ஜூலை, 2012 க்கான தொகுப்பு

வாலிப வயோதிக அன்பர்களே, இன்னிக்கு எல்லாரும் சாப்பிடுறோமோ இல்லியோ எடையை (இடை இல்லீங்கோ…) குறைக்கனும்னு கவலைப்படுறோம். கண்ட கண்ட வைத்தியர்கள்கிட்ட போய் லேகிய உருண்டை வாங்கி சாப்புடுறது, கண்ட கண்ட சூப் குடிக்கிறது, ஜிம்முக்கு போறது, வாக்கிங் போறது, பட்டினி கெடக்கறது, இப்படியெல்லாம் பாடுபடுறாங்க. இதுனால எல்லாம் எடை குறையுதோ இல்லியோ பாடி ரொம்ப அடிவாங்கிடுது. இதிலேயும் எந்தக் கஷ்டமும் படாம நோகாம எடை மட்டும் குறையனும்னு திரியறவனுங்க நிறைய பேரு இருக்கானுங்க. இவங்க எல்லாருக்கும் ஒரு நற்செய்தி….

ஆமாங்க நற்செய்திதான், எந்த கஷ்டமும் படாம, சாப்பாட்டை குறைக்காம, எக்சர்சைஸ் எதுவும் பண்ணாம வெறும் ஒரு மணி நேரத்துல உங்க எடையை குறைக்க வழி வந்தாச்சு. காசு வேணாம், பணம் வேணாம், சும்மா நான் சொல்ற மாதிரி மட்டும் பண்ணா போதும் உங்க எடை குறைவது நிச்சயம். வீட்ல சொந்தமா ஒரு எடை பார்க்கும் மெசின் ஒண்ணு வாங்கி வெச்சுக்குங்க.
முதல்ல உங்க எடையை நைட்டு சாப்பாடு முடிஞ்சதும் செக் பண்ணி ஒரு நோட்புக்ல எழுதி வைங்க.
அடுத்து காலைல எந்திரிச்சதும், வெறும் வயித்துல (தண்ணி கூட குடிக்கப்படாது!) கீழ சொன்ன மாதிரி வரிசையா செய்யனும்….
1. போய் முடிய வெட்டிட்டு வாங்க
மொட்டை போட விரும்புபவர்கள் தாரளமா போட்டுக்கலாம். அது உங்க வசதிய பொறுத்து. (ஏற்கனவே வழுக்கையாக இருப்பவர்கள் கவனிக்க: நீங்க எதுவுமே செய்ய முடியாதுன்னாலும் சும்மா சலூனுக்கு போய் மெசினை ஒரு ரவுண்டு மண்டைல ஓட விட்டுட்டு வாங்க சார்)
2. கை கால் நகத்த வெட்டுங்க
ஒரு நகம்கூட பாக்கி இல்லாம வெட்டிப்புடனும். அழுக்கு எதுவும் இருந்தாலும்  கிளீனா கழுவிடுங்க.
3. கக்கூஸ் போய்ட்டு வாங்க
இது ரொம்ப முக்கியம். அதுனால கக்கூஸ்ல உக்காந்து முக்கியாவது போய்டுங்க. அப்படியும் வராதவங்க வெளக்கெண்ணை மாதிரி எதையாவது ட்ரை பண்ணலாம். மொத்ததுல போய்டனும் அதுதான் முக்கியம்.4. குளிங்க
ஆமா வேற வழி இல்ல குளிச்சித்தான் ஆகனும். சோப்பு போடுவீங்களோ இல்லியோ நல்லா அழுக்கு போற மாதிரி தேய்ச்சு குளிக்கனும். செங்கல் யூஸ் பண்ணா பெட்டர். குளிச்சு முடிச்ச உடனே, ஒரு சொட்டு தண்ணி கூட இல்லாம தொடச்சிடனும்.
5. ட்ரெஸ் எல்லாத்தையும் அவுத்துடுங்க
ட்ரெஸ், அண்டர்வேர் (போட்டிருந்தா…) எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவுத்துடனும். உடம்புல ஒரு நூல் இருக்கப்படாது. யாருக்கும் தெரியாம பண்ணனுமா இல்ல தனியா பண்ணனுமாங்கறது உங்க சவுகர்யத்த பொறுத்து! வாட்ச், செருப்பு, ஷூ எல்லாத்தையும் கூட கழட்டிரனும்..!

இப்போ நீங்க ரெடியாகிட்டீங்க.

அடுத்து,அதே எடை மெசின்ல உங்க எடையை செக் பண்ணவும்…உங்க எடை நிச்சயமா குறைஞ்சிருக்கும்……

எப்பூடி நம்ம டெக்குனிக்கு………?

இப்போ மறுபடியும் எடை குறையனும்னா மறுக்கா அதே மாதிரி முதல்ல இருந்து பண்ணுங்க…….. ஹி..ஹி…!

இதெல்லாம் ஒரு பதிவுன்னு வந்து…….. சரி விடுங்க…..!

நன்றி: கூகிள் இமேஜஸ் & http://shilppakumar.blogspot.in

அப்புறம் இது கூட உங்களுக்கு உதவும்னு நெனைக்கிறேன்

ஒரு மன்னன் தன்னுடைய கணக்குபிள்ளையிடம் விசாரித்தான்.. நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்… ?? பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் மன்னா… கணக்கு பிள்ளை பதில் சொன்னார்.. மன்னன் கவலையில் ஆழ்ந்தான்.. ஐயோ… என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்…?? இப்படியான கவலையில் மிகவும் நோய் வாய் பட்டான்… ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தருவிக்கப்பட்டு மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லை… ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.. அவர் இந்த விஷயத்தை கேள்விப்பட.. மன்னனை சந்தித்தார்… மன்னா.. உன்னுடைய நாட்டில் இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தைகளுடன் கூடிய இளம் விதவையை தேடி கண்டு பிடி..முக்கியம்.. அவள் தினசரி கூலி வேலைக்கு போய்தான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்… இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அனுப்பு.. அப்புறம் என்னிடம் வா.. உன்னுடைய வியாதிக்கு நான் மருந்து தருகிறேன் என்றார்… மன்னனும் அவ்வாறே செய்ய..
தன்னுடைய வீட்டு முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்பதை பார்த்த அந்த இளம் விதவை என்னவென விசாரித்தாள்… மன்னன் உணவு தானியங்கள் அனுப்பியதை சேவகன் சொல்ல… தன்னுடைய மகளிடம் ” நம் வீட்டில் அரிசி பானையில் எவ்வளவு அரிசி இருக்கிறது என பார்க்க சொன்னாள்… இரண்டு மூன்று நாளைக்கு சமைக்கலாம் அம்மா… சிறுமியின் பதில்… உடனே அந்த இளம் விதவை.. வண்டிக்காரர்களிடம் சொன்னாள்.. எங்களுக்கு மூன்று நாட்களுக்கு உணவு இருக்கிறது.. இப்போதைக்கு போதும்.. தேவைப்பட்டால் நாங்களே கேட்கிறோம்.. என அந்த வண்டிகளை திருப்பி அனுப்பி விட்டாள்…
யோகி மன்னனிடம் சொன்னார்,.. பார்த்தாயா.. தினசரி வருமானத்திற்கு கூலி வேலை தான் செய்ய வேண்டும்… சம்பாதித்து தர கணவனும் இல்லாமல் இரண்டு குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்போடும் இருக்கும் அந்த பெண்.. இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஒன்றுமே இல்லை எனினும் உழைக்கும் உறுதியோடு இருக்கிறார்.. ஆனால் நீயோ… பதினேழாவது தலைமுறைக்கு கவலை படுகிறாய்… இதுதான் உன் வியாதி.. இதை மற்றும் மருந்து உன்னிடம் தான் இருக்கிறது….

Courtesy: Vijay Saravanan

19

Trolltunga, Norway

Trolltunga, Norway

Jutting out of the mountain above Skjeggedal in Odda, Norway, this outcropping’s name literally translates to “Trolls Tongue” in Norwegian.

18

Tyrol Platform, Austria

Tyrol Platform, Austria

At first glance this observation deck located almost 11,000 feet above Stubai glacier near Tyrol, Austria looks like little more than a high dive platform. The only way to get here is to take a cable car and then climb a long staircase to the top. On clear days though, the journey is worth it with views reaching as far as Venice, Italy.

17

Gozo Cliffs, Malta

Gozo Cliffs, Malta

Dropping straight down into the Mediterranean Sea these insanely high outcroppings are perfect for cliff diving, or maybe just watching the sunset if you want to play it safe.

16

Llangollen Canal, Wales

Llangollen Canal, Wales

Just east of Llangollen, Wales you will find the world’s longest and highest aqueduct. Every year it ferries thousands of boats across its narrow span and with no guard rails the ride can be a bit annerving as the boat slams against the metal sides of the trough.

15

Preikestolen, Norway

Preikestolen, Norway

Also known as the Preacher’s Pulpit, visiting this 600 meter high cliff is not recommended in winter or spring when the path to the top is paved with ice. In summer though the view of the valley below is breathtaking.

14

Meteora Monasteries, Greece

Meteora Monasteries, Greece

The surreal Meteora monasteries of Greece were originally built by monks to be a refuge from Turkish invaders and until 100 years ago there wasn’t any way to get to them except for rope ladders. Today, however, you can take a cable car or walk up the perilous staircase cut into the stone.

If you haven’t seen Part 1 yet, please do see it.

Courtesy: http://list25.com

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

<<< SHARE THIS >>>

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்…

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம்
என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள். நீங்கதான் மண்ணாங்கட்டியா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா…வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே…ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே….உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க…எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெழத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தார்….

நன்றி – ஏகலைவன். Sangoothara Vayasula Sangeetha  #facebook

Courtesy: ம அசோக் குமார்

உதவி

Posted: ஜூலை 24, 2012 in கதைகள், சுட்டது, நகைச்சுவை
குறிச்சொற்கள்:, , , ,

ஒரு குடிகாரன் ஒரு நாள் இரவு நன்கு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.அவன் தனியாக வாழ்ந்து வந்தான்.அதனால் வெளியே செல்லும்போது கதவைப் பூட்டிவிட்டுச் செல்வான்.அன்றும் வீட்டை நெருங்கியதும் சாவியை எடுத்து கதவைத் திறக்க முயற்சி செய்தான்.ஆனால் சாவியை சரியாக பூட்டு துவாரத்தில் அவனால் பொறுத்த முடியவில்லை.சரியான போதையில் இருந்ததால் அவனுக்கு நிதானம் இல்லாதிருந்ததால் பல முறை முயன்றும் அவனால் சாவியை துவாரத்தில் பொறுத்த இயலவில்லை.இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர் அவன் மீது அனுதாபப்பட்டு அவனிடம் வந்து,”சாவியைக் கொடுங்கள்.நான் திறந்து தருகிறேன்.”என்றார்.குடிகாரன் சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு,”பூட்டை நானே திறந்து கொள்கிறேன்.ஆனால் எனக்கு நீங்கள் ஒரே ஒரு உதவி செய்தால் போதும்.தயவுசெய்து வீட்டை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.நான் பூட்டைத் திறக்க முயலும்போதெல்லாம் இந்த வீடு தான் கடிகாரத்தின் பெண்டுலம் மாதிரி ஆடித் தொலைக்கிறது,”என்றானே பார்க்கலாம்!அவர் ஏன்தான் அங்கு வந்தோமோ என்று என்ன ஆரம்பித்துவிட்டார்.

Courtesy: http://jeyarajanm.blogspot.in

இவங்க ஏன் இப்படி வண்டி ஓட்டுறாங்க தெரியுமா?

இப்போ

இப்போ  இப்போ

இன்னும் கண்டு பிடிக்க முடியலையா?

அவங்க கிட்ட ரெண்டு சக்கர வாகனம் ஓட்ட தான் licence இருக்காம். அதான்

courtesy: http://www.funtoosh.com

ஒரு ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான்.அவன் மகாக் கருமி.அந்த ஊரில் பொதுவில் கோவில் கட்டிக் கொண்டிருந்தார்கள்.அதற்கு நிதி பலரிடமும் வாங்கிவிட்டு பணக்காரனிடம் வந்தார்கள்.அவனிடம்  பணம் வசூலிக்க முடியாது என்று பலரும் சொல்லியும் எப்படியும் அவனிடம் வசூலிக்க வேண்டும் என்று சிலர் வந்தனர்.இதுவரை பணம் கொடுத்தவர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டனர்.அதில் பணக்கார்கள் முதல் பாமரர் வரை பணம் கொடுத்த விபரம் இருந்தது.அதை முழுவதும் வாசித்தால் இப்படி அனைத்துத் தரப்பினரும் பணம் கொடுத்திருக்கும்போது தான் மட்டும் கொடுக்காவிடில் ஊரில் அசிங்கம் என்று நினைத்து அவன் எப்படியும் பணம் கொடுத்து விடுவான் என்று நினைத்தார்கள்.அப்படியே அந்த பட்டியலையும் அவனிடம் வாசித்தார்கள்.அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி.வந்தவர்களுக்கு நம்பிக்கை.கோவிலுக்கு எவ்வளவு எழுதப் போகிறீர்கள் என்று அவர்கள் கேட்க அந்தக் கஞ்சன் சொன்னான்,”நீங்கள் எண்ணப் புரிந்து கொள்ளவில்லை.நான் இதுவரை பல வகையில் பொருள் சேர்த்துள்ளேன்.இப்போது நீங்கள் எனக்குப் புது வழி காண்பித்து விட்டீர்கள்,” வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க அவன் தொடர்ந்தான்,”இது வரை நான் பிச்சை எடுத்து பொருள் சேர்த்ததில்லை.இப்போது இந்த ஊரில் பிச்சை போட நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.அதை முயற்சி செய்யப் போகிறேன்.தங்கள் ஆலோசனைக்கு நன்றி.”

Courtesy: http://jeyarajanm.blogspot.in

If you are one of those people whose palms get sweaty just thinking about being close to the edge then you should prepare yourself because in a few minutes your hands will most likely be drenched. With everything from the underbelly of the highest suspension bridge in the world to what is almost indisputably the most dangerous road on the planet, these are the 25 most precarious places on Earth.

25

Trift Bridge, Switzerland

Trift Bridge, SwitzerlandAs one of the highest and longest suspension bridges in the Alps nothing more than a couple planks of wood and some steel cables separate hikers from the icy glacier hundreds of feet below.

24

Half Dome, Yosemite National Park

Half Dome, Yosemite National ParkAlthough in the early 20th century this peak was declared “perfectly inaccessible” since then thousands of hikers have made the steep climb up its rocky slope with the assistance of a couple cables attached to the top.

23

CN Tower Edgewalk, Toronto

CN Tower Edgewalk, TorontoOn the 116th floor of the CN Tower there is a “sidewalk” that loops around the outside of the building. Every year between the months of May and October tourists can strap themselves in and lean out over the city to get a spine tingling adrenaline rush.

22

Devil’s Pool at Victoria Falls

Devil's Pool at Victoria Falls, ZimbabweThis natural rock pool on the edge of Victoria Falls in Zambia is a popular destination for tourists seeking a close brush with death. If you’re feeling adventurous you can even lay down with your arms extended over the edge.

21

The Eiger, Switzlerand

The Eiger, SwitzlerandThis mountain in the Bernese Alps is one of the more treacherous climbs in the world. It’s north face alone has claimed over 60 lives in the past 70 years.

20

Golden Rock, Myanmar

Golden Rock, MyanmarTeetering on the edge of Mt. Kyaikhtiyo is a popular pilgrimage sight for Buddhists who believe the trek to the summit will give them good health and fortune.

ஒரு மனிதன் ஒரு காரை ஓட்டுவதுபோல கற்பனையான ஸ்டீரிங்கை
இயக்கிக் கொண்டு காலை ஆக்சிலேடரை மிதிப்பதுபோல பாவனை செய்து கொண்டே நடந்து வந்தான்.அவனுடன் உதவியாளன் போல ஒருவனும் வந்தான்.முதல் மனிதனின் வித்தியாசமான நடவடிக்கை கண்டு அங்கு ஒரு
கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.அந்த பரிதாபத்திற்குரிய மனிதனின் நடவடிக்கையைப் பார்த்து கூட்டத்தில் ஒருவர் அந்த உதவியாளரிடம் விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்,”இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகுந்த ஆசை.நிறையப் போட்டிகளில் கூடக் கலந்து பரிசுகள் வாங்கியிருக்கிறார்.
துரதிருஷ்ட வசமாக அவருக்கு மன நோய் ஏற்பட்டு விட்டது.அதனால் அவரைக் கார் ஓட்ட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.என்றாலும் பழக்க தோசத்தின் காரணமாக தினசரி இங்கு இதேபோல வந்து இந்தக் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்குக்குப்போவார்.பிறகு வந்து காரை எடுத்துசெல்வதுபோல
செல்வார்.”கூட்டத்தில் ஒருவர் கேட்டார்,”ஏனப்பா,நீயாவது நிலையை அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இதைத் தடுக்கப் பார்க்கலாமே?”
அவன் உடனே படபடப்புடன் சொன்னான்,”தயவு செய்து சப்தம் போட்டுப் பேசாதீர்கள்.அவர் தினசரி காரை நிறுத்துவது போல் செய்து விட்டு என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்க சொல்வார்.நானும் அதுபோல நடித்து நூறு ரூபாய் வாங்கி என் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதைக் கெடுத்து விடாதீர்கள்.”கூட்டம் வாயைப் பிளந்தது.

courtesy: http://jeyarajanm.blogspot.in

கோழிப்பண்ணை வச்சார் சர்தார்ஜி! முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்ச சர்தார் விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..! அடுத்த மாசமே இன்னொரு 100 வாங்கினாரு!

சப்ளை பண்றவர்: என்ன சிங்கு..? வியாபாரம் எகிறுது போலருக்கு…?

சர்தார்ஜி: எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது…!

சப்ளை பண்றவர்: என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா…?

சர்தார்ஜி: அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்! மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்…!

சப்ளை பண்றவர்: என்னது? மண்ணா..?

சர்தார்ஜி: ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது…! அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது…!

சப்ளை பண்றவர்: தலைசுத்தி விழுந்தான்!

ஏன்னா…, சர்தார் முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை!

courtesy: http://eutamilar.eu

ஒரு நல்லது சொன்னா தப்பா சார் , இப்படி போட்டு தொரத்தி ,தொரத்தி அடிக்கிறானுக
நேத்தைக்கு அயன் வண்டி வந்து துணி இருக்கான்னு கேட்டான் , நானும் என்  வைஃப்  கிட்ட ,
” ஏம்மா அயன் பண்ண துணி இருக்கா?”
“இல்லைங்க “
“அயன் வண்டி வர்றதே ரொம்ப ரேர் , துணி இருக்கான்னு நல்லா பாரும்மா “
‘இல்லைங்க  எல்லாம் துவைக்கணும்”
“ஏம்மா அவன் வந்ததே பெரிசு , நீ ஒன்னுபன்னு  பஸ்ட்டு எல்லா துணியையும் இன்னைக்கு அயன் பன்னிக்க  அப்புறமா துவைச்சுக்க “
“போடா……@#@#@#௬௬௬…………”
ஏய் , ஏய் ………ஸ்டாப் , ஸ்டாப் , ஸ்டாப் …….
என்ன அநியாயம் சார் இது , இப்போ பொம்பளைங்க கூட கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க சார் .

Katary Falls from Below – Tamil Nadu 1860’s

Katary+Falls+from+Below+-+Tamil+Nadu+1860's
Katary Falls is in 10 km from coonoor on the way to Upper Bhavani,Kundha,Manjore, The Nilgiris, Tamil Nadu. Katary Falls is 3rd largest falls in the Nilgiris and the height of the falls is about 180 feet.(Wikipedia)

Photographer: Edmund David Lyon
Source: Museum of Photographic Arts Collections’ photostream 

Wellington Military Hospital in Coonoor, Tamil Nadu – 1860’s

Wellington+Military+Hospital+in+Coonoor%252C+Tamil+Nadu+-+1860%2527s
Source: ebay

Hindu Temple in Trichinopoly (Tiruchirappalli or Trichy), Tamil Nadu – 1860’s

Hindu+Temple+in+Trichinopoly+-+1860%2527s
Source: ebay

Government House, Guindy , Tamil Nadu – c1890’s

Guindy is one of the neighbourhoods of Chennai (Madras), Tamil Nadu, India. It is located in the South-Western part of the city. It is the entry point or the gateway to Chennai city from the Southern parts of Tamil Nadu and the South Western suburbs of Chennai
– Wikipedia

Government+House%252C+Guindy+%252C+Tamil+Nadu+-+c1890%2527s
Source: ebay

Group of Women and Children in a Village – Madura, South India

Group+of+Women+and+Children+in+a+Village+-+Madura%252C+South+India
Source: Flickr.com

View of “Arjuna’s Penance” bas Relief Sculpture near Mahabalipuram (Mavalipuram), India – 1928

View+of++Arjuna%2527s+Penance++bas+Relief+Sculpture+near+Mahabalipuram+%2528Mavalipuram%2529%252C+India+-+1928
Source: ebay

Irula Women from the Nilgiri Hills in Tamil Nadu – 1871

Irula+women+from+the+Nilgiri+Hills+in+Tamil+Nadu+-+1871
Source: British Library

Group of Domestic Servants at Madras in Tamil Nadu – 1870

Group+of+Domestic+Servants+at+Madras+in+Tamil+Nadu+-+1870
Photographer: Nicholas and Curths
Source: British Library

கீழே வர்ற இந்த சின்ன கதையை படிச்சுட்டு சிரிக்காம இருக்கறவங்களுக்கு, 1 குச்சி மிட்டாயும், 3 குருவி ரொட்டியும் இலவசமாக தருவதாக ஒரு அறிவிப்பு வந்துருக்குங்க. நாஸ்தா பிரியர்களுக்கும் நகைச்சுவை உணர்வு மங்கியவர்களுக்கும் ஜமாய்ச்சிட நல்ல ஒரு வாய்ப்பு!  நழுவ விட்டுடாதிங்கோ!! சமீபத்துல மக்கள் மன்றத்துல, அதாங்க பார்லிமெண்ட்ல நடந்த கதை தானுங்க…. இதோ மீதி உங்கள் பார்வைக்கு!
மக்களவையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் பேசும் போது நம்ம பாக்யராஜ் ஸ்டைல்ல ஒரு குட்டிக் கதையை சொன்னாருங்க. அவர் சொன்ன கதையை அப்படியே நீங்களும் கேட்டுக்கோங்க…
”அதாவது…. ஒரு தந்தை தனது 3 மகன்களிடமும் 100ரூபாயினை தந்து அவருடைய அறை முழுவதும் நிரம்பும் படியான பொருளை வாங்கிட்டு வரச் சொன்னாருங்க.   உடனே அவரோட முதல் மகன் ஏதோ ஒன்னு வாங்கி வந்தாருங்க. ஆனா, அது ஒரு குட்டி கப்போர்டு சைஸைக் கூட நிரப்பலிங்க.  உடனே இரண்டாவது மகன், இலவம் பஞ்சா வாங்கி வந்து அறை முழுவதும் நிரப்ப பார்த்தாருங்க.  ஆனாலும்  அந்த முயற்சியும் அவுட்டாகி போச்சுங்க.  மூணாவது மகன் நேரா கடைக்கு போயி ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கிவந்து தந்தையோட அறையில ஏத்துனாரு பாருங்க… உடனே வெளிச்சம் பளிச்சுன்னு அறை முழுவதும் நிரம்பிடுச்சு!
இந்தக் கதையை சொல்லிட்டு கம்பீரமா அவை உறுப்பினர்களை பார்த்துகிட்டு, தன் தொண்டையைக் கனைச்சுகிட்டு அந்தக் காங்கிரஸ் எம். பி, கொஞ்சம் எம்பி தன்னோட மாஸ்டர் பீஸை சொறுவுனாரு பாருங்க…
“இந்தக் கதையில வர்ற மூணாவது மகனைப் போல தான் நம்ம பிரதமர் மன்மோகன் சிங். அவர் பதவியேற்ற நாளிலிருந்து நம் இந்தியா முழுவதும் ஒளிவீசத் தொடங்கிவிட்டது!
இத சொல்லி முடிச்சுட்டு அப்பளத்துக்காக, சாரி அப்ளாசுக்காக காத்திருந்தவருக்கு கடைசிபெஞ்சு வழியா ஒரு ஆப்புதாங்க வந்தது.  அது என்னான்ன….
கடைசி பெஞ்ச்:  “அடுங்கொய்யால….  பாக்கி 99ரூபாய் எங்கலேய் போச்சு…?”
ஹி. ஹி… இந்தக் கதையை மின் அஞ்சல் வழியாக எனக்கு கிச்சு கிச்சு மூட்டி ஒரு குச்சி மிட்டாயும் 3 குருவி ரொட்டியும் தர விடாம பண்ணின நண்பர்திரு. ஜெயராமன் அவர்களுக்கும், இதனை வடிவமைத்த மூலகர்த்தாவிற்க்கும்ஒரு பெரிய கும்புடு போட்டுகிட்டு நன்றியும் சொல்லிகிட்டு நான் நடையைக் கட்டறேனுங்கோ…

வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.

ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.

பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற

வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்‌ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.

நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.

இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?

உலகெங்கும் உள்ள புதிரான கட்டிடங்களில் சில உங்கள் பார்வைக்கு
32. Le Palais Ideal (Ideal Palace) in Hauterives, France. Built usual French postman Ferdinand Cheval enthusiast for 33 years (1879-1912).

33. Casa Battlo Antonio Gaudi in Barcelona

34. The National Stadium in Beijing

35. National Theatre in the same

36. Museum Ripley’s Believe It or Not! near Niagara Falls in Canada

37. Palais bulles in Cannes

38. Experience music project. Seattle, USA

39. Back view

40. Skyscraper Gherkin building in London or cucumber

41. Banpo Bridge in Seoul, South Korea

42. Dynamic Tower in Dubai. Tower, whose every floor is moving on its own axis, independently of the others. The first building that can change its shape. Still under construction.

பார்த்து விட்டீர்களா பாகம் 1பாகம் 2,  பாகம் 3,  பாகம் 4

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாது அப்பா
இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு?
நீதி: சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை.

ஆங்கில மூலம்: http://rammalar.wordpress.com

அப்ப என் பையன் 2nd Std
படிச்சிட்டு இருந்தான்..

அவனுக்கு Quarterly Exams
நடந்துட்டு இருந்தது..

அடுத்த நாள் SOCIAL Exam.
அதுக்கு சொல்லி குடுக்க
சொல்லி என்கிட்ட வந்தான்.

” ஆண்டவா என் பையனை நீதான்
காப்பாத்தணும்னு ” வேண்டிகிட்டு
பாடத்தை சொல்லி குடுத்துட்டு
இருந்தேன்..!

அதுல ஒரு கேள்வி..

” Which Animal is called as
Ship of the Desert..? ”

Ans : CAMEL

இந்த ” CAMEL ” ங்குற வார்த்தை
அவனுக்கு தகராறாவே இருந்தது..
” டக்னு ” ஞாபகம் வராம தடுமாறினான்..

உடனே எனக்கு ஒரு யோசனை..
இதுக்கு ஒரு ஷார்ட் – கட் சொல்லி
குடுத்தா என்னான்னு..

( Camel-க்கு எல்லாமா ஷார்ட் கட்டானு
தானே யோசிக்கறீங்க..?

ஹி., ஹி., ஹி… நாங்கல்லாம் படிக்கிற
காலத்துல எலி போட்டுக்குற Pant = Elephant-னு
ஷார்ட் கட்ல படிச்சவங்களாக்கும்..!!! )

உடனே அவனை கடைக்கு கூட்டிட்டு
போயி ஒரு Camlin பென்சில் வாங்கி
குடுத்தேன்..

அதுல சின்னதா ஒரு ஒட்டகம் படம்
போட்டு இருக்கும்.. அதை காட்டி…

” ஒரு வேளை அந்த கேள்விக்கு உனக்கு
Answer தெரியலைன்னா.. இந்த பென்சிலை
திருப்பி பாரு.. ஞாபகம் வந்துடும்னு ”
சொன்னேன்..!

அவனும் சந்தோஷமா தலையை ஆட்டினான்.

அடுத்த நாள் : காலை 9.30 மணி

டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்..
நான் வாங்கி குடுத்த அந்த Camlin பென்சில்
டேபிள் மேலயே இருந்தது..

எனக்கு ” பக்னு ” ஆகிடுச்சு

என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

” அவன் பென்சிலை மறந்துட்டு
போயிட்டானா..? ”

” இல்லங்க.. இந்த பென்சில் லைட்டா
எழுதுதுன்னு சொன்னான்… அதான்
Apsara பென்சில் குடுத்து இருக்கேன்..! ”

( ஐயையோ அப்ப Ship of Desert கேள்விக்கு
” Apsara “னு எழுதி வைப்பானோ..?! அவ்வ்வ்..! )

நேத்து நடந்த Short-Cut மேட்டரை
என் Wife கிட்ட சொன்னேன்..

” ஏங்க உங்க குறுக்கு புத்தியை
அவனுக்கும் கத்து தர்றீங்க..? ”

” நோ குறுக்கு புத்தி., இது Short-Cut..! ”

” ம்ம்ம்..! இன்னிக்கு மட்டும் அவன்
தப்பா பதில் எழுதிட்டு வரட்டும்.. அப்ப
இருக்குது உங்களுக்கு..!! ”

Evening ஸ்கூல்ல இருந்து வந்ததும்.,
அவன் Question Paper-ஐ வாங்கி பாத்தா..
அந்த பாழாப்போன கேள்வி இருந்தது..

அவனை கேட்டேன்…

” டேய். அம்மா உனக்கு வேற பென்சில்
குடுத்துட்டாங்களே.. இதுக்கு எப்படிடா
பதில் எழுதின..? ”

” அதனால என்னப்பா..? எனக்கு தான்
Answer நல்லா மனப்பாடம் ஆகிடுச்சே..! ”

( அப்பாடா.. தப்பிச்சேன்டா..! )

” சரி என்ன பதில் எழுதின..? ”

” CAMLIN ”

” ?!!?!?? “