ஏப்ரல், 2012 க்கான தொகுப்பு

இன்றே கடைசி, மதியத்துக்குள் குடுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் குடுக்க வேண்டிய விண்ணப்பத்தைச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். பெயர், பிறந்த தினம், கல்வித்தகவல்கள், முகவரி, அலைபேசி எண். எல்லாம் சரியாகவே இருந்தது. விண்ணப்பத்தின் கூடவே சமர்பிக்க வேண்டிய சான்றிதழ் நகல்களின் பட்டியலையும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டேன். கிளம்ப எத்தனிக்கையில்தான் அந்த வாக்கியம் கண்ணில் பட்டது. “All the Certificate photocopies must be duly attested” . அட, இதை எப்படி கவனிக்காமல் விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கின்றது. பல்கலைக்கழகத்துக்கு எட்டு கிலோமீட்டர் போக வேண்டும். இன்று சனிக்கிழமை வேறு. எங்கு போய் attestation வாங்குவது. யாரிடம் வாங்குவது. இதே நெல்லையாய் இருந்தால், attestation போடுவதற்கு தெரிந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏன், எனது அம்மா அப்பா இருவருமே கூட ஓய்வு பெறும் வரையில் பலருக்கும் attest பண்ணியிருக்கிறார்கள்.. ஆனால் சென்னையில எனது பழக்கம் எல்லாமே தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் நண்பர்களோடே என்பதால் Attestation போடுமளவிற்கு அரசு துறையில் உள்ளவர்கள் யாரும் பழக்கம் இல்லை. என்ன செய்வது? தோன்றியது, வீட்டின் அருகில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்தில் போய் கேட்டுப் பார்க்கலாம். பொறியாளர் எவரேனும் இருந்தால் போடுவார்கள். எல்லாச் சான்றிதழ்களின் அசலையும் நகலையும் எடுத்துக் கொண்டு அங்கே போனேன்.

கையில் பைலோடு உள்நுழைவதைப் பார்த்த கடைநிலை சிப்பந்தி ஒருவர் வழிமறித்தார்.

“யாரு சார்? என்ன வேணும்?”

“AE,  ADE யாராவது இருக்காங்களா? பாக்கணும்”

“கமெர்ஷியல் கனெக்ஷன் தான? மொதல்ல என்கிட்ட சொல்லுங்க சார்.. நேரா AEயப் பாக்க முடியாது.”  – பைலைப் பார்த்து தப்பாக நினைத்திருந்தார்.

“கனெக்ஷன்லாம் இல்லீங்க. Attestation வாங்கனும். அதான்..”

” Attestationஆ… போங்க… உள்ளார யாராவது இருந்தா போய்ப்பாருங்க.” சில்லறை தேறாது என்ற கடுப்பில் தலையைச் சொறிந்து கொண்டு போனார்.

இன்னும் இரண்டு மூன்று பேரைக் கடந்த போதும் இதே. Attestation என்ற வார்த்தையைக் கேட்டதுமே ஏதோ பல்பு திருடியவனைப் பார்ப்பது போல் கேவலமாகப் பார்த்தார்கள். ஒருவழியாக AEன் அறையை நெருங்கி வாசலில் போய் நின்றேன். இரண்டு மூன்று முறை ஏறெடுத்துப் பார்த்தார். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. நான்காம் முறை பார்த்த பொழுது கேட்டார்

“யாரு நீங்க என்ன வேணும்?”

” Attestation வேணும் சார்”

“எதுக்கு Attestation?”

“காலேஜ் அப்ளிக்கேஷனுக்கு certificate, Marksheet attestation ”

“அது ஏன் சார் சனிக்கிழமை வர்றீங்க… வாரநாள்ல வர வேண்டியதுதான. போய்ட்டு திங்கக்கிழமை வாங்க..”  – அது வரையில் அவர் துக்ளக்தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை இந்த இடத்திலே சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் மை லார்ட்.

“இல்ல சார், இன்னிக்கு கடைசி நாள்… குடுக்கணும்”

“உங்க கடைசி நேர அவசரத்துக்கு எங்களையும் பாடாப்படுத்துங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க தம்பி” சொல்லியவாறே எழுந்து போய் கம்ப்யூட்டரில் போய் உட்கார்ந்தார். கண்டிப்பாக சீட்டுதான் விளையாடப் போகிறார் என்று உள்மனது சொல்லியது. ஆனால் இல்லை.

“யோவ் ராமநாதன், அந்த DC பண்ணதுல பில்லு கட்டுனவன் லிஸ்டக் கொண்டாய்யா… இந்த எளவுல என்ட்ரியப் போடணும்” என்று சொல்லியவாறே சிஸ்டத்தை ஆன் செய்து மவுசைத் ஆட்டிக் கொண்டே இருந்தார். ராமநாதன் வந்து லிஸ்டைக் கொடுத்துவிட்டு என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் போனார். ராமநாதன் – அந்த முதல் கமர்ஷியல் கனக்ஷனார்.  சிரித்து வைத்தேன்.

ஒரு ஐந்து நிமிடம் போயிருந்தது. என்னதான் செய்கிறார் என்று தற்செயலாகப் பார்த்தே. வினோதமாக ஏதோ செய்து கொண்டிருந்தார்.  முதலில் மவுசை வைத்து மவுஸ்பேடில் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ போட்டார். பின்னர் ஒரு க்ளிக். திரும்பவும் ஒரு பதினாறோ, முப்பத்தி இரண்டோ. பின்னர் ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.  மீண்டும்  பதினாறு, க்ளிக், பதினாறு, டைப்பிங்…. தொடர்ந்து கொண்டிருந்தது. விஷயம் என்னவென்றால், அது ஒரு Form. நான்கு Text Boxகளை Fill பண்ண வேண்டும். Submit.  ஒவ்வொரு Text Boxஐயும் தேடிப் போய் க்ளிக் பண்ணி விட்டு மீண்டும் Mouse cursorஐ மானிட்டரின் கீழே ஓரத்துக்கு கொண்டு வந்து வைத்து விடுகிறார். டைப் செய்கிறார். மீண்டும் ஜென்மப் பிரயத்தனத்தில் மவுசை நகட்டி நகட்டி அடுத்த Text Boxல் க்ளிக். மீண்டும் மானிட்டரின் ஓரம். ஒரு விரலால் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி டைப்பிங்.

என்னுடைய ஏழரை அங்கேதான் தொடங்கியது. சனி வாய் வழியாக வந்தது.

“சார்… … …. …. … …..” –  அதை நான் சொல்லி விட்டேன்.

ஏறிட்டுப் பார்த்து “என்ன சொன்னீங்க?” என்றார். அதைக் காட்டி மீண்டும் அதையே சொன்னேன். அங்கே ஆரம்பித்தது டண்டணக்கா.

“கம்ப்யூட்டர் தெரியும்ன்னு திமிரு காட்றீங்களா..? என்ன வேலை பாக்குறீங்க?”

“சாப்ட்வேர்லதான் சார். ஆனா அப்படில்லாம் இல்ல சார்.. நான் சொன்னது.. சார்… சாரி… அது வந்து”

“வருவீங்க இத அடி, அத அடின்னு சொல்லுவீங்க. அப்புறம் கம்ப்யூட்டர் நொட்டையா வேல செய்யாம ரிப்பேராப் போகும். யாரு பாக்குறது. நீ வந்து ஓசில சர்வீஸ் பண்ணுவியா.. எதாவதுன்னா என் சம்பளத்துல கைக்காசு போட்டு பாக்க சொல்லி தாளி அறுப்பானுங்க. நீ வந்து பாப்பியா? சொல்லுய்யா…”

“சார்… அது வந்து சார்… அப்படில்லாம் ஒன்னும் ஆகாது சார்…”

“என்னாது வந்து போயி… இப்படித்தான் முன்னால வந்தவன் ஒருத்தன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்ன்னான். கம்ப்யூட்டர் Slowவா இருக்கு பாக்குறீங்களான்னு கேட்டதுக்கு இத்த அத்தன்னு எத்தையோ கெலிட்(delete) பண்ணீட்டு போய்ட்டான். இந்த சனியன் 3 மாசமா வேலை செய்யாமக் கெடந்தது. என்னையப் போட்டு கொடஞ்சிட்டானுக.. தேவையா எனக்கு”

“சார்… அது வந்து… அப்படில்லாம்… சார்…”

“போயிரு… Attestationலாம் ஒன்ணும் போட முடியாது… போயிரு”

“சார்… சாரி சார்.. இல்ல அது சார்.. சாரி சார்…”

“போங்கறேன்ல… போயிரு” என்று கோபத்தில் மவுசை வைத்து மவுஸ் பேடில் 360, 3350 எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஏப்ரல் மாசம் வேற… ராத்திரிக்கு கரண்டப் புடுங்கிட்டானுகன்னா Fan, AC ஓடாது என்பதால் கம்மென்று கிளம்பி விட்டேன்.

அவரிடம் நான் சொன்னது இதுதான்…. இது மட்டும்தான்

“சார்… இந்த Tab Key ah அடிச்சீங்கன்னா அடுத்தடுத்த Text boxக்கு ஆட்டோமேடிக்காப் போகும். Mouse ah use பண்ண தேவை இல்லை.

நான் சொன்னது தப்பா சார்?

****************************

பக்கத்திலேயே இருந்த அரசு மருத்துவர் ஒருவரிடத்தில் Attestation வாங்கப் போனேன். நல்லவேளையாக அவர் அறையில் கம்ப்யூட்டர் எதுவும் இல்லாத காரணத்தால் அன்றே அப்ளிகேஷனைக் கொடுக்க முடிந்தது.

கடவுள் இருக்கான் கொமாரு.

நொந்த கதை சொன்னவர்: http://nellainanban.blogspot.in

நல்ல பல பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவரும் ஒரு பொறியியலாளரும் தவறாக வாகனத்தை ஓட்டிய போது ஒரு ஆலயத்தின் சுவரில் மோதி இறந்துவிட்டனர். இதில் ஒரு ஆலய பக்கதரும் கொல்லப்பட்டார். ஆலயத்திற்கு சேதம் விளைவித்ததாலும் பக்தரைக் கொன்றதாலும் அவர்கள் இருவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். நரகத்திற்குச் சென்ற இருவரும் அங்கு தமது சேவையைத் தொடர்ந்தனர். மருத்துவர் அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். பொறியிலாளர் குளிரூட்டி, மலசல கூட வசதிகள், நல்ல இருப்பிட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினார். நரகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர்.

கடவுளிடம் நரகம் பல வசதிகளைப் பெறுகிறது என்று யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடவுள் நரகத்தின் பொறுப்பாளியை அழைத்து நரகத்தில் பாவிகள் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அறிந்தேன். அங்கு என்ன நடக்கிறது என்று வினவினார். நரகப் பொறுப்பாளி மருத்துவரினதும் பொறியியலாளரினதும் சேவையை விபரித்தார். அப்போது கடவுள் அவர்கள் இருவரையும் என்னிடம் அனுப்பு என்றார். நரகத்தின் பொறுப்பாளி அனுப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். அதற்கு கடவுள் அனுப்பாவிடில் உன் மீது வழ்க்குத் தொடருவேன் என்றார். நரகத்தின் பொறுப்பாளி சிரித்துக் கொண்டு சொன்னார். வழக்குப் போடுவதாயின் சட்ட அறிஞர்கள் வேண்டும். அவர்கள் எவரும் உங்களிடம் இல்லை. அனைவரும் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.

Courtesy: http://veltharma.blogspot.in

இந்த புகைப்படங்களை பாருங்கள். பார்த்தவுடன் புரியாது. கொஞ்ச நேரம் குறு குறு னு பார்த்தீங்கன்னா புரியும்…!

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை
கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த
அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!! இந்த எண்களை வைத்து எத்தனை
துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் ,கணினியையும், கால்குலேடரையும்
தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது ,அதை விட ஆயிரம்
மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

Courtesy: Dhana Sekar

உலகெங்கும் உள்ள புதிரான கட்டிடங்களில் சில உங்கள் பார்வைக்கு

Crooked house. Sopot, Poland

Tenerife Auditorium. Santa Cruz de Tenerife, Canary Islands, Spain

Bull ring. Birmingham, United Kingdom

La Tete au Carre in Nice, France. Inside is a library

Eden project. Britain

Snail House in Sofia

Edificio mirador in Madrid

Nautilus house. Mexico

Calakmul building – a building in a giant washing machine. Mexico

பார்த்து விட்டீர்களா பாகம் 1

சங்கரன்பிள்ளைக்கும் அவர் மனைவிக்கும் ஒருநாள்
பெரிய சண்டை வெடித்தது. உலக யுத்தம் அளவுக்கு
அது போய் விட்டது.

சங்கரன்பிள்ளை விரக்தியுடன் கால் போன போக்கில்
நடந்தார். ஊர் எல்லையைத் தாண்டி நடந்தார்.

வெகு தொலைவு நடந்த பிறகு ஒரு மரத்தடியில், சாது
ஒருவர் அமர்ந்து இருப்பதைக் கவனித்தார்.
அந்தச் சாதுவின் முகத்தில் அத்தனைச் சந்தோஷம்.
அபார அமைதி.

சங்கரன் பிள்ளை அவரை வணங்கினார்.

“”ஐயா, வீட்டில் என் மனைவி ரொம்பப் பிரச்னை
பண்ணுகிறாள். உட்கார்ந்தால் தப்பு, நின்றால் குற்றம்
என்று வாட்டி எடுக்கிறாள். பேசாமல் இருந்தால்,
ஊமையா என்று கத்துகிறாள். பேசினால், எதிர்த்துப்
பேசுகிறாயா என்று புரட்டி எடுக்கிறாள். நிம்மதி இழந்து
அல்லாடுகிறேன். அவளைச் சமாளிக்க சுலபமான வழி
ஏதாவது இருந்தால், சொல்லிக்கொடுங்களேன்”என்று
பணிவுடன் கேட்டார்.

அந்த சாது சங்கரன்பிள்ளையைப் பரிதாபமாகப் பார்த்தார்.
”அடப்போடா ! முட்டாள் !! எனக்கு அந்தச் சுலபமான
உபாயம் தெரிந்து இருந்தால், நான் எதற்கு இப்படிச்
சந்நியாசம் வாங்கிக் கொண்டு வந்து உட்காரப்போகிறேன் ?”
என்றார்….!

சத்குரு ஜக்கி வாசுதேவ் via: http://rammalar.wordpress.com

உலகெங்கும் உள்ள புதிரான கட்டிடங்களில் சில உங்கள் பார்வைக்கு

Atomium in Brussels, Belgium

Milwaukee Art Museum (Museum of Art, Milwaukee). Milwaukee, USA

Church of hallgrimur (Lutheran Church) in Reykjavik, Iceland

Longaberger Basket Building. Newark, USA

Wonder works. Pigeon Forge, United States

Another upside-down house (Upside down house) in Shimbarke, Poland

அலுவலகம் விட்டு வரும் வழியில் தங்கமணியை போலவே ஒரு பெண்ணை பார்த்தேன். தங்கமணி தான் என நினைத்து அருகில் போய் பேச பிறகு தான் அது வேற ஒருத்தர் என்று. மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன்.

நம்ம நாக்குல தான் சனி கொலைவெறியோட இருக்காரே. வந்ததும் வராததுமா உடனே தங்கமணி கிட்ட “தங்கமணி உன்னை மாதிரியே ஒருத்தர வர்ற வழியில பாத்தேன். அப்படியே அசந்து போய்டேன். தெரியுமா?” அப்படின்னு கேட்டேன். அதுக்கு பதிலுக்கு தங்கமணி ஒரு கேள்வி கேட்டாங்க. என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி குடுத்து இந்த அப்பாவி ரங்கமணிய காப்பாத்துங்க ப்ளீஸ்
அப்படி என்ன கேள்வி கேட்டாங்களா?
அந்த பொண்ணு அழகா இருந்தாளா?