நேத்து Evening என் கூட +2-ல படிச்ச
என் Friend கணேஷ் போன்
பண்ணியிருந்தான்..
” ஹலோ..! ”
” டேய்.. நீ என்ன படிச்சி இருக்க..? ”
எடுத்தவுடனே இப்படி ஒரு கேள்வியை
அவன் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி
போட்டது..,
( பொதுவா என் படிப்பு சம்பந்தமா
யாராச்சும் கேட்டா எனக்கு அப்படிதான்
ஆகும்…! ஹி., ஹி., ஹி.. )
” ஏன்டா.. என்ன விஷயம்..? ”
” நீ மொதல்ல சொல்லு..! ”
” நான் இந்த உலக இலக்கியம்.,
இந்திய இலக்கியம் எல்லாம்
படிச்சி இருக்கேன்..! ”
” டேய்… போதும்.. நான் கேட்டது
அதில்ல. நீ காலேஜ்ல என்ன
டிகிரி படிச்ச..? ”
” ஓ.. அதை கேக்கறியா..? நான் MCA
படிச்சி இருக்கேன்..! ”
” அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா..?! ”
” ஆமா…! ”
” டிகிரி வாங்கிட்டியா. இல்ல எதாச்சும்
அரியர் இருக்கா..? ”
” ஹேய்… யாரை பாத்து… நான் தான்
MCA-ல காலேஜ் First..! ”
” அப்ப உன் திறமையை Use பண்ணவேண்டிய
நேரம் வந்துடுச்சி மச்சி…! ”
” நேரம் வந்துடிச்சா…? அப்படின்னா…”
( ஐய்யயோ… சாப்ட்வேர் எதாச்சும்
டெவலப் பண்ண சொல்லுவானோ..! )
( கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ..!! )
” என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல…. “
” ஸ்கூல்ல….. “
” தெர்மோகோல்ல கம்பியூட்டர்
பண்ணிட்டு வர சொல்லி இருக்காங்க…
கொஞ்சம் வந்து பண்ணி குடேன்..! “
” அடி செருப்பால… புல்லு புடுங்க
பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு…? “
” டென்ஷன் ஆகாதடா.. உன் படிப்பை மதிச்சி
எவனாவது உனக்கு வேலை குடுத்தானா..?
நானாவது இந்த வேலை குடுத்தேன்னு
சந்தோஷப்படுவியா.. அதை விட்டுட்டு..!! “
” ஹி., ஹி., ஹி.., தெர்மோகோல் எல்லாம்
ரெடியா இருக்கா மச்சி…! “