ஜனவரி, 2013 க்கான தொகுப்பு

ஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு பயமாக இருக்கிறது.”

அவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய் இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.

********
செருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.

நீதிபதிக்கும் அந்தக் கஞ்சனைப் பற்றி தெரியும்.எனவே அவர் இவ்வாறு தீர்ப்பு கூறினார்,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”

********

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டான்.தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக இருக்கிறாயா?”என்று கேட்டுவிட்டு,”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்?இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையே!”என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து  வைத்து விட்டாயே!”என்றானே பார்க்கலாம்!

Courtesy: தென்றல்

காலைல எழுந்திருக்க ரொம்ப லேட் இன்னைக்கு.

அவசர அவசரமா ப்ரஷ் பண்ணிட்டு, ‘சுடுதண்ணி வெச்சிருப்பாங்களே’ன்னு சமையல் அறைக்குப் போனேன்.

நம்ம வீட்ல ஹீட்டர்லாம் கெடையாது. இட்லிப் பானைலதான் சுடுதண்ணி வைப்பாங்க. நல்ல்ல்லா சுடணும், சீக்கிரம் ஆகணும்னு மூடிபோட்டு தண்ணி சுட வைப்பாங்க.

நான் சமையலறைக்குப் போனப்ப, அந்த இட்லிப் பாத்திரம் கொதிச்சுக்கிட்டிருந்தது. ‘ப்பா.. இன்னைக்கு செம்ம குளியல் போடணும்டா’ன்னு அவசர அவசரமா பக்கத்துல இருந்த துணியை எடுத்துப் பாத்திரத்தைப் புடிச்சுகிட்டே பாத்ரூம் போய் வெச்சேன்.

துண்டெடுக்க போறமுன்னாடி வெளாவி வைக்கலாம்னு பாத்திரத்தைத் தொறந்தா…

உள்ள இட்லி வெந்துகிட்டிருக்கு!

மண்டைகாஞ்சு போய் ‘உமா பார்க்கறதுக்குள்ள மறுபடி கொண்டு போய் வெச்சுடணும்டா’ன்னு எடுத்தா, பின்னாடியே நிக்கறாங்க!

——-

கெளம்பறப்ப பூரிக்கட்டையைத் தொடைச்சுட்டு இருந்தாங்க. அநேகமா இன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன் வீட்ல.

G+ இல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்: பரிசல்காரன் கிருஷ்ணா

அடையாளம்

Posted: ஜனவரி 29, 2013 in கதைகள்
குறிச்சொற்கள்:, ,

“உன்னைப் பார்த்தால் ஏதோ கவலையாக இருப்பது போலிருக்கிறதே”

“ஆமாம்.. ஒரு சின்ன பிரச்சனை.. அதைத் தீர்த்து வைக்க ரொம்ப நேரமாகிவிட்டது.. அதனால் தூக்கம் கெட்டுப் போனது.. அதான் வாட்டமாக இருக்கிறது”

“என்னப்பா பிரச்சனை”

“நான் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தேனே.. குதிரை வாங்க வேண்டும் என்று .. நேற்றைக்கு சந்தைக்குப் போனேன்.. இரண்டு குதிரை வாங்கி வந்தேன்..”

“இது நல்ல விஷயம் தானே .. இதில் எங்கிருந்து பிரச்சனை வந்தது”

“இரண்டு குதிரைக்கும் வித்தியாசம் கண்டு பிடிப்பதற்கு அளவு tape வைத்துக் கொண்டு நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்”

“அப்படியா”

“ஆமாம் அப்பா .. இரண்டு குதிரைகளையும் நிற்க வைத்து காதிலிருந்து தரை வரை எத்தனை உசரம் என அளந்து பார்த்தேன்.. இரண்டும் ஒரே உசரம்..”

” chin groove லிருந்து அளந்து பார்த்தாயோ..”

“அதையும் பார்த்துவிட்டேன்.. இரெண்டு குதிரைகளும் ஒரே உசரத்திலே தான் இருந்தன”

“குதிரையின் வயிற்றின் சுற்றளவு பார்த்தாயா”

“ம்ம்ம் அதையும் நான் விட்டு வைக்க வில்லை.. Loin, croup , flank என்பதாக ஒவ்வொரு இடத்தையும் வைத்துக் கொண்டு இரண்டு குதிரைகளின் வயிறு சுற்றளவு பார்த்தேன்.. வித்தியாசமே இல்லையப்பா”

” குதிரையின் பின் காலின் gaskin muscle முன் காலின் இடைவெளி அளந்து பார்.. அது எப்போதும் வேறுபடும்”

“அதையெல்லாம் பார்த்தாயிற்று ”

“ஹாங்க்… வாலின் நீளம் பார்த்தாயா.. வாலின் நீளம்”

“அடப் போப்பா.. அதையும் பார்த்து விட்டேன்.. அது மட்டுமல்ல வால் தொடங்கும் dock இடத்திலிருந்து தரை எத்தனை உசரம். காதுகளுக்கு பின்னே இருக்கும் poll வரைக்கும் எத்தனை நீளம் எல்லாம் பார்த்து விட்டேன்.. ஒரே அளவு தான்.. ”

“குதிரைகளின் barrel நடுப்புள்ளியிலிருந்து.,, தரை வரைக்கும் அளந்து பார்த்தாயா”

“ம்ம்ம் பார்த்து விட்டேன் நண்பா.. அதுமட்டுமில்லை க்ரெஸ்ட் பகுதியின் சுற்றளவு பார்த்தேன்.. whither பகுதி சுத்தளவு.. point of hip இடத்திலிருந்து தரை இருக்கும் உசரம், அங்கிருந்து மூக்கு வரை நீளம்.. குதிரைக்கு shirt , pant தைப்பதானால் என்னால் மனப்பாடமாக அளவுகளை மனதிலே வைத்துக் கொண்டு தைக்க முடியும் என்றால் பார்த்துக் கொள்”

“அடடா .. நீயும் எல்லாம் தான் செய்து பார்த்திருக்கிறாய்.. ஆனாலும் வழி கிடைக்கவில்லை.. விட்டுத் தள்ளு”

“விட்டுத் தள்ளுவதாவது..  நடக்குமா.. அதுவும் என்னிடம் !!!! ஒரு வழியாக இரண்டு குதிரைகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடித்துவிட்டேன்”

“அது தானே பார்த்தேன்.. நீ கில்லாடியாச்சுதே.. கண்டுபுடிக்காமல் விடுவாயா.. என்ன வித்தியாசம் .. என்ன வித்தியாசம் சொல்லு”

“முன்னே மூஞ்சி நீளம் இருக்கிறதல்லவா.. அது ஒரு குதிரையை விட இன்னொன்றுக்கு இரண்டு அங்குலம் நீளமாக இருந்தது”

“சப்பாபாஷ்… சரியான ஆளப்பா நீ.. அது சரி.. ஒவ்வொருதரமும் இதை அளந்து அளந்து பார்த்துக் கொண்டா இருப்பாய்.. இந்த வித்தியாசத்தை.. பார்த்த உடன் தெரிந்து கொள்வது மாதிரி குதிரைக்கு ஏதாவது அடையாளம் செய்து வைத்தாயா”

“அந்தக் கவலை இல்லை.. கருப்புக் குதிரைக்குத் தான் வெள்ளைக் குதிரையை விட மூஞ்சி நீளம் என எனக்கு நியாபகம் இருக்கும்

courtesy: Chandramowleeswaran. V

தங்கமணி அம்மா வீட்டுக்கு போயிட்டு ஒரு வாரம் கழிச்சு அன்னைக்கி தான் வந்திருக்காங்க. கணவனும் மனைவியும் அரட்டை அடிச்சுட்டு இருக்காங்க
ரகளை இப்படி தான் ஆரம்பிக்குது….
தங்கமணி : டிட் யு மிஸ் மீ?
ரங்கமணி : நோ ஐ மிசஸ்ட் யு (என அதிபுத்திசாலி லுக் விட்டு சிரிக்கிறார்)
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : ஹா ஹா… நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன்… இதெல்லாம் அதையும் தாண்டி புனிதமானது உனக்கு புரியறது கொஞ்சம் கஷ்டம் தான் (என சிரிக்கிறார்)
தங்கமணி : பித்துக்குளிதனமா எதுனா ஒளர வேண்டியது… அதுக்கு இப்படி ஒரு மொக்க விளக்கம் வேற… கஷ்டம்டா சாமி… உங்கூரு ஜோசியர் குத்தாலத்துல ஏதோ பரிகாரம் பண்ணனும்னு சொன்னாருனு உங்கம்மா சொன்னது சரி தான் போல இருக்கு

ரங்கமணி : என்ன கிண்டலா?

தங்கமணி : இல்ல சுண்டல்

ரங்கமணி : ஹ்ம்ம்… புரியலைனா புரியலைனு ஒத்துக்கோ, சும்மா சமாளிக்காத

தங்கமணி : சரி சாமி… ஒத்துக்கறேன், உங்க மேலான விளக்கத்தை இந்த பீமேல்’க்கு புரியற மாதிரி கொஞ்சம் சொல்றீங்களா?
ரங்கமணி :ஹா ஹா… நீ கூட சமயத்துல நல்லா காமடி பண்றே தங்கம்… சரி விளக்கம் என்னனா… நீ “டிட் யு மிஸ் மீ”னு கேட்டயா, அதுக்கு நான் என்ன சொன்னேன்…

தங்கமணி : ஐயோ… மறுபடி மொதல்லேந்தா… (என தலையில் கை வைக்க)
ரங்கமணி : சரி நானே சொல்றேன்… நான் “நோ ஐ மிசஸ்ட் யு”னு சொன்னேன்… அதாவது உன்னை கல்யாணம் பண்ணிட்டு மிஸ்சா இருந்த உன்னை மிசஸ் ஆக்கினேன்னு சொன்னேன்… இப்ப புரியுதா… (என காலரை தூக்கிவிட்டு கொண்டு கேட்க)
தங்கமணி : நல்லா புரியுது…
ரங்கமணி : என்ன புரியுது?
தங்கமணி : குத்தாலம் பரிகாரத்தை நாள் கடத்தாம செய்யணும்னு புரியுது
ரங்கமணி : பொறாம பொறாம… ஹையோ ஹயோ… (என சிரிக்க)
தங்கமணி : அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லல
ரங்கமணி : என்ன கேட்ட?
தங்கமணி : ம்… சொரக்காய்க்கு உப்பு பத்தலனு கேட்டேன் (என்றாள் கடுப்பாய்)
ரங்கமணி : ஜோக்கா? ஹி ஹி… சிரிச்சுட்டேன் போதுமா… (என பல்லை காட்ட)
தங்கமணி : இங்க பாருங்க எனக்கு கெட்ட கோவம் வந்துரும்
ரங்கமணி : கோவத்துல கூட நல்லதா வராதா உனக்கு… ஹா ஹா
தங்கமணி : (முறைக்கிறாள்)
ரங்கமணி : சரி சரி சொல்றேன்… உன்னை மிஸ் பண்ணாம இருப்பனா தங்கம்
தங்கமணி : நிஜமா? (என்றாள் சந்தேகமாய் பார்த்தபடி)
ரங்கமணி : செத்து போன எங்க அப்பத்தா மேல சத்தியமா
தங்கமணி : எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : எவ்ளோனா…அதெப்படி சொல்றது (என விழிக்கிறார்)
தங்கமணி : அதேன் சொல்ல முடியாது… அப்ப நீங்க என்னை மிஸ் பண்ணல
ரங்கமணி : அது…. அப்படி இல்ல தங்கம்… நெறைய மிஸ் பண்ணினேன்… அதை எப்படி சொல்றது?
தங்கமணி : (இடைமறித்து) இந்த மழுப்பற வேலை எல்லாம் வேண்டாம்… இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள எவ்ளோ மிஸ் பண்ணீங்கனு சொல்லணும்
ரங்கமணி : என்ன தங்கம் இது? எங்க மேனேஜர் டெட்லைன் வெக்கற மாதிரி சொல்ற
தங்கமணி : அந்த டெட் லைன் மிஸ் பண்ணினா வேலை தான் போகும்… இந்த டெட்லைனா மிஸ் பண்ணினா லைப்லைனே போய்டும் சொல்லிட்டேன் (என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்)
ரங்கமணி : அடிப்பாவி… இப்படி சொல்லிட்டு போயிட்டாளே… என்ன பண்றது இப்போ? ப்ராஜெக்ட்ல சந்தேகம்னா டீம் மீட்டிங் போடலாம்… இந்த விசயத்துக்கு மீட்டிங் போட்டா என் மானம் டைடானிக்ல டிக்கெட் வாங்கிருமே… என்ன பண்ணலாம்… (என யோசிக்க…) ஐடியா… (என குதிக்கிறார்) கூகிள் இருக்க பயமேன்
ரங்கமணி : ( கூகிளில் “How” என டைப் செய்ததுமே “How to Tie a tie” என சஜசன் வர… ) இதொண்ணு என் வீட்டுக்காரி மாதிரியே குறுக்க குறுக்க பேசிகிட்டு…
தங்கமணி : (உள்ள இருந்து) என்னமோ சொன்ன மாதிரி கேட்டுச்சு?
ரங்கமணி : உன்னை ஒண்ணும் சொல்லல தங்கம்… இந்த சனியம் புடிச்ச கம்பியூட்டர் தான் (என சமாளிக்கிறார்)
தங்கமணி : (சைலண்ட்)
ரங்கமணி : ஹ்ம்ம்… (என பெருமூச்சு விட்டபடி… “How to measure how much…” என டைப் செய்து முடிக்கும் முன் “how to measure how much paint i need” என ஒரு நூறு லிங்குகள் வர) அடச்சே… ஆணியே புடுங்க வேண்டாம் போ… (என சலித்து கொண்டு கம்பியூட்டரை ஆப் செய்கிறார்)
சற்று நேரம் கழித்து…
தங்கமணி : ரெடியா? இப்ப சொல்லுங்க… என்னை எவ்ளோ மிஸ் பண்ணினீங்க?
ரங்கமணி : “ஐயையோ…அதுக்குள்ள டெட்லைன் வந்துடுச்சா” என தனக்குள் புலம்பியவர் “ம்… அது… சரி என்னை கேக்கறியே? நீ சொல்லு பாப்போம்… என்னை நீ எவ்ளோ மிஸ் பண்ணின?” என மடக்கினார். அல்லது மடக்கி விட்டதாக புளங்காகிதம் அடைந்தார்
ஆனால் அதெல்லாம் வெறும் காகிதமாக ஆக போவதை பாவம் அவர் அறியவில்லை
தங்கமணி : நானா? இங்கிருந்து கிளம்பின நிமிசத்துல இருந்து எப்படா திரும்பி வருவோம்னு நெனச்சேன்…அவ்ளோ மிஸ் பண்ணினேன்
ரங்கமணி : “ஐயையோ… எனக்கு இது தோணாம போச்சே…ச்சே…எவ்ளோ ஈஸியா சொல்லிட்டாளே… இந்த மாதிரி வேற எதுவும் தோண மாட்டேங்குதே” என புலம்பியவர் “பேசாம நானும் அப்படித்தான்னு சொல்லிடுவோம்” என தீர்மானித்து வாயை திறக்கும் முன்…
தங்கமணி : நானும் அப்படித்தான்னு சொல்றத தவிர வேற எது வேணா சொல்லுங்க… உங்களுக்கு இன்னும் இருபத்திநாலு மணி நேரம் டைம் (என எழுந்து செல்கிறாள்)
ரங்கமணி : ………………………………….
என்ன செஞ்சாரா? மேல உள்ள படத்த பாருங்க…அப்படி தான் முழிச்சுட்டு இருக்காராம். ஹையோ ஹையோ… :))

ரசித்த இடம்: http://appavithangamani.blogspot.in

————————————————————————————————————————————————–

சாமியாரு – படத்தோட முதல் பாதி, ரொம்ப கேவலமா, மொக்கையா, குப்பையா, அருவருப்பா, ரொம்ப அசிங்கமா தான் அமையும்
பொது மகன் – அப்போ ரெண்டாம் பாதி நல்லா இருக்குமா சாமி??

சாமியாரு – இல்லை இல்லை.. அதுவே பழகிடும்

————————————————————————————————————————————————–

Courtesy: http://ideas.harry2g.com

சரி,முதல்ல நம்ம நடிகை அஞ்சலியை பார்ப்போம்.

1.வேட்டை படத்துல ஆர்யாவுடன் முத்த வேட்டைக்கு தயாராகும் அஞ்சலி இப்டி ஒரு புக் எழுதலாம்.

2. Trisha bathing Video க்கு பிறகு இப்டி நினைச்சிருக்கலாம் நம்ம த்ரிஷா:)

3.கரகாட்டக்காரன் மாபெரும் வெற்றிக்கு பிறகு இப்டி ஒரு புக் எழுதி இருக்கலாம் நம்ம கலர் சட்டை ராமராஜன்:)

4.ஊர் முழுக்க ப்ளேபாய் பேரெடுத்த நம்ம சிம்பு இந்த மாதிரி ஒரு புத்தகம் எழுதலாம்.

5.என்னதான் நம்ம பிரபுதேவா நயனை விட்டு பிரிஞ்சிட்டாலும் பயன் இல்லாமலா? இருந்திருக்கும் ஹிஹிஹி:)

6. நம்ம ரவுசு பார்ட்டிய பத்தி சொல்லவே தேவை இல்லை.வாயாலையே ம்யூசிக் போட்டு ஆஸ்கார் வாங்குவார் டி.ராஜேந்தர்:)

7.பூஜா வீடியோ பார்த்து ஒதுங்கிபோன ஆர்யா இப்டி உண்மைய எழுத நினைக்கலாம்.:)

8.ரஜினியின் பாபா தோல்விக்கு பிறகு இந்த மாதிரி ஒரு புக் எழுதி விளக்கம் கொடுத்திருக்கலாம்.

9.இந்தப்புத்தகத்தை வாங்காதீங்கன்னு சொல்லி சொல்லியே வாங்க வைச்ச கோபிநாத் அதன் தொடர்ச்சியா இப்டி ஒரு புக் எழுதினா என்ன ஆகும்?

10. பாட்டி சொல்ல கூட தட்டலாம் ஆனா நம்ம தல சொல்ல!!!!

நன்றி:)

Courtesy: http://www.mazhai.net

சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு. எனக்கு இவை புதிய தகவல்கள் அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்










Courtesy: http://ritemail.blogspot.in

பாகம் 1 பாக்கலன்னா பார்த்துடுங்க

சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு. எனக்கு இவை புதிய தகவல்கள் அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்










Courtesy: http://ritemail.blogspot.in

தந்தைகேற்ற தனயன்

Posted: ஜனவரி 18, 2013 in கதைகள், சுட்டது
குறிச்சொற்கள்:,

ஒருவன் கஞ்சனாக இருந்தான்.அவன் மகனோ அவனை  விடக் கஞ்சனாக வளர்ந்தான்.
ஒரு நாள் மகன் வெளியே ஒரு வேலையாக செல்ல வேண்டியிருந்தது.
தந்தையிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று பார்த்தால் அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.
எனவே தந்தையை தொந்தரவு செய்யாது வெளியே சென்றான்.
இரண்டு கி.மீ.தூரம் நடந்து சென்றபின்,வீட்டில் விளக்கை அணைத்தோமா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.
அது எரிந்து கொண்டிருந்தால்  வீண் செலவாகுமே என்று கருதிய அவன் வீட்டிற்கு திரும்ப நடந்தான்.
வீட்டிற்கு வந்தபோது வெளியே நின்றிருந்த அவன் தந்தை விபரம் கேட்டார்.அவனும் சொன்னான்.
பின் தந்தை ,”நீ சரியாகக் கவனிக்காமல் சென்றதால் இப்போது இரண்டு கி,மீ.தூரம் திரும்ப வந்திருக்கிறாய்.
இதனால் உன் செருப்பு அதிகப் படியாகத் தேய்ந்திருக்குமே ,இது நமக்கு கட்டுப்படியாகுமா?”என்று கேட்டார்,
பையன் உடனே ,”நான் ஒன்றும் முட்டாள் இல்லை,”என்று சொல்லியவாறு கக்கத்தில் இருந்த செருப்பை எடுத்துக் காட்டினான்.
தகப்பன் சொன்னான்,”அந்த மட்டுக்கும் பரவாயில்லை.இப்போது நீ ஏற்கனவே சென்ற  தூரம் வரை செருப்பு போடாமலே போ.”

Courtesy: http://jeyarajanm.blogspot.in

அந்த பக்கம் போகாதீங்க.ஏதோ ஆர்ப்பாட்டம் நடக்கிறது.”

ஆனால் அந்த பக்கம் போனால்தான் வீடுக்கு சீக்கிரம் போகலாம்.இது சுற்று வழி.

எப்படியோ ஆர்ப்பாட்டத்தில் நுழைந்து சமாளித்துப்போய் விட வேண்டியதுதான்.எதிர் வந்தவர் கூறியதை காற்றில் பறக்க விட்டேன்.
வேகமாக நடை போட்டேன்.

ஒரே பெண்கள் கூட்டம்.ஆவேசமாக கூக்குரல்[ அவர்கள் மொழியில் கோசம்] போட்டுக்கொண்டிருந்தனர்.
ஏதாவது மாதர் சங்கமாக இருக்கும்.எங்காவது பெண் பாலியல் பலாத்காரம் விவகாரமாக இருக்கலாம்.

ஆனால் கோசங்கள் சற்று வேறுமாதிரி இருந்தது.கவனித்தேன்.
“வெறும் சம்பளம் மட்டும் போதாது.விலைவாசிப் புள்ளிகளுக்கேற்ப அகவிலைப்படி வேண்டும்,,வேண்டும்,
ஆண்டுக்கொருமுறை மிகை ஊதியம் போனஸ் வேண்டும்,,வேண்டும்.”
அடடா.சத்துணவு பெண்களாக இருக்காலாம்.அல்லது அங்கன்வாடி இனத்தவர்களாக இருக்கலாம்.மகளிர் காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொன்டிருப்பது பார்வையில் பட்டது.

அது யார் .?

ஒரு ஓரமாக.காசி போல் தெரிகிறதே.
அது நண்பன் காசியேதான்.

ஏன் ஒரு ஓரமாக ஒளிந்து நிற்பது போல் இருக்கிறான்.என்னைப் பார்த்து விட்டான்.

கையை அசைத்து ரகசியமாக அல்லது பயத்துடன் கூப்பிடுவது தெரிந்தது.
வேகமாக அதே நேரம் அவனின் ரகசியத்துக்கு ஈடு கொடுத்து கள்ளக்காதலியை நெருங்கும் காதலன் போல் சென்றேன்.
“பேசாமல் அந்தவழியில் போயிருக்கலாம்லே”?
ஏன்?என்ன விசயம்.?
“இந்த ஆர்ப்படத்தில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதில்லையா?
“என்ன ஆர்ப்பாட்டம்.சத்துணவா,மகளிர் சங்கமா?இதில் நாம் மாட்டி என்ன ஆகப்போகிறது?”
“அங்கே பாருடா மடையா?”
நானும் மடையன்போல் பார்த்தேன்.அட எனது மனைவி.அருகில் காசியின் பத்தினி.அருகில் பார்க்க பார்க்க திகைப்பு.
தெருவில் உள்ள அத்தனை மனைவிகளும்.அங்கு இருந்து கோசமிட்டனர்.

என்ன இழவு போராட்டம்.?

“மனைவிகளுக்கு மாதா,மாதம் சம்பளம் கொடுக்க நீதிமன்றம் உத்திரவிட்டு விட்டது அல்லவா?
இவங்களுக்கு சம்பளம் மட்டும் போதாதாம்.அகவிலைப்படி.மிகை ஊதியம்,கொடுபடா ஊதியம்.இன்னமும் எத்தனைவகை ஊதியம் உள்ளதோ அத்தனையும் வேண்டுமாம்.அதான் இந்த ஆர்ப்பாட்டம்.’ காசி கிசு,சிசுத்தான்.எனக்கோ தலையை சுற்றிவந்தது.கீழே விழுந்து விடும் அபாயம் தெரிந்தது.
ஆனால் விழும் இடம் சாலை போட பல ஆண்டுகளுக்குமுன்பே கொட்டி வைத்த கற்குவியல்.
அதில் விழாமல் இருக்கவும் ,அதன் மீது அமர்ந்து சற்று சிரமபரிகாரம் செய்து கொள்ளும் எண்ணத்திடன் அருகில் போனேன்.

கால் செருப்பில் சிறு கல்.உறுத்தியது.

ஆர்ப்பாட்டத்தை சோகத்துடன் பார்த்துக்கொண்டே ,செருப்பினூடே புகுந்த சுண்டைக்காய் அளவு கல்லை எடுக்க முயற்சித்தேன்.செருப்பு கீழே கழன்று விழுந்து விட்டது.செருப்பை எடுத்தேன்.

“ஆர்ப்பாட்டத்தில் செருப்பையா வீசுகிறாய்?’
கழுத்தில் கை விழ திரும்பினேன்.பெண் காவலர்.சும்மா சொல்லக்கூடாது பார்த்தாலே பயம் வரும் தடித்த உருவம்.

‘நான்.செருப்பு,கல்லு,”

போலிசை பார்த்தாலே பயம்.
அதிலும் இது பெண் போலீசு.வார்த்தைகள் தடுமாற ஒருகையில் செருப்பும்-மறுகையில் கல்லுமாக கையும் -களவுமாக,

மாட்டிக்கொண்ட நிலை.காசியைப்பார்த்தேன்.பாவி பறந்து போய் பத்து நிமிடம் ஆகியிருக்கும் போல் தெரிந்தது.
செருப்பு கையோடே ஏதோ கசாப்பை பிடித்து விட்ட பெருமிதத்துடன்.தர,தர வென காலரை பிடித்து இழுக்க

‘நான் சும்மா,நான்,செருப்பு,நான் கல் .நான் இல்லை”

என தொடர்புகளே அற்ற வார்த்தை உளறல்களுடன் இழுபட்டு சென்றேன்.
சாதாரண பெண்ணை விட்டு தப்பிக்க இயலா அளவு பயம்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கல் ஒரு கண்ணாடிஅளவுக்கு என்னைப் பார்த்து கோபத்துடன் முன்னேற, அதிலும் எனது பத்தினி முகம் அதிகோரமாக தெரிய

“நான் இல்லை.நான் கல்.நான் செருப்பு ” என்ற உளறல் அதிகரித்தது.

‘நான் ஈ ‘என்று கூட சொன்ன ஞாபகம்.
—————————————————-
“என்ன.சொல்றீங்க .நீங்க இல்லீனா யாரிந்த நூறு ரூபாயை எடுத்தாங்க.”
மனைவி உலுக்க தூக்கம் கலைந்தது.

“என்ன.நூறு ரூபாய்?”

“உங்க சம்பளத்தை இந்த மாதம் எடுக்க ஏடிஎம் போய் பார்த்தால்.சம்பளத்தில் வழக்கத்தை விட நூறு ரூபாய் குறையா கணக்கு சீட்டு வருகிறதே”
அட தூக்கத்தில் என்னவோ கெட்ட கனவு.

“ஆபீசிலே ஒருத்தர் வீட்டு கல்யாணம்.எல்லோரும் நூறு ரூபாய் மொய் ஒரு ஆள்கிட்டே கொடுத்து விட்டோம்.அதான்.
உங்கிட்டே சொல்லனும்னு இருந்தேன் மறந்துட்டு.”அசடு வழிந்தேன்.

“வர,வர வெட்டி செலவு அதிகமாயிட்டு.பஸ்-காபி செலவுக்கு கொடுக்கிறதை குறைச்சாத்தான் சரி வருவீங்க.”

கோபம் வர தூக்கி எறிந்தேன்.தலயணையைத்தான்.
அதுவும் அவள் போய் விட்டாள் என்று நிச்சயம் ஆன பின்புதான்.

யாராவது மாதமானால் சம்பளத்தை அல்லது ஏடிஎம் அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு நம்  மாத செலவுக்கு பணம்தர மறுக்கும் பெண்சாதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டீர்களா?

நான் முழு ஒத்துழைப்பு தர தயார்.

மனதளவில் தான்.

ஒன்று படுவோம்,

-போராடுங்கள்-

வெற்றி பெறுவோம்.

யாருங்க அது தங்கமணிக்கு லிங்க் அனுப்ப பாக்கிறது? எழுதினது நான் இல்லங்க: இவரு  தான்: http://suransukumaran.blogspot.in

உலகெங்கும் உள்ள புதிரான கட்டிடங்களில் சில உங்கள் பார்வைக்கு

62. Pabellon de Aragon (Zaragoza)

InstantShift - Strange and Fantastic Building Architecture

63. Royal Ontario Museum Expansion (Toronto, Canada)

InstantShift - Strange and Fantastic Building Architecture

64. Kunsthaus (Graz, Austria)

InstantShift - Strange and Fantastic Building Architecture

65. La Pedrera (Barcelona, Spain)

InstantShift - Strange and Fantastic Building Architecture

பார்த்து விட்டீர்களா பாகம் 1பாகம் 2 பாகம் 3,  பாகம் 4பாகம் 5, பாகம் 6பாகம் 7பாகம் 8

செல்வா சுயதொழில் ஆரம்பித்திருந்த சமயம்.
தனது தொழில் சிறக்க என்னவெல்லாம் செய்யலாமோ, நண்பர்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறார்களோ அனைத்து அறிவுரைகளையும் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் செய்துவந்தார்.
இப்படித்தான் ஒருமுறை உறவினர் ஒருவர் பக்கத்தில் இருக்கும் திட்டமலை முருகன் கோவிலை பௌர்ணமி நாளில் நூற்றியெட்டு முறை சுற்றி வந்து கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்று கூறியிருந்தார்.
அதை உண்மையென நம்பிய நமது செல்வா அதே போல ஒரு பௌர்ணமி நாளில் சுமார் 300 அல்லது 400 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மலையை நூற்றியெட்டுமுறை சுற்றிவந்தார்.
தனது தொழில் எப்படியாவது சிறப்பாக நடைபெற வேண்டுமென நினைத்ததால் அவருக்கு அந்த மலையைச் சுற்றுவது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.
மலையைச் சுற்றி முடித்துவிட்டு கடவுளிடமும் வேண்டிக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
மறுநாள் செல்வாவைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்த நண்பர், செல்வா மொட்டைமாடியில் நின்று அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்.
ஒருவேளை மலையைச் சுற்றியதால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அழுகிறாரோ என்று நினைத்துக்கொண்டு ஏன் அழுகிறார் என்பதற்கான காரணத்தைக் கேட்டார்.
“ நான் நூத்தியெட்டுத் தடவ சுத்தி முடிச்சிட்டு கடைசியா முருகன்கிட்ட வேண்டிக்கும்போது என்ன வேண்டிக்கிறதுனு மறந்துட்டு ’ கணக்கு டீச்சர் என்னைத் திட்டவே கூடாதுனு’ வேண்டிக்கிட்டேன்” என்றார் சோகமாக.
பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே செல்வாவிற்கு கணக்கு வராது என்பதால் கணக்கு ஆசிரியர்களைப் பார்த்தால் எப்பொழுதுமே பயம்தான்.
” அதனால என்ன, மறுபடி உன்னோட தொழில் நல்லா வரணும்னு வேண்டிக்க வேண்டியதுதானே ? “
“ இல்ல, மலைய சுத்தி வந்த உடனே முதல்ல என்ன வேண்டிக்கிறோமோ அதுதான் நடக்குமாமா! “
“அடடா, கொஞ்சம் கவனமா இருக்கவேண்டாமா? சரி விடு. இன்னொரு தடவ சுத்தி மறுபடி வேண்டிக்கலாம்!” என்று சமாதானப்படுத்தினார் நண்பர்.
சிறிது நேரம் அழுகையை நிறுத்திய செல்வா மீண்டும் அழத்தொடங்கினார்.
இப்பொழுது எதற்கு அழுகிறார் என்று குழம்பிய அவரது நண்பர் “ மறுபடி எதுக்கு அழுற ? கால் வலிக்குதா ? “ என்றார்.
“இல்ல, கணக்கு டீச்சர் திட்டக் கூடாதுனு வேண்டுனதுக்குப் பதிலா கணக்கு டீச்சர் அடிக்கக் கூடாதுனு வேண்டியிருக்கலாம். அதயும் மறந்துட்டேன்! “
செல்வாவின் நண்பர் கடுப்பாகிவிட்டார்.
“எரும, உனக்கு ஏழு கழுத வயசாகுதுல. இப்ப என்ன பள்ளிக்கூடத்துலயா படிச்சுட்டு இருக்க, கணக்கு டீச்சர் வந்து அடிக்கிறதுக்கு ? கணக்கு டீச்சர் அடிச்சா என்ன ? கொஞ்சினா உனக்கு என்ன ? “ என்று கோபமாகக் கத்த ஆரம்பித்தார்.
“ அதில்ல, என்னோட பொண்டாட்டியும் ஒரு கணக்கு டீச்சர் தான்! “ என்றார் செல்வா அழுதவாறே
ரசித்த இடம்: http://www.selvakathaikal.blogspot.in

RT @maethaavi: பையில் பணமிருக்கும் மனிதனுக்கு இருக்கும் தைரியம், கடவுளுக்கே அதை பிச்சை போட சொல்லுகிறது..
RT @Alexxious: வேலை இடம் சரி இல்லை என்பவர்களே , துப்புரவு பணியாளர்கள் வொர்க் அட்மாஸ்ஃபியர் பார்க்க ஆரம்பித்தால் உலகம் நாறிடும் !!
RT @MissLoochu: மனைவி சீரியல் பார்க்க கணவன் டிவிட்டரில் மொக்கை போட குழந்தை திருதிருன்னு முழிக்கும் உலகமிது
RT @RealRenu: ரகசியம்னு சொல்லிட்டு ஊருக்கே கேட்குற மாதிரி காதுல சொல்ற கலை குழந்தைகளுக்கு மட்டுமே தெரிந்தது !
RT @tamilyouthcafe: மற்றவரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவர்கள் என்பதற்கு சரியான உதாரணம் ERASER

RT @karaiyaan: முதலாவது நமக்கு பெண்ணாக பிறக்கட்டும் – தவறவிட்ட உனது முதலிருபது வருடங்களை அவள் உருவில் கண்டு ரசிப்பேன்!! RT @KaarVannan Superb!
RT @arasu1691: கோபித்துக்கொண்டால் சமைக்காமல் படுத்துக்கொள்வது மனைவி..சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது அம்மா #அம்மா
RT @sweetsudha1: ஒரு வெஜ் பி‌ட்ஸா கொடுங்க! நாலா கட் பண்ணட்டுமா? எட்டா கட் பண்ணட்டுமா? நாலாவே கட் பண்ணுங்க. என்னால எட்டு ‌‌பீஸ திங்க முடியாது
RT @Siva_Buvan: நீ LO LO னு அவ பின்னாடி அலையணும்.. அதுக்கு அவ VE VE VE னு சொல்லிட்டுப் போவா..! #இதாம்லே LOVE!

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6 பாக்கலன்னா பார்த்துருங்க

ஒரு ஊர்ல 4 விஞ்சாணிகள் இருந்தாங்க. அவங்க வேல மிருகங்களை பத்தி ஆராய்ச்சி பண்றது. குரங்குகளை பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு 10 குரங்குகளை புடிச்சிட்டு வந்து பெரிய கூண்டுல அடைச்சாங்க. கூண்டுக்குள்ள பெரிய வாழைத்தார தொங்க விட்டு, பக்கத்துல ஒரு ஏணியவும் வெச்சாங்க. வாழைப்பழத்த பார்த்த உடனே ஒரு குரங்கு உடனே ஏணில ஏற ஆரம்பிச்சது. ஏணில ஏறுன உடனே சுத்தி பயங்கர குளிர்ச்சியான தண்ணிய எல்லா குரங்குகள் மேலயும் பீச்சி அடிச்சாங்க. மேல ஏறுன குரங்கு தண்ணி வேகம் தாங்காம கீழே வந்துடுச்சு. அது ஏணில இருந்து இறங்கின உடனே தண்ணிய அடிக்கிறத நிப்பாட்டிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல இன்னொரு குரங்கு அதே மாதிரி வாழைப்பழத்த சாப்பிடலாம்னு ஏணில ஏற தொடங்குச்சி. அது ஏணிய தொட்ட உடனே மறுபடியும் அதே மாதிரி குளிர் நீர் பீச்சுனாங்க. தாங்க முடியாம ஏறுன குரங்கும் உடனே இறங்கிடுச்சு. இப்படியே தொடர்ந்து 3 வாட்டி நடந்துச்சு. குரங்குகள் எல்லாத்துக்கும், அந்த ஏணிய டச் பண்ணா எல்லார் மேலேயும் குளிர்நீர் பீச்சியடிக்கும்னு புரிஞ்சிடுச்சு. அதுனால எல்லாம் அமைதியா உக்காந்திருச்சுங்க.
அப்போ கூண்டுக்குள்ள இருந்து ஒரு குரங்க வெளில எடுத்துட்டு, புதுசா ஒரு குரங்க உள்ள விட்டாங்க. அதுக்கு தண்ணி மேட்டர் எதுவுமே தெரியாதே. உள்ள போன உடனே வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணி பக்கத்துல போச்சு. அத பார்த்த உடனே மத்த குரங்குகள்லாம் ஓடிவந்து புதுக் குரங்க ஏணிய டச் பண்ண விடாம இழுத்துட்டு வந்து போட்டு அடிச்சதுங்க. புதுக்குரங்குக்கு ஒண்ணுமே புரியல. ஏணில ஏறுனா அடிப்பாங்கன்னு நெனச்சிட்டு சும்மா உக்காந்துச்சு.
இப்ப,இன்னொரு பழைய குரங்க வெளில எடுத்துட்டு இன்னொரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க, அதுவும் வாழைப்பழத்த பார்த்துட்டு ஏணில ஏற முயற்சி பண்ணி மத்த குரங்குகள்கிட்ட அடிவாங்கிச்சு. ஏற்கனவே உள்ள போன புதுக்குரங்கும் அடிக்கிறதுல சேர்ந்துக்கிச்சி. உள்ள வந்த புதுக்குரங்குக்கும் எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறாங்கன்னு தெரில.
இப்படியே ஒவ்வொரு குரங்கா வெளில எடுத்துட்டு ஒரு புதுக்குரங்க உள்ள விட்டாங்க. கொஞ்ச நேரத்துல எல்லா பழைய குரங்கும் வெளில வந்துடுச்சு.உள்ள புது குரங்குகள் மட்டும்தான். அப்பவும் எல்லாம் மத்த குரங்குகளை ஏணில ஏற விடாமே அடிச்சிட்டு இருந்துச்சுங்க. ஆனா அதுக எதுக்கும் வாழைப்பழத்த எடுக்க ஏணில ஏறுனா குளிர்ந்த நீர் பீச்சி அடிக்கும், அதுனாலதான் ஏறவிடாம அடிக்கிறோம்னு எதுவும் தெரியாது. முன்னாடி இருந்த குரங்குங்க, அடிச்சது, நாங்களும் அடிக்கிறோம்னு அடிச்சிட்டு இருந்துச்சுங்க. இப்படித்தாங்க உலகத்துல பல விஷயங்கள் நடக்குது………


நன்றி: கூகிள் இமேஜஸ், இது கார்ப்பரேட் கம்பெனிகளில் இருக்கும் ஒர்க் கல்ச்சர் பற்றி கிண்டலடிக்கும் ஒரு பழைய கதை… அவ்வளவே!

அனைவருக்கும் என் இனிய ஆங்கில  புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள் 

எனக்கு மின்னஞ்சலில் வந்த தகவல்கள் இது. உங்களுக்கும் காண ஆவல் இருக்கும் என நம்புகிறேன்

அந்த காலத்து ஆயிரம் ரூபா இந்திய நோட்டு

திருபாய் அம்பானி

சர் சி வி ராமன்

லதா மங்கேஷ்கர் இளமை கால புகைப்படம்

1864 இல் லாகூர் கோட்டை

இதன் பாகம் 1பாகம் 2பாகம் 3,பாகம் 4,பாகம் 5,பாகம் 6,பாகம் 7 பார்க்கலன்னா இப்போ பாருங்க

தொகுத்தது: நந்தகுமார்

2012 in review

Posted: ஜனவரி 1, 2013 in சுட்டது
குறிச்சொற்கள்:, ,

 

உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

The WordPress.com stats helper monkeys prepared a 2012 annual report for my blog.

Here’s an excerpt:

4,329 films were submitted to the 2012 Cannes Film Festival. This blog had 57,000 views in 2012. If each view were a film, all of your visits would power 13 Film Festivals

Click here to see the complete report.