும் இரண்டு மூன்று பேரைக் கடந்த போதும் இதே. Attestation என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஏதோ பல்பு திருடியவனைப் பார்ப்பது போல் கேவலமாகப் பார்த்தார்கள். ஒருவழியாக AEன் அறையை நெருங்கி வாசலில் போய் நின்றேன். இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்த்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. நான்காம் முறை பார்த்த பொழுது கேட்டார்

“யாரு நீங்க என்ன வேணும்?”

” Attestation வேணும் சார்”

“எதுக்கு Attestation?”

“காலேஜ் அப்ளிக்கேஷனுக்கு certificate, Marksheet attestation ”

“அது ஏன் சார் சனிக்கிழமை வர்றீங்க… வாரநாள்ல வர வேண்டியதுதான. போய்ட்டு திங்கக்கிழமை வாங்க..”  – அது வரையில் அவர் துக்ளக்தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் மை லார்ட்.

“இல்ல சார், இன்னிக்கு கடைசி நாள்… குடுக்கணும்”

“உங்க கடைசி நேர அவசரத்துக்கு எங்களையும் பாடாப்படுத்துங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க தம்பி” சொல்லியவாறே எழுந்து போய் கம்ப்யூட்டரில் போய் உட்கார்ந்தார். கண்டிப்பாக சீட்டுதான் விளையாடப் போகிறார் என்று உள்மனது சொல்லியது. ஆனால் இல்லை.

“யோவ் ராமநாதன், அந்த DC பண்ணதுல பில்லு கட்டுனவன் லிஸ்டக் கொண்டாய்யா… இந்த எளவுல என்ட்ரியப் போடணும்” என்று சொல்லியவாறே சிஸ்டத்தை ஆன் செய்து மவுசைத் ஆட்டிக் கொண்டே இருந்தார். ராமநாதன் வந்து லிஸ்டைக் கொடுத்துவிட்டு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனார். ராமநாதன் – அந்த முதல் கமர்ஷியல் கனக்ஷனார்.  சிரித்து வைத்தேன்.

ஒரு ஐந்து நிமிடம் போயிருந்தது. என்னதான் செய்கிறார் என்று தற்செயலாகப் பார்த்தே. வினோதமாக ஏதோ செய்து கொண்டிருந்தார்.  முதலில் மவுசை வைத்து மவுஸ்பேடில் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ போட்டார். பின்னர் ஒரு க்ளிக். திரும்பவும் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ. பின்னர் ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.  மீண்டும்  பதினாறு, க்ளிக், பதினாறு, டைப்பிங்…. தொடர்ந்து கொண்டிருந்தது. விஷயம் என்னவென்றால், அது ஒரு Form. நான்கு Text Boxகளை Fill பண்ண வேண்டும். Submit.  ஒவ்வொரு Text Boxஐயும் தேடிப் போய் க்ளிக் பண்ணி விட்டு மீண்டும் Mouse cursorஐ மானிட்டரின் கீழே ஓரத்துக்கு கொண்டு வந்து வைத்து விடுகிறார். டைப் செய்கிறார். மீண்டும் ஜென்மப் பிரயத்தனத்தில் மவுசை நகட்டி நகட்டி அடுத்த Text Boxல் க்ளிக். மீண்டும் மானிட்டரின் ஓரம். ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.

என்னுடைய ஏழரை அங்கேதான் தொடங்கியது. சனி வாய் வழியாக வந்தது.

“சார்… … …. …. … …..” –  அதை நான் சொல்லி விட்டேன்.

ஏறிட்டுப் பார்த்து “என்ன சொன்னீங்க?” என்றார். அதைக் காட்டி மீண்டும் அதையே சொன்னேன். அங்கே ஆரம்பித்தது டண்டணக்கா.

“கம்ப்யூட்டர் தெரியும்ன்னு திமிரு காட்றீங்களா..? என்ன வேலை பாக்குறீங்க?”

“சாப்ட்வேர்லதான் சார். ஆனா அப்படில்லாம் இல்ல சார்.. நான் சொன்னது.. சார்… சாரி… அது வந்து”

“வருவீங்க இத அடி, அத அடின்னு சொல்லுவீங்க. அப்புறம் கம்ப்யூட்டர் நொட்டையா வேல செய்யாம ரிப்பேராப் போகும். யாரு பாக்குறது. நீ வந்து ஓசில சர்வீஸ் பண்ணுவியா.. எதாவதுன்னா என் சம்பளத்துல கைக்காசு போட்டு பாக்க சொல்லி தாளி அறுப்பானுங்க. நீ வந்து பாப்பியா? சொல்லுய்யா…”

“சார்… அது வந்து சார்… அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்…”

“என்னாது வந்து போயி… இப்படித்தான் முன்னால வந்தவன் ஒருத்தன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்ன்னான். கம்ப்யூட்டர் Slowவா இருக்கு பாக்குறீங்களான்னு கேட்டதுக்கு இத்த அத்தன்னு எத்தையோ கெலிட்(delete) பண்ணீட்டு போய்ட்டான். இந்த சனியன் 3 மாசமா வேலை செய்யாமக் கெடந்தது. என்னையப் போட்டு கொடஞ்சிட்டானுக.. தேவையா எனக்கு”

“சார்… அது வந்து… அப்படில்லாம்… சார்…”

“போயிரு… Attestationலாம் ஒன்ணும் போட முடியாது… போயிரு”

“சார்… சாரி சார்.. இல்ல அது சார்.. சாரி சார்…”

“போங்கறேன்ல… போயிரு” என்று கோபத்தில் மவுசை வைத்து மவுஸ் பேடில் 360, 3350 எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஏப்ரல் மாசம் வேற… ராத்திரிக்கு கரண்டப் புடுங்கிட்டானுகன்னா Fan, AC ஓடாது என்பதால் கம்மென்று கிளம்பி விட்டேன்.

அவரிடம் நான் சொன்னது இதுதான்…. இது மட்டும்தான்

“சார்… இந்த Tab Key ah அடிச்சீங்கன்னா அடுத்தடுத்த Text boxக்கு ஆட்டோமேடிக்காப் போகும். Mouse ah use பண்ண தேவை இல்லை.

நான் சொன்னது தப்பா சார்?

****************************

பக்கத்திலேயே இருந்த அரசு மருத்துவர் ஒருவரிடத்தில் Attestation வாங்கப் போனேன். நல்லவேளையாக அவர் அறையில் கம்ப்யூட்டர் எதுவும் இல்லாத காரணத்தால் அன்றே அப்ளிகேஷனைக் கொடுக்க முடிந்தது.

கடவுள் இருக்கான் கொமாரு.

நொந்த கதை சொன்னவர்: http://nellainanban.blogspot.in

நல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில் ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும் பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். நரகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி, மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர்.

கடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி மருத்துவரினதும் பொறியியலாளரினதும் சேவையை விபரித்தார். அப்போது கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு கடவுள் அனுப்பாவிடில் உன் மீது வழ்க்குத் தொடருவேன் என்றார். நரகத்தின் பொறுப்பாளி சிரித்துக் கொண்டு சொன்னார். வழக்குப் போடுவதாயின் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அனைவரும் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.

Courtesy: http://veltharma.blogspot.in

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை
கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த
அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

Courtesy: Dhana Sekar

ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள்,
மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம்
அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும்
இருந்தார்,

மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல
தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது
சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே
கேட்டு விட்டான்!

நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக
நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை
விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..

சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன்,
ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ
கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..

நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன்
என்று சொன்னான் நண்பன்!

மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து
மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன்
அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,

மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க
வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,

மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன்
நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும்
அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக
அமர்ந்தான்,

ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை
தீட்டி கொண்டிருந்தான்!

Courtesy: http://rammalar.wordpress.com

ஒரு கணவன்,மனைவி  ஐந்து நட்சத்திர ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஓர் அழகிய பெண் அந்தக் கணவனின் அருகில் வந்து”டார்லிங்!நாளை மறக்காமல் வந்து விடுங்கள்” என்று சொல்லி அவன் கன்னத்தில் தட்டிச் சென்றாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்குக் கடுங்கோபம் வந்தது. கணவனிடம் கேட்டாள்”யார் அந்த மேனா மினுக்கி?”
கணவன் சொன்னான்”அவள் என் சின்ன வீடு!”
மனைவிக்குக் கோபம் அதிகமானது.”இனி உங்களுடன் வாழ்வது கடினம்.நான் விவாக ரத்துக் கோரப்போகிறேன்”
கணவன்  அமைதியாகச் சொன்னான்”உன் இஷ்டம்.ஆனால் அதன் பின்,ஒவ்வொரு ஆண்டும் கோடையில் ஒரு மாதம் ஸ்விட்சர்லாந்தில் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாது;BMW காரில் ஜாலியாக ஊர் சுற்ற முடியாது.க்ளப்பில் போய் பெருந் தொகைக்குச்  சீட்டு விளையாட முடியாது .விலை உயர்ந்த உடைகளை வாங்கிக் குவிக்க முடியாது”
மனைவி யோசித்தாள்.அப்போது அவர்கள் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணுடன் அவர்களைக் கடந்து,அவர்களைப் பார்க்காதது போல் சென்றான்.
மனைவி கேட்டாள்”கோபாலுடன் போவது யார் ?மனைவி இல்லையே?”
கணவன் சொன்னான்”அவனுடைய சின்ன வீடு!”
மனைவி சொன்னாள்”அவளை விட நம்ம சின்ன வீடு அழகுதான்!”
ஒரு தன்னினந் தின்னி,நர மாமிச உண்ணி(cannibal)  காட்டினுள்நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் மற்றொரு  அவன் இனத்தானால் நடத்தப்படும் ஒரு உணவு விடுதியைக் கண்டான் .
அவனுக்குப் பசியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்து உணவுப் பட்டியலட்டையைப் பார்த்தான்.அதில்—
1)சுற்றுலாப்பயணி—ரூ.500
2)வாட்டிய சமயப் பரப்பூழியர்—ரூ.750
3) வறுத்த புதியவை தேடுபவர்—ரூ.1000
4)வேக வைத்த அமெரிக்க அரசியல்வாதி—ரூ.1250
5)மசாலா நிரப்பிய இந்திய அரசியல்வாதி—ரூ.2500
 அவன்  பணியாளை அழைத்துக் கேட்டான்”ஏன் இந்திய அரசியல் வாதிக்கு இந்த விலை?”
அவன் சொன்னான்.”எப்பவாவது அவங்களைச் சுத்தம் பண்ணிப் பாத்திருக்கீங்களா?  ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும்!”

ஆபீசுல தூங்குபவரா நீங்க.     அப்பிடி தூங்கி மேலதிகாரிக்கிட்ட மாட்டி  அடிக்கடி டோஸ் வாங்குபவரா? உங்களுக்கான டிப்ஸ் இதோ…,
இதுப்போல செய்தால் மேலதிகாரிங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வேணாம் பாருங்க. ரொம்ப யோசிச்சு யாரோ ஒரு புத்திசாலி இப்படிலாம் ஐடியா கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க.




டிஸ்கி: நம்ம பிளாக்கர்ஸ் யாரும் ஆபீசுல தூங்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அம்புட்டு நல்ல பசங்க நாங்கன்னு காலரை தூக்கிவிட வேணாம்… பதிவை ரெடி பண்ணாவௌம், போஸ்ட் போடவும், திரட்டிகளில் இணைக்கவும், கமெண்டுக்கு ரிப்ளை பண்ணவும், மொய் கமெண்ட் வைக்கவுமே சரியா இருக்கும்போது எங்கிருந்து தூங்குவது?! என்ன நான் சொல்றது சரிதானே?!

Courtesy: http://rajiyinkanavugal.blogspot.com

என் டேபிள் மேல ஒரு Bag
இருந்தது.. அதை பார்த்த என் Wife…

” என்னங்க இது Bag..? ”

” அதெல்லாம் மாஸ்டர் பிளான்..
சொன்னா உனக்கு புரியாது..! ”

” மாஸ்டர் பிளானா..?! அப்ப அது
நீங்க போட்டதா இருக்காதே..
கரெக்ட்டா..?!! ”

” நீ ஒரு ஜீனியஸ்கிட்ட பேசிட்டு
இருக்கேன்னு அடிக்கடி மறந்துடற..! ”

” ஹி.,ஹி., முதல்ல உங்க ப்ளான்
என்னான்னு சொல்லுங்க.. அப்புறம்
நீங்க ஜீனியஸா இல்ல ஜீனியஸ்க்கு
எதிர்வீட்டுக்காரரான்னு பார்க்கலாம்..!  ”

” என் Friend ரவியோட பொண்ணு
‘ ஹோலி கிராஸ்ல ‘ 2nd Std
படிக்கிறால்ல..”

” ஆமாம்..! ”

” அவ வீட்ல கூட இங்கிலீஷ்ல தான்
பேசறாளாம்.. ”

” சரி.. அதுல என்ன பிரச்னை..? ”

” நம்ம ஆளுக்கு தான் இங்கிலீஷ்
சரளமா பேச வராதே.. ”

” அட.. என்னமோ நீங்க தினமும்
இங்கிலீஷ்ல எட்டு பாட்டு எழுதற
மாதிரி பேசறீங்க.. இங்கேயும் அதே
கதை தானே..?! ”

” ஹி., ஹி., ஹி.. இருக்கலாம்.. ஆனா
இன்னும் ஒரு மாசம் கழிச்சி இப்படி
எல்லாம் நீ எங்களை கிண்டல்
பண்ண முடியாது.. ”

” ஏன் ரெண்டு பேரும் எதாவது
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்
போக போறீங்களா..?! ”

” சே., சே., அதெல்லாம் கஷ்டம்..
நாங்க வேற ஒரு ஈஸியான
மாஸ்டர் ப்ளான் வெச்சி இருக்கோம்ல.. ”

” அட அது என்னான்னு தான்
சொல்லுங்களேன்.. ”

” அந்த Bag-ஐ திறந்து பாரு..
உனக்கே புரியும்..! ”

பையை திறந்து பார்த்த
என் Wife ஆச்சரியத்தோட…

” என்ன இது… எல்லாம் இங்கிலீஷ் பட
DVD-யா இருக்கு..! ”

” ம்ம்.. தினமும் ஒரு இங்கிலீஷ் படம்
பாக்கறது., ஒரு மாசத்துல சரளமா
இங்கிலீஷ் பேசறது.. இதான் எங்க ப்ளான்..!!
எப்பூடி..?! ”

” இந்த மாதிரி எத்தனை படம் பார்த்தாலும்
நீங்க இங்கிலீஷ்ல பேசவே முடியாது..! ”

” ஏன் முடியாது.? ஏன் முடியாது.?
ஏன் முடியாது.? ”

” ஏன்னா.. இதெல்லாம் தமிழ்ல டப்பிங்
பண்ணின இங்கிலீஷ் படங்க..! ”

” Oh My God..! அவ்வ்வ்வ்வ்..!! ”

( யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்றது எம்புட்டு கரெக்ட்டு..! )

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.com

“என்னங்க?”

“சொல்லு…” என்றேன் டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே

தான் பேசுவதை நான் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து

டிவிய ஆப் பண்ணினாங்க

“ஐயோ… ஏய் ஏய்… ரிமோட் குடு தங்கம்… ” என பதறினேன் 

“வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு… நான் சொல்றத

காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்…”

“காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்… மொதல்ல ரிமோட் குடு”

“நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்… அப்புறம் நீங்க தாராளமா பாருங்க… எங்க…” என தங்கமணி

ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த நான் 

“தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா… இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ்

பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்… கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு

மறுபடி போட்டுருக்கான்… ரிமோட் குடு” என நான் பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க

(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும் கேட்டீங்கன்னா உங்கள சாம்பல்

பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்…:)))))

இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு “சரி சொல்லு… என்ன விசயம்?” னேன்.

“எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல..”

“ம்… இருக்கா இருக்கா… அவளுக்கென்ன இப்போ…” என்றேன் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே

“அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்… எங்கம்மா போன் பண்ணினாங்க…

போய் பாத்துட்டு வந்துடலாம்”

“இப்பவா…?” என பயந்து போய் கேட்டேன், எனக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை

“இல்ல… இப்ப நேரமாய்டுச்சு… நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க…

போயிட்டு வந்துடலாம்” “நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன… மொதல்ல ரிமோட் குடு”

என டென்ஷன் ஆனேன். “நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல”

“சரி வரேம்மா… ரிமோட் குடு” என்றேன் பொறுமை இழந்தவனாய்.

“ச்சே… ’16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு’ டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு….

சகிக்கல” என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி

தங்கமணி சொல்வது என்காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்… ரிமோட் கையில் கிடைத்ததும்

டிவியில் முழ்கினேன்.

*************************

ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு என் சுயநினைவுக்கு வந்தேன்.

அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க

“ஏங்க….?” என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க

“என்ன தங்கம்?” என திகிலாய் விழித்தேன். 

“அது… உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்…” என தங்கமணி சிரித்து கொண்டே கூற

“அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே… கன்னிகாதானமா” என முணுமுணுத்த

நான், தங்கமணி முறைப்பதை பார்த்ததும் சமாளிப்பாக “அது…. உன்னை போல ஒரு புத்திசாலிய

சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்… ” என்றேன் 

“சரி… என்னை நல்லா பாருங்க…” என தங்கமணி அன்போடு கூற

“ஐயயோ… என்னாச்சு தங்கம்…” என பதறினேன்.

“என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்…” என சவால் பார்வை

பார்த்தார் தங்கமணி

“அடக்கடவுளே… தங்கம்… வேண்டாம் இந்த சோதனை… இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா

எதாச்சும் சமைப்பியே…அது வேணும்னாலும் செஞ்சு குடு… சத்தமில்லாம சாப்பிடறேன்…”

என டெர்ரர் ஆனேன்.

“இங்க பாருங்க… நீங்க சொல்லித்தான் ஆகணும்… அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்…”

என்றார் தங்கமணி தீர்மானம் போல்

“ஐயோ… யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி…”என முதலில் விழித்த நான் பிறகு “அடடா…

இவ மூஞ்சில தான் முழிச்சேனா…. ஹும்… ” என முணுமுணுத்தேன்,  “சரி சரி…சொல்றேன்”

என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தேன்.


என்ன இவ்ளோ யோசனை…சட்டுன்னு சொல்லுங்க… என்ன மாற்றம்…” என தங்கமணி அவசரப்பட
“இரும்மா… தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்” என டென்ஷன் ஆனேன்.
“சரி சரி…சீக்கரம்…” என்றார் தங்க்ஸ்”ம்… ஆ… கண்டுபிடிச்சுட்டேன்… ” என்றேன்.
பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா
பாத்துக்கோங்களேன்” சொல்லுங்க சொல்லுங்க… ” என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும்
“அது… நீ கம்மல் போட்டு இருக்க” என  நான் பெருமையாய் கூறவும்”பின்ன இதுக்கு முன்ன
கமண்டலமா போட்டிருதேன்” என தங்கமணி முறைக்க

“இல்லம்மா… வேற மாதிரி தானே போட்டு இருப்ப” என தப்பிக்க பார்த்தேன்.

“அதெல்லாம் இல்ல… நான் சொன்ன மாற்றம் வேற…கண்டுபிடிங்க” என்றார் தங்கமணி விடுவென என

“அதில்லையா… ஹும்… வேற என்ன…?” என மீண்டும் வசீகரன் ஆனேன் நான்.

கொஞ்சம் நேரம் யோசித்த பின்  “அடப்பாவமே…உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ

டீப்பா பாக்கலையே தங்கம்…எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்…” என தங்கமணியை பாவமாய் பார்க்க

ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி “சரி விடுங்க… உங்களுக்கு இதெல்லாம் வராது” என எழுந்து

போய் விட்டார்

“அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்” னு ரொம்ப

ஹாப்பி ஆனேன், பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா…!!!)

கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி “ஏங்க… கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே…”என கேள்வியை முடிக்கும் முன்

“ஆமா…நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே…  என்ன அழகு இல்லையா தங்கம்” என முகம் எல்லாம்

பூரிக்க கேட்டேன் நான். பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி “ஆமா ஆமா…

அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க” என வலை விரித்தார்

“ஆமாம் தங்கம்… அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்” என தங்கமணி எதிர்பார்த்தது

போல் வலையில் விழுந்தேன் “அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?” என தங்கமணி குழியை ஆழமாய்

தோண்ட தன் அபிமான நடிகை பற்றி தங்கமணி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான நான்

“என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா… நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்… ப்ளாக் பேன்ட் …

நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்”

“ஆமா ஆமா…சூப்பர்… அது சரி… அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?”

“என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ… கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார்

டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு…நடுல கூட ஒரு ஸ்டோன்

கூட இருந்ததே, நீ பாக்கலையா” என நீட்டி முழக்கினேன்.

அடுத்த கணம் தங்கமணி “நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என கண்ணை கசக்க,

அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த நான் “ஐயயோ…என்னாச்சு தங்கம்” என பதற

“யாரோ ஒரு நடிகை… அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்… அந்த சிறுக்கி… அவ கம்மல்,

டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து

ஒரு மணி நேரம் கழிச்சு கூட… உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்… எப்பவும் வட்ட பொட்டு

வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு

ஆசையா கேட்டா… ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல…

நான் போறேன்… எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே

உள்அறைக்குள் சென்றார்

நான் என்ன செஞ்சேன்னு சொல்லி தான் தெரியணுமா… வழக்கம் போல “சொந்த செலவுல சூனியம்

வெச்சுக்கிட்டனே”னு பீலிங்ல இருக்கேன். ஹையோ ஹையோ…:)))

ஒரு பெண் தனியாக கோல்ப் விளையாடி கொண்டு இருந்தாள். அவள் அடித்த பந்து அருகில் இருக்கும் புதருக்குள் பொய் விழுந்தது. அங்கு அவள் ஒரு தவளை வலையில் சிக்கி இருப்பதை கண்டாள்.  இவளை பார்த்ததும் அந்த தவளை “என்னை நீங்கள் இந்த வலையிலிருந்து விடுவித்தால், நான் உங்களுக்கு மூன்றுஆசைகளை நிறைவேற்றி தருவேன்” என்று சொன்னது. அந்த பெண் அந்த தவளையை வலையிலிருந்து விடுவித்தாள்.
தன் ஆசைகளை சொல்ல அந்த பெண் தயாரான போது, அந்த தவளை குறுக்கிட்டு “ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது போல பத்து மடங்கு உன் கணவருக்கும் கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் என்றது.
சரி என்ற பெண் “முதல் ஆசையாக நான் உலகிலே மிக அழகான பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள்.  தவளை “நன்றாக யோசித்து விட்டாயா?உன் கணவனும் உலகிலே மிக சிறந்த ஆணழகனாக இருப்பான். எல்லா பெண்களும் அவனை கண்டது மயங்கி அவனிடம் செல்வர். இது பரவாயில்லையா?” என்று கேட்டது. அவளும் சம்மதிக்கவே, அப்படியே நடந்தது.
இரண்டாவது ஆசையாக “நான் உலகிலே பணக்கார பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள். தவளை “தருகிறேன். ஆனால் உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக இருப்பான். சம்மதம் தானே” என்று கேட்டு அந்த ஆசையையும் நிறைவேற்றி தந்தது.
மூன்றாவது ஆசையாக ‘எனக்கு சிறிய அளவிலே ஹார்ட் அட்டாக் வர வேண்டும்’ என்று கேட்டாள்.
இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்களை சாதாரணமாக நினைக்காதிர்கள். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு”
பெண் வாசகர்களுக்கு – கதை இங்கே முடிந்து விட்டது. தயவு செய்து அடுத்த இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்.
ஆண் வாசகர்களே – நீங்கள் தொடருங்கள்.
கணவனுக்கு அந்த பெண்ணுக்கு வந்ததை போன்று பத்து மடங்கு குறைவாக ஹார்ட் அட்டாக் வந்தது.

இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்கள் தங்களை புத்தி சாலியாக நினைத்து கொள்வார்கள் ஆனால் அப்படி இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது”. அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்

பின்குறிப்பு: நீங்கள் ஒரு பெண் வாசகராக இருந்து இன்னமும் இதை வாசித்து கொண்டிருந்தால், ஆண்கள் சொல்வதை கேட்க பழகுங்கள். 🙂

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
“ஆம் மன்னா!”
“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”
“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
“தொடரும்” என்றார் மன்னர்.
“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
“சரி அடுத்து”
“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.
“சரி எங்கே முதலாவது முட்டாள்?”
அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான ப்ளாக்கிற்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

அண்ணே நான் வந்துட்டேன் ….எப்படிண்ணே இருக்கீங்க   …?

நீ வந்தேன்னா நான் எப்படிடா இருப்பேன்…

போங்கண்ணே…..உங்களுக்கு எம் மேலே ரொம்ப பாசம் …நீங்களே கண்ணப் போடக்கூடாதுன்னு அப்படி சொல்றீங்க…..அண்ணே எனக்கொரு சந்தேகம்ணே

வேணாண்டா …என்னால தாங்க முடியாதுடா….

ஒர்ரே ஒர்ரு சந்தேகம் …பதில் கிடைக்கலேன்னா என் தல வெடிச்சுடும்ணே..

சரி சொல்லித் தலைடா சப்ப மண்டையா

அண்ணே !இந்த கோணமானி கோணமானின்னு சொல்றாங்களே அப்படின்னா என்னண்ணே…?

அப்படி அறிவுப்பூர்வமா கேளுடா காலி கபாலா…

ஐய்…இந்த பேரு சூப்பரா இருக்கே..சரி சொல்லுங்க …கோணமானின்னா என்ன ?

டேய்!கோணமானின்னா ….???

கோணத்தை அளக்கிற கருவிடா…எத்தனை டிகிரி கோணம்னு கண்டுபிடிக்க கோணமானிஎடுப்பாங்க…

அப்படின்னா என் மண்டை கோணமண்டைன்னு சொல்லுவீங்களே அதைக்கூட அளக்கலாமாண்ணே?

அதை மட்டும் அளக்க கருவியே கிடையாதுடா பலகோணமண்டையா!

சரி, அது போகட்டும் .உஷ்ணமானின்னா?

உஷ்ணத்தைக்கண்டு பிடிக்றது உஷ்ணமானி…

ஜுர மானி?

டேய் இது கூடவா தெரியலை .உனக்கு ..ஜுரம் வந்தா எத்தனை டிகிரின்னு சொல்லும்….

அழுத்தமானி

அழுத்தம் எவ்வளவுன்னு பார்க்க அழுத்தமானி….

பால்மானி

பால்லே தண்ணி எவ்வளவு கலந்திருக்குன்னு கண்டுபிடிக்க பால்மானி..

அது எப்படிண்ணே?அப்போ அது தண்ணிமானின்னுதானே சொல்லணும்

டேய் டேய் [பல்லைக்கடிக்கிறார்] ஆளை விடுடா …

இன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்குண்ணே….

எதுக்குடா உயிரை வாங்றே…என்ன மானியோ ,அதைக்கண்டு பிடிக்க ,அந்தந்த மானி உபயோகமாகுது……..வெத்து மண்டையா !இதை ஒரு எல்கேஜி புள்ள கூடச் சொல்லுமே….ஏண்டா உன் மண்டையிலே ஏறமாட்டேங்குது……
.
அப்படியா சங்கதி.அப்படின்னா …’பே’ன்னா என்னண்ணே…

என்னடா சொல்றே?!!!!

பே’ன்னா என்ன?

என்னடா குழப்ற

பேமானி வச்சு எதை அளப்பாங்க ?நீங்க சொல்ற மாதிரி அந்தந்த மானி அதை அதை அளக்கும்னா…’பே’ன்னா என்னா….பேமானின்னா என்னா சொல்லுங்கண்ணே நம்ம ரெண்டுபேருக்குள்ள நீங்கதானே எஸ்.எஸ்.எல்.சி ஃபெயில் …உங்களுக்குத் தெரியாதா சொல்லுங்கண்ணே…பேமானிய வச்சு எதை அளக்கணும்….

அண்ணே அண்ணே ….ஓடாதீங்கண்ணே..பதிலைச்.சொல்லிட்டுப் போங்கண்ணே……

ரசித்த இடம்: http://haasya-rasam.blogspot.com

ஒருவர்: உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்…!

மற்றவர்: இருக்காதே! என் முகம் எப்பவும் என்கூடத்தான் இருக்கும்!

பி.ஜெபா ஷைனி,

=============================================

* (பரீட்சை ஹாலில்)

ரகு : வயித்தைக் கலக்குதுடா..!

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?

.சு.கவின்சூரியா,

=====================================

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: நீங்க விக்கறீங்கஅவன் வாங்குறான்..!

பி.கவிதா,

======================================

* வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!

கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!

துரை.இராமகிருஷ்ணன்,

=======================================

அப்பா: என்னடாமார்க் ஷீட்ல ரொம்ப கம்மியா மார்க்
வாங்கிட்டு வந்திருக்கே?

பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுப்பா
எதையுமே நிறைய வாங்க முடியல

இரா.அனுக்கிரஹா,

=======================================

சோமு: என்னப்பாவியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?

ராமு: எல்லாமே தலைகீழா நடக்குது!

சோமு: என்னப்பா சொல்றே..?

ராமு: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன்
இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்..!

.அருண்பாலாஜி

=======================================
நன்றி: சிறுவர் மணி

ரசித்த இடம்:  http://rammalar.wordpress.com

1. நான்: ஏன் பப்பு உனக்கு 7 வயசுதான் ஆகுது எப்ப பாரு 70 வயசு கெழவி மாதிரி பேசாதே

வர்ஷா : அம்மா அவ ஃப்ரெண்ட் எல்லாம் யாருன்னு தெரியாதா? பாட்டி, அத்தை பாட்டி, பக்கத்து வீட்டு கற்பக பாட்டி..

பப்பு : மறக்காம அம்மாவையும் சேர்த்துக்க

தேவையா? எனக்கு சொன்னேன் :)))

2.

வர்ஷா : அம்மா ஏம்மா அழுதா கண்ணுல தண்ணி வருது?

நான் : தெரியலைடா

பப்பு: இதெல்லாம் ஒரு கேள்வியா? எவ்ளோ தண்ணி குடிக்கறே, பாதி ஒன் பாத்ரூம்ல போகும் மீதி கண்ணுல வரும

தேவையா .. வர்ஷாக்கு :))

3. முடிவெட்ட பார்லர் கூட்டிட்டு போனேன், அங்க அவங்க கேக்கறாங்க, அவளுக்கு பப்பு ரொம்ப ஃப்ரெண்ட்.

பப்பு செல்லம் என்ன கட்டிங் வேணும்? மஷ்ரூமா? .பாய்கட்டா?

பப்பு : அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி, எங்கம்மாக்கு குளிக்க வைக்க எது ஈஸியோ அதை வெட்டுங்க

எல்லாரும் சிரிச்சாங்க..(ஊரே சிரிச்சுதுன்னும் சொல்லலாம்)

#புள்ளயா பெத்து வச்சிருக்கேன் 🙂

விஜி ராம் அவர்கள் G+ இல் பகிர்ந்தது

ஆட்டோவுக்கு வாய் இருந்தால் ஐயோ என்று கத்தித் தனது வேதனையை வெளிப்படுத்தும். ஆனால் என்ன செய்வது ஆறறிவு படைத்த மிருகம் செய்யும் அத்தனை அநியாயங்களையும் தாங்கிக் கொள்ளும் மனது அதுக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான்.

அதனால்தான் என்னவோ ரெம்ப நல்ல ஆட்டோ என்று சொல்லுறாங்கள்.

 

Courtesy: http://www.manithantv.com

IPhone, IPad, ITouch போன்றவைகளை இந்த ஸ்டீவ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டு  நல்ல பெயரோடும் புகழோடும் போய் சேர்ந்துவிட்டார். அவரின் இந்த நல்ல சேவையை நான் தொடர்ந்ததால் எனக்கு என் மனைவியிடம் கிடைத்த பெயர்தான்IBad என்பதாகும். அதோடு இருந்திருந்தால் பரவாயில்லை ஆனால் எனக்கு நேர்ந்த விபரிதத்தை கண்டால் யாருமே எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க மாட்டீர்கள். அப்படி என்ன நடந்தது என்று கேட்கீறிர்களா? அதை கடைசியில் பார்க்கலாம்.

அதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இங்கே கொஞ்சம் விபரமாக சொல்லுகிறேன். அதை படியுங்க முதலில் மக்கா..
எனக்கு   பிறந்த நாள் வந்துச்சுங்க…. என் பிறந்த நாளுக்கு என் மனைவி iPhone வாங்கி கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமுங்க….யாருக்குதான் சந்தோஷம் வராதுங்க…
ஒரு 2 மாசம் கழித்து என் அண்ணன் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPad வாங்கி கொடுத்தாங்க…அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க…
போன மாசம் என் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPod Touch வாங்கி கொடுத்தாங்க…
அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க.
இந்த மாசம் என் மனைவிக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க….இந்த ஸ்டீவ் வேற புதுசா ஏதும் கண்டுபிடிக்காம போய்ட்டாருங்க…நான் என் மண்டைய போட்டு உடைச்சேங்க….என்னடா வாங்கி கொடுக்குறதுனு…. என் மனைவியோ எல்லோருக்கும் i ல ஆரம்பிச்ச பொருளாதான்  வாங்கி கொடுத்து இருக்கா எனவே அவளுக்கும் அது மாதிரி பொருளாதான் வாங்கி கொடுக்கனுமுனு நல்லா யோசிச்சு அவளுக்கு கடைசியா நல்ல அழகாக லைட் வெயிட்டா இருக்க கூடிய iRon Box  வாங்கி கொடுத்தேங்க…
இதுல என்னங்க தப்பு ? அப்ப ஆரம்பிச்சுதுங்க வினை….
என் மனைவி என் திறமையை, ஸ்மார்ட்னசை புரிஞ்சுக்க தவறிட்டாங்கனு நினைக்கிறேனுங்க… நான் வாங்கி கொடுத்த இந்த iRon Box  ஹோம் நெட்வொர்க்கோட கனெக்ட் பண்ணினால்  நிறைய பயன்பாடுகள் இருப்பது அவளுக்கு தெரியலைங்க… உதாரணமாக இதை எதோடு எல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதை அவளிடம் சொன்னதை நான் உங்களுக்கும் சொல்லுகிற்னுங்க..இதை iWash, iCook and iClean போன்றவைக்ளோடு இணைத்து உபயோகிக்கலாமுங்க
ஆனா என் மனைவி இதை எல்லாம் கேட்டுவிட்டு என் ஸ்மார்ட்னசை புரியாம என்னை  iKnock பண்ணிட்டு இப்ப அவள்iMad ஆகி iNag* பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ என் நிலமை இப்படி iBad ஆகிபோச்சு (///*nag – someone (especially a woman) who annoys people by constantly finding fault//)
என் கூட வேலை  பார்க்கும் அமெரிக்க நண்பர் சொன்ன ஜோக்கை வைத்து என் வழியில் நான் இதை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். கொஞ்சமாவது சிரித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன்.
புலம்பியவர்: http://avargal-unmaigal.blogspot.com
ரசித்த இடம்: வலைமனை போட்டோ கமெண்ட்ஸ்
எப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். போன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல. இந்த நல்ல காரியத்தை உடனே செய்யறதுன்னு முடிவு பண்ணேன்.
அது ஈவ்னிங் காஃபி போடற நேரம். அதனால தங்கமணிகிட்ட “இன்னிக்கு நாந்தான் காஃபி போடுவேன். நீ சமையல் கட்டுப் பக்கமே வரக்கூடாது”ன்னு சொல்லி ஹால்ல உட்கார வச்சுட்டு, கிச்சன்ல பூந்தேன். அது ‘இந்த மனுசன் நல்லாத்தானே இருந்தாரு..இன்னிக்கு என்னாச்சு’ன்னு குழம்பிப்போய் ஹால்ல உட்கார்ந்துட்டாங்க.
நானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..) அடுப்புல வச்சி, பாலை ஊத்திட்டு, அடுப்பை பத்தவச்சேன். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. முதல்ல, தங்கமணிகிட்ட நல்ல பேர் வாங்கிக்கலாம். அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம். முடிஞ்சா டேமேஜான பேரையும் சரி பண்ணிடலாம்னு பல திட்டங்கள் மனசுல.
அப்புறம் தான் பார்க்குறேன், பால் ஒரு மாதிரி திரிஞ்சு போச்சு. என்னடா இது, எக்ஸ்பைரி ஆன பாலான்னு பார்த்தா, அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒருவேளை பால் சட்டில ஏதாவது இருந்திருக்குமோன்னு டவுட் வந்துச்சு. சரின்னு, திரிஞ்ச பாலை கீழ கொட்டிட்டு, மறுபடி நல்லா பாத்திரத்தைக் கழுவினேன்.
ஹால்ல இருந்து ‘இன்னும் முடியலியா’ன்னு சவுண்ட் வந்துச்சு. ‘இதோ ரெடி..ஒரே நிமிசம்’னு சொல்லிட்டு, மறுபடி பாலை ஊத்தி அடுப்பை பத்தவச்சேன். ச்சே..பெண்ணியவாதி ஆகறதுன்னா இவ்வளவு கஷ்டமா-ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே அடுப்பைப் பார்த்தா..அடங்கொக்கமக்கா…பால் மறுபடியும் திரிஞ்சு போச்சு!
’நம்மளே திருந்த நினைச்சாலும் விதி விட மாட்டேங்குதே..எப்படி இது’-ன்னு கன்ஃபியூஸ் ஆகி நிக்கும்போது, தங்கமணி பொறுமை இழந்து உள்ள வந்துட்டாங்க.
‘என்ன ஆச்சு?’ன்னு ஒரு அதட்டல்.
நான் பரிதாபமா ‘இப்பிடி ஆயிடுச்சு..பாரு’ன்னு திரிஞ்ச பாலை காட்டிட்டு ”என்ன பிரச்சினை? ஏன் இப்பிடி ஆகுது”ன்னு கேட்டேன்.
அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.
’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.இப்படி கேள்விப்பட்டதே இல்லையே-ன்னு யோசிக்கும்போதே
“உங்களுக்கு எதுக்கு இந்த வேலை…ஏதாவது பதிவு எழுதுனமா..கமெண்ட்டுக்கு மிக்க நன்றின்னு பதில் போட்டமான்னு இல்லாம இது தேவையா..”-ன்னு கிச்சன்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்க.
நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..
காஃபியில்
கலந்து
கொடுத்தேன் – என்
காதலை!
-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே.
பாலும் வெள்ளையத்தான் இருக்கு..தயிரும் வெள்ளையாத்தான் இருக்கு..ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தா, ரெண்டுமே குழுகுழுன்னு தான் இருக்கு..நான் என்ன செய்ய…எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(!) போச்சே..

ரங்கமணியின்காபி அனுபவத்தை தெரிந்து கொண்ட இடம்: http://sengovi.blogspot.com

என்னோட வெஜ் சாம்பார் செய்வது எப்படி பதிவு பார்த்து அத ட்ரை பண்ணி இருப்பிங்க. இதோ என்னோட அடுத்த சமையல் குறிப்பு. இந்த சமையல் குறிப்பு முக்கியமா ஆண்களுக்காக அதுவும் திருமணம் ஆகாத கன்னி பையன்களுக்காக மட்டுமே. அதனால மத்தவங்க தயவு செய்து இதுக்கு மேல படிக்காதிங்க.

– முதலில் அதிகாலை ஐந்து மணிக்கு எந்திரிக்கவும்! என்னது அது ரொம்ப கஷ்டமா? யோவ், அலாரம் வச்சு எந்திரியுங்கையா! எதிரிச்சு, பாத்ரூம் போங்க!பிரஸ் எடுத்து, பல்லு வெளக்குங்க! அப்புறம் முகத்தை கழுவி, இன்னும் ஏதாவது மிச்சம் மீதி வேலைகள் இருந்தா, அதையும் முடிச்சுட்டு, மெதுவா பாத்ரூம விட்டு, வெளிய வாங்க!

யோவ், எடுபட்டபயலே, சமையல் குறிப்பு சொல்றதாதானே பேச்சு! அப்புறம் என்ன பாத்ரூம்ல, மூஞ்சி கழுவுறதப் பத்தி, சிறப்புரையாற்றிக்கிட்டு இருக்கே?” அப்டீன்னு டென்சன் ஆவாதீங்க! பொறுமை! பொறுமை!!

ஓகே! பாத்ரூம்ல இருந்து வெளியே வந்துட்டீங்களா? யோவ்…. அதெல்லாம் வந்து ரொம்ப நேரமாச்சு! மேல சொல்லுய்யா!, சரி, இப்போ நீங்க நேரா பூஜை அறைக்குப் போங்க! உங்க இஸ்ட தெய்வம் எதுவோ, அதை நல்லா மனசார கும்புடுங்க! எதுவும் தப்பா நடந்துடக்கூடாதுன்னு நல்லா கடவுள வேண்டிக்குங்க! ஆமா…. இருநூறு கோடி ரூபா பட்ஜெட்டுல படம் எடுக்குறார் பாரு! எதுவும் தப்பா நடக்கக்கூடாதாம்!

அப்புறம், ஒரு பேனா, ஒரு நோட் புக், கேமரா வசதியுள்ள உங்க செல்ஃபோனு இதெல்லாத்தையும் எடுத்துக்குங்க! யோவ்…. நிறுத்துயா! சமையல் குறிப்பு சொல்றதுன்னுதானே, நம்மளையெல்லாம் லெட்டர் போட்டு வரச்சொன்னே! அப்புறம் என்ன, விஜய் டி வி ல வர்ர, ‘ அது இது எது’ ப்ரோகிராம்ல வர்ர மாத்தியோசி ரவுண்ட் மாதிரி, மாத்தி மாத்தி பேசுறே!

அண்ணே, எதுக்கு அவசரப்படுறீங்க! மேல படியுங்க!

இப்போ, உங்க அம்மாவைக் கூப்பிடுங்க! அம்மா தூங்கறாங்களா? இன்னும் சத்தமா கூப்பிடுங்க! இப்போ அம்மா எந்திரிச்சு வர்ரா! ‘ குட்மோர்னிங் அம்மா’ சொல்லுங்க!

அம்மா கேப்பா ‘ எதுக்குடா, இப்ப கத்துறே’!
அதுக்கு நீங்க சொல்லணும்! “ அம்மா இன்னிக்கு நான் சமையல் பண்ணலாம்னு இருக்கேன்”

‘ என்னது சமையல் பண்ணப் போறியா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! போய் வேற வேல இருந்தாப் பாரு!”

“ இல்லம்மா, நான் இன்னிக்குச் சமைச்சே ஆகணும்! “

“ அதுக்கு என்னைய என்ன பண்ணச் சொல்லுறே?”

“ கிச்சன் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா, கொஞ்சம் சவுகரியமா இருக்கும்”

அப்டீன்னு நீங்க சொன்னதும், உங்கம்மா உங்கள மொறைச்சுப் பார்ப்பாங்க! சப்போஸ், இதெல்லாம் எங்க சமைச்சு உருப்படப்போவுது? அப்டீன்னு திட்டவும் கூடும்! அதெல்லாத்தையும் கண்டுக்காதீங்க! நீங்க திட்டுவாங்கறது இதுதான் மொதல்தடவையா என்ன? ( எல்லாப் பதிவர்களுமே வீட்டுல திட்டு வாங்குறதா, ஒரு வாய்மொழித் தகவல் சொல்லுது )
இப்போ, கிச்சன் எங்க இருக்குன்னு உங்கம்மா, சொல்லிட்டாங்களா? நேர கிச்சனுக்குப் போறீங்க! வாசல்ல நின்னு, சிவாஜி கணேஷன் மாதிரி, இடுப்புல கையை வச்சுக்கிட்டு, ஒரு வாட்டி மேலேயும் கீழேயும் கிச்சனை உத்துப் பாருங்க!

அப்புறம் உங்க செல்ஃபோன்ல, கிச்சன ஃபோட்டோ எடுங்க! ஏன்னா, வரலாற்றில முதல் முறையா கிச்சனுக்குப் போறீங்க இல்லையா? அதுதான் இந்தப் ஃபோட்டோ!

சரிங்க! நம்ம சமையல் குறிப்பு பகுதியில இன்னிக்கு, கிச்சனை எப்படிக் கண்டுபுடிக்கறது? அப்டீன்னு பார்த்தோம்! இனிமேல்தான் சமைக்கறது பத்தி சிந்திக்கணும்!

அதை அப்புறமா சொல்லித் தாரேன்! ஓகே வா?

என்ன இன்னும் வெயிட் பண்றீங்க? நீங்க கெளம்புனா தான் இந்த சமையல் குறிப்பா எனக்கு சொன்ன அண்ணன் ஐடியா மணி கிட்ட அடுத்த பாகம் கேட்க போக முடியும். கெளம்புங்க கெளம்புங்க

குப்பு சுப்பு ரெண்டு பேரும்,  இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற (trucking) போனாங்க.

அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு. கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி

மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே  சுப்பு எடுத்தாரு ஓட்டம், ஆனா குப்பு தன்னோட பேக்-ல  இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.

இதை பார்த்த சுப்பு “ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா சீக்கிரம் வாலே புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்” மின்னு சொன்னாரு

“நெசம் தாம்லே  புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்”

தெரிந்து கொண்ட இடம்: http://meithedi.blogspot.com

அப்துல் கலாம் எஞ்சினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரம். அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை..அவசரமான வேலை போய்க்கிட்டு இருந்திருக்கு..அவருக்குக் கீழ வேலை செய்ற ஒருத்தரு சாயந்திரம் ஆகவும் கலாம்கிட்ட தயங்கித் தயங்கி வந்திருக்காரு.
கலாம் ‘என்ன விஷயம்’னு கேட்கவும் ‘என் குழந்தைக்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு கலாம் ‘நோ..நோ..நீங்க இல்லேன்ன இங்க வேலை நின்னிடும்..வேணாம்’னு சொல்லிட்டாராம். அவரும் வருத்தத்தோட வேலை செஞ்சுட்டு நைட்டு லேட்டா வீட்டுக்குப் போனா குழந்தை புது ட்ரஸ் போட்டுக்கிட்டு, நிறைய விளையாட்டுச் சாமானோட விளையாடிக்கிட்டு இருந்துச்சாம்.
‘எப்படி இது’ன்னு கேட்கவும் கலாம் வந்து குழந்தையை வெளில அழைச்சுக்கிட்டுப் போயி இதெல்லாம் வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களாம்..தனக்குக் கீழ வேலை செய்றவர் மேல மட்டுமில்லாம அவர் குடும்பத்து மேலயும் கலாம் காட்டுன அக்கறை தான் அவரை எல்லாருக்கும் பிடிச்சவரா, ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியா உயர்த்துச்சு’ – அப்படீன்னு முன்னாடி ஒரு புக்ல படிச்சேன்.
அப்போ நானும் டெல்லில இருந்தேன். இந்த மாதிரி தன்னம்பிக்கை புக் படிச்சா ‘மெலீனா’ பார்த்த மாதிரி ரெண்டு மூணு நாளைக்கு எஃபக்ட்டு கும்முனு நிக்கும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி தான்..அந்த கலாம் மேட்டர் படிச்சப்புறம் நாமளும் நம்ம ஜூனியர்ஸ்கிட்ட கனிவா நடந்துப்போம்னு முடிவு பண்ணேன்..
ஒரு நாளு டைட் ஒர்க்..அதாவது ரொம்ப வேலை..அவசர வேலை..எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ என் ஜூனியரு ஒருத்தன் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே வந்து நின்னான்.
நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!
இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?
புலம்பலை ரசித்த இடம்:  http://sengovi.blogspot.com

அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல… ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி… அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி… யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே… பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?….

உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே… சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா… சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே… போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு…. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….

அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.

உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?… தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)… நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்…அத்தனை பேரும், ஓ நம்மாளு… இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு “ஙங்கு ஙங்குன்னு” குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ….அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க…

அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?… ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.

நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.

இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க…. வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.

அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை… உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.

ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது…

அப்புறம் இன்னொரு விசயம்… ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா… அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு… உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்…

ம்ம்ம்ம்… உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு…

கைப்புள்ளயின் சோகத்தை சொல்லியவர்: http://sinekithan.blogspot.com

வாடிக்கையாளர்: வணக்கம், என்னுடைய பிரிண்டர் வேலை செய்யவில்லை.
சேவை அதிகாரி: என்ன பிரச்சினை?

வாடிக்கையாளர்: என்னுடைய ப்ரிண்டேரினுள் மவுஸ் மாட்டி கொண்டது. வெளியே எடுக்க முடிய வில்லை.
சேவை அதிகாரி: எங்கள் ப்ரிண்டேர்களுடன் நாங்கள் மவுஸ் இணைப்பதில்லையே! பின் எப்படி?
வாடிக்கையாளர்: நீங்கள் நம்ப வில்லை போல தெரிகிறது. இதோ ஒரு புகைப்படம் அனுப்புகிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.
வாடிக்கையாளர் அனுப்பிய புகைப்படம் காண  கீழே  பார்க்கவும் (மானிட்டருக்கு கிழே இல்லங்க, பதிவுக்கு கீழே பாருங்க)

.

.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.

ஆங்கிலத்தில் மண்டை காய வைத்தவர்: http://priyatamil.wordpress.com

முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்… அதை மறந்து டென்ஷன் ஆகி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல…:))

“டாக்டர் ப்ளீஸ்… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல”

“இன்னொரு முறை சொல்லுங்க…” என டாக்டர் சந்தோசமாய் பாட்டு படிக்க

“என்ன டாக்டர் இது? நாங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்… உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” என அந்த பெற்றோர் கோபமாய் பேச

“சரி சரி… பேஷன்ட் எங்க?”

“இதோ… உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது தான் பேஷன்ட்”

“என்ன விளையாடறீங்களா? முழுசா முள்ளங்கி பந்தாட்டம் இருக்கற ஒரு ஜென்மத்தை என்னமோ ஐ.சி.யு கேஸ் மாதிரி எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்லனு சொல்லி ஏன் ஆசைய கிளப்பினீங்க?” என இப்போது கோபம் கொள்வது டாக்டர் முறையானது

“ஐயோ டாக்டர்… நீங்க என் புள்ளகிட்ட பேசி பாருங்க,உங்களுக்கே புரியும்” என அவன் அம்மா கூற

“அப்படியா?” என பேஷண்டை அளவெடுப்பது போல் பார்த்த டாக்டர் “உங்க பேர் என்ன?” என கேட்க

“எந்த பேரை கேக்கறீங்க? சொந்த பேரா இல்ல ப்ளாக் பேரா?”

“அதென்ன ப்ளாக்?” என டாக்டர் விழிக்க

“என்ன ப்ளாக்ஆ? ச்சே… நீங்க எல்லாம் என்ன டாக்டர்? அது வலைப்பூ… நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து…” என பேஷன்ட் விளக்கம் கூற

“ஓ… முழுசா முத்திடுச்சு போல” என மனதிற்குள் நினைத்த டாக்டர் “எப்போல இருந்து இந்த மாதிரி இருக்கு?” என டாக்டர் பெற்றோரிடம் கேட்க

“நானே சொல்றேன் டாக்டர்?” என்ற பேஷன்ட் “ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்… திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் ‘நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே… நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது’னு கேட்டார்… அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது” என உணர்ச்சிவசப்பட்டார்

“சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தவன் ஒருத்தன்…இப்ப மாட்டிட்டு முழிக்கறது நான்” என மனதிற்குள் புலம்பிய டாக்டர் “அப்படி என்ன தான் எழுதுவீங்க?” என கேட்க

“எதை வேணாலும் எழுதுவேன் டாக்டர்… உதாரணத்துக்கு சொல்லணும்னா… ஒரு நாள் ஒரு கரப்பான் பூச்சிய அடிச்சுட்டேன்… அதை ‘நானும் கரப்பானும்’னு ஒரு போஸ்ட் போட்டேன்….இன்னொரு நாள், ஒரு பிச்சகாரனுக்கு பத்து பைசா போட அவன் இன்னும் பத்து பைசா சேத்து திருப்பி குடுத்தான், அதை ‘பிச்சையிடம் பிச்சை’ ஒரு போஸ்ட் போட்டேன்”

“அட கருமமே…அதெல்லாமா எழுதுவீங்க…படிக்கறவன் காரி துப்ப மாட்டான்”

“ஐயோ போங்க டாக்டர்… உங்களுக்கு விசயமே புரியல… அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல” என அவர் பெருமிதமாய் கூற

“கருமம் கருமம்” என தலையில் அடித்து கொண்ட டாக்டர் “அது சரி… இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்?”

“அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்… பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்… ட்ரெயின்ல போறப்ப தோணும்… தலைவலிக்கரப்ப தோணும்… தோணும் போது தோணும்… தோணாத போதும் தோணும்… தோணனும்னு நினைக்கறப்ப தோணாது… ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்… தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்… ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது…அவ்ளோ ஏன்? இப்ப கூட ‘மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்’னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது”

“என்னது மெண்டல் டாக்டரா?” என டாக்டர் டென்ஷன் ஆக

“ப்ளீஸ் டாக்டர்… தப்பா எடுத்துக்காதீங்க… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என பேஷன்டின் அப்பா கூற, அந்த “எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என்ற வாசகம் டாக்டரின் கோபத்தை காணாமல் போக செய்தது

“இங்க பாருங்க தம்பி… இப்படி நினைச்ச மாதிரி எல்லாம் எழுத கூடாது… அது நல்லதில்ல” என டாக்டர் அட்வைஸ் போல் கூற

“என்ன நல்லதில்ல? மழைல ஒரு பூ கீழ விழுகரத பாத்தா என்ன தோணும் தெரியுமா?

ஒருமுறை பூத்த பூ
ஒரே மழையில் விழுந்ததே
இன்னொருமுறை பூக்குமா
இருந்தாலும் அது போல் வருமா!!!

அதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!

இந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க?”

“இங்க பாருங்க… நீங்க எழுதறது சமுதாயத்துக்கு உபயோகமா இருக்கணும் ” என டாக்டர் புரிய வைக்க முயன்றார்

“கண்டிப்பா… அப்படி கூட எழுதி இருக்கேன்… நான் எழுதின ‘குட்டையில் ஊறிய மட்டை’ போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது… அது மட்டுமில்ல, என்னோட ‘மண்டையில் ஒரு மரிக்கொழுந்து’ கதைய ஒரு கோமா பேஷன்டுக்கு தினமும் படிச்சு காட்டினதுல நாலே நாளுல அவர் ராவோட ராவா வீட்டுக்கு ஓடி போயிட்டாராம்… இப்ப அந்த ஹாஸ்பிடல்ல அதான் ட்ரீட்மென்ட்ஆ யூஸ் பண்றாங்களாம்… இப்ப சொல்லுங்க எவ்ளோ உபயோகமான வேலை எல்லாம் செய்யுது என் பதிவுகள்”

“ஸ்ஸ்ஸ்ஸ்ப்பப்பா…. எப்படி புரியவெக்கறது?” என வெகு நேரம் யோசித்த டாக்டர் “இங்க பாருங்க தம்பி… எதாச்சும் தத்துவம் பித்துவம்னு எழுதினாலும் உபயோகம்…” என டாக்டர் முடிக்கும் முன்

“ஓ இருக்கே… ஜில்லுனு ஒரு மோர்னு ஒரு அருமையான பதிவு இருக்கே” என உற்சாகமாகிறார் பேஷன்ட்

“என்னது? மோர்ல என்ன கொடும தத்துவம் இருக்கும்?” என டாக்டர் குழம்புகிறார்

“என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? மோர் எப்படி தயாராகுது… பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்… இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?”

“ம்… உனக்கு முத்தி போச்சுன்னு புரியுது?” என தலையில் அடித்து கொண்டார் டாக்டர்

“ஹையோ ஹையோ… இதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீங்க பக்குவப்படலை டாக்டர்… அதாவது… எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்”

ஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது… ஒருவாறு சமாளித்து “தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா…” என்பதற்குள்

“டாக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா… நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா… மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா….”

அதற்குள் டாக்டர் “ஹா ஹா ஹா ஹா… ஹி ஹி ஹி ஹி….” என கை தட்டியபடி சிரிக்கிறார்

“அப்பாடா… வழக்கம் போல புரியாத மாதிரி பேசினதும் இந்த டாக்டரும் மெண்டல் ஆய்ட்டாரு” என பதிவர் மனதிற்குள் சிரித்து கொள்கிறார்

“ஐயையோ என்னாச்சு… ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு?” என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க

“ஹா ஹா ஹா…. ஹி ஹி ஹி… நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல… நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல… இன்னும் தெளிவா சொல்லணும்னா…” டாக்டர் நிறுத்தாமல் பேசி கொண்டே போனார் தன் சட்டையை கிழித்தபடி

“ஐயையோ… இந்த டாக்டருக்கும் பைத்தியம் புடிக்க வெச்சுட்டானே நம்ம புள்ள” என அந்த பேஷன்டுடன் வந்த அம்மா தலையில் கை வைத்து அமர

“என்ன சொல்றீங்க? இதுக்கு முன்னாடி வேற டாக்டர்’க்கு இதே மாதிரி ஆகி இருக்கா?” என அங்கிருந்த நர்ஸ் கேட்க

“ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்… இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்… இவர் தான் நூறாவது… கங்க்ராட்ஸ் சிஸ்டர்”என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி

அந்த நர்ஸ் பயமாய் ஒரு பார்வை பார்க்க “ஹ்ம்ம்… இனி இந்த ஊர்ல ஒரு டாக்டரும் பாக்கி இல்ல… வேற ஊர்ல தான் விசாரிக்கணும்” என பேஷன்டின் அம்மா முடிக்கும் முன் நர்ஸ் எஸ்கேப் ஆகி இருந்தார்

:))))

நான் சட்டைய கிழிச்சுகிட்ட இடம்: http://appavithangamani.blogspot.com

அண்ணே வந்துட்டேன் ..

எங்கே போயிருந்தேடா செல்லம்

தேர்தல் ஆணையத் தலைவரோட ,‘கா’ விட்டுட்டு வெளி நடப்பு செய்துட்டு உண்ணாவிரதம்,குடியா விரதம்,மௌனவிரதம்ன்னு இருந்துட்டேண்ணே..

ஏண்டா செல்லம்,

போங்கண்ணே இந்த தேர்தல் விதியே எனக்குப் புடிக்கலைண்ணே..

எதுக்குடா செல்லக்கண்ணு

பின்னே என்னண்ணே, நான் இந்ததேர்தல்ல நிக்கலாம்ன்னு இருந்தேண்ணே இந்த சின்ன தகறார்லே மிஸ் பண்ணிட்டேண்ணே….

அது என்னடா சின்ன தகறாரு..?.நீ எப்பவுமே பெரிய தகறாருபிடிச்சவனாச்சே…

அண்ணே சின்னத்தகாறார்னா தேர்தல் சின்னம்ணே..

என்னடா ஆச்சு ?

எனக்கு பிடிச்ச பாய் சின்னம் கேட்டேண்ணே…தர மாட்டேன்னுட்டாங்க அதான் நிக்கலை..

.பாய்ன்னா ???

அதாண்ணே பாய்..எம் ஃபார் மேட்… பா ஃபார் பாய் …

ஓ அந்த பாயா ?படுக்கற பாயச் சொல்றியா? நான் நம்ம கறிக்கடை பாய்ன்னு நினைச்சேன்…அது சரி அந்த பாய் மேலே உனக்கு என்னடா அவ்வளவு பிரியம்…அதைப் போய் சின்னமா கேட்டிருக்கே..
.
அண்ணே எலக்‌ஷண்லே நின்னு ஜெயிச்சா ஒரு ராசியான சின்னமா இருந்தாத்தானே நமக்கு நல்லது…

அடேடே நல்ல எண்ணம்தான் ,தொகுதிக்கு .நிறைய சேவை பண்ணலாம்ன்னு சொல்ல வரியா ?சீமண்ணை லைட் தலயா…

தொகுதியா ????அப்படின்னா என்னண்ணே…

கிழிஞ்சுது போ ..!அதுவே தெரியாம தேர்தல்ல நிக்றியாக்கும்…

எல்லாரும் அப்படித்தாண்ணே நிக்கிறாங்க

சரி சொல்லித் தொலைடா …எதுக்கு உனக்கு பாய் சின்னம் வேணும்….?

பாய் சின்னத்திலே நின்னு ஜெயிச்சாதானே நல்ல …….

.நல்ல ……நல்ல …சொல்லித்தொலையேண்டா நல்ல ?????

”நல்ல சுருட்டலாம்ணே…

ரசித்த இடம்: http://haasya-rasam.blogspot.com/

பாகம் 1 படிச்சுடீங்களா? அப்போ மேல படிங்க

ஆமா இப்ப நிலம எப்படி இருக்கு
என்னது தெரிஜிடுச்சா அவ்வளவுதானா?
மாறு வேசத்துக்கு மாறிட்டிடோம்ல
கோழி சிக்கிடிச்சி மெதுவா போவோம்
ஆகா ஒன்னையும் விட மாட்டானுகளா
அமுக்கிடானுகயா அமுக்கிடானுக
நீ தீந்தடா மவனே
எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டுடானுகளே
உங்க சாவகாசமே வேமணடாம் சாமி
எனக்கு சொன்னவரு: http://ezuthuru.blogspot.com
ஆகா பெட்ரோல் விலை மறுபடியும் ஏறிடுச்சு    , இனி நம்மக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாது , என்ன பன்னலாம்னு மெரிடியன்ல ரூம் போட்டு யோசிச்சப்ப ஒரு அருமையான ஐடியா தோணிச்சு ,
“பேசாம நாம் ஏன் ஒரு குதிரை வாங்ககூடாது “
குட் , உடனே நம்ம ஏரியாவுல இருக்க சூபர் மார்கெட் போய், குதிரை இருக்கா?  என்னா விலைன்னு கேட்டேன் , அதுக்கு டக்குன் அந்த சூபர் மார்கெட் ஓனர் வேலைய ரிசைன் பன்னிட்டு போயிட்டாரு .
டுஸ்கி: ஒன்னு இருக்குன்னு சொல்லனும் , இல்ல இல்லைன்னு சொல்லனும். என்னா கோபகாரனா இருக்கானுக .
விசாரிச்சப்ப குதிரைல்லாம் சூபர் மார்கெட்ல விக்க மாட்டாங்கன்னு சொன்னாக , சரி எங்க கிடைக்கும்னு விசாரிச்சா, பீச்சுல கிடைக்கும்னு சொன்னாக , சரின்னு பீச்சுக்கு போய் பாத்தா அங்க நாலுபேரு காக்கி டிரஸ் போட்டு குதிரை ஓட்டிகிட்டு இருந்தாக ,
அண்ணே இந்த குதிர என்னா விலைன்னு தாங்க கேட்டேன் அவரு என்னா கோபத்தில இருந்தாரோ , நேரா குதிரையோட போய் கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிகிட்டார் .
என்னான்னு கேட்டா அவரு போலிசாம் குதிரை கவுருமென்டு குதிரையாம் , அங்க இருந்து சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகி கூகுள் தேடினால குதிர சவுதி அரேபியாவுல கிடைக்கும்னு இருந்துச்சு , சரின்னு பக்கத்து வீட்டு காரரிடம் passport கடன் வாங்கிட்டு சவுதி அராபியாவுல போய் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தேன்
மறுநாள் காலைல பந்தாவா ஆபிசுக்கு குதிரைல போனேன் , போகும்போது ஒன்னும் பிரச்னை இல்லை , ஆனா வரும் போது வழக்கம் போல நாலு டிராபிக் போலீஸ் நம்மள சுத்துபோட்டாக. என்னான்னு கேட்டேன் , மறுபடியும் ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ் , எங்க குதிரைக்கு ஹெட் லைட்டு , அப்படி இப்படின்னு …கேட்டாக , என்னாது ? குதிரைக்கு ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ்ஆ……. நான் டென்சனாகி குதிரைய அவுகல்டே குடுத்துட்டு பொடி நடையா வூடுபோய் சேந்தேன்.
டிஸ்கி:அன்னைக்கு நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல ஒரு சூபர் ஐடியா கிடைச்சு , இப்ப அத தான் நான் பாலோ பன்றேன், அது எப்படின்னு தெரியணும்னா கொஞ்சம் கீழ போங்க
??
?
?
?
?
?
?
?
?
?
கிஸ்கி : நல்லா பிராக்டிஸ் பன்னிட்டு அப்புறம் தான் ஓட்டனும்,….சரியா …….
?
?
?
?
?
?
?
?
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….. வெயில் மண்டைய பொளக்குது . அதுல பைக்ல  டிராவல் பன்றது  மண்டை காயுது . என்ன பண்ணலாம் …….???????
பேசாம சூரியனுக்கு புல்லா ஏ.சி பண்ணிடலாமா ???
இம்ம்ம் …. அது சரிவராது கரண்ட்டு பில்லு ஜாஸ்த்தியா வரும் …… வேற என்ன பன்னலாம் ???????
என்னோட குளோஸ் பிரண்டுதான் பைக் மெக்கானிக் , நேர அவன் வொர்க் சாப் போனேன்
” மாமா வெயில் தாங்க முடியல என் பைக்கு  ஏ .சி போட்டு குடேன் “
” என்னானானானாது ………????”
” சென்ட்ரலைஸ்டு  ஏ.சி பண்ண முடியாட்டியும் பரவாஇல்லை ரெண்டு சீட்ட மட்டும் ஏ.சிபன்னி குடு “
” டேய் , மாப்ள நான் ஏற்கனவே காலைல என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குன வேகாலத்துல இருக்கேன் , மரியாதையா ஓடிப்போயிடு  அநியாயமா என்னைய ஒரு கொலைகாரனாக்காத “
அப்பத்தான்  ஏற்கனவே பிரண்டு கூட பைக்ல போகும் போது ஏ.சி போடச்சொல்லி பொலேர்ன்னு அடிவாங்கினது எனக்கு டக்குன்னு நியாபகம் வந்துச்சு , சரி பைக்கு ஏ.சி மாட்ட முடியாது போல ………..
” சரிடா மாமா பைக்கு ஏ.சி  பன்னமுடியாட்டி பரவாயில்ல , அட்லீஸ்ட் என் ஹெல்மெட்டுக்காவது ஏ.சி போட்டுகுடேன் “
” அடிங் ………. பிக்காளிப் பயலே , நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைடா உன்னைய மாதிரி ஆளுக இனி உயிரோட இருக்கக்கூடாது ” “
அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு ஸ்பானர   எடுத்துக்கிட்டு என்னைய நோக்கி கொலை வெறியோட  வந்தான் “
ஹே,ஹே,ஹே……. யாருகிட்ட? நம்ம கிட்டேயா?? ,நாங்க மானத்துல தமிழ் நாட்டு அரசியல்வாதிக ஜாதி ……  டக்குன்னு கால் விழுந்துட்டேன் …..
“மாமா கோபப்படாத எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிடலாம் “
“……ங்ங்ங்கொய்யாலே…. பஸ்ட்டு உன்னைய தீத்துட்டு, அப்புறம் கோர்ட்டுல பேசிக்கிறேன்டா   “
அப்படியும் விடாம ஸ்பானரால  அடிக்க வந்தான் ………..
முடியுமா? , நடக்குமா ??…… நாமெல்லாம் யாரு ?????
பின்னங்கால் பிடரில அடிக்க  எடுத்தே….ன் பாரு ஓட்டம் ……… நேரா ஒரு ஹெல்மெட் விக்கிற கடைல போயி நின்னேன் …..
அங்க இருந்த பொண்ணு என்னைய  பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .
” மேடம் , என்னோட ஹெல்மெட்டுல  ஏ.சி போடணும்  “
” என்னங்க சார் ?”
” என்னோட ஹெல்மெட்டுக்கு ஏ.சி பண்ணனும் “
இப்போ அந்த பொண்ணு  பைத்தியத்துக்கு  வைத்தியம் பாக்குற வைத்தியர பைத்தியமாக்குற பரம்பர பைத்தியக்காறன பாக்குறது மாதிரி   என்னை பாத்துச்சு
“இம்ம்ம்மம்ம்ம்ம் ………..ஆயிரம் ரூபா ஆகும் , பரவாயில்லையா ?”
“அட இவ்ளோ சீப்பா இருக்கே , உடனே பண்ணிக்குடுங்க மேடம் “
” பஸ்ட்டு பணத்த  கட்டுங்க “
” ஓகே மேடம் , இந்தாங்க “
பத்து நிமிஷம் ……….. என்னா  அழகா ஏ.சி போட்டு குடுத்துட்டாங்க பாருங்க ….
*
*
*
*
*
*
*

ஹி.ஹி.ஹி………. எப்புடி நல்லா இருக்கா ????

ஏ.சின்னா இப்படியா இருக்கும்……… குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ………..
ஆள் வைத்து அடிக்க முகவரி இதோ: http://manguniamaicher.blogspot.com/
<<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். – வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா
<<>> புது செல்போன் வாங்கியிருக்கேன் : அதுல வாஷிங் மெஷின், மிக்சி, ஓவன் ன்னு எல்லாமே இருக்கு! # மேட் பை மேனியாக்.
<<>> மனைவியோட சமையல் வாசனை அருமைன்னு சொல்லற மனசு, மூக்கு அடைச்சிருக்கும்போதுதான் வருது… # வாழ்க பயம்!
<<>> நடுநிசி நாய்கள் படம் பார்த்தேன் – ஏற்கனவே அந்த படத்தை பத்து தடவை பார்த்த உணர்வு! # மீள்செயல் ஒழிக!!
<<>> மனிதன் நிலவுல தண்ணீரும், ஐஸ்சும் இருக்குன்னு கண்டுபுடிச்சிருக்கானாம் – நாம சரக்கோட போனா போதும்!! # யாரை மட்ட கட்டலாம்?
<<>> அலுவலகத்துல, காதல் திருமணமா? ஏற்பாட்டு திருமணமா? ன்னு வாக்குவாதம் – எப்டி செத்தா என்னாங்கடான்னு தோனுது எனக்கு! # நார்மலாதான் இருக்கேன்
<<>> மதத்துக்காக சாக விரும்புற மாக்கானுங்க, உடனே செத்து தொலைங்க – பாக்கி இருக்கிறவங்க வேலைய பார்போமுல்ல?? # வெங்காயம்
<<>> ஏழு வருஷம் நானும் என் மனைவியும் சந்தோஷமா வாழ்ந்தோம் 🙂 அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டோம் 😦
<<>> உயிர் காப்பீடு: நீங்க 50,000 கொடுங்கள் – நீங்க செத்த உடன் திருப்பி தருகிறோம் !! – SLO”GUN”
<<>> முட்டாளுங்க கூட சகவாசம் வச்சிகிறது எவ்வளவு சுகம்… – என்னமா என்னை புகழ்றானுங்க….ம்?
<<>> ஓம் நித்தியாநந்தா ஸ்வாமியே நமக-ன்னு 100 தடவை சொல்லுங்க – இல்லனா, கடைசி வரை உங்க மனைவி கூட மட்டும் தான்! # கப்லிங்ஸ்
<<>> நான் ஏன் பொய் சொல்ல போறேன்?? என் பொண்டாட்டி என்னை கேள்வி கேட்கலைன்னா.
<<>> அடிக்கடி ROFL ன்னு எழுதுறவங்க என் ரூமுக்கு வாங்க… கூட்டி பல நாள் ஆகுது!
<<>> ஏய்.. எனக்கு லோன் வேண்டாம்ன்னு எத்தனை தடவ சொல்றது? நானும் அதே பேங்க்லதான் வேலை செய்றேன். # HDFC ஊழியர்
<<>> மருத்துவமணை குடும்ப கட்டுபாடு பிரிவு கதவின் மேல் உள்ள வாசகம் – “தயவுசெய்து பின்புற கதவை உபயோகிக்கவும்” # டீட்டெய்லு??
<<>> இந்தியாவுல ஊழல் என்பது, குளிக்கும்போது உச்சா போவது மாதிரி.. தப்புன்னு தெரிஞ்சும் சுகமா செய்வோம்! # அவன நிறுத்த சொல்லு..நா நிறுத்துறேன்
<<>> சில சமயங்களில் இன்டர்நெட் வேலை செய்யலைன்னா… கம்ப்யூட்டரே வேலை செய்யாதது போல பிரமை!! # எனக்கு மட்டுமா?
ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com
ராமு: வக்கிலுங்க கிட்டேயும் டாக்டருங்க கிட்டேயும் உண்மையை சொல்லணும்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?
சோமு: ஒரு வேலை, நம்ப கிட்ட எவ்வளவு பணம் இருக்குதுங்கற உண்மை தெரிஞ்சப்பின்னாடி அதுக்கேத்தமாதிரி வேலை செய்வாங்களோ என்னமோ?

சோமு: 
கோழியில இருந்து தான் முட்டை வந்தது. ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே
ராமு: 
சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில இருந்து கோழி வந்ததா?
ராமு: சரி! ஒருத்தன் 8 அடிக்கு ஃப்ளூட் ஒன்னு செய்தான். அதுக்கு என்ன பேரு வைச்சான் சொல்லு?
சோமு: அது பெரிசா இருந்ததாலே புல்லாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் குழல்ன்னு பேரு வெச்சிருப்பான். ஜோக் புரியலையா புல்Long குழல். இப்போ புரிஞ்சதா?
ராமு: ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
மெயில்ல (Train) மயிலை ஏத்தலாம்; அது தாங்கும். ஆனா மயில்ல மெயில் ஏத்தினா அது தாங்குமா? அது செத்துடும்.
சோமு: நானும் ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்
ராமு: பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து உன்னை அடிக்க வரப்போறாங்க பாத்து பேசுப்பா!
சோமு: அப்படி வந்தா சரணாகதி தான். சட்டுனு அவங்க கால்ல விழுந்திட மாட்டேன்.
ராமு: நீ செய்தாலும் செய்வே சரி! இந்த பஞ்ச் டயலாக்கை கேளேன்!
பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி
சோமு: சூப்பரு!
ராமு: ஒரு பெரியவரு, கையில கொம்பு வைச்சிட்டு, கல்யாண சத்திரத்தை சுத்தி சுத்தி வந்திட்டே இருந்தாராம் எதுக்கு சொல்லு சோமு?
சோமு: இது ரொம்ப சிம்பிள்! கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுவாங்க இல்லை. அதனால காக்கா குருவி ஓட்டுறதுக்காக இருக்கும்.
அதை இப்படியும் சொல்வாங்க தெரியுமா? கல்யாண சத்திரத்தில, ஆடு மாடுங்களை உள்ளே விடமாட்டாங்க. ஏன்னா? கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிரு. அதை, இதுங்கல்லாம் மேய்ஞ்சிட்டு போயிடக்கூடாது இல்ல.
ராமு: ஆட்டோ ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ஆட்டோ ஓட்டுவாரு
ராமு: பஸ் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: பஸ்சை ஓட்டுவாரு
ராமு: ட்ரைன் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ட்ரைன் ஓட்டுவாரு
ராமு: சரி! அப்போ ஸ்க்ரு ட்ரைவர்???…
ரெண்டு அக்காங்க பேசிக்கிறாங்க!
விமலா: உன் புருஷன் தங்கமானவருன்னு சொன்னே!
கமலா: ஆமாம் சொன்னேன்.
விமலா: அதுக்காக அவரு பாதுகாப்பா இருக்கணும்னு, அவரை பீரோல வைச்சிப் பூட்டுறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல.
விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்
தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

குறிப்பு: ஜாலியா சிரிங்க! ஜாலியா ஜோலியைப் பாருங்க! சில ஜோக்ஸ் எப்பவோ எங்கேயோ படிச்சது. பெயர் தெரியாத, முகம்தெரியாத ஜோக்ஸ் எழுத்தாளர்கள், சமூகத்துக்கு நல்லா சேவைச் செய்றாங்கப்பா! எழுதிய புண்ணியவான்க எல்லோருக்கும் தேங்க்ஸ்ங்கோ!

சிரித்த இடம்: http://uravukaaran.blogspot.com


  • கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! – சாக்ரடீஸ்
  • தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! – சேம் கினிசன்
  • எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! – பேட்ரிக் முரே
  • உலத்திலேயே கடினமான கேள்வி – பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் – சிக்மென்ட் பிராட்.
  • ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! – பிராங்களின்.
  • ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. – மில்டன் பியர்லி
  • சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! – யாரோ
  • “காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!” – இயான் வுட்
  • பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே “ஆண்” னிடம்!
    ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா “பெண்” னிடம்!!

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

  • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி “நைட்டியில” அலையறது ஏன்னு பிரியல?
  • 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)
  • புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி “10 வருடம்” ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
  • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன “மளிகை லிஸ்டை”, அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது… ஏங்க?
  • பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், “அதே தோழியிடம்” 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது… ஏங்க?
  • பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
  • பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது “பிரேக் போடுங்க”, “அப்டி வளைக்காதீங்க”, “பார்த்து ஓட்டுங்க”ன்னு சொல்றது… ஏங்க?
  • தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, “தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில” போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே… ஏங்க?(இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட “ஏங்க” எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)

ஆண்கள் மட்டும் ரசிக்கும் தமாசுகள்

இரு நண்பர்கள், பார்டியில்…
ந1 : “என் மனைவி தேவதை! ”
ந2 : “நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!”

நிச்சயத்தின்போது…
மகன்: “யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!”
அப்பா: “உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!”

மகன்: “கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?”
அப்பா: “தெரியலப்பா… இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!”

மனைவி: “ஏங்க.. திருடுபோன “கிரிடிட் கார்ட்” பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?”
கணவன்: “திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!”

இரண்டு நண்பர்கள் பாரில்…
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. “மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!”

பொட்டு பட்டாசு:
மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க… 5 வார்தை மந்திரம்!
“என்னை மன்னிச்சிகோ!” & “நீ சொன்னா சரிதான்!”

ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com

புதுசா கட்டுன   சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,”நானும் பத்து  ஐடியா சொன்னேன் வொர்கவுட் ஆகல அதுனால நீங்கதான் ஏதாவது பண்ணியே ஆகனுமின்னு”

சட்டசபை கட்டிடத்தோட பொறுப்ப  எந்தலைல  கட்டிட்டு போயிட்டார் , வேற வழியில்லாம நானும் செயல்ல இறங்கிட்டேன் …….பஸ்ட்டு வருமானத்துக்கு ஏதாவது  வழியிருக்கா  பார்ப்போம் ???

வாடகைக்கு – புதிதாக கட்டிய சட்டசபை


301524 சதுர அடிகள் பரப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம்  சட்டசபைக்கு (மட்டும்)  வாடகைக்கு விடப்படும் . எந்த மாநில அரசாக இருந்தாலும் பரவாயில்லை .
* வாடகை Rs 4000/-
* அட்வான்ஸ் – பத்துமாச வாடகை
* புரோக்கர் கமிசன் – ரெண்டுமாச  மாச வாடகை (ஹி.ஹி.ஹி….)
* காலைல 6 டு 8  , சாயந்திரம் 7 டு 9  இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம்  நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும்
* அதேமாதிரி கரண்ட் – காலைல 11 டு 12  சாயந்திரம் 4  டு 5  டைம்ல மட்டும்  தான் இருக்கும் . யூனிட்டுக்கு Rs  250 /-
* பிரதி மாதம் 5 தேதி கரக்ட்டா வாடகைய குடுத்திடனும்
* சுவத்துல கண்ட இடத்துல ஆணி அடிக்ககூடாது
* சொந்தக்காவுங்க யாரும் வந்து தங்கக்கூடாது
* நான்-வெஜ் சமைக்க கூடாது
* நைட்டு 10  மணிக்கு கேட் மூடிடுவோம்
விருப்பமுடையவர்கள் தொடர்பு  கொள்ளவேண்டிய தொலைபேசி எண் – 99999 99999 .
அப்படி வருமானத்துக்கு செட் ஆகலைன்னா , மக்களுக்கு உபயோகப்படுறது மாதிரி சில ஐடியா இருக்கு அதை வேணா டிரை பண்ணுங்க …..
1  ) அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .
2  ) இல்லைன்னா அதுக்குள்ளே ஒரு ரெண்டுமூணு புளோர்ல  மொட்டைமாடி கட்டிவிட்டா பசங்க பட்டம் விட வசதியா இருக்கும் .  இந்த பட்ட நூல் ஆக்ஸிடன்ட்   நடக்காது .
3 ) இல்லன்னா ஒரு இன்டோர் ஏர்போர்ட் கட்டலாம் , மழை காலங்கள்ல பிளைட் வந்து போக ஈசியா இருக்கும் .
4 ) அதுவும் சரியில்லைன்னா  பேசாம எனக்கு எழுதி வச்சிடலாம் . (ஹி.ஹி.ஹி……  இது நல்லா இருக்குல்ல )
டிஸ்கி : இன்னும் ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன(இந்த பதிவு  சும்மா காமடிக்கு மட்டும் )

அணுக வேண்டிய முகவரி: http://manguniamaicher.blogspot.com/
ஒரு ஊர்ல சீனுவும் பானுவும் ஃப்ரெண்ட்ஸாம். ஒருத்தரை ஒருத்தர் ரத்தம் வந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ற அளவுக்குக் கடிச்சிப்பாங்களாம். நீங்களே பாருங்க பங்காளி! எப்படியெல்லாம் கடிச்சிக் குதறி எடுக்குறாங்கன்னு…

பானு:
 ம்…ம்..ம் ஒண்ணும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு! சீனு: பானு! இதைக் கேளேன்! சமையல் செய்றதுக்கு விறகே இல்லாம கஷ்டப்பட்டானாம் ஒருத்தன். அப்புறம் ரொம்ப சிரமபட்டு எறும்பை வைச்சித் தான் சமாளிச்சானாம். அவன் என்ன செய்திருப்பான் சொல்லு?
சீனு: அவன் யூஸ் பண்ணது….. கட்டஎறும்பு. என்ன காதுல இருந்து ரத்தம் வருது. ரொம்ப கடிச்சிட்டேனோ?
பானு: ஆமாம் கடித் தாங்கல! சரி நான் ஒண்ணு கேட்கிறேன். அதுக்குப் பதில் சொல்லேன் பார்க்கலாம். மார்க் ஷீட்டுக்கும், பெட்ஷீட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?
சீனு: ம்ம்ம்ஹும்… தெரியலை பானு. நீயே சொல்லிடுப் ப்ளீஸ்!
பானு: சரி சொல்றேன் கேளு! மார்க் ஷீட்டில் மார்க் இல்லன்னா கவலைப் படுவாங்க. ஆனா பெட்ஷீட்டில மார்க் இருந்தா தான் கவலைப் படுவாங்க. எப்படி? ராணி அம்மா கலக்கிட்டேன் இல்ல?
சீனு: கலக்கலா? கடியா கடிச்சிப்புட்டு கலக்கல்னா சொல்றே!!!???
சரி! இதுக்கு பதிலை சொல்லுப் பார்க்கலாம்! ஒருத்தனுக்கு நீச்சல் தெரியாதாம். அவன் ஆத்தைக் கடக்கும் போது போட்ல இருந்து எப்படியோ தவறி தண்ணிக்குள்ள விழுந்திட்டானாம். அவன் உடம்பு எல்லாம் மூழ்கிப் போச்சி. ஆனா தலைமட்டும் தான் மேல தெரியுதாம். எப்படி சொல்லு?
பானு: ம்…ம்.. ஆங்! கண்டுபிடிச்சிட்டேன். அவன் சரியான மரமண்ட. விடை சரியா? ஏன்னா மரம் தான் தண்ணியில முழுகாதே!
சீனு: அட! நீயும் என்னைப்போல புத்திசாலியா மாறிட்டு வர்றியே. பரவாயில்லையே!  சரி! ரூபா நோட்டில காந்தி ஏன் சிரிக்கிறாரு?
பானு: அட! இதுக்கூட தெரியாதா உனக்கு? அவரு அழுதா, ருபா நோட்டு நினைஞ்சுடும் இல்ல. எப்படி நம்ப ஆன்சர்?
சீனு: சரி! இதெல்லாம் கரைக்டாதான் சொல்லிட்டே. இந்த கேள்விக்கு சரியா பதில் சொல்லுப் பார்ப்போம். ஒருத்தன் காட்டில தன்னந்தனியா மாட்டிக்கிட்டான். வழி மறந்துப்போச்சு. திடீர்ன்னு பார்த்தா ஒரு சிங்கம் எங்கிருந்தோ மறைஞ்சி வந்து, அவன் மேல பாய்ஞ்சது. ஆனா, கொஞ்ச நேரம் பொருத்து அது முகம் சுளிச்சிக்கிட்டே அவனை விட்டு ஓடியேப் போச்சு. அது ஏன்னு சொல்லுப் பார்ப்போம்.
பானு: ம்…ம்..ம் ஒன்னும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு!
சீனு: விடை தெரியலையா? அவன் சரியான மாங்கா மடையன்.  ஒரே புளிப்பு! வாயில வைக்கவே முடியல. சிங்கம் அவனோட முகத்தைக் கடிச்சதுமே நாக்குல சுர்றுன்னு புளிப்பு பட்ட உடனே அது ரொம்ப டென்ஷன் ஆயிடிச்சாம். அதனால தான் அப்படி ஒரு ஓட்டமா ஓடிப் போச்சாம் அந்த அறிவுக்கெட்ட சிங்கம்.
பானு: ஹையோ! ஹையோ! யாராவது என்னைக் காப்பாத்துங்களேன். இந்த சீனுவோட கடி தாங்க முடியலையே! ஆண்டவா ஏன் இந்த சீனுவை எனக்கு ஃப்ரெண்டா படைச்சே. நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கேன் இவ்வளவுப் பெரிய தண்டனை?
நான் சும்மா சொன்னேன் சீனு! கடி சூப்பர் கடி தான் சீனு! என் அளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு நீயும் புத்திசாலி தான்னு ஒத்துக்கறேன்.
இவங்க கதை முடிஞ்சது…
ஒரு வீட்டில, ஒரு அம்மா பொண்ணு பேசிக்கிறாங்க. என்னான்னு நீங்களே கேளுங்க…
வாணி: அம்மா! ஊருக்குப் போறேன். எந்த ட்ரஸ் எடுத்துக்கட்டும்?
வேணி: அட்ரஸ் எடுத்துக்கமா. (இனி வருவதை சிவாஜி குரலில் படிக்கவும்) மத்த ட்ரஸ் இல்லைன்னா கூட ஊரல போய் வாங்கிக்கலாம். ஆனா அட்ரஸ் இல்லைன்னா எங்கப் போய் வாங்குவ?
பழக்கடையில் என்ன காமெடி நடக்குதுன்னு நீங்களே பாருங்களேன்…
பழம் வாங்க வந்தவர்: ஏம்பா! ஆரஞ்சுப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: சரி! பப்பாளிப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: அதுவும் இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: சரி! செர்ரிப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: அதெல்லாம் நம்ப கிட்ட இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: என்ன நீங்க எதைக்கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்றீங்க. சரி! அட்லீஸ்ட் ஞானப்பழமாவது இருக்கா இல்லையா?
பழம் கடைக்காரர்: என்னது ஞானப்பழமா? எங்கிருந்து சாரு வர்றீங்க? கீழ்பாக்கமா?
பழம் வாங்க வந்தவர்: அமாம்பா எப்படி கரைக்ட்டா கண்டுபிடிச்சே?
பழம் கடைக்காரர்: ஆமா இதைக் கண்டுப்பிடிக்க விஞ்ஞானி அப்துல் கலாமா வருவாரு! கடைவைக்கிறதுக்கு முன்னாடி நானும் கூடக் கொஞ்ச நாள் அங்கே தானுங்க இருந்தேன். அங்கிருந்து தப்பிச்சி வந்த கேஸா நீங்க. இங்கேயே இருங்க! அவங்களுக்கு ஃபோன் செஞ்சு உங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்.
ஒரு மொக்கை தத்துவம்:
ஒரு சில விஷயங்கள் மட்டும் மாறாதுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி மிஸ்ஸானாலும் மிஸ்ட் கால் தான். கல்யாணத்துக்கு பின்னாடி மிஸ்ஸானாலும் மிஸ்ட் கால் தான்.
கல்யாணம் ஆயிடிச்சேன்னு அதை யாரும் மிஸஸ்ட் கால்னு சொல்ல மாட்டாங்க.
பங்காளி! எப்படியோ ஆசை தீர உங்களை கடிச்சிட்டேன்.பதிலுக்கு நீங்களும் என்னைக் கடிக்கலாமே தவிர அடிக்கக் கூடாது. சொல்லிட்டேன் டீலா??? நோ டீலா…???
ரசித்த இடம்: http://uravukaaran.blogspot.com

பாகம் 1 படிச்சுட்டீங்க இல்ல. இதோ பாகம் 2

கேள்வி: நான் ஒரு அரசியல்வாதி. நாளைக்கு முதலமைச்சரை போட்டுதள்ளுறதை ரகசியமா திட்டம் போடுறோம். பத்திரிக்கை ரிருபர் யாராவது வந்து கவர் பண்ணிருவாங்களோன்னு நினைச்சால் பயமா இருக்கு. ஒரு ஐடியா கொடுங்க.?

கோலிவுட்டின் பதில்: சொல்றேன்… இதுரொம்ப ரிஸ்கான சமாச்சாரம். கவனமா கேளு. நீங்க ரகசியமா திட்டம் போடுற வீடு அனேகமா ஊருக்கு ஒதுக்குப்புறமாத்தான் இருக்கும். எதுக்கும் உங்க ஆளுங்கள ரெடியா வச்சுக்கோங்க பத்திரிக்கைகாரன்னு வந்து கவர் பண்ணும்போது எப்படியும் போட்டோ புடிப்பான் அப்போ பிளாஷ் அடிக்கும் அவனை புடிச்சுரலாம். இல்லைன்னா நிருபன் கிளம்பும்போது கேனத்தனமா எதையாச்சும் கிழேபோடுவான் அப்போது உஷராகி அவனை புடிச்சுக்கோ. அப்படியும் அவன் தப்பிச்சு ஓடுன்னான்னா பிரச்சினையே இல்லை. அவன் வருவது அனேகமாக ஓட்டை கைனடிக் ஹோன்டா அல்லது பழைய டிவிஎஸ் பிப்டியாத்தான் இருக்கும் ஈஸீயா புடிச்சுரலாம். அப்புடியும் அவன் தப்பிச்சு ஓடுவான்…ஆனா கடைசில… அவனுக்காகவே காட்டுல கூட ஒரு பப்ளிக் டெலிபோன் பூத் இருக்கும் அதுல ஹீரோவுக்கு போன் போடுவான் அவன் ஹலோ சொல்றதுக்குல்ல எப்படியுயும் உங்காளுங்க சங்கூதிருவாங்க…கவலைப்படாத … இதை மாத்துறதுக்கு இன்னும் கோலிவுட்டுல யாரும் வரல.

கேள்வி: நான் சிட்டி போலீஸ் கமிஷனர், சிட்டில ஒரு பெரிய தாதா இருக்கான். எங்களால அவனை ஒண்ணும் பண்ண முடியல? ஏதாவது ஐடியா குடுங்க.!!

கோலிவுட்டு பதில்: சப்பை மேட்டரு. கிராமத்துல இருக்குற ஹீரோ தன்னோட அக்கா அல்லது தங்கச்சியை உங்க சிட்டில தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்திருப்பாரு. எப்படியாவது ஹீரோவை சிட்டிக்கு வர வச்சுடுங்க. அப்புறம் ஹீரோவாச்சு ரவுடியாச்சு…நீ்ஙக ஃப்ரீ…

கேள்வி: சார் நான் ஒரு கமேன்டோ ஆபிசர். தீவிரவாதிகளை பிடிச்சு கொடுக்குற பொறுப்பை எங்கிட்டு கொடுத்திருக்காங்க..அதைப் பத்தின ஒரு பிரசன்டேஷன் என் மேலதிகாரிகளுக்கு காண்பிக்கனும். ஐடியா சொல்லுங்க.??

பதில்: குட் கொஷ்டின். இப்ப தீவிரவாதிகளை கொல்லுற மாதிரி நிறைய வீடியோ கேம்ஸ் கிடைக்குது. அதுல அவங்க தங்கியிருக்கிற ஏரியா மாதிரியே 3டி அனிமேட்டட் கேம்ஸ் நிறைய வருது.நீங்க என்டர் கீயை மட்டும் தட்டிட்டு இருங்க…டோட்டல் தீவிரவாதிங்களோட நெட்வோர்ட் உங்க ஸ்கிரின்ல வந்துரும். அப்புறம் பவர் பாயின்ட் ல கூட இந்த மாதிரி நிறைய பண்ணலாம்… நான் சொன்ன மாதிரி பண்ணுங்க…நம்ம கேப்டனுக்கு இந்த மாதிரி நிறைய ஐடியா கொடுத்திருக்கேன்.

கேள்வி:நான் வில்லனோட வொய்ப். ஹீரோ எப்ப என்னோட புருஷனோட கதையை முடிப்பாருன்னு தெரில பயமா இருக்கு. நீங்கதான் உதவி பண்ணனும்.

பதில்: ரொம்ப சிக்கலான கேள்வி இது. இருந்தாலும் சொல்லுறேன். ஹீரோ உங்க புருஷன்கூட சண்டைப்போட்டுட்டு இருப்பாரு. உங்களுக்கு கைகுழந்தை இருக்கான்னு நீங்க சொல்லலை. அப்படி உங்களுக்கு கைகுழந்தை இல்லைன்னா பக்த்துவீட்டு குழந்தையையாவது தூக்கிட்டு ஸ்பாட்டுக்கு போயிருங்க. அப்ப ஹீரோ உங்க புருஷனை அடிச்சுப்போட்டு அருவாளால வெட்டவரும்போது கரெக்டா குறுக்க விழுந்து தாலியையும், கைக்குழந்தையையும் ஹீரோ முன்னாடி காண்பிக்கவும். அதுக்கப்புறமும் ஹீரோ உங்க புருஷனை வெட்டப்போவாரு ஆனா ஆளை வெட்டாம பக்கத்துல தரைல குத்திட்டு போயிடுவாரு. ஓரு கண்டிஷன் ஹீரோ திரும்பி போனதக்கப்புறம் அதே அருவாள தூக்கிட்டு உம்புருஷன் ஹீரோவை வெட்டப்போனாரு…அப்புறம் பின்னாடியிருந்து யாராவது கத்தியால குத்திருவாங்க இல்லைன்னா போலீஸ் துப்பாக்கியால சுட்டுரும்…அதுக்கப்புறம் உம்புருஷன் ஸ்லோமோஷன்ல கீழே விழுந்து சாகவேண்டியதுதான்.

கேள்வி:நான் ஹீரோவோட மனைவி. அவரை சீரியஸா ஆஸ்பத்திரில சேத்துருக்கோம். அவரை காப்பாத்த ஒரு வழி சொல்லுங்க.???

பதில்: ரொம்ப சிம்பிள். டாக்டர் அவங்க வேலையைப்பார்ப்பாங்க…ஆனா நீங்க என்ன பண்ணணும்னா ஒரு மஞ்சள் கலர்ல சாரி கட்டிக்கோங்க, ரெண்டு கைலயும் வேப்பிலை…அப்புறம் எந்த அம்மன் கோயில்ல மணி அதிகமா கட்டித்தாங்கவிட்டுருக்காய்ங்களோ அங்கப்போயி உங்களுக்கு தெரிஞ்ச ஆட்டத்தைப்போடுங்க வேணும்னா உங்க பிரண்ட்ஸ்யும் கூட்டிக்கோங்க. ஆனா எல்லாரும் ஒரே மாதிரி டிரெஸ் போட்டுரக்கனும், தலையை விரிச்சு வுட்டுக்கோனும். கோவில் மணிகளை யாரைவாது சொல்லி கண்ணாபின்னா ஆட்டிவுட்ருங்க. உங்க ஆட்டம் முடியும் போது அங்க உங்க புருஷனுக்கு ஆப்பரேஷன் முடியவும் சரியா இருக்கும். ஆனா கண்டிப்பா பொழைச்சுருவாரு.

ஏதாச்சும் வுட்டுப்போச்சான்னு சொல்லுங்க மக்கா… பார்ட் 3 போட்டுரலாம்.

ரசித்த இடம்: http://vimarsagan1.blogspot.com

வீட்டு ஓனர்களும், வீட்டு புரோக்கர்களும், எனது ரூம் நண்பர்களும், மற்றஏனையவர்களும் மன்னிக்கவும். இது முழுதும் நகைச்சுவைக்கே.
நியூ ஏஜ் பாண்டவர்கள் ஆகிய நாங்கள் ஐந்து பெரும் ஐ.டி துறையில் அமெரிக்கர்களுக்கு அடிமை வேலை சொகுசாய் செய்கிறோம். இந்த பாண்டவர்களில்,

தருமன் Onsite -இல் தாய்நாட்டை விட்டு வனவாசம் இருக்கிறார்.
அர்ஜுனன் எப்போதும் அடுத்த வீட்டு ஆண்டிக்கு அம்பு விட்டு கொண்டிருப்பார். தினமும் செல்லும் ஜிம்மிலும் அம்புகளின் அட்டகாசம் தானாம்.

பீமருக்கு பீட்சா என்றால் பெரும் இஷ்டம். உருளை கிழங்கில் பண்ணிய அயிட்டம் என்றால் சாப்பிட்டு உருண்டு கிடப்பார்.

நகுலன் அனுஷ்காவின் இடுப்பை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார். “சுத்தம் சோறு போடும்” என்ற பழமொழியில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
சகாதேவன் சனிக்கிழமை ஆனால் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு குப்புறப் படுத்து விடுவார்.

எங்கள் உண்மையான பெயர் முறையே சிவசங்கர், வினோத், மனோஜ், முருகன், கதிர்வேல்.

தங்கள் மகளின் குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று வீட்டு ஓனர் இணங்கி கேட்டு கொண்டதால் இப்போது இருக்கும் வீட்டை காலி பண்ண சம்மதித்து விட்டோம்.  😉

வாடகைக்கு அடுத்த வீடு தேடும் போது தான் தெரிந்தது சென்னையில் காலி வீடுகளை விட, வீட்டு புரோக்கர்கள் அதிகம் என்று. நாங்கள் சுலேகா போன்ற வெப் சைட்டுகளில் உலவி புரோக்கர் உதவி நாடாமல் வீட்டை பிடிக்க முயற்சி செய்தோம். Owner என்று search செய்து பொன் பண்ணினால், மறுமுனையில்

“சொல்லுங்க சார் நான் வீட்டு புரோக்கர் பேசறேன்”.

“அட நீங்களா?” ஒரே இன்ப அதிர்ச்சியில் நான்.

போங்கடா! பொறம்போக்குகளா!

நிறைய ப்ரோக்கர்கள் Owner என்ற பெயரில் ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு பார்த்து கொடுப்பதற்கு அவர்கள் சுலபமாய் கேட்பது ஒரு மாத வாடகை. நானும் புரோக்கர் வேலையை பகுதி நேரமாக செய்யலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறேன்.

டூவீலர் எடுத்துச் சென்று வீடு வீடாக tolet போர்டு பார்த்து தேடலாம் என்றால், ஒவ்வொரு வீட்டின் கேட்டிலும் எண்ணற்ற “No Parking” மற்றும் “Contact for Plumper Service” விளம்பர பலகைகள் அடித்துபிடித்துக் கொண்டு இடம் பிடித்துள்ளன. இதற்குள் tolet போர்டை தேடி கண்டு பிடிப்பது, பத்து வருடத்திருக்கு முன் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை தமிழ் நாளிதழில் கண்டு பிடிப்பது போல வெகு சிரமமான விசயமாய் இருக்கிறது.
எப்படியாவது வீடு மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஆசை ஆசையாய் புரோக்கர்களையும் நாடினோம். மாமுல் போலீஸ்காரர்கள் போல ப்ரோக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஏரியா இருக்கின்றது. நாம் ஒருவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டால், அவர் நம்மை இன்னொருவரிடம் அழைத்து செல்கிறார். அந்த இன்னொருவர், இன்னொருவரிடம் பேசி (குழப்பமா இருக்கா?) கடைசியாக வீட்டையும் ஓனரையும் கண்ணில் காண்பிக்கிறார்கள். அது கிட்டதட்ட கேங்க்ஸ்டர் படங்களில் ஒவ்வொரு அல்லக்கையையும் பார்த்து, பேசி முன்னேறி கடைசியில் வில்லன் தாதாவை சந்திப்பது போல் உள்ளது.
வீட்டு ஓனர்களும் வில்லன்களை போன்றே பேசியும், கேள்வி கேட்டும் பயமுறுத்துகிறார்கள். நானெல்லாம் என்ஜீனியரிங் நுழைவு தேர்வில் கூட ஆப்சன் (Option) உள்ள கேள்விக்கு மட்டுமே பதில் எழுதினேன். அதுவும் கணிதத்தில் உள்ள Probability என்பதை உபயோகித்துதான். Probability எனக்கு அருமையாக வரும் என்று நினைத்து விடாதிர்கள். Probability -க்கும் பென்சில் ரப்பர் தான் (dice) பேருதவியாய் இருந்தது. குழப்பம் வேண்டாம், நான் தருமனில்லை.

ஒரு வீட்டை வைத்திருந்தால், என்ன ஒரு ஆணவம்?
அதிலும் பேச்சுலர்கள் என்றால் மரியாதை அதிகம் கொடுத்து பேசுகிறார்கள்.

“எத்தனை பேரு?” (நாங்க என்ன அதுக்கா(சாப்பிடறதுக்கு) வர்றோம்?) 

“எந்த கம்பனில வேலை செய்றீங்க?” (மன்னாரன் கம்பனின்னு சொன்னா ஒத்துக்குவீங்களா?அதிலும் MNC கம்பனி என்று சொன்னால் தான் மதிப்பு.)
“நான்வெஜ் சாப்பிடுவீங்களா?” (இல்லைங்க சார்! நான்வெஜ் ஜோக் மட்டும் சொல்லுவேன்)
எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டு வாடகை எவ்வளவு என்று கேட்டால், ஏலம் விடுவது போல பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம், இருபதாயிரம். வாரணம் ஆயிரம் அளவுக்கு பயமுறுத்துகிறார்கள். வேலை இல்லாதவர்கள் தங்க வீடு தேட வேண்டும் என்றால், ஹோம் லோன் மாதிரி “Home Rent Loan” என்ற ஒன்றை வங்கிகள் அறிமுகப் படுத்த வேண்டும்.
இங்கு எனக்கு வேறு ஒரு சிந்தனையும் அடிமனதில் இருந்தது. இந்த பசங்களோடு எத்தனை நாள் தான் தங்குவது?

Sharing with Girls!

அமெரிக்காவில் உள்ளது போல் பெண்களோடு ரூம் ஷேர் பண்ணி தங்க முடியுமா என்றொரு நப்பாசை. வெப் சைட்டுகளில் தேடி பார்த்தால், “We need two female roommates to share our room” என்று அண்டர்லைன் செய்து விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்திய கலாச்சாரம் கடைபிடிக்கும் பெண்கள். இந்த ஜென்மத்தில் கனவில் கூட இது நடக்காது. அடுத்த ஜென்மத்துல நாயாய் பிறக்க வைத்தாலும் அமெரிக்காவில் பிறக்க வை கடவுளே!
புரோக்கரை கூட்டிட்டு போய் வீட்டை பார்த்தாலும், ஆளாளுக்கு சொல்லும் ஒரு காரணத்தால் அந்த வீடு பிடிப்பதில்லை.
“தண்ணி சரி இல்லை” (ரெகுலரா டாஸ்மாக் போகிற நானே அமைதியா இருக்கேன்)

“நடக்க ரொம்ப தூரமா இருக்கு” (காண்டாமிருகம் பின்னாடி துரத்திட்டு வருதுன்னு நினைச்சிட்டு ஓடுங்க. தூரம் தெரியாது.)

“ஏரியா பசுமையாவே இல்லை” (சென்னையில் சுற்றி கொண்டிருக்கிற எருமை மாடே இதை பற்றி கவலை படுவதில்லை என்று சொன்னால், பசுமை=பிகர்கள் என்று அர்த்தம் சொல்கிறான் அவன்)

“வீட்டு ஓனருக்கு வயசுக்கு வந்த பொண்ணு இல்லை” (வயசுக்கு வந்தா நீ குடிசை கட்ட போறியா? வீட்டு ஓனருக்கு பொண்ணு இருந்தா, கரெக்ட் பண்ணி வீட்டோட செட்டில் ஆகிடலாம் என்கிற அல்ப கனவு.)
மொத்தத்தில் ஐந்து பேருக்கும் ஒத்து போகிற பாஞ்சாலி மாதிரி ஒரு வீடு வேணும். அது போல ஒரு வீடு கிடைக்க பொறுமை மிக அவசியம். சத்ய ஜித்ரே 1957 -இல் இயக்கிய பதர் பாஞ்சாலி (Pathar Panchali) என்ற பெங்காலி படத்தை உட்கார்ந்து நான்கு முறை பார்த்தால் அந்த பொறுமை நமக்கு கிட்டலாம்
ரசித்த இடம்: http://thegoodstranger.blogspot.com

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

1.செருப்புடன் வேலை செய்ய ஜெ அமைச்சருக்கு உத்தரவு#அப்படியே பொறுப்புடன் வேலை செய்யவும் உத்தரவு போட்டா தேவலை-இப்படிக்கு கடுப்புடன் ஒரு சாமான்யன்

2. மரபுக்கவிதைங்கறது முதிர் கன்னி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி#டேஸ்ட்  டிஃபர்ஸ்  ( அப்போ பின் நவீனத்துவக்கவிதைன்னா முகம் காட்டாம நமக்கு முதுகு காட்டி பஸ்ல உட்கார்ந்துட்டு வருமே அந்த ஃபிகரா? ராஸ்கள்.. சொல்றாம் பாரு வெளக்கம்.. )
3. ஹை கிளாஸ் ஃபிகர் கழுத்தில் எந்த ஆபரணங்களும் அணியாமல் இருந்தால்கூட ரசிக்கும் ஆண்கள் மிடில் கிளாஸ் ஃபிகர் எந்த ஆபரணம் அணிந்தாலும் ரசிப்பதில்லை#ஜெண்ட்ஸாலஜி
4. ஆஃபீசில் இருந்து கணவன் எப்போ வருவான் என மனைவி காத்திருப்பாள்.வீட்டுக்குப்போகவேண்டுமே என்று வருத்தத்தோடுஆஃபீசை விட்டு கணவன் கிளம்புவான்#ஆஃபீஸாலஜி
5. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிவதும் ஒரு வித சுதந்திரமே என பெண்ணும், அது ஆண்களைக்கவர செய்யும் குறுக்கு சால் தந்திரமே என்று ஆணும் நினைக்கிறார்கள்#கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
6. என்றென்றும் பாதுகாப்பான வாழ்வு வேண்டும் என பெண்ணும்,அன்றைய பொழுது ஜாலியாக கழிந்தால் சரி என ஆணும் நினைப்பதால் தான் பிரச்சனை வருகிறது #சைக்காலஜி
7. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு.அது இயற்கையின் நியதி.ஆனால் இதை பெண்ணிடம் சொல்லிக்கொண்டிராதே#சைக்காலஜி
8. திருமண நாள் அன்று மணப்பெண் குதூகலமாக இருக்கிறாள்.பிறகும் அவ்வாறே..ஆனால் மாப்பிள்ளை அன்று ஒரு நாள் மட்டுமே பரவசமாக இருப்பான்#ஜெண்ட்ஸாலஜி
9. என்னதான் நாசூக்கு ,நளினம் இவற்றில் கை தேர்ந்தவளாக இருந்தாலும் பப்ஸ் சாப்பிடும்( தியேட்டர் இடைவேளை ) பெண்கள் குழந்தைகள் போல் தான் உதடுகளில் சிதற விடுகிறார்கள்#லேடீஸாலஜி
10. ரெட்,யெல்லோ,ரோஸ் என 3 நிறங்களில் 3 ரோஜாப்பூக்களை ஒரே ஹேர்பின்னால் கூந்தலில் சூடிய பெண் புதுக்காதலியாக அவதாரம் எடுத்தவளாக இருப்பாள்#லேடீஸாலஜி ( அப்பாடா.. டைட்டிலை நியாயப்படுத்தியாச்சு)
11. தன் நட்பு வட்டாரத்தை திருமணத்திற்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடிகிறது#லேடீஸாலஜி

12. சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்,ஆண்களுக்கு அப்படி கேட்க தெரிவதில்லை

ரசித்த இடம்: http://adrasaka.blogspot.com


ரசித்த இடம்: http://valaimanai.blogspot.com/

உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

ரசித்த இடம்: http://tharaasu.blogspot.com

மறக்காம தங்கமணி பதில்களையும் பாத்துட்டு போய்டுங்க

எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

கடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் மருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.

இதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.

தனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.

உள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.


எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்
இந்தக் கண்ணாடிக் கடைக்காரருக்கு
அமோக வியாபாரம்.
“என்ன எனது எடை அதிகரித்துவிட்டதே!”

“சோறு சாப்பிடாமல் கேக் சாப்பிட்டு,
பால் குடியாமல் கோக் குடித்து,
மீன் சாப்பிடாமல் சொசேசஸ் சாப்பிட்டு
பத்தியம் இருந்தும் இப்படியாகிவிட்டதே”

என அதிசயித்த பெண்ணுக்கு தனது எடை உயர்ந்ததற்கான காரணம் இப்பொழுது புரிந்தது!!!!!

பிள்ளைகள் கொழுப்பதற்கு எத்தனையோ காரணங்கள்.

ஆனால் இந்த அம்மாவின் குழந்தை, கவலையால் கொழுத்ததாம்
இவர் தனது உணவில் மிகக் கவனம்.
அதிகம் சாப்பிடுவதில்லை.
சின்னச் சாப்பாடுதானாம்.
அதிகம் சமைப்பதும் இல்லை.
ஆனாலும் எப்படி எடை அதிகரிக்கிறது என்பது அவருக்கும் புரியவில்லை.

இந்த அம்மா எடையைக் குறைப்பதற்கு காலை முதல் இரவு வரை முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

முழுநேர உடற் பயிற்சிதான். உடற் தசைகளுக்கு. ஆயினும் அவளது எடை குறையவில்லை.

காலை முதல் இரவு வரை கால்களுக்குப் பயிற்சி.

உட்கார்ந்த இடத்திலிருந்து கால்களை ஆட்டியபடியே இருக்கிறாள்.

அது மட்டுமல்ல மற்றொரு தொகுதி தசைகளுக்கும் ஓயாத பயிற்சி.

ஆம் வாய்த் தசை நார்களுக்குத்தான்.

மகன் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்ற கவலை இந்த அம்மாவுக்கு.
தனது ஆசை தீர மகனுக்கு உணவு அளிக்கிறாள்.
ஆனாலும் சாப்பிடுவது வலு குறைவென்ற கவலை.

ரசித்த இடம்: மறந்து போகாத சில

காலேஜ் விழாக்களில் ஃபிகர்களின் முகங்களிலும் ,உடம்பிலும் தங்கி விடும் ஜிகினாக்கள் அவர்களை தேவதைகள் ஆக்குகின்றன
#ஜெண்ட்ஸாலஜி
பெண்கள் இடையில் ஒட்டியாணம் அணிவது நாம் ஒட்டியாணத்தை ரசிக்க அல்ல,அந்த சாக்கில் கூச்சம் இல்லாமல் அவர்கள் இடையை ரசிக்க
#ஜெண்ட்ஸாலஜி
கலகலப்பாக சிரித்துப்பேசும் பெண்ணை விட அமைதியாக இருக்கும் ஃபிகர் தான் அட்ராக்டிவ்
#ஜெண்ட்ஸாலஜி

இடையில் செருகும் சேலைக்கொசுவத்துக்கான சேஃப்டி பின்னில் கூட டிசைண்டு பின்னாக செலக்ட் பண்ணுவது ஹை க்ளாஸ் ஃபிகரின் நுட்பமான மெனக்கெடல்
#ஜெண்ட்ஸாலஜி

சைட் அடிக்கும் ஃபிகர் மாடர்ன் கேர்ளாகவும், தாலி கட்டும் ஃபிகர் குடும்பப்பாங்காக சேலை கட்டியும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனசு
#ஜெண்ட்ஸாலஜி

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்
#செட்டில்மெண்ட் எவ்வளவு வேணும்?

சீமான்  3 வருடங்களாக பழகி ஏமாற்றி விட்டார் என நடிகை 4 பக்கங்கள்  புகார் கடிதம்
#அடச்சே,வெறும் 4 தடவை தான் ஏமாத்துனாரா?

நான் ஒரே ஒரு முறை தான் அந்த நடிகையை சந்தித்தேன் -சீமான்
#ஓஹோ ஒரு தடவை சந்திச்ச பின் 3 வருஷம் பிரியாமயே இருந்தீங்களா?

ஜெ ஆட்சிக்கு வந்ததும் திருட்டு விசிடி கடைகள் மூடப்பட்டு விட்டன – கலைப்புலி ஜி.சேகரன்
#அண்ணன் செம ஜால்ராவா இருக்காரே..எந்த கச்சேரிலண்ணே?

தனது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தைரியம் உள்ள டைரக்டர் யாராவது இருந்தா என்கிட்ட வாங்க-.நடிகை சோனா
#நீளப்படமா இருந்தா ம்ஹூம்,நீலப்படம்னா ஓஹோ

 

வைகோ-ம.தி.மு.க., வளர்வது தமிழகத்திற்கு நல்லது; நாங்களும் ஒரு நாள், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம்
#நல்ல வேளை ராம்தாஸ் மாதிரி தேதி சொல்லல

விஜயகாந்த்: எனது தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பணத்தில், ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்
#ஓப்பனிங்க் நல்லாதான் இருக்கு

நாற்பதை தொட்ட த்ரிஷா#40 வது படமா?வயசு 40 ஆச்சா?40 வயசான தொழில் அதிபரை தொட்டாரா?எந்த விளக்கமும் இல்லாம ஹெட்டிங்க் போட்டா எப்படி? 
#சந்தேகம்

கனிமொழியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு 
#செய்தில கிக்கே இல்லையே? நாளை ஆ ராசாவுடன் குஷ்பூ சந்திப்புன்னு நியூஸ் வந்தா ஓக்கே#எக்ஸ்பெக்டேசன்

ஆஸ்காருக்கு பணம் கொடுத்தாரா ரஹ்மான்? : கிளம்பியது சர்ச்சை
#இசைஞானிக்கு கொண்டாட்டமான நியூஸ் ஆச்சே..இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே பாடுவாரோ?

முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: விஜய்! 
#நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தா போதும் சார்,தானா வலு ஆகிடும்

காதலன்:  எனக்கு 24 மணி நேரமும் உன் நினைப்புத்தான்….

காதலி: பொய் சொல்லாதீங்க..  அப்படி நீங்க என்னை நினைச்சிருந்தா எனக்கு விக்கல் வந்திருக்குமே?
—————————————
குப்பன்: அவருக்கு ஏகப்பட்ட பசங்களாம்..
சுப்பன்: இருக்கட்டும்.. அதுக்காக ராம்சாமி 1, ராம்சாமி 2 , ராம்சாமி 3 …… அப்படியா வைப்பாங்க?
——————————–
குப்பன்: நீ அவ கிட்டே ஐ லவ் யூ சொன்னியா?

சுப்பன்: சொன்னேன்.. ஆனா அது நடக்காது..
குப்பன்: ஏன்?
சுப்பன்: அவ வேற யாரோ 2 பேரை லவ் பண்றா போல.. ஐ லவ் டூ அபடின்னாளே..?
குப்பன்: அட வெளங்காதவனே.. ஐ லவ் TWO என சொல்லலை.. ஐ லவ் TOO  அப்படின்னு சொன்னா.. அப்டீன்னா அவளும்  உன்னை லவ் பன்றா-னு அர்த்தம்…
—————————-
குப்பன்: அவன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
சுப்பன்: பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் வந்த மாதிரி புதிய ஆட்சியில் பள்ளியறைக்கல்வியிலும் மாற்றங்கள் வருமா?ன்னு கேட்கரானே!
————————–
குப்பன்:  தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எதை எதை கேட்கனும்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு..
சுப்பன்: ஏன்?
குப்பன்: தலைவர் தேர்தல்ல ஏன் தோத்தாருனு கேட்டு மனு குடுத்திருக்காங்க./..

க்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..

“சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?”

“இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!”

ஆசிரியர்:ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??

மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.
மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

 நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு

மாணவன்: பி, சி, டி,எப்

ஆசிரியர்: டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??

மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்
ஜோன்ஸ் : படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்

பீன்ஸ் : யார் வில்லனா?? கதாநாயகனா??

ஜோன்ஸ்: தயாரிப்பாளர்
இயக்குனர் :,இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,

அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்

திரும்பிடுது!”

கதாநாயகன் :”படத்தோட பேரு?”

இயக்குனர் “ஜிம்மி ரிடர்ன்ஸ்!”
ஜோன்ஸ் : என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

பீன்ஸ் :இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.
ஜோன்ஸ் : இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.

பீன்ஸ் :பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா…?

ஜோன்ஸ் : ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.
டுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?

‘Addres’
ஜோன்ஸ் : பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

பீன்ஸ் :துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.

ஜோன்ஸ் : இவர் பழக இனிப்பானர்

பீன்ஸ் :என்ன செய்றார்?

ஜோன்ஸ் : ஸ்வீட் கடை வச்சிருக்கார்.
ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.
ஜோன்ஸ் : ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?

பீன்ஸ் :அது வாயில்லா ஜீவன்.
லோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?

உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.

பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே…!

ரசித்த இடம்: பனித்துளி ஷங்கர் 

\

ரசித்த இடம்: இட்லி வடை 

அண்ணே

என்னடா தம்பி எங்கேடா செல்ல போயிருந்தே..

நான் ஆட்சியைப் பிடிச்சுட்டேன் அதான் பிசி

டேய் கோணமண்டையா என்னடா சொல்றே நீ ஆட்சியைப் பிடிச்சியா
நெசமாத்தான் சொல்றேண்ணே நான்.ஆட்சியைப் பிடிச்சுட்டேன்…
எந்த கட்சியிலே நின்னு பிடிச்சேடா .முள்ளம்பண்ணித் தலயா
அண்ணே! மரியாதை மரியாதை…
ரெண்டுதரம் சொன்னா உனக்கு மரியாதை கொடுத்துடுவேனா …சொல்லுடா எப்படா பிடிச்சே

நேத்துதாண்ணே

யார்டா உனக்கு ஓட்டு போட்டது,எந்த கட்சியிலே நின்னே..

ஆட்சியைப் பிடிக்க எதுக்குண்ணே கட்சி கொடி எல்லாம்…  ஓட்டு. ஹி ஹி சரியான தேங்கா மடையனா இருக்கீங்களே  ஐயோ ஐயோ நினைச்சாலே சிரிப்பாணி சிரிப்பாணியா  வருது

மரமண்டையா சிரிக்காதேடா…ஓட்டு இல்லாம எப்படிடா ஆட்சியை பிடிக்க முடியும்
அதெல்லாம் வேண்டாண்ணே..

எப்டிடா..
அதெல்லாம் வேஸ்ட்ண்ணே..

சரி யார்டா உனக்கு பீரங்கி பிரச்சாரம் பண்ணினது,என்ன சின்னம்டா உன்னுது ஐய்யோ மண்டையப் பிச்சுக்கலாம்னு இருக்குடா…

எதுக்குண்ணே இப்படி தேவையில்லாத டென்சன்லே குதிச்சுட்டு வாரீங்க… சின்னம் ஓட்டு பிரச்சாரம் ..அதெல்லாம் ஆட்சியை பிடிக்க, திறமை இல்லாதவங்களுக்குத்தாண்ணே வேணும் எனக்கு இதெல்லாம் பஞ்சுமிட்டாய் .ஜுஜூபி…ரெண்டாவது லட்டுண்ணே..ஒண்ணும்தெரியாத அப்ராணியா இருக்கீங்களே…உங்ககிட்டே போய் அடியும் உதையும் வாங்கினதை நினைச்சா ஷேம் ஷேம் வெக்கம் வெக்கம்

டேய் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறே….

நான் சொல்ல்றேன் ஆனா இந்த ஐடியாவை வச்சு நீங்களும் ஆட்சியைப் பிடிக்கக்கூடாது ஆமா சொல்லிட்டேன்.

இல்லடா செல்லம்  பிடிக்க மாட்டேன் ஆட்சியை நீயே வச்சுக்க..சொல்லுடா சொல்லுடா

அண்ணே நேத்து நான் வீட்டுக்குப் போனேனா

அங்கே வச்சுதான் ஆட்சியை பிடிச்சேன்…
என்னடா சொல்றே வீட்ல வச்சு ஆட்சியைப் பிடிச்சியா…
ஆமாண்ணே எங்க ஆட்சி ஊர்லேருந்து வந்திருந்தாங்ஹ…அவங்யளைப் பார்த்ததும் நாம வெளையாடுவோமே டிங்கிலோனா அதுமாதிரி ,நானும் ஆட்சியும்  ஓடிப்பிடிச்சு விளையாடுறது ஞாபகத்துக்கு வந்துச்சு, ஒரே ஃப்ளாஷ் பேக்கா வந்துச்சா ஒரே ஓட்டமா ஓடிப்போய் ஒரே ’லபக் ’ஆட்சியை பிடிச்சுட்டேன்..
டேய் நீ இவ்வளவு நேரமா ஆட்சி ஆட்சின்னு சொன்னது உன்னோட ஆட்சியா…டேய் அது ஆட்சி இல்லடா அது ஆ.+..ச்..+.சி =ஆச்சி…
ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் பாக்கப்ப்டாதுண்னே….ஆட்சின்னும் எழுதலாம் ஆச்சின்னும் எழுதலாம் ரெண்டு ஒண்ணுதாண்ணே…
டேய் அரை வேக்காடு உனக்கு ஆச்சியும் ஆட்சியும் ஒண்னாடா…
ஐயோ யாராவது துணைக்கு வாஙகளேன் …ஒண்டியா இந்த மாங்கா மடையனைச் சாத்தமுடியாது…ஐயா !தாய்மார்களே அம்மா !தகப்பன்மார்களே…வாங்க வாங்க…

ரசித்த இடம்: ஹா ஹா ஹாஸ்யம்

 

தருமி: பிரிக்க முடியாதது என்னவோ?
ராசா: ஊழலும், காங்சிரசும்

தருமி: பிரிய கூடாதது?
ராசா: அன்னையும், தாத்தாவும்

தருமி: சேரக்கூடாதது?
ராசா: அன்னையும், அம்மாவும்

தருமி: சேர்ந்தே இருப்பது
ராசா: பணமும், அரசியல்வாதியும்


தருமி: சேராமல் இருப்பது
ராசா: காங்கிரசும், காந்தியமும்

தருமி: பார்க்கக்கூடாதது?
ராசா: தணிக்கைகுழு முடிவு

தருமி: பார்த்து ரசிப்பது
ராசா : மக்களின் வயிற்றெரிச்சல்

தருமி: சொல்லக்கூடாதது
ராசா : பத்திரிக்கையிடம் ரகசியம் 

தருமி: சொல்லக்கூடியது

ராசா : மக்களிடம் பொய்

தருமி: பதவியில் சிறந்தது
ராசா : மத்திய அமைச்சர்

தருமி: அமைச்சருக்கு அழகு
ராசா:  ஊழல் செய்வது

 தருமி: ஊழல் என்பது
ராசா:  அரசியலுக்கு மறுபெயர்
 
தருமி: அரசியலென்பது

ராசா : ஏமாற்றுவது

தருமி: ஏமாற்றுவதற்கு
ராசா: நான்

தருமி: ஏமாறுவதற்கு
ராசா: நீ

============================
ரசித்த இடம்: நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

எந்திரன் பாகம்-3 ல் மீண்டும் இணைகிறது சூப்பர் ஸ்டார், ஷங்கர் கூட்டணி.கதாநாயகி யார்? நடிகை மீனாவின் மகளா ? ஐஸ்வர்யா ராயின் மகளா??அதிருகிறது… கோடம்பாக்கம்…

“எனது உயிர் இத்தாலியில் தான் போக வேண்டும்- மனம் திறக்கிறார் சோனியா காந்தி- மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார் டி.ஆர்.பாலு” தமிழகத்தில் பரபரப்பு.

“அந்த அம்மாவுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை, மக்கள் பாடம் புகட்டுவார்கள்…”திமுக பொதுக்கூட்டத்தில் குமுறும் வைகோ…

“நடிகர் விஜய கட்சிடன் கூட்டணி அமைக்க மாட்டேன், சாகும் வரை தனியாகவே நிற்பேன்…” மனம் திறக்கிறார் கேப்டன்.

“யாரும் நடுவராக கூப்பிடுவதில்லை…பேரக்குழந்தைகளுக்கு வீட்டில் “கெமிஸ்ட்ரி” கற்றுக்கொடுக்கிறேன்” கலா மாஸ்டர் குமுறல்…

“வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும்…??!!”- மனம் திறக்கிறார் நயன்தாரா

“சமீபத்தில் நல்ல தெலுங்கு படங்கள் எதுவும் வெளியாகவில்லை” தனது மார்க்கெட் டவுன் பற்றி மனம் திறக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

“மு.க.அழகிரி அ.தி.மு.க(அழகிரி திராவிட முன்னேற்ற கழகம்) பெயரில் கட்சி ஆரம்பிக்ககூடாது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வேன்” ஜெயலலிதா ஆவேசம்…

“எங்கள் கட்சி தனித்து அமைக்கும் ஆட்சி…பார்க்கத்தான் போறிங்க அந்த காட்சி… இதுக்கு ஆண்டவனே சாட்சி” மிரட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

“முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து திமுக இளைஞரணி தலைவராக தொடர்வார்…வேறு யாருக்கும் தகுதி இல்லை” ஆற்காடு வீராசாமி பரபபரப்பு பேட்டி….

“பொள்ளாச்சி பேரன்- நான் போட்ட ரீமிக்ஸ் ஆட்டம்” – தனது புதிய படம் பற்றி கூறுகிறார் நடிகர் சத்யராஜ்.

 

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்ட பதிவு. இப்பவும் சரியாய் இருக்கு.

எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா?  பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் ” பீலா ” இல்லை. 

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை  மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.


1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மை 
பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.
2 .  பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.
1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர்அருந்தும்
பழக்கமுள்ளவர்களுக்கு 20 – 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.
3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.
பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L – High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)
4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber) 

இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார்60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) 
பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.
6 . பீர் மாரடைப்பை தடுகிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள்அதிகரிக்கிறது.
 7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது. 
2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு – Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40%குறைவாக உள்ளது .
 8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது. 
மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் “வளர் சிதை மாற்றம் ” காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன  This is from Beer Net Publication, April 2001 Biological Institute.
 9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia) 
லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில்இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.
10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. 
நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைதடுக்கிறதாம்.
****************************************
என்ன, ரொம்ப குஷியா ?? 
சரி சரி அளவோட இருந்தா தான் இதெல்லாம்.
இல்லன்னா ஆசுபத்திரி கேசுதான்.
ரசித்த இடம்: சட்னி-சாம்பார்


காலைல அவசரம் அவசரமாக  என் மகளை பள்ளிக்கு கூட்டி  செல்லும் அவசரத்தில் பைக்ல அவளை ஏற்றினேன் .முன்னாடி இருந்து கொண்டு

என் மகள் :அப்பா இந்த பாலம் ரொம்ப பெருசு இல்லையாப்பா என்றாள்
நான் :ஆமாம் கோவில்பட்டில   ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்
என் மகள் :ஆமாம் ரெண்டு பெரிய பாலம் நிறைய குட்டி பாலம் இருக்கு என்றாள்
நான் :இல்லையே குட்டி பாலமே இங்கே கிடையாது என்று சொன்னேன் …..
என் மனைவி :வண்டில இருந்துகிட்டு பேசாம அப்பாவும் ,மகளும் வாங்க என்று சத்தம் போட்டாள்(எலேய் உன் மண்டைல கொட்டினார்கள்ன்னு சொல்லு ன்னு கமெண்ட்ஸ் போடா கூடாது)
நானும் அமைதியா வண்டிய ஓட்டி  என்னோட ஆபீஸ் வந்துட்டோம் .
என் மகள் :அப்பா பாலம்ன  என்ன……….?(தொடர்ந்து விடாம கேள்வி கணைகள் என் மகள் ஆயிற்றே )
நான் :கீழ ட்ரைன்,ஆறு இப்படி போகும் நாம மேல போவோம் அப்படின்னு சொன்னேன்
என் மகள் :ரோடுல மேலே  ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு  வந்துட்டாள் )
நான் :ஆமாம் என்றேன் …….
என் மகள் :நாம ஸ்கூல்க்கு  போகும் போது  மூணு குட்டி  பாலம் வரும் நான் கான்பிக்குறேன் பாருங்க என்றாள் ….
நான் :இல்லை மக்கா குட்டி பாலம் கிடையாது .என்றேன்
என் மனைவி :அவள் வேற எதையோ சொல்லுறா உங்களுக்கு தான் விளங்க மாட்டுது ன்னு சொன்னால்
நான் அதை பற்றி மறந்துவிட்டேன் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றேன் …அவள் போகும் வழியில்
என் மகள் :அப்பா இந்த இருக்கு பாரு மூணு பாலம் என்றாள் .
நான் :அவள் கண்பித்ததை பார்த்து தலை சுற்றியது எனக்கு  இது பாலம் இல்லை மக்கான்னு சொன்னேன்

என் மகள் :பைக் ஏறி தானே இறங்குது ….அது பெரிய பாலம் …..இது குட்டி பாலம் …நான் சொல்வது தான் சரி என்கிறாள்(என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங் )

அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள்  என்று எல்லோரும் கேக்குறீங்களா ………?
SPEED BREAKER  மக்கா ….காலைலேயே ………ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்
ரசித்த இடம்: இம்சை அரசன் பாபு

2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்…

தமிழ்

முதலில் “கடவுள் வாழ்த்து”
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றிஅடுத்து மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன.  2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
 கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக   பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.
1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது.  2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர்.  முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

 வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது.  முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார்.  அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.
கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது.  உதயகுமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.
கருணாநிதிக்கு மூன்று மகன்கள்.  ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன்.  அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார்.  21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்….

ரசித்த இடம்: சாம்பார் சட்னி

  • Rajinikant got 150 questions in exam paper asking – “Solve any 100 questions” He solved all 150 and wrote, ” Rascalla!, CHECK ANY 100!”
  • “Rajnikanth doesn’t breathe…air comes to hide in his lungs”
  • Once a photo of Rajnikant was givenfor Xerox. Don’t even try to guess what happened… We got two copies of the Xerox machine.
  • All scientists failed to answer this but rajnikanth did… Ques: Which liquid turns solid on heating? Ans: Dosa… mind it!!!
  • One day Rajani thought to play cricket in monsoon and rain stopped due to play….
  • Once Rajnikanth gone for a walk and after one hour police arrested him u know why He reached USA and having No Visa with him
  • One day Rajnikanth bunked school. Since then it is known as Sunday.
  • Warne to Rajini: I can spin a ball on my finger for over two hours. Can you? Rajini: Rascala, how do you think the earth spins!?
  • Roger Federer: I know everything about tennis. You can ask me anything. Rajnikanth: Ok. Tell me, how many holes are there in the NET??
நன்றி: நண்பர் குழந்தை 

நேற்று தேர்தல் முடிவுகள் வெளிவந்ததால் வந்து விழுந்த ட்விட்டுக்கள் ஏராளம்.  அந்த சமயத்தில் பிளாக்கர் வேறு வேலை செய்யாததால் நிறைய வலையுலக பிரபலங்கள், தமிழக அரசியல் பிரபலங்களை குத்தகைக்கு எடுத்து கலாய்த்தனர், அதற்காக ஒருசிறப்பு வலைப்பாயுதே..

@bewithsureshm  திமுக – மூன்றெழுத்து, ஊழல் – மூன்றெழுத்து, ஆப்பு – மூன்றெழுத்து, ஜெயில் – மூன்றெழுத்து, பெயில் – மூன்றெழுத்து, தூக்கு – மூன்றெழுத்து.
@drraman07 சத்தியமூர்த்தி பவன் – பிச்சிக்கிச், அறிவாலயம் – நட்டுகிச், போயஸ் கார்டன் – பளிச், பளிச் #அறிவாலயத்துக்கு மேல் பாலம் கட்டும் பனியில் கேப்டன்.

@rahimgazali: தான் தோற்கும் ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு மிசினை குறை சொல்லும் ஜெயலலிதா இப்போது என்ன சொல்வார்# டவுட்டு.

@karaiyaan: டேய் ராகுலு ! நம்ம பஞ்சாயத்து (தங்கபாலு) பாலிடாயிலை குடிச்சிட்டாண்டா !

@settaikaaran கூட்டணியில் இருந்தாலும் அம்மாவுக்கு எதிர்கட்சி தலைவர் ஆகும் வாய்ப்பு நம்ம கேப்டனுக்கு கிடைத்த வெற்றி டாஸ்மாக் சங்கத்துகு கிடைத்த வெற்றி.

@imcheenu: டாய் செவல தாவுடா தாவு : எங்க தாவுரது நானே தவழ்ந்துக்கிட்டு இருக்கேன் #ராமதாஸ்.

@bharathiee: எரிகிற இரண்டு கொள்ளிகளில் சிறந்த கொள்ளியாக அதிமுகவை தேர்வு செய்துள்ளனர் # இனியாவது மக்கள் தலைதப்புமா?

@kekkepikkuni  நேற்று வரை திமுக கூட்டணி வெல்லும்னு கருத்துக் கணிப்பு சொன்ன மீடியா கம்பெனிகளின் இன்றைய விளக்கம் என்ன?
@imayabharathi பெரிய திருடர்களிடமிருந்து தப்பித்து சின்ன திருடர்களிடம் மாட்டிக்கொண்டோம் #அவ்வளவு தான் வித்தியாசம்.
 @jillthanni  விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி #ஆமாம் இவிங்க பெரிய வீனஸ் வில்லியம்சு பாரு.
@rajeshjothi என்ன தான் சந்தோசமா இருந்தாலும் “இந்தம்மா” வந்து என்னென்னல்லாம் பண்ண காத்திருக்கோனு ஒரு பயம் இருக்க தானே செய்யுது?#மனசாட்சி
@raghuji  இனி கூடிய சீக்கிரம் 500 கோடி செலவில் “சசிகலா பிக்சர்ஸ்” பெருமையுடன் வழங்கும் “எந்திரன் பார்ட் 2”-வை எதிர்பார்க்கலாமா?#prediction.

@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!

@umakrishh ஏதோ அடிமைகள் போல வீட்டு வாசலில் காவல் காத்தவர்களுக்கு உயிர் கொடுத்த சகாயம் அவர்களுக்கு ஒரு சபாஷ்..
@Alex_Pandian இந்தத் தேர்தலில் மிகவும் வருத்தப்படிருக்கக் கூடிய ஒரு நபர் ஸ்டாலின், அவரது உழைப்பெல்லாம் சகோதர, சகோதரியின் செயல்களால் வீண்
@Pattapatti ஊழல் பண்ணீட்டு.. வெட்கமேயில்லாமல் ஓட்டு கேட்டால் இதுதான் கதி..( இது அம்மாவுக்கு பொருந்தும் உடன்பிறப்பே..வெட்கம் தவீர்)
@gbsivakumar RT : ரஜினி கிரிக்கெட் பார்க்க போனார். இந்தியா வென்றது. ரஜினி அதிமுகவுக்கு ஓட்டு போட்டார். அதிமுக வெல்கிறது. ரஜினி ராக்ஸ். #fb
நக்கீ கோவாலுவின் மீசை முடிகளை மொத்தமாக கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு கொடுக்கப்படும்!

@writermugil யாராவது ‘வளர்ப்பு மகன்’கள் எங்கேயாவது இருந்தால், உடனே எந்தப் பெண்ணையாவது இழுத்துக் கொண்டு போயஸுக்கு ஓடவும். கல்யாணம் செய்து வைக்கப்படும்.
@nirujah தோல்வியை பார்த்த போது ஒரு நிமிடம் கண்கள் பனித்தன. பழைய வடுக்களின் வெளிப்பாடோ! பழிதீர்த்த திருப்தியோ! #ஓர்_ஈழத்தமிழன்_உணர்வு
@kavi_rt ஏன் அதிமுக ஜெயிக்கும்போது மட்டும் மிருகபல மெஜாரிடி கிடைக்கிறது? இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
நன்றி தமிழருவி மணியன்! உங்க பேச்சக்காட்டிதான் வீட்ல கொஞ்சம் பேர்த்த திமுகவுக்கு எதிரா வாக்களிக்க வைக்க முடிஞ்சது.

@vg_s திமுக வீழ்ச்சிக்குக் கொண்டாடும் நாம், அதிமுக தோற்று திமுக ஜெயிப்பதற்கும் கொண்டாட வேண்டியிருக்கும். இரண்டுமே விஷத்தில் புழுத்த புழுக்கள்.
@naiyandi நான் தாவி விட்டால் அது நடந்து விட்டால்..# என்ற ராம்தாஸ் பாடலுக்கு பின்னணி கொடுக்க வருகிறார் வீரமணி
@RajanLeaks  திருடுனதாலயும் தான் திமுக,காங். தோத்துச்சு! ஆனா திருடுனதால மட்டும் இல்ல! – கபில் சிபல் # சூப்பர் கருத்துமுத்து.

@rajarajan_r: சட்டு புட்டுன்னு ஒரு ஸ்கூல் ல இல்லேன்னா காலேஜ் ல join பண்ணனும் # லேப்டாப் கிடைக்கும்.

@senthilcp நான் சட்ட சபைக்கு கோட் சூட் அணிந்தே வருவேன்,ஓப்பனிங்க் ஃபைட் ரொம்ப முக்கியம் -கேப்டன் நிபந்தனை,கவர்னர் திகைப்பு.
@TBCD செயா , செயா + ல் நிறுத்தாமல் விளம்பரங்களா ஓடுது…டேய் 5 ஆண்டுகள் இருக்கு…..மெதுவா சம்பாதிங்க..இப்ப செய்தியயைப் போடுங்க !
நன்றி நண்பர் பாரத் பாரதி: http://bharathbharathi.blogspot.com

4:29 pm: The interviewer says, “one last question – when are you going to Delhi?” With a cheeky smile, Jayalalithaa asks innocuously, “for what?”  He says, “to meet the people at the Centre, accept their congratulations, and tell them what you want them to do for Tamil Nadu”. She replies,  “let me first assume the post of Chief Minister. Then, I will schedule the visit.”

4:28 pm: “Your untold sufferings and miseries are things of the past,” Jayalalithaa says, “I give you my word that your future will be bright and  glorious.”

4:25 pm: Jayalalithaa closes the interview by conveying her thanks to the people of Tamil Nadu, and repeating that this isn’t her victory, but a victory for the people, and saying, “You’ve suffered a lot over the past five years, faced injustice, shed tears of blood. Wipe those away. I promise that your future will glow bright.”

She repeats the same in English, saying “democracy has been kept alive and vibrant by this electoral mandate.”

4:24 pm: Asked about the monopoly on cable networks and cinema that the DMK has brought in,  and what she intends to do about it, Jayalalithaa replies, “My goal is to fulfil all my promises from the election manifesto within the next year and a half.”

4:23 pm: The interviewer asks if Jayalalithaa will pursue the 2G case, as she did when in Opposition. She replies, “The Supreme Court is taking action now. My duty is done, so we don’t have to worry about that.”

4:21 pm: The anchor asks, “When asked which state has been run the best over the past five years, people say Gujarat, Bihar, Orissa. For people to say Tamil Nadu, do you have a timeline?”

Jayalalithaa replies, “The time we’ve been given is 5 years. If the 2006 debacle hadn’t happened, we’d have done more than Gujarat, Bihar or Orissa. Sadly, we didn’t get the opportunity. Now, we will do it.”

4:20 pm: “Effort is life,” she says, when asked about how she will fulfil the promises she has made to sort out the problems of the farmers and people of villages, “I cannot be overwhelmed by the burden imposed on me. I have to do this for the people.”

4:17 pm: Jayalalithaa says the DMK has thrown the entire state into debt of over 1 lakh crore by some calculations. “The need of the hour is to rebuild the entire state,” she says, and repeats the metaphor of the house.

4:13 pm: Asked about the Lankan Tamils, she says, “Their life has become horrible because of the Sri Lankan government. I’ve spoken about this at several fora. The state government can only do so much, as this is an international problem. The Centre should take steps, and once I take over as CM, I will pressurise the Centre. There are two options. One, the President of Sri Lanka must be tried for war crimes, and brought before the International Court of Law. The Centre can direct its efforts to that. The next step is that the people of Sri Lanka should live in dignity and pride. If the Sri Lankan government does not do anything to promote this, we can impose economic sanctions, and advise other nations to do the same.”

4:12 pm: When asked what she wants to convey to the people, she says, “this is not my victory or the AIADMK’s victory. This is the victory of the people.”

4:10 pm: Jayalalithaa begins by recapping what she said at the press conference. She adds, “people thought of how peaceful life was when AIADMK was in power. They thought back to the golden period, and wondered if they would live that peaceful life again. Over the last five years, people have been waiting to throw out this rule, to get us back in power. I was sure that people would not change their minds. So the exit polls didn’t bother me. I knew this would happen.”

4:09 pm: Jaya TV begins to telecast an ‘exclusive’ interview with Jayalalithaa. One wonders when they got in line!

3:58 pm: Jayalalithaa says the date of the swearing-in ceremony will be known only after the governor invites her to form government.

Thanking the people of Tamil Nadu for the “decisive mandate they have given us”, conveying her appreciation and thanks to the Election Commission for conducting free and fair elections, and thanking her allies for the hard work they put in, Jayalalithaa smiles, nods farewell and disappears into her home.

3:56 pm: “Our first priority is to restore the rule of law and order”, she says. Then she adds that the AIADMK will fulfil the “numerous promises” they have made in the manifesto.

When asked about Karunanidhi’s comments against her, she says, “you should put the question to the person who made the statement.” Then she smiles, “if he has the courage to face you now.”

3:55 pm: She says the ruin is beyond description today, as corruption has been magnified “a thousand times, 10,000 times” and that the AIADMK will take it up as a challenge on behalf of the people.

3:53 pm: “It is not an easy task to rebuild an entire state,” Jayalalithaa says. She then brings in the metaphor of a house, and says renovation is easy, patching up the weak spots. “When the foundation is gone, the ground has been shaken, and debris is scattered everywhere, we have to clear it away first,” she says, “time and again, we’ve had to do it. Time and again, I have had to do it.”

She speaks of her stints in 1991 and 2001, and how the World Bank had written off Tamil Nadu, and everyone had pitied her for having to take over as Chief Minister.

3:52 pm: “Today, our priority is to bring back stability to Tamil Nadu. The economy has been ruined over the past three years. Time and again, this has happened.”

3:51 pm: Answering a question, Jayalalithaa says she could see that wherever she went, she could see that people were disgusted with the DMK government, and were waiting for an opportunity to show their anger and resentment against the DMK. Over the last three years, they were waiting for elections, to throw out the DMK government, she says.

3:50 pm: Jaya begins with, “who is going to ask the questions?” Then, she thanks the people of Tamil Nadu and the voters from the bottom of the heart, and says this is not her victory, but that of the people and democracy. She then translates that into English for the benefit of the English and Hindi channels.

3:48 pm: Jaya TV’s expert panel returns after a twenty-minute break. The anchor interrupts again as the live telecast of Jayalalithaa’s speech begins.

3:36 pm: The scheduled address has not begun. We’re considering taking a vote. What is delaying Jaya? a) She can’t find the right shoes to go with her sari. b) She can’t find the right shawl to go with her sari. c) They can’t make the mics. work at her place either. d) The astrologers are demanding their pound of flesh. e) She’s locked herself in and is shimmying a victory jig to her old songs.

3:26 pm: Jaya TV has changed its panel, and the anchor introduces Expert 1, an Associate Director from Frontline magazine. He begins with his staple question, “why has the DMK lost? I’m asking you in your capacity as a journalist.”

Expert 1 says, “the main reason is the unconvincing coalition” and goes on to explain that there was a troubled alliance between the DMK and the Congress. The anchor prods him on, “was that the only reason?”

“Not really,” says Expert 1, “it’s also the corruption and scams. There are problems in many places, and the people are watching them.” The anchor interrupts and goes into an ad break. Huh?

3:24 pm: Jayalalithaa is scheduled to make her victory speech on Jaya TV at 3:30 pm.

3:22 pm: Home Minister P Chidambaram has expressed his disappointment at the outcome. “We are disappointed. I take this opportunity to congratulate the AIADMK and its allies on their splendid victory and wish the new government success,” he said.

3:19 pm: On Jaya TV, the Marxist Communist representative launches another diatribe against the DMK. The anchor continues to beam, and the other panelist looks on sleepily. Vijay dances yet again.

3:14 pm: Sun News flashes the pictures of DMK contestants, even as it announces that they’re losing in their respective constituencies. The text deceptively reads, “This DMK candidate trails AIADMK by 3400 votes”.

3:12 pm: Meanwhile, Sun TV continues to flash news that Jayalalithaa will assume the title of Chief Minister on Sunday, as Dhanush rides a bike that looks too big for him.

3:10 pm: Sun News focuses on a correspondent, who speaks of the see-sawing nature of the vote count, after reading out a list of figures, and finally says, “DMK was leading, then ADMK was leading, and now again DMK is leading.” Sensing this could go on forever, the production control room cuts to graphics.

2:56 pm: Comedian-turned-politician S. Ve. Shekher, who was expelled from the AIADMK in 2009 and joined the Congress party early this year, is on the Raj TV panel now. Grinning, he compares the elections to a horse-race, in which a horse may get injured along the way, when the anchor asks him how he had such high expectations of the Congress’ performance.

2:48 pm: Sun TV says Jayalalithaa leads in Srirangam by 11,715 votes, and then starts playing the movie ‘Thiruda Thirudi’ (‘Male Thief, Female Thief’). Is there a sub-text to this? Hmm.

2:45 pm: The graphics flashed by Jaya TV focus on the thumping victories of AIADMK candidates over the DMK contestants, as Expert 1 speaks of how Ramadoss’ children and grandchildren studied Hindi and Sanskrit, and how the public has seen through his pro-Tamil act, and does not believe that he teaches his descendants to speak their language.

2:43 pm: Jaya TV seems to be too busy criticising the components of the alliance that Jayalalithaa often referred to as “minority government” to be aware of the resignation drama.

2:41 pm: Sun TV mournfully announces that Jayalalithaa will take on the post of Chief Minister on Sunday.

2:39 pm: KARUNANIDHI RESIGNS, PARTY WORKERS APPEAL TO HIM TO STAY ON. Sun TV also gets into a news telecast and announces that Karunanidhi has resigned as Chief Minister.

2:37 pm: Sun News breaks into a news telecast, where the newscaster clinically announces the results from various constituencies, and then moves on to the other states.

2:30 pm: Sun News cuts live to Poes Garden, where the correspondent tries to convey that Jayalalithaa has let down her allies by announcing that she will set up government. The AIADMK supporters first drown him out, and then his earpiece malfunctions. The beleagured anchor says, “speak…speak…speak” in a paternal voice, and the correspondent yells, “hello?…hello?…hello?” They cut back to a different anchor and a studio analyst who supplies the numbers.

2:25 pm: The anchor on Jaya TV compares the relief measures given to the Vanniyar caste to a mirage in the desert, and asks a representative for his opinion. Vanniyar Rep (VR) says his caste supported Karunanidhi in 2006 because he promised them reservation. But since he didn’t deliver, they supported Jayalalithaa this time. VR says, “Karunanidhi has not just done nothing; he has thrown mud on our lives. He says he’ll do everything. All he’s done is for his family. He has married 5-6 times, had 10-12 children, stowed away crores!” The anchor, who seems to be enjoying the repartee, regretfully tells us it’s time for a break. Vijay begins to dance again.

2.17 pm:  The morning’s anchor a.k.a. Man With a Tiny Bit of Knowledge of Astrology is all smiles on Jaya TV. He welcomes us to this delightful morning – clearly, he’s a time-traveller too – and happily shows us a pie chart that declares the 200-33-1 figures of AIADMK-DMK-Others. With a member of the Marxist Communist Party on the panel, he asks, “you’re largely responsible for the victory, right, for exposing the scams?” Even the party member looks surprised, and the anchor says, “I mean, everyone has worked together. What did you expose?”

2:14 pm: Vijay TV does not seem to care who wins. There’s a Tamil-dubbed version of ‘Black Water’ playing right now. If you don’t care for the results, and really, really want to see Australians speak Tamil, you might as well park yourself here.

2:11 pm: Raj TV has changed its panel too, and has shifted focus to West Bengal. The panel seems to be made up of a pro-Left, an anti-Left and a redundant member.

2:07 pm: Ah, here’s what we were waiting for! The Blame Game begins on Sun News! The panel now feels that the DMK lost because it aligned with the Congress, which is at the centre of corruption.

A Congress member says fatalistically, “say what you want. We have ruled for 50 years. So the good is because of us; and where the good is defeated, our failure is because of us.” The beleagured anchor, with a fresh coat of pink powder, nods approvingly, and then looks serious.

2:05 pm: Jaya TV is back, with a different panel. Kalaignar TV has given up and moved on to a three hour film called ‘Mr. Bharath’. More power to Rajnikanth in bell-bottoms, a floral scarf and an evil look taking on a suited-up Sathyaraj (who had to powder his wig at the time).

1:47 pm: AIADMK leader Thambidurai has declared that his party will form a government on its own rather than share power with its allies. No surprise, there. Thambidurai also suggested that the AIADMK will proactively pursue cases of corruption against the DMK’s first family. “The people have voted to root out the DMK corrupt government. It is the duty of my leader to take the necessary action and go through all these cases,” he said. Read the story here.

1:43 pm: A tweet led us to this hilarious article on http://ww5.4tamilmedia.com/index.php/newses/india/3163-2011-03-03-09-02-37, an article on wall posters in Madurai. One reads “Raja has been arrested. When will you arrest roja (the rose)?”

Another, put up by a member of the VCK, reads “DMK, PMK, please think about the Vidudhalai Chituthaigal. Do you need to align with the Congress, which is one of the main causes of the genocide of Lankan Tamils, and which doesn’t care about the deaths of our fishermen?” Scroll down, and you’ll see…wait, is that Azhagiri as Fidel Castro?!

1:40 pm: We also have a profile of Karunanidhi – the man who could not turn the tide this time

1:15 pm: Latest trends suggest that Karunanidhi is heading for a landslide victory in his constituency of Tiruvarur with a lead of over 21,000 votes. Remember, unlike Jayalalithaa, the DMK patriarch has never lost in an assembly election dating back to 1957 when he was first elected from Kulithalai.

12:59 pm: Kalaignar TV begins a countdown to its news telecast. It doesn’t look like it will be cancelled now!

12:58 pm: Strangely, DMK mouthpiece Murasoli has nothing to say about the elections. The latest news on the site is that Karunanidhi has announced that the national flag will fly at half-mast as a sign of mourning for Arunachal Pradesh Chief Minister Dorjee Khandu, who passed away in a helicopter crash last week!

12: 57 pm: Stalin has regained the lead in a see-saw battle in Kolathur. No such problems for Jayalalithaa who’s established a healthy lead of over 3500 votes in Srirangam.

12:51 pm: Raj TV has its own analysis going too. A panel of three people discusses conspiracy theories. One of the experts says, “From what I hear, the reason the DMK coalition is losing so badly is that in some areas, the Congress supporters didn’t vote for the DMK, and in some places, the DMK supporters didn’t vote for the Congress.”

“So, essentially, they cut off their noses to spite their faces,” the anchor nods intelligently.

“Yes,” says the expert. The other two experts, who had been engaged in a violent verbal argument a few minutes earlier, have nothing to say.

12:46 pm: Well, let’s take a look at the relatively neutral media, shall we? The DD Podhigai figures show a 194-39 lead for the AIADMK. They cut live to Poes Garden as Jayalalithaa steps out on to her balcony and makes the V-sign. The crowd goes hysterical. The anchor says Jaya is due to hold a press conference shortly.

12:35 pm: Cho speaks, and his voice breaks – not because he’s getting emotional, but the microphone’s cranky. Clearly, the electronic  equipment in the studio took offence to Astrologer 3 crediting the airwaves and not them.

Cho finally announces, “The exit polls of TV channels,  the articles of newspapers, SMS campaigns etc. said the ADMK won’t win, the DMK will by a small margin. I said the ADMK will have a majority by itself, and the coalition will win. Why? Because it was obvious. People were waiting to throw out the DMK. People published the wrong news, and some voters were surprised. But in the end, the DMK is going out. I’ve never seen a more stupid management of electricity till now. No steps were taken to do anything about it, whatsoever. Then, there is the sand mining mafia. Everything from sand to water to everything else is stolen.”

The anchor thanks him as the mic. crackle begins again, and says generously, “stealing anything is all right. But our own brothers and sisters, the Lankan Tamils…why was the DMK so uninvolved?” “I’ll tell you why,” says Expert 2, “Karunanidhi and his family have set up and supported several industries in Sri Lanka. Their main concern was that these should not be harmed.”

“We’ll discuss this in more detail,” promises the anchor, and Vijay begins to dance on screen as the ad break begins.

12:32 pm: Reports now suggest that Deputy CM MK Stalin is trailing his AIADMK rival Saidai Doraisamy in Kolathur. If Stalin loses, his brother Azhagiri will have the upper hand in the power struggle to succeed their father.

Several other DMK ministers are also trailing including veteran politician K Anbazhagan in Villivakkam.

12: 30 pm: Congress leader Ghulam Nabi Azad has predictably blamed the anti-incumbency factor for the defeat. “Last time, it was the turn of the DMK to win and this time if one goes by that convention it was AIADMK’s turn,” he said. Azad also denied that the Congress had blundered by contesting over 60 seats, saying that the demand for more seats helped the party ‘reassert’ itself.

12: 28 pm: On Jaya TV, the anchor sings out aphorisms. Red-White has been retained, while Expert 2 has changed. The discussion now centres on the family and their business interests. “Dayalu, who was nowhere in the picture has now been caught,” Expert 2 declares, “the next arrow will pounce on Karunanidhi.”

“You can have some illiterate grandmother or grandfather as the director of a channel, and then make them tell the CBI they don’t know English, they don’t know Hindi, they don’t know Tamil or whatever you want, and then say ‘Hey, let them go, they don’t know anything’. But are people fools? And you know how this 60 percent of Dayalu is divided – 20 to Stalin, 20 to Azhagiri, 20 to Tamilarasi, and then…” The anchor interrupts to say “Cho Ramaswamy is waiting to speak to us”.

12: 26 pm: Read about the phenomenon called Jayalalithaa in our profile of the Iron Lady.

12:24 pm: Sun News has finally relieved the morning anchor. A new panel discusses the election in such sombre tones one is reminded of Mani Ratnam’s early movies, and the whispers in the dark that characterised them.

12:22 pm: Sun TV has the lead of the AIADMK coalition to the DMK at 196-37. Simbhu dances silambaattam, while Jyotika whistles. The movie  will not be interrupted by news.

12:14 pm: The Congress has graciously offered its best wishes to Jayalalithaa. Spokesperson Jayanthi Natarajan said that the party would ‘introspect.’ Ms Natarajan also affirmed that the alliance with the DMK would continue. “We cannot give up on our allies just because of an election defeat,” she said.

12:12 pm: The Jaya TV panel is now discussing a series of atrocities, including the lathi charge of students of the Law College. “Sir, I am telling one thing, kindly listen” Red-White says to Expert 2, “there is no protection even for law enforcers. A policeman is killed in front of ministers. A policewoman says she was sexually harassed. Where is there protection for ordinary people?” As if on cue, a trailer of Vijay starrer ‘Velayudam’ comes on.

12:12 pm: Jaya TV’s panel now moves on to the spectrum scam. The anchor says, “we’ve heard of scams running into thousands of rupees…into lakhs….into crores. But never lakhs of crores! Even children know of the scam. A grandfather told his grandson, ‘Once upon a time, there was a Raja in a town’ and the child said, ‘Yes, I know, and he stole all the money and went to jail.’

Before the panel can laugh, a correspondent is on the line from Madurai, and says 5-6 rounds of counting are over, and AIADMK is in the lead. The channel then shows us the contrast between the crowds outside the AIADMK headquarters, and the empty streets around the DMK headquarters, Anna Arivaalayam.

12.10 pm: In some news coming in from Pondicherry, former CM and All-India NR Congress founder N Rangasamy defeats Congress rival V Pethaperumal

12:04 pm: A panel is back on Jaya TV. On the left is a man whose hair is evenly divided between red and white. He says, “look at the film industry. They’re in everything. Every cineplex is only allowed to play movies produced by his grandsons. You know, a small trader said, ‘Oh, I bought something for 300, and sold it for 450, I made a profit’. I said, ‘be careful, if someone from the DMK overhears you, they’ll take over your business!’

“The anchor says, “you know, they say ‘Don’t blame the dark; light a candle’. But there are power cuts from 9 am to 5 pm. What is this embarrassing situation because of?” Red-White says, “Of course! Arcot Veersamy didn’t get the ticket because he said we’ll lose because of the power cuts! They give corporates uninterrupted power supply. Who suffers? The middle-class and the farmers!”

11:53 am: The beleaguered anchor’s back on Sun News. The panel has moved on from the – ahem, power struggle.

Expert 1 says, “the people need to be reminded of what Jayalalithaa does. More importantly, her allies need to be reminded. In 2003, she pulled out of the NDA government, pulling the carpet from under its feet, on impulse.”

Expert 2 turns out to be a member of the Marxist Communist Party. He says, “this is a clear indicator that people wanted change. Some impulsive decisions were taken on technical issues. Those are only technical.”

Expert 1 says, “but even when the contestants were announced, her allies’ wishes were not taken into consideration.”

Expert 2 says, “No, no, that’s a technical issue, that’s not wrong.” Expert 1 grins, “that IS wrong.” The anchor defeatedly announces a break. We come back to Election News,  as the panel has to be reconstituted!

11:49 am: Sun News continues to supply graphics. Sun TV seems to have cancelled its scheduled news telecast for 1:00 pm. Simbhu a.k.a. STR and Jyotika continue to dance.

11:46 am: Jaya TV, meanwhile, breaks its programming schedule to bring us the live telecast of crackers being burst. The panel has gone, to be replaced by newscaster Fathima Babu, who does a round-up of the leads in various states and constituencies.

11:43 am: As noon approaches, Kalaignar TV has changed its programming schedule again. Now, the programme ‘Maanaada Mayilaada’ has been extended till 1:00 p.m. Looks like re-runs of dancing deer and peacock are more important right now than the election results. Well, at least the judges are laughing.

11:32 am: Sun News’ panel has spoken about how there may be allegations about a certain amount being lost to the exchequer, but then, the amounts of money that Jayalalithaa stole during her time in power are not accounted for. The anchor announces a break again. One can’t help feeling sorry for him. For the record, he has been on the sets since morning.

11:30 am: The Jaya TV panel now focuses on family politics, and how Jayalalithaa as a single woman whose children are the people of Tamil Nadu, is a more able administrator.

11:26 am: Jaya TV’s panel has changed again. The anchor who dabbles in astrology is back, and they are discussing The Legend of the Thirteen Zeroes. “The PAC committee has said it,” says Expert 1, “the ED has said it. The IT department has said it. Now, the case is going on in the Supreme Court, and the people are delivering their verdict.” The anchor speaks of the celebrations in a rather sleepy voice, which is drowned out by the cries of the crowds the camera is focusing on.

11:22 am: Sun News’ Expert 1 speaks of how the minority Muslim community, which he represents, has been aided by Karunanidhi, and alleges that Jayalalithaa is all talk, and never gives them space to voice their woes. He goes on to prove he zoned out when Expert 2 was speaking, when he says, “Like he said, the power deficit has been caused by Karunanidhi’s concern that people should have access to electricity and electric lights. We only have 8000 MW allocated to us, but we need 12,000 MW. This situation has been forged by the DMK.”

The anchor looks panicky, and announces a round-up of the results. Graphics and jazzy music follow. The soundtrack has changed yet again! It makes us happy.

11:21 am: Jaya TV focuses on visuals of people distributing trays of laddus and bursting crackers across Chennai.

11:15 am: Sun News is now discussing what fooled the people. Expert 2 says, “the problem is that AIADMK created so many problems in the preceding five years that the DMK has not been able to do solve all of them in its five years of golden rule. Because of this, people think that the governance was not all right. Let’s take power for instance. We are still trying to make up for the excesses of Jayalalithaa’s regime, which has caused a deficit. At least, Karunanidhi has announced that there will be cuts for one hour.”

Clearly, they believe that the lighting for the functions held in Karunanidhi’s honour every few days was supplied by his inner glow.

11:02 am: According to the Election Commission, Chief Minister M Karunanidhi is leading by 8886 votes in Thiruvarur but his son and deputy, MK Stalin, is facing a bigger fight on his hands, with only 145 votes separating him from his AIADMK rival in his new constituency of Kolathur. DMDK chief Vijayakant is ahead by 5750 votes from Rishivandiyam.

10:54 am: The Sun News anchor nods gravely, and looks more uncomfortable than he did when an expert chided him for saying the Trinamool was also the Congress. Expert 1 continues, “it’s like people take up exchange offers. But one thing is true – all the societal problems we’ve had, all the things we need to do to make it an equal society, Kalaignar has come out and discussed. He has gone to the people. In Jayalalithaa’s case, even the medicines wouldn’t reach the people, leave alone her.”

He sighs, and then launches into a eulogy that quickly takes on the tint of an obituary, “His greatness, his kindness to the people, his heart that beats for the people, his wisdom, his mastery of language…” Without  completing the thought with a predicate, he says, “If Jayalalithaa comes to power, will she show us a changed face, or will she be the same  dictator she was?” He seems to catch the anchor’s eye and hurries on, “this is too premature. We can’t discuss results yet.”

The anchor looks  happy to be able to agree. “Only about four rounds are over, I think,” the expert says, “no one can hide the fact that Jayalalithaa is leading. But no  one can hide the fact that Karunanidhi is generous.” On that bizarre note, they get into the graphics. Thankfully, the music has changed.

10:51 am: Finally! Sun News has a new panel in place. Well, the anchor’s the same. But an analyst, looking like his favourite ice cream is curdling in his mouth even as he speaks, says, “See, under Kalaignar, there were more schemes to benefit people than under any other party or any other governance at any other period. I’m not going to get into why people are voting the way they are. But with people, when there’s an opportunity for change, they think “Ah, how would it be if things changes?” This opinion of the people, this inclination, has come to the fore. Though the AIADMK came up with many schemes against the people, they want change.”

Maybe it has to do with Barack Obama’s current popularity ratings?

10:48 am: Sun News has the same graphics and the same music. Come on, guys, surely, you have a bigger database of music??? Kalaignar TV’s got a man in shiny tight-fitting shirt and harem pants belly-dancing. We liked the clowns better.

10:45 am: Sun TV has Simbhu (or STR as he is now called) delivering punch dialogues as Jyotika looks on sadly. The movie ‘Saravana’ is on. The ticker says the AIADMK leads the DMK167-36.

10:41 am: Sun News now has a different anchor and a correspondent who reports on the numbers from another part of the studio. Their focus is, rather inexplicably, on West Bengal. Clearly, the Trinamool Congress – Congress rift has been taken to heart.

The ‘Breaking News’ portion of the ticker announces every few seconds that Karunanidhi has the lead in his constituency.

10:36 am: Kalaignar TV now has Sudha Chandran giving two people feedback on their dancing act. The two dancers are dressed as clowns. The audience looks sheepish. The election programme has now been postponed to 12 noon. Wonder when talk of a conspiracy by the AIADMK will start!

10:33 am: Politician now holds forth, “People have decided we must do away with this Kaattu Darbar (jungle rule). Crossing the lines of caste and class, they have voted in favour of the alliance that will save them in an overwhelming majority. This shows that people have overcome barriers. Even a person in a village, wearing a loincloth, speaks about the spectrum scam.”

10:28 am: Jaya TV has now decided it’s pointless to show the AIADMK-DMK ratio, and is focusing on the leads of the AIADMK and its allies instead. The panel has changed, but there’s a journalist-politician combination anyway.

The anchor asks Journalist, “why has the DMK lost so badly? We all know, but what is the main reason?” “The main reason is…,” Journalist frowns, “his sons danced on the heads of the people.” They break off into detailed statistics on the leads.

10:26 am: Jubilant AIADMK cadres celebrate with crackers outside the Poes Garden residence of their Puratchi Thalaivi. This may well be the political epitaph of Karunanidhi.

10:20 am: Sun News is still putting up graphics of results. Now, they’re focusing on how the BJP has lost ground in all 234 constituencies. Are they changing the panel? And are the traffic diversions causing a delay? This channel says the AIADMK leads  the DMK 165-41, and they’re now supplying the smiling photographs of every DMK contestant who is leading anywhere in the state.

10:16 am: Kalaignar TV has now stopped telecasting songs, and is now showing a reality dance show, where Kala Master is praising a  contestant’s pirouette. Shampoo ads follow. Clearly, this is not a discussion of the election results.

10:11 am: “Why do you think people have voted against the DMK in such an overwhelming majority?” the Jaya TV anchor asks Lenin, “The law and order problem has escalated horribly over the last five years, hasn’t it? On a leader’s birthday, you can do good deeds. But why let criminals out of jail. Isn’t it?”

“True,” says Lenin, “there was the case of the DMK setting his own grandson’s news agency on fire and killing three people. Then, there’s the sand mining. People have been targeted and killed for agitating against it!”

“And they have poisoned everything!” says the anchor, “mountains, forests, rivers…”

“Yes,” says Lenin, “during the campaign, I said the DMK can’t draw its symbol anymore, because the mountains have gone. They can only draw the sun.”

He looks expectantly at the others, who laugh. “Jewellery and money being stolen is an everyday affair now!” says Lenin. “Yes, sir, I want to keep speaking to you,” gushes the anchor, rather incongruously, “but now we bring you the sweet visuals of sweets being distributed in Poes Garden.”

He then glares at the camera, “you can fool some people for some time. You can fool many people many times. But you cannot fool all the people all the time. This is a whiplash which PROVES IT!” He points his finger at the camera fiercely.

10:07 am: A correspondent finally gets through, and speaks about how journalists are not being allowed into the counting centre. “Why? Why are we not being allowed?” fumes the anchor.

“No, sir, no one is allowed,” says the correspondent.

“But do you know why?” the anchor cries.

“Election regulations, sir,” says the correspondent.

“All right!” the anchor says cheerfully, “but we know Amma Jayalalithaa is leading in Srirangam now. Let’s talk about farmers.”

10:04 am: Jaya TV’s correspondents are having phone line trouble. Was Astrologer 3 wrong about the airwaves? As the anchor says, “We can’t hear them because of the people shouting with joy”, the correspondent crackles, “hello? hello?”

9:57 am: Jaya TV’s panel has changed. The anchor introduces analyst TSS Mani and comrade Lenin…of the CPI. (Come on, belief in astrology doesn’t mean they’re playing planchet!)

The anchor says, “Mr. Mani, you’re a journalist. The things that have happened over the past 5 years, the attempted gagging of the media is well known. Three people were killed, there was the fake medicine case, Kanimozhi, the daughter of the CM, is now fighting a host of cases. Do you think the anger of the people is finding an outlet?”

TSS Mani says, “You spoke of the three people who were killed. Who vs. whom was that? Who was the paper owned by? Who did the killing? The same goes for the CEO, the MD of the channel that bears Kalaignar’s name. Who against whom was that, when they got beaten up? There are problems within the family, and people of the public are being killed and beaten up. You know of how someone was beaten up in a Chennai hotel. If you think you can do whatever you want, people will take a stand.”

The anchor says, “Yes, people thought they could buy the public over. They’re finding out which is more powerful, the rule of money or the rule of the people.” Mani adds, “Who has the power – the ruler or the public? We’ll find out.”

9:52 am: Is there an underlying message in Kalaignar TV’s songs? Right now, a woman is singing about the joy of nostalgia, and the memories of a time when she was happy. A couple of lines go, “People who don’t remember things they should, people who shun me when I need them most.” Hmm.

9:47 am: The Maran-owned Sun News has the AIADMK alliance leading the DMK alliance 135-31. They’ve now trained their focus on the DMK MLAs and ministers who are leading the vote count in various constituences. Their panel doesn’t seem to have kissed and made up yet.

9:44 am: Jaya TV is now telecasting the hysteria near Poes Garden. An expert prematurely declares, “A wave of victory”, as the anchor says, “A wave of excitement” and the other expert says, “a wave of jubilation”. The anchor smiles indulgently, “The AIADMK is leading everywhere. Our guests are very happy. I have a sweet news for you. AIADMK is leading in 130 places, and the DMK only in 17 places.”

9:43 am: An interesting Tamil Nadu factoid: The first assembly elections involving Tamil Nadu (in the Madras State as it was known then) threw up a hung assembly.

The Congress party, the leading party in the state then, could only win 152 of the 375 seats.

They were forced to turn to that towering figure in Indian politics, C Rajagopalachari (who later refused to stand for a by-election and had to be nominated by the governor).

The wily legend managed to lure back T Prakasam, a key figure, and engineer a series of re-alignments of the various political parties and the independents. When the vote  of confidence came, Rajaji won it by 200 votes to 151.

9:41 am: Jaya TV has now begun to discuss how the Election Commission monitored the campaigning and voting period. The experts concur that they were very receptive to Jayalalithaa’s appeals, and did a great job.

9:37 am: Now, Sun News has the AIADMK leading 112-30, Jaya TV has the equation at 116-16. Kalaignar TV has broken off into telecasting songs. Huh? What happened?

9:32 am: The Sun TV panel has made peace now. Expert 2 says, “See, Mr. V K (Rangarajan) expressed the view that the Trinamool Congress is different from the Congress. But you must remember that the Trinamool split from the Congress. The TMC, under Moopanaar, Tha Ma Ka as we say it, also split from the Congress, but they were allies.”

The anchor nods and moves on to a discussion on Nandigram. Expert 1 a.k.a. VK begins, “see, when a party has been ruling for 38 years…well, you have to understand that West Bengal is not like Tamil Nadu. In Tamil Nadu, when someone begins an industry…”

At this, the anchor looks panicky and interrupts, “we’ll be back after an update on the performances in different constituencies.”

9:29 am: Chief Minister M Karunanidhi leading by 3000 votes in Tiruvarur and Deputy Chief Minister MK Stalin leading by 2000 votes in Kolathur.

9:26 am: Nakkeeran Gopal now speaks about how no one can go near Loyola college, and how this election is a snub to everyone. The anchor looks puzzled, but agrees anyway, and then says, “there was a lot of difference between the DMK campaigning and ADMK campaigning, right?”

Journalist chimes in, “yes, I can either tell them what I can do. Or I can tell them your faults. DMK did the former, ADMK the latter.”

Nakkeeran Gopal says, “arrogance has never served well.” They conclude: ‘DMK says we’ll save you from punishment. ADMK says we’ll punish the DMK, now people are punishing them.’ They congratulate each other for their brilliant analysis.

9:22 am: Kalaignar TV’s expert panel has taken a break from election analysis and is indulging in mutual admiration. The anchor finally leads  away from this to ask, “can an intelligent psephologist fix survey results?”

Journalist answers, “yes, definitely. I can conspire to fix the results of  survey and present it in a scientific manner.”

9:19 am: Sun TV, playing dramatic music, gives us details of the votes counted and leads, constituency by constituency. Looks like the experts and the anchor are still sorting out their little disagreement.

9:16 am: There’s a whole new look to Jaya TV. The astrologers have disappeared, the anchor has changed, and now the expert panel consists of two scholars and political pundits. “Dr. Thambidurai,” says the anchor, “what are the main issues this election?”

Expert 1 begins, “the election is basically a public declaration of what the people want.”

The anchor, looking awed, begins to take notes. Expert 1 continues, “people want a change. On February 13, 2010, when Amma went to Vizhupuram, lakhs of people came to see her. That was the true declaration of what the people wanted.”

9:12 am: Jaya TV has AIADMK leading at 45-5, Kalaignar TV has the DMK leading at 28-26, Sun TV  has the DMK leading at 28-27

9:02 am: Sun TV, which has moved on from discussions on communications and technology to the voting percentages in West Bengal, Kerala  and Tamil Nadu, switches every now and again to a roving correspondent, who looks quite beleagured, having travelled from Loyola College to  Queen Mary’s.

She repeats that the area has been cordoned off, people are counting votes, and ball point pens are not allowed into the counting  house. The anchor thanks her for the in-depth anaylsis, and then moves on to how well the Congress has been performing.

Expert 1 grins, “You’re talking about West Bengal? The Trinamool has a clear lead. So what do you mean the Congress is doing well?” The anchor says, “no, I mean…”

Expert 2 tells Expert 1: “No, he means that the Trinamool, though it has a different flag and different members, is also made up of Congress people. It is Trinamool CONGRESS.”

Expert 1, who seems bent on taking the anchor down, grins, “well, he’s already said that the DMK has done about 90 percent of what Kamaraj promised.” The anchor, irritated, says, “let’s leave Kamaraj aside for now. Time for a break.”

8:54 am: Kalaignar TV, where the expert panel seems to be Nakkeeran Gopal + Journalist, where the latter is a variable, is now discussing how deluded the exit polls are.

Journalist explains, “see, the problem is, they are focusing on Chennai, which goes by caste. Let me give you an apolitical example. Let’s say we take a survey, ask people whether they prefer Nithyasree Mahadevan or Pushpavanam Kuppuswamy. Who is the better singer?” He smiles, as if to say ‘how clever am I!”

The others nod approvingly at his example. “In Chennai, obviously, Nithyasree madam will win. But if you look at the whole of Tamil Nadu…some of the towns may not even have heard of her!”

8:50 am: Jaya TV claims AIADMK has a lead in the postal votes, while the Sun Network and Kalaignar TV give DMK the lead.

8:44 am: Astrologer 3 is speaking of vasthu on Jaya TV. He says, “The biggest bootham of the Panchaboothams (Five Elements) is Vayu and helps Jayalalithaa. Look, communication happens through the airwaves. The correct communication has reached the voters, as to who is corrupt and who is not. A year before or so, the communication transfer was confused. But it’s got fine-tuned in the last year, and as we get closer to D-Day…seven months, six months, and so on, it’s become progressively sharper. The vayu grahanam is aiding Amma.”

8:41 am: According to Jaya TV, AIADMK is leading in 4 constituencies, while according to Kalaignar TV, the DMK is leading in 4 constituencies, and other smaller parties in 1. Sun News and Sun TV say AIADMK leads in 3, DMK in 8.

8:37 am: Nakkeeran Gopal now says, “The thing is, people of the higher castes have decided ‘we should somehow make Jayalalithaa win.’ She  promises to help youngsters. But she spends 4 months a term in Tamil Nadu, and 4 and three quarters of a year in Kodanad. People will get  fooled. They’ll think they can pay off their loans and fees, and they’re going to get fooled.”

Another round of tongue-clicking follows, and now they  begin to discuss how sad it is that people are so naive as to sit in an AC room, become armchair philosophers and predict an AIADMK win. Then, they move on to Kerala.

8:31 am: “There’s going to be a change in Tamil Nadu,” says Kalaignar TV’s anchor, and hurriedly goes on, “I mean, not a change of rule. But a change of pattern. Since 1984, no party has won twice in a row.”

“Definitely,” says Nakkeeran Gopal, “you know, people come and tell me ‘only AIADMK will win.’ I ask them, ‘dude, what makes you say that?’ Because they will have reasons. They’ve cast their votes for the DMK, but they say AIADMK will win. They say, ‘no, sir, AIADMK has created a web of deceit. A conspiracy.”

Kalaignar TV’s anchor says, “well, you’re an analyst. You’re from the media. I shouldn’t speak against the media, but…”

Nakkeeran Gopal, with a benign smile, says graciously, “yes, yes, it’s sad. The media is supposed to be neutral,  but…”

“Exactly!” says the anchor, “Jayalalithaa and Vijaykanth and the media owned by them have not been neutral at all.” They all click their tongues in sorrow.

8:26 am: Astrologer 2 is now asked by Jaya TV’s anchor, “Astrology is a great science, right? What is the connection between the horoscopes of  the people of the nation, and the time at which votes are declared?”

Astrologer 2 speaks of the link between the nation’s fate and Amma’s fate  being along the lines of the relationship between a mother and child.

Looking rather nonplussed, the anchor announces that votes are being  counted in Srirangam, Puducherry. Then, he turns to Astrologer 2 again, “what about the horoscopes of women? It seems it’s a lucky year for  women?”

“Definitely!” says Astrologer 2, “yes, definitely. The law and order problems will lessen dramatically because of this connection.” All the  men in the studio nod, and go into a break.

8:23 am: Strangely enough, at this time, Sun TV is waxing poetic about the wonders of communication, and how technology has enabled politicians to reach out to the public. Propaganda slips in as they discuss how the crowds at the DMK rallies during campaigning were not as overwhelming as usual, because the DMK had used advanced methods to reach out to the voters, all of whom had benefited from its generous doling out of freebies.

8:19 am: Expert 2 tells the Kalaignar TV anchor that Kalaignar Karunanidhi, at 86, has the maturity to run a state (as opposed to Jayalalithaa, who is but a greenhorn at 62). The anchor announces that in breaking news, the first postal vote has been cast in favour of the DMK. Nakkeeran Gopal struggles to get his hands into the frame and claps right by the lapel mic., drowning out the rest of the anchor’s speech.
8:09 am: Kalaignar TV has a couple of in-studio experts too. The more vocal of these is ‘Nakkeeran Gopal’, editor of Tamil news magazine ‘Nakkeeran’, who was arrested under the POTA in 2003 (during Jayalalithaa’s rule) in the Rajamaniman missing case of 1999.

8:06 am: The anchor next asks, “And the first vote in Srirangam was cast at a time that was very lucky for Amma?” Astrologer 1 is flabbergasted, “you ask very incisive questions. I think you know some astrology too.” The anchor blushes, and laughs uncomfortably. “Yes, a little bit, a tiny bit,” he says, modestly. Astrologer 1 breaks off into a euphoric soliloquy on the greatness of Lord Sriranganathan, and His partiality to Jayalalithaa. They go into a break on that note.

8:04 am: Whoa! Jaya TV just pulled one out of the hat. Three astrologers swoop down to the studio. “Have you ever seen a one-month gap between the casting of votes and the counting?” the anchor zooms in on the propaganda rightaway.

“Never!” asserts Astrologer 1, “never ever!”

“Never ever?” asks the anchor.

“NEVER!” cries the astrologer, “the reason this is happening is because it’s been written so in Amma’s horoscope. Her lucky period starts at a particular time today. Amma was born on a Pournami (full moon) day and that means most doshams won’t occur. She is straightforward and brave. And you know what’s strange? Her lucky days are Tuesday – you’ll remember the casting of votes was Tuesday – and Friday…today is Friday! For her planetary positions to reach the most positive alignment, it’s taken a month. That’s why there was a lag.”

Never mind that Ms. JJ was vocal about her disapproval of the lag!

8:03 am: A nervous newscaster reads out on Sun News, “The ballots will be counted from the ballot box. The first one will be counted at 9:00 am. The counting centres have been cordoned off.”

நன்றி: சிபி வலைத்தளத்தின் நேரடி Report