ஒரு பழத்தை கைல குடுத்து சாப்பிடுன்னா என்ன பண்ணி வச்சுருக்கு பாருங்க இந்த ரங்கமணி?
அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல… ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி… அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி… யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே… பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?….
உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே… சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா… சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே… போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு…. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….
அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.
உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?… தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)… நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்…அத்தனை பேரும், ஓ நம்மாளு… இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு “ஙங்கு ஙங்குன்னு” குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ….அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க…
அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?… ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.
நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.
இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க…. வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.
அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை… உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.
ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது…
அப்புறம் இன்னொரு விசயம்… ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா… அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு… உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்…
ம்ம்ம்ம்… உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு…
கைப்புள்ளயின் சோகத்தை சொல்லியவர்: http://sinekithan.blogspot.com
==
–
தலைவரோட பேத்தி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு
ஓடினதை செய்தியாப் போட்டதுக்காகவா இவ்வளவு
கோபப்படறார்..?
–
ஊஹூம்…அதுக்குத் தலைப்பு ‘தலைவரின் பேத்தி
டிரைவருடன் ஓட்டம்’னு போட்டுட்டாங்களாம்…அதான்..!
–
============================================
–
தலைவரோட வீடு கோயில் மாதிரி..!
–
அவ்வளவு சுத்தமா..?
–
ஊஹூம்…வாசல்ல நிறைய செருப்பு கிடக்கும்.!
–
=========================================
–
ஒவ்வொரு தடவை பூட்டை உடைச்சுத் திருடும்போதும்,
மனசு கிடந்து அடிச்சுக்கும்..!
–
இது தப்புன்னா..?
–
இவ்வளவு நல்ல பூட்டையெல்லாம் வீணா
உடைக்கிறோமேன்னு..!
–
==========================================
–
தொழில்ல இந்த அளவுக்கு நஷ்டம் அடையக் காரணம்
என்னன்னு ஜோசியர்கிட்டே கேட்டதும்…
–
வாஸ்து சரியில்லைன்னாரா..?
–
ஊஹீம் என் ‘தோஸ்து’ சரியில்லைன்னார்..!
–
=======================================
பத்திரிகைக்காரங்க மேல தலைவர் ரொம்ப கோபமா
இருக்காரே, ஏன்..?
–
அவர் பீகார்ல கொஞ்ச நாள் இருந்ததை, திகார்ல
இருந்ததா எழுதிட்டாங்களாம்..!
–
–
==========================================
–
என் பையனைக்காட்டிலும் உன் பையன் பரீட்சையில
மார்க் கம்மியாத்தானே வாங்கினான்…
அவனுக்கு எப்படி இன்ஜினீயரிங் சீட் கிடைச்சது..?
–
பிச்சை எடுப்பவர்:- பேமன்ட் கோட்டாவுல சீட்
வாங்கிட்டேன் தாயீ..!
–
==========================================
–
இந்த டாக்டர் போலின்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க..?
–
‘நாளைக் உங்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணனும்…
காலையிலேயே மெரீனா பீச்சுக்கு வந்திடுங்க’ன்னு
சொன்னாரே..!
–
>குட்டி.மு.வெங்கடேசன்
==========================================
–
வாரப் பத்திரிகைக்கு தட்டச்சு செய்கிறவர்கிட்டே குற்றப்
பத்திரிகையை ‘டைப்’ பண்ணக் குடுத்தது தப்பாப்
போச்சா…ஏன்?
–
‘இவை யாவும் கற்பனையே…யாரையும் எவரையும்
குறிப்பிடுவது அல்ல’ன்னு கடைசியில ஒரு ‘லைன்’
அடிச்சுத் தொலைச்சிருக்கார்..!
–
>ஜெயாப்ரியன்
==========================================
நன்றி: குமுதம்
ரசித்த இடம்: http://rammalar.wordpress.com
சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் அதற்கு நம் கம்பெனி பொறுப்பல்ல!… படங்களைப்பாருங்க….’உலகிலுள்ள அரசியல்வாதிகளின் மக்கள் மன்ற நடவடிக்கைகளைப் பார்க்கறப்போ ’ நம்மாளுங்கக் கிட்ட தான் பாடம் படிச்சிருப்பாங்களோ ’ன்னு நினைக்க வைக்குது!
சீனாக்காரன் மட்டும் எந்தச் சிக்கலுமில்லாம எப்படி முன்னேறுகின்றான் என்பதை கடைசிக் காட்சியைக் கண்டால் புரியும். – ஹி… ஹி… அதுவும் நம்மாளுங்ககிட்ட இருந்து காப்பியடிச்சது மாதிரித்தான் தெரியுது!
கடைசியாக சீனா…
என்னே…அமைதி!
என்னே…ஆதரவு!
என்னே…ஒத்துழைப்பு!
இவுகளும் நம்ம முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் தான் பாடம் படிச்சாங்களோ?!?!
நண்பர் நெல்லி மூர்த்தி அவர்களுக்கும் அவருடன் பகிர்ந்து கொண்டநண்பர் திரு. பாலமுருகன் அவர்களுக்கும் நன்றி!
நாம் பல நேரம் நம் தங்கமணிகளின் படைப்பாற்றலை உணர்வதில்லை. இங்கே பாருங்கள் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருள்களை எப்படி அலங்கரித்திருக்கிறார்கள் என்று!
ரசித்த இடம்: http://thakaduthakadu.blogspot.com
அவங்க ரசிச்ச இடம்: http://ideaswu.blogspot.com
எங்க வீட்டு Kitchen-ஐ ஆல்டர் பண்ணிட்டு
இருக்கோம்.. Kitchen Slab-காக எடுத்துட்டு
வந்த கிரானைட் கல்லுல 2 அடி மிச்சமாயிடுச்சு..
அதை என்ன பண்ணலாம்னு நானும்.,
என் Wife-ம் Discuss பண்ணிட்டிருந்தோம்..
( இதெல்லாம் சும்மா Formality.. எப்படியும்
கடைசில நான் சொல்றது தான் நடக்காது..! )
” ஏங்க… வீட்டுக்கு வெளியில இருக்குற
Steps-க்கு போடலாமாங்க..? ”
” வேணாம்.. ஈரமா இருந்தா வழுக்கி
விட்டுடும்..! ”
” டைனிங் ஹால்ல ஒரு Slab போட்டுக்கலாம்ங்க..?
ஊறுகா பாட்டில் எல்லாம் வைக்க வசதியா
இருக்கும்.! ”
” வேணாம்.. டைனிங் ஹால் ஏற்கனவே
ரொம்ப சின்னதா இருக்கு.. அப்புறம்
இடைஞ்சலா போயிடும்..! ”
” சப்பாத்தி கல்லாவது பண்ணலாம்க…! ”
” வேணாம்.. Next..? ”
” சப்பாத்தி நல்லா வரும்க..! ”
” அதான் வேணாம்னு சொல்றேன்ல..! ”
இதை பாத்துட்டு கிரானைட் ஒட்டி
குடுக்க வந்தவன்..
” சார்..அதான் மேடம் ஆசைப்படறாங்கல்ல..
சப்பாத்தி கல்லே செஞ்சி குடுங்க..! ”
( டேய்…. சப்பாத்தி கல்லு
Wood-ல பாத்து இருப்ப..,
Steel-ல பாத்து இருப்ப.,
Stainless Steel-ல பாத்து இருப்ப…
எங்கயாவது கிரானைட்ல பாத்து இருக்கியா..?
அதுவும் கறுப்பு கிரானைட்ல பாத்து இருக்கியா..?
தூக்கி அடிச்சா ஒன்ரை கிலோ வெயிட்டுடா..
என் நிலைமை புரியாம படுத்தாதே )
என் Wife என்கிட்ட ரகசியமா..
” நீங்க எதுக்கோ பயப்படற மாதிரி தெரியுதே..! ”
” ஹி., ஹி., ஹி… இல்லையே..! ”
( அவ்ளோ வீக்காவா இருக்கோம்..?! )
” சரி., உன் ஆட்டோகிராப் இந்த பேப்பர்ல
போட்டு குடேன்னு ” சொல்லி ஒரு வெத்து
ஸ்டாம்ப் பேப்பர்ல என் Wife -கிட்ட
ஒரு கையெழுத்து வாங்கிட்டு
சப்பாத்தி கல்லு செஞ்சி தர சொல்லிட்டேன்..
அப்புறமா அதுல ” இந்த சப்பாத்தி கல்லுல
என் Husband-ஐ அடிக்க மாட்டேன்னு ”
நானே Fill பண்ணிகிட்டேன்..
நாங்கல்லாம் சாணக்கியனுக்கே ஐடியா
சொல்றவங்க.. எங்ககிட்டயேவா..?!!
சப்பாத்தி கல்லு செஞ்சி வந்தது..
அதை தூக்கி பாத்த என் Wife…
” ரொம்ப வெயிட்டா இருக்குங்க..! ”
” அப்பாடி…! இதை உன்னால தூக்க
முடியாது., தூக்கினாலும் அடிக்க
முடியாது.. Thank God..! ”
” இதை தூக்க முடியலைன்னா என்ன..
சப்பாத்தி கட்டையை ஈஸியா தூக்க
முடியும்ல…! ”
” அடிப்பாவி…! ”
( நமக்கு இன்னும் பயிற்சி தேவையோ..?!! )
அனுபவத்தை சொன்னவர்: http://gokulathilsuriyan.blogspot.com/
ஒரு முதலாளி அவருடைய மூத்த மற்றும் இளைய அதிகாரியுடன் ஒரு கூட்டத்திற்கு அந்த பூங்காவின் வழி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஒரு அற்புத விளக்கை கண்டு அதை தேய்த்தனர். நாம் அனைவரும் எதிர் பார்த்த படியே ஒரு பூதம் வந்தது. உங்களுக்கு மூன்று ஆசைகளை நான் நிறைவேற்றி தருவேன். கேளுங்கள் என்று சொன்னது.
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
மூத்த அதிகாரி நான் உடனே ஹவாயில் என்னுடைய சொந்த படகில் இருந்து மீன் பிடித்து பொழுது போக்க வேண்டும் என்று கேட்டார். உடனே அவர் மாயமாக மறைந்து அவருடைய விருப்ப படியே சொந்த படகில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
இளைய அதிகாரியோ நான் உடனே ஹன்ஷிகாவுடன் சந்திர மண்டலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டார். உடனே அவர் மாயமாக மறைந்து சந்திர மண்டலத்தில் விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
இதை பார்த்து கொண்டிருந்த முதலாளி உடனே கேட்டார்: அந்த இரண்டு முட்டாள்களும் உடனே இங்கே வர வேண்டும். உடனே இரு அதிகாரிகளும் அதே இடத்துக்கு திரும்ப வந்தனர்.
நீதி: எப்பொழுதுமே முதலாளியை பேச விடுங்கள் இல்லையேல் இப்படி தான் ஆகி விடும்
ஆங்கிலத்தில் ரசித்த இடம்: http://funnyclick.blogspot.com
Courtesy: Google
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று சொல்கிறோம் .கடவுளுக்கு எப்படி மரியாதை குறைந்துவிட்டதோ அது போலத்தான் குழந்தைகளையும் சரியாக பலர் பேணுவதில்லை .
இதில் நம் நாடு சற்று பரவாயில்லை .ஐரோப்பிய நாடுகளில் படங்களை பாருங்கள் விளங்கும்
தகர டப்பாவை விட கேவலமாய் தரையில்
அண்ணாச்சி எந்த இடத்துல கண்ணி போட்டீங்க ……பாவம்யா
ரெண்டையும் எந்தலையில கெட்டிட்டு இந்த சனியன் எங்க போயி தொலஞ்சது
ஒரு தள்ளுவண்டி ஒரு இழுவண்டி
குழந்தையை பற்றி கவனமில்லாமல் தனது மேட்டரில் கவனமாய்
முழு பலத்தோட இழுத்து பாத்தாச்சி ம்……ஹூம்
குரங்குக்கும் எனக்கும் வித்தியாசமே கிடையாதாம்மா
என்னத்த படம் புடிக்கிற
மாட்டை விட கேவலமா இழுக்கிறானே வலி தாங்க முடியலியே
பிள்ளையா டிராலியா
நாய்கூட முன்னாடி போகுது
கண்டு பரிதாபப்பட்ட இடம்: http://koodalbala.blogspot.com
ஒரு பெரிய செல்வந்தன் இருந்தான் .ஆனால் சரியானகஞ்சன்.யாருக்கும் ஐந்து பைசாகூட
உதவி செய்யமாட்டான் .
அவனிடம் ஏராளமான தங்க காசுகள் இருந்தன .அவற்றை வீட்டில் வைத்தால் யாரும் திருடிவிடக்கூடாது என்று எண்ணி ஊரின் அருகிலிருந்த அடர்ந்த வனப்பகுதியில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் ஓர் மரத்தடியில் குழி தோண்டி புதைத்து வைத்தான் .
அடிக்கடி புதைத்து வைத்த இடத்திற்கு சென்று அவை பத்திரமாக இருக்கின்றனவா என்பதை கவனித்துக்கொண்டான் .
அவனுக்கு இப்போது வயதாகிவிட்டது .அவனுடைய பிள்ளைகள் சரியான வருமானமில்லாமல் வறுமையில் இருந்தார்கள். அவர்களுக்கு கூட எந்த உதவியும் செய்யவில்லை .தங்க காசுகள் இருப்பதையும் தெரியப்படுத்தவில்லை .
அடிக்கடி இவன் காட்டிற்கு சென்று வருவதை சில திருடர்கள் கவனித்துவிட்டனர் .அவனை ரகசியமாக பின்தொடர்ந்து தங்க காசுகளின் இருப்பிடத்தை அறிந்து கொண்டனர் .அதே நாள் இரவில் அத்தனை தங்கத்தையும் சுருட்டிக்கொண்டு இடம் பெயர்ந்தனர் .
சிலநாள் கழித்து வந்த செல்வந்தன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவன் தங்கத்தை புதைக்கப்பட்டிருந்த குழி வெற்றாக இருந்தது .அழுது புலம்பினான் தரையில் படுத்து உருண்டான் .
அப்போது அந்த வழியாக ஒரு ரிஷி வந்தார் .அவரிடம் நிகழ்ந்தவற்றை கூறினான் .அவர் அவனுக்கு ஆறுதல் சொல்லி அடுத்தநாள் இதே இடத்திற்கு வா தங்கத்தை மீட்டு தருகிறேன் என்று கூறினார் .
இரவு முழுவதும் தூக்கமில்லாத அவன் விடிந்ததும் ரிஷி கூறிய இடத்திற்கு சென்றான் .ரிஷி அவன் கையில் ஒரு பொட்டலத்தை நீட்டி உனது தங்ககாசுகள் சரியாக இருக்கின்றனவா என்று சோதித்துக்கொள் என்றார் .
பொட்டலத்தை அவிழ்த்த செல்வந்தனுக்கு மேலும் அதிர்ச்சி அதில் வெறும் கற்கள்தான் இருந்தன .ரிஷியிடம் நான் புதைத்து வைத்திருந்தது இவைகளையல்ல தங்க காசுகள் என்றான் .
ரிஷி இவை நீ வைத்திருந்த தங்க காசுகளுக்கு இணையானவைதான் .நீ புதைத்து வைத்திருந்த தங்கம் யாருக்கும் பயன்படாமல் இருந்தது. அதே இடத்தில் இந்த கற்களை புதைத்து வைத்தாலும் அதே நிலைதான் .
உனக்குத்தான் ஒரு வேலை மிச்சம் கற்களை யாரும் எடுக்கமாட்டார்கள் என்பதால் அடிக்கடி வந்து சோதிக்க வேண்டியதில்லை .
செல்வந்தனுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை ஆனாலும் தான் செய்த தவறை உணர்ந்து விட்டான் .இருக்கின்ற சொத்துகளையாவது பிள்ளைகளுக்கு கொடுப்போம் என்று எண்ணி வீடு நோக்கி நடந்தான் .
ரசித்த இடம்: http://koodalbala.blogspot.com
.
.
.
.
.
.
.
.
.
.
.
கூகிள் பிளஸ் வந்தாலும் வந்திச்சி இந்த இணையம் பூராவும் இதே ரகளதான், இணைய உலகில் அசைக்க முடிய அரசன் என வர்ணிக்கும் கூகிள் ,பேஸ் புக்கின் வளர்சியால் சற்றே தடுமாறியது யாவரும் அறிந்ந்ததே ,தற்போது பேஸ் புக்கிற்கே ஆப்படிக்க வந்துவிட்டது கூகிள் பிளஸ் பேஸ் புக்கினைவிடை கூக்கிள் பிளஸ் சில் இந்த சிறப்பு அதிகம் அந்த சிறப்பு அதிகம் இந்த பகுதியினை இன்னும் கொஞ்சம் கவனத்தில் கொண்டால் இன்னும் சிலவாரங்களிலேயே பேஸ் புக்கிற்கு மூடுவிழா நடத்தலாம் என்றெல்லாம் தொழிநுட்பம் சார்ந்த பதிவெல்லாம் இல்லைங்கோ இது அதனை பற்றி பதிவுலகில் அதிகமான பதிவுகள் வந்துவிட்டது .இது சும்மா கூகிளின் வருகையினால் பேஸ் புக்கிற்கு கிடைக்கும் ஆப்புக்க்கள் சம்பந்தமாக இணையத்தில் உலாவிய நகைச்சுவை கலந்த கலக்கல் படங்கள் …
ரசித்த இடம்: http://qaruppan.blogspot.com
ஒரு குரு (நித்தி இல்லங்க) தன் சீடர்களை நோக்கி “ஏன் நாம் கோபப்படும் போது மிக சத்தமாக பேசுகிறோம்?” என்று கேட்டார். பலரும் பல விதமான பதில்களை கூறினார்கள். ஆனால் ஒன்றும் குருவை திருப்தி படுத்த வில்லை. கடைசியில் அவரே “இருவர் கோபமாக இருக்கும் போது அவர்களின் மனங்கள் தூரமாகின்றன. அதனாலே தான் நாம் சத்தமாக பேசுகிறோம்” என்று விளக்கினார். மேலும் இருவர் காதலிக்கும் போது அவர்கள் மனங்களுக்கு இடையில் உள்ள தூரம் குறைவதால் தான் மிக மெதுவாக பேசிக்கொள்கிறார்கள். அவர்களின் நெருக்கம் மேலும் அதிகரிக்கும் போது பேச கூட தேவை இல்லாமல் போகிறது என்றும் விளக்கினார்.
ஆங்கிலத்தில் ரசித்த இடம்: http://funnyclick.blogspot.com
தள்ளாத வயதுடைய பாட்டி ஒருத்தி காட்டின் வழியாக விறகுக்கட்டை சுமந்தபடி காலாற நடந்து வந்து கொண்டிருந்தாள் .
உச்சி வெயிலின் தாக்கத்தால் நாக்கு வறண்டது,கரடு முரடான பாதையில் கால்கள் தளர்ந்தன .மேற்கொண்டு ஒரு அடி கூட நகர முடியாததால் விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.
வெறுப்படைந்த பாட்டி புலம்ப ஆரம்பித்தாள்.”கடவுளே ஏம்பா என்னிய இப்படி சோதிக்கிற ,அய்யா எமதர்ம ராசா இந்த கட்டைய இப்பவே எடுத்துட்டு போயிட்டியன்னா நல்லா இருப்பே” .
உடனே எமன் பாட்டி முன் தோன்றினான் .பாட்டியின் கழுத்தில் பாசக்கயிறை வீசினான் .”பாட்டி கெளம்பு” .
பாட்டி “அய்யா நீதான் எம தர்ம ராசாவா”
“நானேதான் “எமன்
“சரி இப்போ எதுக்கு இந்த கயிற என்கழுத்துல வீசுன ”
குழப்பமடைந்த எமன் “என்ன பாட்டி சொல்ற நீதானே உன்னோட உயிரை எடுக்க சொல்லி என்னிய கூப்பிட்ட ”
“நான் உயிரை எடுக்க சொன்னேனா ? இந்த விறகு கட்டை
வீடு வரைக்கும் எடுத்து வர சொல்லித்தான் உன்னை கூப்பிட்டேன் “குண்டை தூக்கி போட்டாள் பாட்டி
“என்ன பாட்டி குழப்புகிறாய்”
“நான் குழப்பல ராசா நீதான் குழம்பிட்டே ..நீ உண்மையிலே தர்ம ராசாவா இருந்தா இந்த விறகு கட்டை என்னோட வீட்டுல கொண்டு சேர்த்திடு ”
வேறு வழி இல்லாத எமன் விறகுக்கட்டுடன் பாட்டி வீட்டை நோக்கி நடந்தான்
ரசித்த இடம்: http://koodalbala.blogspot.com
ரசித்த இடம்: http://koodalbala.blogspot.com
நேற்று இரவு நான் வீட்டிற்க்கு சென்ற போது நம்ம தங்கமணி ரொம்ப சூடா இருந்தாங்க. சரி சமாதானபடுத்தலாமேன்னு நெனைச்சு எங்கியாவது வெளிய போகலாமான்னு கேட்டேனுங்க (நமக்கு நாக்கில சனி! என்ன பண்றது). தங்கமணியும் ரொம்ப சந்தோசமா ஏதாவது விலை உயர்ந்த பொருள் விக்கிற எடத்துக்கு கூட்டிட்டு போங்கன்னு சொன்னாங்க. சரின்னு சொல்லி அவங்கள பெட்ரோல் பல்க் கூட்டிட்டு போனேனுங்க. இதுல ஏதாவது தப்பு இருக்கா சொல்லுங்க? இன்னும் ரொம்ப சூடா ஆகி வீட்டுக்கு நடந்தே போய்ட்டாங்க.
பின்குறிப்பு: வீட்டுக்கு போன நான் வராந்தால படுத்துருந்த கதை எல்லாம் அனாவசியம் அப்படிங்கறதுனால சொல்லலீங்க
நீங்கள் உண்ணும் உணவாக நீங்கள் மாறினால் இப்படி இருக்குமோ?
படங்கள் உதவி: யாஹூ க்ரூப்ஸ்
பிஸ்கி 3: இது அவுங்க சுட்ட இடம் http://cool.cugiz.com
பிஸ்கி 4: அவுங்க சுட்ட இடம் எல்லாமே நானே சொல்ல முடியாதுல்ல …….போய் நீங்கலே கேளுங்க டும்கி பசங்களா.
ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க???
விடை கீழே….
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நீங்க ஹாப்பி பெர்த்டே பாடுனிங்கண்ணா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்….. நீங்க எஸ்கேப்….. இப்ப நான் எஸ்கேப்…
அடிப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இடம்: எறும்பு
கணவனும் ஸ்ப்ளிட் ஏசியும் ஒன்று தான். வெளிய எவ்வளவு சவுண்ட் விட்டாலும் வீட்டுல சைலன்ட் மோடு தான்.
கணவன் என்பவன் குடும்பத்தில் தலை மாதிரி; மனைவி என்பவள் கழுத்து மாதிரி; கழுத்து தான் தலை எந்த பக்கம் பாக்கணும்னு முடிவு செய்யும்.
ஒவ்வொரு ஆணும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். சந்தோசம் மட்டுமே வாழ்க்கையா என்ன?
கல்யாணமாகாத ஆண்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். அவர்கள் மட்டும் சந்தோசமாக இருப்பது நியாயமா? – ஆஸ்கார் வைல்ட்
பணத்திற்காக கல்யாணம் செய்து கொள்ளாதிர்கள். எளிதாக பணம் கடன் வாங்கி கொள்ளலாம்.
தீவிரவாதத்தை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு கலியாணம் ஆகி ரெண்டு வருடம் ஆச்சு. – சாம் கினிசன்
காதலுக்கு கண் பார்வை இல்லை. கலியாணம் தான் கண் பார்வை தருகிறது.
ஒருவன் தன மனைவிக்காக கார் கதவை திறந்து விடுகிறான் என்றால் ரெண்டில் எதோ ஒன்று புதுசு: கார் இல்லை மனைவி
நான் என் மனைவியின் கரங்களை எப்போதும் பற்றி கொண்டே இருக்கிறேன். இல்லை என்றால் ஷாப்பிங் போய்டுவா
என் நண்பன் ஒருவன் திருமண மோதிரம் சின்ன கை விலங்கு போல இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுக்கிறான். #கிலவர் பாய்
உள்ள இறங்கு மாப்ள ஒரு குளியல் போட்டுறலாம்
நான் இப்பத்தான் lkg ல சேந்திருக்கேன்
என்னடா மொறைப்பு
எப்படி ? கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்கேனா ?
ச்சீ …….ஆசைய பாரு
மாப்ள நீ இனிமேல் எப்படி வேணும்னாலும் திட்டிக்க
ஹீரோவா ஆகணும்ன்னா நம்மள மாதிரி பெர்சனாலிட்டி வேணும்
இந்த பல்ல பாத்துதான் பல பொண்ணுங்க மயங்கியிருக்காங்க
ஏய் …நீ ரொம்ப அழுக்கா இருக்க
பான்பராக் கரைதான் வேற ஒண்ணுமில்ல
நாக்கை நீட்ட சொல்றான் எப்படின்றத சொல்லி குடுக்க மாட்டேன்றான்
இந்த போட்டோசுக்கும் ஹன்சிகாவுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறீங்களா? எனக்கும் தெரியலீங்க. நான் இந்த பதிவ சுட்ட கூடல் பாலாவுக்கும் தெரியலன்னு நெனைக்கிறேன். தெரிஞ்ச சொல்லிருப்பாரு.
ஒரு பாதிரியார் வேகமாக கார் ஒட்டிய பொழுது போலிசால் நிறுத்தப்பட்டார். அருகில் வந்த காவலருக்கு ஒயின் வாடை நன்றாகவே தெரிந்ததால் ‘குடித்து விட்டு வண்டி ஓட்டக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமல்லவா?’ என்று கேட்டார். அதற்க்கு பாதிரியார் ‘நான் வெறும் தண்ணீர் தான் குடித்தேன்’ என்று பதில் சொன்னார். பின் எப்படி ஒயின் வாடை வருகிறது என்று காவலர் கேட்ட போது பாதிரியார் சொன்ன பதில் என்ன தெரியுமா?
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
“Good Lord! He’s done it again!”
சரித்திர புகழ்ப்பெற்ற இந்த இடத்தை பலரும் நேரில் பார்த்திருக்கலாம்…
அல்லது என்னை போல படங்களில் மட்டும் பார்த்து மகிழ்ந்திருக்கலாம்..
எதுவானால் என்ன??
இந்த படத்தை பார்த்ததும் தெரிந்தவர்கள் இது மவுண்ட் ரஷ்மோர் என்று சொல்லிவிடுவீர்கள் என்பது எனக்கும் தெரியும்..
இந்த சிற்ப்பங்களில் இருப்பவர்கள் அமெரிக்கா ஜனாதிபதிகளான ஜார்ஜ் வாஷிங்டன், தாம்ஸ் ஜெஃப்பர்சன், ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரஹாம் லிங்கன்.
அமைந்துள்ள இடம் : டக்கோட்டா, அமெரிக்கா
பப்பரப்பளவு : 1247 ஏக்கர்
இதுவரை பார்வையாளர்கள் : 27 லட்சம் ( 2006 கணக்கு)
இந்த சிற்ப்பங்கள் அமெரிக்காவின் 150 வது சுதந்திரத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது..
எதுக்கு இந்த புள்ளி விவரம்? அதுவும் நம்ம விசயகாந்துக்கு போட்டியா அப்படின்னு நினைக்குறீங்களா?? காரனம் இருக்கு..
எல்லாரும் முன்பக்கத்தை மட்டுமே பார்த்து அதையும் காமிராவில் பதிவு செய்துக்கொள்வார்கள்.. பின்பகுதியை யாருமே பார்த்திருக்கமாட்டார்கள்.
இது வரை முன்பக்கத்தை மட்டுமே பார்த்தவர்களுக்கு இப்பொழுது பின்பக்கத்தை பார்க்கும் அறிய , மற்றும் பொன்னான வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது..
அதானால் அந்த பின்பக்கத்தை உங்களுக்காக இதோ…
இப்போ பார்க்கப்போவது இந்த இடத்தின் பின்பகுதியை…
வாருங்கள் நன்பர்களே…
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^^
^
^
^
^
இன்னும் கீழே
^
^^^^
^^
^^^
^
^^^
^
^
^
^
^^^^^
^
^
^
இன்னும் கொஞ்சம் கீழே
^
^
^
^^^^^
^
^
^
இது தான் அந்த பின்பகுதி..
நல்லா பார்த்துக்கோங்க.. அப்புறம் இந்த மாதிரி எல்லாம் உங்களால பார்க்க முடியாது..
என்ன தான் திட்டினாலும் நாங்க எல்லாம் திருந்தமாட்டோம்…
டிஸ்கி : நகைச்சுவைக்காக மட்டுமே..
( இங்கியே நன்றியும் சொல்லிக்கிறேன் .. வேற யாருக்கு ??/ இத மின்னஞ்சலில் அனுப்பிய புண்ணியவானுக்கும் அத படிச்சுட்டு நான் படிக்க பதிவிட்ட நண்பர் அணிமா க்கும் தான் )
காதல்…
a–>b–>c–>a
முக்கோணக் காதல்
a–>b/b–>a
ஒரு தலைக் காதல்
a<–>b
இருபக்க காதல்
a<–>b–>c
?
?
?
வேற என்ன கள்ளக் காதல்
____________________________________________
சர்தார்…
USA : நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்
RUSSIA : நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்
நம்ம சர்தார் : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்
USA : சான்சே இல்ல , ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது
நம்ம சர்தார் : கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா..
____________________________________________
பரீட்சைக்கு பிறகு…
மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற
மாணவன் 2 : thanks to vaasan eye care !!!
பிக் பாஸ்: இந்த ஆண்டு உங்கள் செயல்திறன், நன்றாக இருந்தது. எனவே, இந்த ஆண்டுக்கான உங்கள் மதிப்பீடு: “சராசரி”
குமார்: என்ன? ‘சராசரி’ எப்படி வந்தது?
பிக் பாஸ்: … ம்ம்ம் ஏனென்றால் … uhh … உங்களுக்கு டொமைன் பற்றிய அறிவு குறைவாக இருந்தது
குமார்: ஆனால் கடந்த ஆண்டு நான் ஒரு டொமைன் நிபுணர் ஆக இருக்கிறேன் என்று தானே நீங்கள் என்னை இந்த ப்ரொஜெக்டில் டொமைன் ஆலோசகராக நியமித்தீர்கள்
பிக் பாஸ்: .. ம்ம்ம் , .. uhh … உங்கள் டொமைன் அறிவு இந்த ஆண்டு குறைந்து இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
குமார்: என்ன???
பிக் பாஸ்: ஆமாம், நான் நீங்கள் purchase டொமைனில் அறிவை வளர்த்து கொள்ள வில்லை.
குமார்: அது சரி தான். ஆனால் manufacturing டொமைனில் இருக்கும் நான் ஏன் purchase டொமைனில் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்?
பிக் பாஸ்: இது தான் உங்களிடம் எனக்கு பிடிக்காத அடுத்தது. எல்லாவற்றிற்கும் எதாவாது பதில் சொல்லி கொண்டே இருக்கீங்க.
குமார்: அப்படியா? (குழப்பமாக தலையை சொறிகிறார்)
பிக் பாஸ்: அடுத்து, நீங்கள் உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்த வேண்டும்.
குமார்: என்ன? தொடர்பு திறன் மேம்படுத்த வேண்டுமா? நான் “வர்த்தகம் தொடர்பாடல்” குறித்து பயிற்சி அளித்த பொது நீங்கள் கூட அமர்ந்து குறிப்பு எடுத்தீர்களே! மறந்து விடீர்கள?
பிக் பாஸ்: ஓ அது? Errr … சரி .. அதாவது, நீங்கள் உங்கள் சமூக நடைமுறைக்கேற்ற உடன்பாடான தொடர்பாடல் மேம்படுத்த வேண்டும்.
குமார்: அப்படியா? அது என்ன நான் கேள்வி படாத ஒன்றாக இருக்கிறதே!
பிக் பாஸ்: பார்த்தீர்களா? இதை தான் நான் நீங்கள் இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று சொன்னேன்.
குமார்: மனதுக்குள் (அட ங்கோயாள!)
பிக் பாஸ்: அடுத்து, நீங்கள் உங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும் திறன்களை கூர் தீட்ட வேண்டும். நீங்கள் எடுத்து கொடுத்தவர்கள் எல்லாம் இரண்டு மாதத்திலே ஓடி விட்டார்கள்.
குமார்: சார், அது என் தவறு அல்ல. நீங்கள் அவர்கள் பின்னால் உட்க்கார்ந்து வேலை செய்வதை பார்ப்பேன் என்று சொன்னதால் தான் அவர்கள் அடுத்த நாளே ராஜினாமா செய்தார்கள். இன்னும் இரண்டொருவர் தற்கொலை கூட செய்ய முயற்சித்தது காப்பாற்றப்பட்டனர்.
பிக் பாஸ்: (அதிர்ச்சியை சமாளித்தவாறே ) ம்ம் … எப்படியோ, நான் உனக்கு ஒரு நல்ல மதிப்பீடு அளிக்கவே விரும்பினேன். ஆனால் நம் அலுவலக விதிகள் படி உனக்கு ‘சராசரி’ மட்டுமே கொடுக்க முடிந்தது.
குமார்: அது ஏன் என்று எனக்கு விளக்க முடியமா?
பிக் பாஸ்: அது ஒரு சிக்கலான செயல்முறை தான். அதை நீ அறிந்து கொள்ள விரும்ப மாட்டாய் என நெனைக்கிறேன்.
குமார்: இல்லை சார். நான் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்.
பிக் பாஸ்: சரி. நீ கேட்டதால் உனக்கு மட்டும் சொல்கிறேன். நாங்கள் எல்லாரும் ஒரு அறையில் கூடுவோம். அனைவரின் பெயரை துண்டு காகிதங்களில் எழுதி மேலே தூக்கி எறிவோம். தரையில் விழும் பெயர்களுக்கு “சராசரி” கொடுப்போம். மேசை மீது விழும் பெயர்களுக்கு ‘நல்லது’ கொடுப்போம். எங்களால் பிடிக்க முடிந்த பெயர்களுக்கு ‘மிக சிறந்தது’ கொடுப்போம். பேனில் சிக்கி கொள்ளும் பெயர்களுக்கு ‘சிறந்தது’ கொடுப்போம்.
குமார்: (கண்களை உருட்டி கொண்டே) யாருக்கு “மோசம்” கொடுப்பீர்கள்?
பிக் பாஸ்: நாங்கள் பெயர் எழுத மறந்தவர்களுக்கு தான்.
குமார்: (கடுப்புடன்) எப்படி சார் பேனில் துண்டு காகிதம் சிக்கும்?
பிக் பாஸ்: (பதற்றத்துடன்) இப்போது நீ எங்கள் 20 ஆண்டு கால நடை முறை பற்றி கேள்வி கேட்கிறாய். இது உனக்கு நல்லதில்லை!
குமார்: (மயக்கம் போட்டு விழுகிறார்)
இந்த honeymoon படங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டுமே! மற்றவர்கள் மன்னிச்சு மன்னிச்சு
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
—
டிஸ்கி: என்ன டைட்டில்ல 18 + போட்டுருக்குன்னு பாக்கறீங்களா? அது மாசத்தை சொன்னேனுங்க
பார்பதற்கு விக்கிபீடியா கலைக்களஞ்சியம் போலவே தோற்றம் அளிக்கும் தளம்,முற்றிலும் தவறான தகவல்களையே கொடுக்கும் தளம்,காமெடிக்காக மட்டுமே
அந்த தளத்தில் google என்று டைப்பி தேடினேன்
கிடைத்தது
Did you mean: Evil Empire?
No standard web pages containing all your search terms were found.
Your search – Rat – did not match any documents.
Suggestions:
அந்த தளத்திற்கு செல்ல சொடுக்கவும் இங்கே
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்லாவே இருக்கும்.
நெஜமாவே பீச்ல ரூம் போட்டு உக்காந்து பண்ணிருக்காங்கபா!
வணக்கமுங்க. இன்னைக்கு காலைல நம்ம ரங்கமணிய திட்டி போட்டேனுங்க (அய்யே நம்புப்பா) . பின்ன என்னங்க, மனுஷன் காலையில எழுந்துரிச்சு ஒரு வா காப்பித்தண்ணி கெடைக்குமான்னு பாக்குற நேரத்துல ஒரு மணி நேரமா தலை வாரிக்கிட்டு இருந்தா எப்படி?(நீ ஏன் இவ்வளவு லேட்டா எழுந்தேன்னெல்லாம் கேக்கபடாது!). அந்த கோபத்திலே சாப்பிடாம ஆபீஸ் வந்துட்டேன் (பின்னே சாப்பாடு தர மாட்டேன்னு சொன்னத உங்க கிட்டல்லாம் சொல்லவா முடியும்?). பசியோட ஆபீஸ்ல வந்து உக்காந்தா இந்த படங்கள் வந்துச்சு. அப்ப தான் உக்காந்து யோசிச்சேன் (நாங்களும் யோசிப்போம்ல); கொஞ்சூண்டு முடி இருக்கிற தங்க மணிக்கே இவ்வளவு நேரம் ஆச்சுன்னா இவங்களுக்கு எவ்வளோவ் நேரம் ஆயிருக்கும்னு?
20௦ tiger ஒன்றாக இருப்பதை பார்த்திருக்கீர்களா? மிகவும் அரிதான புகைப்படம் இது
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சரி சரி உங்களை மாதிரி தான் நானும் பீல் பண்ணேன் முதல்ல பாத்தப்போ! யாரும் பாக்காத மாதிரி தொடச்சுட்டு வரலை? அது மாதிரி எழுந்து போங்க!
ஒரு நிறுவனம் பிடித்த உடை தினத்தை வெள்ளி என்று தீர்மானிக்கிறது. அவர்கள் அதை அறிவிக்க ஒரு கடிதம் வெளியிட்டனர்.
Memo 1: Effective this week, the company is adopting Fridays as Casual Day. Employees are free to dress in the casual attire of their choice.
Week 3
Memo 2: Spandex and leather micro-miniskirts are not appropriate attire for Casual Day.
Week 6
Memo 3: Casual Day refers to dress only, not attitude.
Memo 4: A seminar on how to dress for Casual Day will be held at 4 p.m. Friday in the cafeteria. A fashion show will follow. Attendance is mandatory.
Week 9
Memo No. 5: As an outgrowth of Friday’s seminar, a 14-member Casual Day Task Force has been appointed to prepare guidelines for proper casual-day dress.
Week 14
Memo 6: The Casual Day Task Force has distributed a 30-page manual entitled “Relaxing Dress Without Relaxing Company Standards.” A copy has been distributed to every employee.
Week 18
Memo 7: Company is providing psychological counseling for employees who may be having difficulty adjusting to Casual Day.
Week 20
Memo 8: We are no longer able to effectively support or manage Casual Day. Casual Day is discontinued
ஃபைட்டர் ஏர்-க்ராஃப்ட் சுத்தி பறக்கும்.. ரவுண்ட் அடிக்கும் (ரெண்டும் சேம்?).. சில சமயம் அது போகுற ஸ்பீபீபீபீபீடுல தலைகீழாவும் பறக்கும். அப்படி ஸ்பீபீபீபீபீடாபறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம். கண்ட்ரோல் ரூமுலேருந்து ‘ஏர்-க்ராஃப்ட்’ தெரியாது. எப்படி சரியா பதில் சொல்ல முடியும் ? யோசிங்க..
—
—
—
—
—
—
—
—
—
கண்ட்ரோல் ரூம்லேருந்து, பிளேன ‘லெஃப்ட்’ல திரும்பச் சொல்லிட்டு மானிட்டர்ல ப்ளேன் (புள்ளியாத்தான் தெரியும்) ‘லெஃப்ட்’ல திரும்பினா, ப்ளேன் நேர பறக்குது.. ஆனா ‘ரைட்’ சைடுல திரும்பினா, தலைகீழ பறக்குதுன்னு சொல்லுவாங்களாம். இந்த தகவலை ‘ஏர்-ஃபோர்ஸ் ராடார் கண்ட்ரோல்’ யூனிட்ல வேலை செஞ்ச நண்பர் ஒருத்தர் எனக்குச் சொன்னார்.
கேட்டு சொன்னது நண்பர் மாதவன்
ஒரு சிறிய நகரத்தில் ராமன் புதிய பார் ஒன்றை திறக்க ஏற்பாடுகள் செய்து வந்தான். ஆனால் அந்த பார் கோயிலுக்கு நேர் எதிரில் இருந்ததால் அந்த கோயிலின் நிர்வாகமும் பக்தர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதற்காக அவர்கள் அதிகாரிகளை பார்த்து மனுக்கொடுப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என அவர்களால் முடிந்ததை செய்து வந்தனர்.
ஆனால் ராமனோ அதனை பற்றி கவலை படாமல் ஏற்ப்பாடுகளை தொடர்ந்து வந்தான். இப்படி இருக்கும் பொது ஒரு நாள் இரவு நல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்பொழுது இடி தாக்கி அந்த பார் கட்டடம் எரிந்து மண்ணோடு மண்ணாக ஆகி விட்டது.
இதனால் கடுப்பாகி விட்ட ராமன் நீதி மன்றத்தில் கோயில் நிர்வாகமும் அதன் பக்தர்களும் செய்த பிரார்த்தனைகள் தான் தன் பார் கட்டடம் ஏறிய காரணம் என்றும் அதனால் அதற்கு உரிய நஷ்ட ஈடு வாங்கி தர வேண்டும் என்றும் முறையிட்டான். கோயில் நிர்வாகமும் அதன் பக்தர்களும் கூட்டாக அதனை மறுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்படி கருத்து சொன்னார்: இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஒரு பக்கம். ஆனால் விசித்திரம் என்னவென்றால் கடவுள் நம்பிக்கை இல்லாத ராமன் பிரார்த்தனைகள் தான் இதற்கு காரணம் என்கிறான். கடவுள் நம்பிக்கையுள்ள கோயில் நிர்வாகமும் அதன் பக்தர்களும் இல்லை என்கின்றனர்.
Mr.பிரபாகரன்.. இவர் தான்
எங்க +1 Maths மாஸ்டர்..
எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..
( இல்லன்னா.. நாங்க Maths-ல
Centum எடுத்து., அதனால Cut-Off-ல
200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,
MBBS படிச்சி, MD முடிச்சி., FRCS
படிக்க லண்டன் போயி, அப்புறம்
வெளி நாட்லயே செட்டில் ஆகி……
உஸ்ஸப்பா.. சொல்லும் போதே
இப்படி மூச்சு வாங்குதே..!! )
ஒரு தடவை கிளாஸ்ல அவர்
” பிதோகரஸ் தியரம் ” எடுத்துட்டு
இருந்தாரு..
அப்ப கிளாஸ்ல இருக்குற மொத்த
36 பேர்ல 34 பயலுக மனசுக்குள்ள
அந்த ” பிதோகரஸ்சை ” கண்டபடி
திட்டிட்டு இருந்தானுக..!
ம்ம்…அன்னிக்கு ” பிதோகரஸ்சை ”
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்..
( அரை தூக்கத்துல இருக்கும் போது
எங்களால யாரையும் திட்ட முடியாது.
ஹி., ஹி., ஹி.! )
அப்ப திடீர்னு Mr.பிரபாகரன்
என் பக்கத்துல இருந்த ஆனந்த்-ஐ
எழுப்பி….
Board-ல வரைஞ்சி வெச்சிருந்த
ஒரு முக்கோணத்தை காட்டி..
” இதுல ” C “-யோட Value-ஐ
எப்படி கண்டுபிடிப்ப..? அந்த
Formula சொல்லு..! ”
அவன் திரு திருன்னு முழிச்சான்..
” என்னடா.. முழிக்கிற..? ”
” சார் அது வந்து.. ”
” சரி ஒரு பேச்சுக்கு இந்த முக்கோணத்துல
A = 3 , B = 4-னு வெச்சுக்க… அப்ப ” C “-ன்
Value என்ன..? ”
அவன் ” டக்னு ” Answer சொல்லிட்டான்..
” C = 7 சார்..! ”
” என்னாது 7-ஆ..? ஏழு எப்படிடா வரும்.?
ஏழு எப்படி வரும்.? கிளாஸ்ல ஒழுங்கா
கவனிச்சா தானேன்னு ” ஆனந்த்-ஐ
அடி பின்னி எடுத்துட்டாரு..
( நல்லவேளை நான் எஸ்கேப்..! )
கிளாஸ் முடிச்சப்புறம்..
ஆனந்த் என்கிட்ட ரொம்ப பீல்
பண்ணி சொன்னான்..
” ஏன்டா.. எனக்கொரு நியாயம்..
அவருக்கு ஒரு நியாயமாடா..? ”
” என்றா சொல்ற..? ”
” பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் ” C = 7 “-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! ”
” அட ஆமா.. இது கூட லாஜிக்கா தானே
இருக்கு..?!! ”
( என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..?!! )
அனுபவத்தை சொன்னது: http://gokulathilsuriyan.blogspot.com
வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா… இங்கே இருந்து ஒட்டகம் மேய்க்கிறதுக்கு ஓசில போக வேண்டியது..சிங்கப்பூர் போறேன்..சிலுக்குபட்டி போறேன்னு அங்க போயி குப்ப கூட்ட வேண்டியது.. ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்… ஒன்ற டாலர் பஸ் காச மிச்சம் புடிக்க நடந்து போற நாதாரிங்க… பென்ஸ் காருகிட்ட நிக்கிற மாதிரி போட்டோ போடறான்!
சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!
இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. இது மெயிலில் வந்தது தமிழில் அளித்திருக்கிறோம் அவ்வளவுதான்!
ஏண்டா உங்க கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா? உங்களுக்கு வாழ்க்கையில என்னடா லட்சியம்? அடுத்தவங்களை பொறாமைப்பட வைக்கிறதா? அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க? என்ன காரணம்? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்!
ஒத்துக்கிறோம், நீங்கெல்லாம் வெளிநாட்டுக்கு போய்ட்டீங்க. உங்க ஒன்னுவிட்ட இரண்டுவிட்ட சித்தப்பா, மாமால்லாம் உங்களை நினைச்சி பெருமைப்படுவாங்க. எங்களுக்கும் சந்தோசம்தான். அதுக்காகதானே ஏர்போட் வந்து டாடாலாம் காமிச்சு வழியனுப்பி வச்சோம். ஆனா உங்க போட்டோக்களை வச்சி எங்களை ஏண்டா சாவடிக்கிறீங்க?
சரி, ஒத்துக்கிறோம், நாங்க அந்த இடத்தையெல்லாம் மேப்ல மட்டும்தான் பார்த்துருக்கோம், நிஜ வாழ்க்கையில இல்ல. அவ்வளவுதானே? அதுக்காக ஏன், நீங்க ஒருநாள் விட்டு ஒரு நாள் புது படத்தை போடுறீங்க. உங்களுக்கு என்னதான் வேணும்? உங்களுக்கு தேவை, நாங்கெல்லாம் ‘like’-ஐ அழுத்திட்டு “வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு” இப்படி கமெண்ட் போடணும், அதானே? நீங்க ரகசியமா ஒவ்வொரு நிமிசமும் எல்லா கமெண்டையும் பார்ப்பீங்க. நாலு நாள் கழிச்சு “எல்லோருக்கும் நன்றி!” அப்படின்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டு போயிடுவீங்க!
சரி, அதைக் கூட ஒத்துக்கலாம். நீங்க நிறைய காசு செலவு பண்ணி அங்க போயிருக்கீங்க, அதனால உங்களை எல்லோரும் பாராட்டனும்னு நினைக்கிறீங்க. புரியுது. ஆனா ஏண்டா செடி, மரம், நாய், பூனைன்னு இதையெல்லாம் புரொஃபைல் பிக்சர்ல போடுறீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? லூசுப்பசங்களா!
அப்புறம் இன்னொரு ரகம் இருக்கு. அதாவது அவங்க படத்துக்கு பதிலா அவங்க குழந்தை படத்தை போடுறது. இந்த மாதிரி ஆளுங்களை பத்தி நாங்க பேசக் கூட விரும்பலை.
எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? மத்தவங்க உங்களை பார்த்து “ஆஹா. என்ன அழகு! என்ன அழகு!” இப்படி நினைக்கனும், அப்புறம் உங்களுக்கு friend request அனுப்பனும். ம்.. அப்படித்தானே? எங்களுக்குதானே தெரியும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு!.
நீங்க இங்கயும் ஒன்னும் செஞ்சதில்ல. கல்யாணம் ஆகி அங்க போயிட்டு, அங்கேயும் ஒன்னும் செய்யாமதான் இருக்கீங்க. இதில பெருமைப்பட என்ன இருக்கு? இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!”
சமைச்சீங்களா? உண்மையாவா? இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…”
நீங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே? இந்த மாதிரி விசயமெல்லாம் அநாகரிகம்னும் பொது இடத்தில இப்படியெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது? நீங்க இந்தியாவை விட்டுட்டு போனா உடனே எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?
அப்புறம் நீங்க சமைச்ச சாப்பாட்டோட படத்தை மிக ருசியானது எச்சில் ஊறவைக்கும்ன்னு தலைப்போட வேற போடறது…சாப்பாட்டு பார்த்தால்ல தெரியும்.. எச்சில் ஊறுமா, வாந்தி வருமான்னு! இதில வெளிநாட்டுக்காரங்க யாராவது வந்து அது எப்படி செய்யறதுன்னு கேக்கறது! கொய்யால, நீ இண்டர்நெட்டுதானே யூஸ் பண்ணுறே? கூகுள்ள தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.
சரி எனக்கு இப்ப ஒன்னு சொல்லுங்க, நீங்க இந்தியாவில இருந்தப்ப ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கீங்களா? உங்க அண்ணனும் நல்ல பையன் தான். அவனுக்காக ஒரு நாளாவது சமைச்சிருக்கீங்களா? யோவ் கணவன்களா, நாங்க உங்களையும்தாம்பா கேட்கிறோம், நீங்க இங்க இருந்தப்ப, ஒருதடவையாவது, உங்கம்மா சாப்பாடு நல்லாயிருக்குனு பாராட்டியிருக்கீங்களா?
கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த மாதிரி லூசுத்தனமான விளையாட்டுகளை விளையாண்டுகிட்டு வருசத்துக்கு 365 நாளும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க. ஆனா சொல்வீங்க, “நாங்க கிங் கோல்ஸ் ஓரியண்டல் பேலசின் 35வது மாடியில் சூப்பர் டின்னர் சாப்பிட்டோம். செம சைனீஸ் ஃபுட்!” ஏம்பா அது வெறும் சைனீஸ் ஃபுட் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடறீங்க? இந்தியா சீனாவுக்கு பக்கத்திலதானே இருக்கு.
அப்படின்னா உண்மையா என்ன நடக்குதுனு உங்களுக்கு தெரியலன்னா, இப்ப சொல்றோம் கேட்டுகுங்க. அங்க யாருமே சந்தோசமா இல்ல. நீங்க எவ்வளவு சம்பாதிச்சாலும், சந்தோசமா இருக்க போறதில்ல. வெஸ்டர்ன் டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டு, “நாம ஏன் இங்க வந்தோம்?”னு யோசிச்சிகிட்டு மட்டும்தான் இருப்பீங்க.
நாங்க இந்த உண்மையெல்லாம் சொன்னேன்னா, உடனே நீங்க உங்க ஐ- புரோடக்டெல்லாம் என்கிட்ட காமிப்பீங்க. இதப்பாருங்க, ஐபேட்2-லாம் இங்கேயும் கிடைக்குது, தெரியுமா? அதனால கம்முனு நாங்க சொல்றத கேளுங்க. உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.
இப்ப நீங்க நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம், எங்களுக்கெல்லாம் பொறாமை, அதான் இப்படியெல்லாம் பேசுறோம்னு, இல்லையா? இதப்பாருங்க, நாங்களும் அங்கெயெல்லாம் போய் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாலும் இப்படித்தான் பேசுவோம். உங்களால என்ன செய்ய முடியும்?
இப்படிக்கு
உள்ளூர் டீக்கடை பெஞ்சு
..
நன்றி:
மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை
டீக்கடையில் புலம்பியதை ஒட்டுக்கேட்ட இடம்: http://terrorkummi.blogspot.com
ஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.
==============================
E.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.
==============================
அபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வரி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.
==============================
செல்வா: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.
அப்பா: அவங்க யாருன்னு பாத்தியா?
செல்வா: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.
==============================
வக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை?
பெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..
==============================
நல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.
==============================
மூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.
==============================
வந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.
==============================
அவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.
==============================
எங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.
==============================
உடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.
==============================
ஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.
==============================
மொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா?
==============================
எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.
==============================
உடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.
==============================
ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது?
==============================
திருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு
==============================
ஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.
==============================
உலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.
==============================
சமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்
==============================
இரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை – இரண்டு மாமியார்கள்.
==============================
கணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை?
மனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.
==============================
நண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா?
நண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.
==============================
தூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.
==============================
குழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்
==============================
டெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.
======================================
ஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:
அய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள் பத்திரிகையில் வந்த “விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்” என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.
பின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.
==============================
நம்ம மங்குனி போன வாரம் புதுசா
ஒரு கம்ப்யூட்டர் வாங்கினாராம்..
அதுல ஏகப்பட்ட பிரச்னைன்னு
அந்த கம்பெனிக்கு ஒரு லெட்டர்
எழுதியிருக்காரு பாருங்க..
சான்ஸே இல்ல
மங்கு ஒரு சிறந்த அறிவாளின்னு (?!)
நமக்கெல்லாம் தெரியும்.. அது
இனிமே உலகத்துக்கே தெரிய போகுது
இந்த லெட்டர் மூலமா…
To
&%^$#@&*^%$#- HCL,
( மங்கு அந்த கம்பெனிக்காரனை
கெட்ட வார்த்தையில திட்டினதை
எல்லாம் நாம எடிட் பண்ணிடலாம்..
நமக்கு ஒரு 5 பக்கமாவது மிச்சமாகும்.. )
போன வாரம் நான் வாங்கின
கம்ப்யூட்டர்ல ஏகப்பட்ட தப்பு இருக்கு..
1. என் Keyboard-ல ABCD எல்லாம்
வரிசையா இல்லாம இடம்
மாறி மாறி இருக்கு..
2. என் Key Board-ல Control Key
இருக்கு. ஆனா எத்தனை தடவை
அழுத்தினாலும் என் Wife-ஐ என்னால
Control பண்ணவே முடியல.
3. தப்பு பண்ணினப்ப Wife-கிட்ட
மாட்டிக்காம இருக்க Escape Key-ஐ
அழுத்தி பார்த்தேன்.. அதுவும் சரியா
வேலை செய்யல.. தர்ம அடி..
4. என் Key Board-ல ரெண்டு
‘ Shift ‘ Keys இருக்கு. அதுல
எது Day Shift..? எது Night Shift..?
5. அந்த TV-ல ( Monitor ) சேனல்
மாத்தற பட்டனே இல்ல..
முக்கியமா நீங்க Remote தரலை..
( யாரை ஏமாத்த பாக்கறீங்க.?! )
6. ஆபீஸ்ல இருக்கும் போது
பல தடவை ” Home ” Button-ஐ
அழுத்தி பாத்துட்டேன்.. அது என்னை
வீட்டுக்கே கூட்டிட்டு போகலையே..
7. ” $ ” Button-ஐ அழுத்தினா
அமெரிக்க டாலர் வரலை..
8. அதே மாதிரி ” காபி ” Button-ஐ
அழுத்தினாலும் ” காபி ” வரைல..
என்னய்யா கடை வெச்சு நடத்தறீங்க..?
( எலே மங்கு.. அது ” Coffee ” இல்ல.,
” Copy ” )
9. Caps Lock-ன்னு ஒரு Button இருக்கே.
அதை வெச்சு எங்க வீட்டு மெயின்
கேட்டை பூட்ட முடியுமா..?
10. என் பையன் Homework தப்பா
எழுதினப்பா ” Delete ” Key அழுத்தி
பார்த்தேன்.. ஆனா தப்பா எழுதினதெல்லாம்
அது அழிக்கலையே..
இதையெல்லாம் எனக்கு சரி பண்ணி
தரல.. பிச்சுபுடுவேன் பிச்சு…
இப்படிக்கு
அன்பு மங்குனி அமைச்சர்
( ஆமா.. இப்ப இது ஒண்ணு தான்
குறைச்சல்.! )
டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.
மங்குனியின் கடிதத்தை தெரியாம படிச்சு எனக்கு சொன்னது: http://gokulathilsuriyan.blogspot.com
உங்களை மரியாதைக் குறைவா திட்டிட்டோமோன்னு மனசுக்கு
கஷ்டமா இருந்துச்சு…!
–
அதுக்காக மன்னிப்பு கேட்க வந்தீங்களா..?
–
இல்லை…மரியாதையா திட்டிட்டு போகலாம்னு வந்தேன்..!
–
=================================================
–
ஆனாலும் அவர் அநியாயத்துக்கு முன் ஜாக்கிரதைப் பேர் வழியா
இருக்கிறார்…!
–
என்ன செய்கிறார்..?
–
தனக்கு கொலஸ்ட்ரால் இருக்குங்கிறதுக்காக கோயிலில் தேங்காய்
உடைக்கிறதேயே நிறுத்திட்டார்…!
–
==================================================
–
காதலிச்ச உங்களை கைவிட முடியலே…
–
அதனால…?
–
கல்யாணம் பண்ணிக்கிட்டு டைவர்ஸ் பண்ணிடலாம்னு இருக்கேன்…!
–
==================================================
–
‘செல்’ பேச்சு கேட்காதேன்னு எழுதிப் போட்டிருக்கியே…ஏன்..?
–
என் மாமியார் செல்போன் மூலமா என் கணவருக்கு துர்போதனை பண்றாரே…!
–
====================================================
(படித்ததில் பிடித்தது)
படித்து பிடித்து சொன்னவர்: http://rammalar.wordpress.com
சாயிந்தரம் வீட்டுக்கு போனா அங்க ஜூனியர் ( என்பையன் தாங்க) படிக்காம ஜாலியா டி.வி பாத்துக்கிட்டு இருந்தான் , எனக்கு வந்துச்சே பாருங்க கோவம் ………
“டேய் , அறிவுகெட்டவனே ஏன்டா படிக்கிற நேரத்துல இப்படி டி.வி பாத்துக்கிட்டு இருக்கியே நீயல்லாம் எப்படி உருப்புடுவ ?”
” யோவ் லூசு ”
“என்னது லூசா ? ”
“ஆமாய்யா , இப்போ எதுக்கு கரடியா கத்துற ?”
“இப்படியே படிக்காம டி.வி பாத்தா அப்புறம் பெரியவனா ஆனதும் வேலை கிடைக்காம மாடு மேயிக்கதான் போகனும்.”
“போய்யா…..என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???”
“என்னடா சொல்ற ?”
“இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டர்ல அரைச்சு
இலவச கேஸ் அடுப்புல இட்லி சுட்டு
இலவச மிக்ஸ்சில சட்னி அரைச்சு சாப்ட்டு
இலவச திருமண உதவிப்பணம் வாங்கி
இலவச திருமணம் பண்ணிக்கிட்டு
இலவச கான்கிரீட் வீட்டுல
இலவச மிசாரத்துல
இலவச ஃபேன் போட்டு
இலவச டி.வில
இலவச நெட் கணக்சன்ல
இலவசமா உல்லாசமா படம் பாக்குறத விட்டு கஷ்ட்டப்பட்டு என்னா ம@#த்துக்கு நான் படிக்கனும் அப்புறம் உன்னைய மாதிரி லோள்படனும்???”
இதுல
இலவச ரெண்டு ஏக்கர் நிலத்த என்னபன்றதுன்னு வேற யோசிக்கணும் .
என்ன படிக்கலைன்னா…………..
இலவச சைக்கிளும்
இலவச லேப் டாப்பும் கிடைக்காது…….. நோ பிராப்ளம்….. அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது ”
வாழ்க ஜனநாயகம்
டிஸ்கி : வேறு ஏதாவது இலவசம் விட்டுப் போயிருந்தால் என்னை மன்னித்தருளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
SMS படித்து சொன்னவர்: http://manguniamaicher.blogspot.com
(producer தனது ஆபிசில் சில தெலுங்கு பட விசிடிகளை பார்த்து கொண்டிருந்தார். )
director: சார்! உள்ள வரலாமா சார்?
prod: யோவ்! பாரதிகௌதம்….என்னய்யா ஆளே காணும்? வா வா…உட்காரு.
dir: சார், போன தடவ நீங்க தான் சார் என்னைய அடிச்சு விரட்டிவுட்டீங்க!
prod: ஆமா யா! பன்னி கதை, நாய் கதைனு சொன்னா….கோபம் தான் வரும்! சரி, அப்பரம்..இப்ப என்ன படம் direct பண்ணிகிட்டு இருக்க?
(மேசையில் இருந்த தெலுங்கு பட விசிடிகளை பார்த்த கௌதம்)
dir: சார், என்ன சார், தெலுங்கு படம் எடுக்க போறீங்களா?
prod: அது ஒன்னுமில்லையா, சிம்பு கால்ஷீட் இருக்கு. அப்படியே ஏதாச்சு ஒரு தெலுங்கு படத்த ரீமேக் பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.
dir: என்ன சார் நீங்க? நீங்க இப்படி பண்ணலாமா? ரீமேக் படமெல்லாம் எடுத்தா, எங்கள மாதிரி creative ideas இருக்குற இயக்குனர்களுக்கு வாய்ப்பு இல்லாமா போயிடாதா சார்:)
prod: அதலாம் ஒன்னும் போகாது. உங்கிட்ட கதை இருக்கா? சொல்லு?
dir: ஆமா சார்! உங்களுக்கு தெலுங்கு படம் மேல இப்படி ஒரு மோகம் இருக்குன்னு எனக்கு தெரியும் சார். என்கிட்ட ஒரு script இருக்கு. ஒரு படம், 5 கதை…..
prod: (வாய் விட்டு சிரித்தார்)
dir: சார், இது காமெடி கதையா? action கதையான்னு கூட தெரியாம ஏன் சார் சிரிக்கிறீங்க?
prod: உன்கிட்ட கதை இருக்குதுனு சொன்னதே பெரிய காமெடி, அதலயும் 5 கதைனு சொன்ன பாத்தீயா….(சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்)
dir: சார், கிண்டல் பண்ணாதீங்க…கதைய கேளுங்க….5 கதை, 5 characters, எல்லாரும் வெவ்வேற வாழ்க்கை வாழுறாங்க…ஆனா கடைசில ஒரு ipl match சந்திக்குறாங்க. அங்க என்ன நடக்குது….அது தான் சார் கதை. எப்படி?
prod: படத்துக்கு title?
dir: பூமி, கீழே tagline ‘எங்க காமி?’
prod: என்னய்யா? என்னைய பாத்தா geography professor மாதிரி இருக்கா? இந்த 5 பட கதை எல்லாம் உனக்கு ஒத்து வராது. ஒரே கதை, நல்ல கதையா சொல்லு?
dir: so
prod: அதான் சொல்லிட்டேன்ல. நீ தான் கதைய சொல்லனும்.
dir: so
prod: என்னய்யா மறுபடி மறுபடியும் so? கதை இருக்கா இல்லையா?
dir: ஐயோ சார், கதை பெயரே அது தான் சார்!
prod: என்னது?
dir: சோ!
prod: (முகம் மலர்ந்தது) ரொம்ப வித்தியாசமா இருக்கே!
dir: எனக்கு தெரியும் சார்! உங்களுக்கு இந்த கதை பிடிக்கும்னு. இந்த படம் முழுக்க ரொம்ப hi techல போகும் சார். படத்துல hero ஆப்பிள் விக்கிறவரு!
prod: ஆப்பிளா? யோவ்…சாத்துகுடி, மாம்பழம்…இப்படி ஏதாச்சு விக்க சொல்லுய்யா!
dir: சார்! அந்த ஆப்பிள் இல்ல. apple products விக்கிறாரு. iphone salesman.
prod: ஓ…ஓ…சரி சரி.
dir: ஹீரோவோட ஆயுதமே iphone4 தான். அத வச்சு ரோட்ல நடக்குற traffic குற்றங்களையும், அரசியல் வாதி பண்ணுற தப்புகளை ஃபோட்டா எடுத்து, facebookல upload பண்ணுறதுனு அவரோட பொழப்பு!
prod: (அமைதியாக இருந்தார், கொஞ்சம் நேரம் கழித்து) படத்துல ஹீரோயின்?
dir: சார், நம்ம ஊர் பொண்ணு தான் போடனும். அந்த காலத்துல famousஆ இருந்த ஹீரோ அல்லது ஹீரோயின் பொண்ண போட்டால் தான் சரியா இருக்கும்!
prod: ஏன்?
dir: சார்! நம்ம படத்துல எல்லாத்தலயும் புதுமை புகுத்திகிட்டே இருக்கனும் சார்! நவரச நாயகன் கார்த்திக் பொண்ண போடலாமா?
prod: யோவ் அவருக்கு பொண்ணே இல்லையா!
dir: தேவையானி பொண்ணு?
prod: யோவ்…அதுங்க இப்ப தான் எல்கேஜி போகுதுங்க!
dir: ம்ம்….ரம்பாவுக்கு….
prod: நீ வாய மூடு! ஆமா எதுக்கு இப்படிப்பட்ட ஹீரோயின் தேவை?
dir: இந்த படத்துல ஹீரோயினுக்கு கண்ணு பெரிசா இருக்கனும்! அந்த கண்ண வச்சு ஒரு சூப்பர் ஹிட் பாடல் ஒரு புது கவிஞர் எழுதியிருக்கார்!
prod: கதை ஓகே ஆவறதுக்கு முன்னாடியே பாட்டு ரெடி ஆயிட்டா!??
dir: இப்ப எல்லாம் ready-made பாடல்கள் trend. எந்த படத்துக்கும் பாட்டு always ரெடி.
prod: சரி, அந்த புது கவிஞர் யாரு?
dir: (புன்சிரிப்புடன்) நான் தான் சார்!
prod: கொடுமை!
dir: சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
prod: ஐயோ ரொம்ப பெருமையா இருக்குனு சொல்ல வந்தேன். பாட்டு வரிய சொல்லு.
dir: ஹீரோயின் கண்ணு ஷார்ப்பா இருக்குது…அதனால…
“உன் கண்ணு கண்ணமாபேட்டே, அதுல ஏன் என்னைய கொன்னுபுட்ட?”
இப்படி போகுது சார் பாட்டு. இந்த பாடல norway உள்ள ஒரு மலை உச்சியில ஒரு சுடுகாடு இருக்கு. அங்க தான் ஷுட் பண்ண போறோம்.
prod: ஏன்? நம்ம ஊரு சுடுகாட்டுல இந்த பாட்ட எடுக்க முடியாதா?! (கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் வந்தது)
dir: சார், இந்த பாட்டுல highlightஏ அந்த மலையில் ஒரு சின்ன கல்லு ஒன்னு தொங்கும். அங்க நீன்னுகிட்டு ஆடுனும் நம்ம ஹீரோவும் ஹீரோயினும்.
prod: இந்த ஷாட் பாட்டுல எவ்வளவு நேரம் வரும்?
dir: 10 secondக்கு மேலே காட்ட மாட்டோம்! இந்த பாட்டுல ஒரு speciality இருக்கு.
prod: என்ன அது? (கிண்டலாய் இழுத்தார்)
dir: உலகத்துல உள்ள famous சுடுகாடுகள் இருக்கும் இடத்துக்கு போய் ஷுட் பண்ணுவோம்:)) பாட்டு சூப்பர் ஹிட், எழுதி வச்சுக்குங்க சார்!
prod: போன தடவ என்ன பண்ணேன் நான்?
dir: அடிச்சு விரட்டுனீங்க!
prod: இப்ப விரட்டி அடிக்க போறேண்டா!
dir: ஐயோ சார்!!!
prod: அடிங்க!!!
(அச்சமயம், ஒரு வெள்ளக்காரன் tea glassவுடன் உள்ளே நுழைந்தான்.)
dir: என்ன சார்? வெள்ளக்காரன் எல்லாம் office boyயா வச்சு இருக்கீங்க?
வெள்ளக்காரன்(ஆங்கிலம் கலந்த தமிழில்): நான் office boy இல்ல. tour guide! உங்க ஊருல முக்காவாசி பேரு எங்க ஊருல வந்து தான் படம் எடுக்குறாங்க! அதுக்கு நான் தான் guide.
dir: norway நான் பார்த்தே ஆகனும்.
வெள்ளக்காரன்: உங்க ஊருலே அழகு அழகா இடம் இருக்கு. அதவிட்டுட்டு ஏன் தான் எங்க ஊருல வந்து நாசம் பண்ணுறீங்களோ!!??
*முற்றும்*
இந்த கதை கேட்ட கதையயும் சொன்னது: http://enpoems.blogspot.com
அதிகாரி: உக்காருங்க ரங்கமணி.
ரங்கமணி: பரவாயில்ல சார். நான் நின்னுகிட்டே பதில் சொல்றேன் சார்.
அதிகாரி: நான் சொல்றதுக்கு எதிர் பதம் சொல்லுங்க பார்க்கலாம்.
ரங்கமணி: சரி சார். கேளுங்க! முயற்சிக்கிறேன்.
அதிகாரி: Made in India
ரங்கமணி: Destroyed in Pakistan
அதிகாரி: Good! Keep it up.
ரங்கமணி: Bad! Put it down.
அதிகாரி: Maximum
ரங்கமணி: Minidad
அதிகாரி: Enough! Take your seat.
ரங்கமணி: Insufficient! Don’t take my seat.
அதிகாரி: Idiot! Take your seat.
ரங்கமணி: Clever! Don’t take my seat.
அதிகாரி: I Say you get out.
ரங்கமணி: You didn’t say I come in.
அதிகாரி: I reject you.
ரங்கமணி: You appoint me.
அதிகாரி: !!!!!!!!!!!!!!!!!!!!!!1
பின்குறிப்பு: ரங்கமணிக்கு இந்த வேலை கெடைச்சுருச்சு. ஆனா அதிகாரி தான் இன்னும் மருத்துவ மனையிலிருந்து திரும்பல பாவம்.
director: “ATM productions வழங்கும் ஆத்தா, பயணம்” இது தான் சார் ஓபனிங்.
producer: யோவ்! கதைய முதல சொல்லுய்யா!
director: சார், இது ஒரு கிராமத்த கதை சார்! ஒரு பெரிய….
producer: wait wait…உன் பேர் என்ன சொன்ன?
director: பாரதி கௌதம்.
producer: ஹாஹாஹா…என்னய்யா பேரு இது?
dir: பாரதிராஜா மாதிரி கிராமத்த படத்த கௌதம் மேனன் மாதிரி ரொம்ப ஸ்டைலீஷா எடுக்கனும்னு ஆசை. அதான்…இந்த பேர வச்சுகிட்டேன்!
prod: சரி கதைய சொல்லு!
dir: சார் ஓபினிங் சீன்….ஒரு பெரிய மாட்டுவண்டி, யாருமில்லாத railway station வெளியே நிக்குது. தண்டவாளத்த long shotல காட்டுறோம். அங்க இருக்கற clockஎ close upல காட்டுறோம். பயங்கரமா காத்து அடிக்குது சார்! மரத்துலேந்து இலை எல்லாம் கீழே விழுது சார்.
prod: எனக்கு தூக்கம் வரதுய்யா! catchingங்கா ஒன்னு இல்லையா!??
dir: சார், அதுக்கு தான் சார் வரேன். எப்போதுமே lateஏ வர train அன்னிக்கு மட்டும் சீக்கிரம் வந்துடுச்சு சார்.
prod: இது ரொம்ப புதுசா இருக்கே…வெரி குட்…மேல சொல்லு.
dir: எல்லாரும் நினைப்பாங்க. நேரம் சரியா இருக்குனு. ஆனா, எல்லாருக்கும் அது bad time!- அப்படின்னு பின்னாடி narration voice போடுவோம் சார். அந்த trainலேந்து ஒரு வயசான பாட்டி கண்ணு ஆபிரேஷன் முடிஞ்சு வறாங்க. கூடவே அவங்க பேத்தியும் இருக்கா.
prod: தமன்னா callsheet என்கிட்ட இருக்கு. அவங்கள இந்த ரோல போட்டுடுவோம்.
dir: இல்ல சார். பாட்டியும் பேத்தியும் ஒரு ஆளு தான் சார் பண்ணனும். double action sir.
prod: தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்…. நீ கதைய மேல சொல்லு.
dir: கண்ணாடி போட்ட ஒரு mechanic அதே ரயில வந்து இருங்குறாரு.
prod: அது என்னய்யா கண்ணாடி போட்ட மெக்கானிக்?
dir: பாரதிராஜா படத்துல கண்ணாடி போட்ட ஹீரோ வர மாதிரி நம்ம படத்துலயும் ஹீரோ கண்ணாடி போடுறாரு சார்…
prod: characters மட்டுமே சொல்லிகிட்டு இருக்க…கதைக்கு போய்யா! கதை இருக்கா இல்லையா?
dir: சார் வரேன் சார். இன்னும் நிறைய characters இருக்கு. ஒரு சின்ன பொண்ணு, 16 வயசு பொண்ணு சினிமால நடிக்கனும்னு ஆசைப்பட்டு ஓடி வறா அதே ரயில.
prod: கிராமத்துக்கு ஏய்யா வறா?
dir: ரயில் மாறி ஏறிட்டா சார்! (கண் கலங்குகிறார்)
prod: அப்பரம் என்ன ஆகுது? அந்த 16 வயசு பொண்ணா யார போடலாம்?
dir: நமீதா.
prod: நமீதாவா? நீ சொல்ற கதையவிட இது இன்னும் shockingஆ இருக்கே!
dir: கவலைப்படாதீங்க சார். ரெண்டே மாசம் 35 கிலோ குறைப்பாங்க. 16 வயசா மாறுவாங்க! நான் guarantee சார் அதுக்கு!
prod: சரி கதையில அப்பரம் என்ன ஆகுது…..
dir: புதுசா கல்யாணம் ஆனா ஜோடி, அமெரிக்கா return ஒரு பையன் – இத்தன பேரும் அந்த stationல நிக்குறாங்க. shot freeze!
எழுத்து-இயக்கம்: உங்கள் பாரதி கௌதம்
அப்படினு போடுறோம் சார்!
prod: title credits எல்லாம் editor பாத்து பாரு. அந்த மாட்டுவண்டி எதுக்கு வெளியே நிக்குது?
dir: பின்னிட்டீங்க சார்! ஒரு audienceஆ இந்த படத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க. i like it sir. அந்த மாட்டுவண்டில தான் இவங்க எல்லாருமே கிராமத்துக்குள்ள போறாங்க. அந்த மாட்டுவண்டிய ஓட்டுறது அந்த கிராமத்துக்கே தெய்வம் மாதிரி.
prod: ஆமா அந்த ரோலுக்கு யார….
dir: சார் என் friend நவீன்குமார் பண்ணனும் சார். ‘அந்த பக்கம் போகாதீங்க இந்த பக்கம் வாங்க’ அப்படினு ஒரு ஹிட் படம் எடுத்தாரே அவரு சார்.
prod: ஓ ஆமா ஆமா!
dir: இந்த powerful role அவர் தான் பண்ணனும். என் படத்துல அவர் கண்டிப்பா நடிச்சே ஆகனும்.
prod: அவர் எடுத்த முந்தைய படத்துல கூட நீ நடிச்ச தானே?
dir: ஆமா சார். இப்படி மாத்தி மாத்தி நடிச்சு கொடுக்குறது தானே சார் இப்ப trend!
prod: (தலையில் அடித்து கொண்டார்) அப்பரம் அந்த மாட்டுவண்டிக்கு என்ன ஆகுது?
dir: திடீரென்னு மழை பெய்யுது. வண்டி வழில breakdown ஆவுது?
prod: மாட்டுவண்டி breakdownஆ? டேய் லாஜிக்கே இல்லையடா இதுல!??
dir: சார், வண்டில problem சார். அத சரி பண்ண மெக்கேனிக் கீழே இறங்கி வேலை பாக்குறாரு. அந்த வேலை பாக்குற ஸ்டைல பாத்து தமன்னாவுக்கு காதல் வரது?
prod: பாட்டி தமன்னாவுக்கா? பேத்தி தமன்னாவுக்கா?
dir: சார், பேத்திக்கு தான் சார் காதல் வரது!
prod: இப்படிலாம்கூட காதல் வருமா?
dir: சார் இது ஒரு வித்தியாசமான காதல் சார்! தமிழ் சினிமாவுல இப்படி ஒரு காதல் காட்சிய audience பாத்து இருக்க மாட்டாங்க!
prod: சரி சொல்லு….
dir: இங்க ஒரு பஞ் டயலாக் சார்! மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, “தம்பி, ஏன் உருட்டுறீங்க?”
அதுக்கு மெக்கேனிக் பஞ் டயலாக் சொல்றாரு,
“உருட்டுறதுல நான் பூனை மாதிரி.
மிரட்டுறதுல நான் யானை மாதிரி.”
அப்படியே மெக்கேனிக் கண்கள close upல காட்டுறோம். கண்ணு சிவந்து போகுது சார்.
prod: யோ, பாட்டி சொன்னதுக்கு எதுக்கு டா பஞ் டயலாக்?
dir: சார், audience விரும்புவான் சார். நீங்க பாருங்க? இது தான் 2011 வருஷத்துல ஹிட் பஞ் டயலாக்கா வர போகுது. இந்த ஒரு பஞ் தான் படத்த 100 நாள் ஓட வைக்க போகுது.
prod: (producer தன் கோபத்தை அடக்கி கொள்கிறார்)
dir: repair பண்ணி முடிச்ச பிறகு வண்டி கிளம்புது…. போற வழில மின்னல், இடி, மழை… ஒரே இருட்டு! நாலு பேரு காட்டுக்குள்ளேந்து வராங்க. முஞ்சிய மூடி இருக்காங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது. கையில எல்லாருமே gun வச்சு இருக்காங்க. வண்டில இருக்குற எல்லாரையும் close upல காட்டுறோம். அப்படியே அடுத்த ஷாட்…. முஞ்சிய மூடி இருக்குற நாலு பேருல ஒருத்தர் மட்டும் name tag போட்டு இருக்காரு…. name tagஎ close upல காட்டுறோம்.
“அக்ரம் கான் – son of wasim khan”
இங்க தான் interval block!
எப்படி சார் கதை?
prod: எந்த தீவிரவாதிய்யா name tag போட்டு இருப்பான்?
dir: சார், நம்ம ஒரு வித்தியசாமன படம் எடுக்கறதயே நீங்க அப்பெப்ப மறந்துடுறீங்க!!
prod: சரி 2nd halfல கதை?
dir: இந்த கிராமத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம்? the mystery unfolds…….
prod: ஆமா? அப்பவே கேட்கனும்னு இருந்தேன். அந்த மெக்கேனிக் ரோலுக்கு…. யார போடலாம்னு…
dir: கார்த்தி தான் இதுக்கு சரியான மேச்.
prod: யோவ்… அவருக்கும் தமன்னாவுக்கும் ஏதோ கிசுகிசு….
dir: இருக்கட்டும் சார். நம்ம படத்துக்கு அப்பரம் அவங்க ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு தான் சார் பெருமை.
prod: யோ, அப்படிலாம் ஒன்னும் நடக்ககூடாதுய்யா! இன்னும் ரெண்டு படத்துக்கு தமன்னா கால்ஷீட் வாங்கி வச்சுருக்கேன்ய்யா!
dir: சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict! 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்!
prod: என்னய்யா நீ வேற……? சரி இந்த படத்துக்கு location எங்க?
dir: america. chicago பக்கத்துல இருக்குற ஒரு கிராமம்.
prod: என்னது? அமெரிக்காவா? யோ…. இந்த கதைக்கு எதுக்கு டா அமெரிக்கா.
dir: சார், போன படத்துல எச்சி துப்புற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சியவே நாங்க switzerlandல தான் shoot பண்ணுனோம்.
prod: (கையில் வைத்திருந்த பேப்பரை மேசையில் வீசினார்.) நான் கொலவெறியா போறதுக்குள்ள ஓடி போயிடு! நீ எல்லாம் ஒரு director??? உன்கிட்ட கதை கேட்டேன் பாரு…என்னைய…..
dir: சார் சார்…. கோபம் படாதீங்க சார்! என் குருநாதரின் ‘நடுநிசி நாய்கள்’ படம்
மாறி ‘பரதேசி பன்னிகள்’ அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்…. அந்த கதைய கேக்குறீங்களா சார்?
producer: எடு அந்த வெளக்கமாத்த!!!!!!!
கதை கேட்ட கதைய சொன்னது: http://enpoems.blogspot.com
Aptitude டெஸ்டில்: அதிகாரி: நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி: நான் சொன்னத நீங்க சரியா கேக்கல போல. திருப்பி கேக்கிறேன். நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி: சரி வேற மாதிரி கேக்கிறேன். நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆரஞ்சு, அப்புறமா ரெண்டு ஆரஞ்சு, அப்புறமா ரெண்டு ஆரஞ்சு குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆரஞ்சு இருக்கும்?
ரங்கமணி: ஆறு ஆரஞ்சு சார்.
அதிகாரி: சரி. இப்ப சொல்லு. நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி (கடுப்புடன்): அது எப்படியா எழு வரும்?
ரங்கமணி: என்கிட்டே ஏற்கனவே ஒரு ஆப்பிள் இருக்கே சார். அதான்..
பின்குறிப்பு: ரங்கமணிக்கு இன்னும் வேலை கெடைக்கல அப்படின்னு உங்களுக்கு தனியா சொல்லணுமா என்ன?. உங்க அலுவலகத்தில் ஏதாவது சான்ஸ் இருந்தா சொல்லுங்களேன்…
பஸ்ஸுக்கு காத்திருந்தபோது இரு அம்மணிகள் அளவலாவிக் கொண்டிருந்தாங்க!! அதை நான் உங்களுக்காக ‘லாவிக்’ கொண்டு
வந்து விட்டேன் !!
“என்னடி இவளே ஒரு மாதிரி இருக்கே, முழுகாம இருக்கியா?”
“இல்லக்கா இப்பல்லாம் அவரு டூட்டி முடிஞ்சு வந்ததுமே வெடு
வெடுன்னு விழுறாரு!”
“சரி இப்ப அதுக்கென்ன?”
“முந்திய மாதிரி என் மேல் அவருக்கு பிரியமில்லையோன்னு
மனசுக்கு தோணுதுக்கா?”
“இவ பெரிய இவ! கல்யாணமாகி வருஷம் ஒன்னு இன்னும்
முடியல! பிரியத்தைப் பத்தி ரொம்பதான் கண்டுட்டாளாக்கும்”
“அது வந்துக்கா…!!”
“அடியே இவளே..!! நாமெல்லாம் நடந்துக்குற முறையில தாண்டி
பிரியமும், பாசமும் நம் மேல வரும். நான் சொல்றேன் நல்லா
கேட்டுக்க!!
(பஸ்கள் நிற்பதும் போவதுமாய் இருக்க, நான் போக வேண்டிய
பஸ் இன்னும் வந்தபாடில்லை!!)
“சொல்லுங்கக்கா”
“காலையில் எழுந்ததிலிருந்து அவங்க ‘ஆப்பீஸ்’ போற
வரைக்கும் அந்த ஹரிபரி நேரத்தில் உன் மூஞ்சியையும்
(அது வேறு) முகத்தையும் (இது வேறு) காட்டிட்டீன்னா, இவங்க
‘ஆப்பீஸ்’ போய் நீ காட்டிய மூஞ்சியை நினைவில் வச்சிருந்-
தாங்கன்னு வச்சுக்கோ, ஆணி புடுங்க வேண்டிய இவரை, டேமேஜர்
பீஸ புடிங்கிடுவார். பொளப்பு என்னாகும். டப்பா டான்ஸ் ஆடிடும்.
புரியுதா?”
“புரியுதுக்கா!”
“அதனால எப்பவும் கொஞ்சம் சிரிச்ச மாதிரியே இரி! வேல
பாட்டுக்கும் வேல, கையும் கண்ணும் பார்த்துக்கிட்டிருக்க,
என்ன சங்கடமிருந்தாலும் கடையில் சேல்ஸ்மேன்கள்
மெல்லிதாய் சிரிச்சிக்கிட்டிருப்பாங்களே அதுமாதிரி!”
“அடடா விளக்கமெல்லாம் அழகா சொல்றீங்களேக்கா!”
“சரிடி பினாத்தாதே, கவனமா கேட்டுக்கோ!’
“ம்ம்ம்…”
“வாய்க்கு சுவையா ஆக்கிப் போடு!! எல்லாரும் ருசிக்கி
வயப்படுபவர்கள் தாம் புள்ள!”
“எனக்கு அத்தன வகையா சமைக்கத் தெரியாதேக்கா!”
“விடிஞ்சது போ! ஒன்னச் சொல்லியும் ஏதும் ஆகுறதில்ல. நம்மட அம்மாக்கள்ஸும் நமக்கு கல்யாணம் முடியுற வரைக்கும்
செல்லம் கொடுத்தே அடுப்படி பக்கம் போக விட மாட்டாங்க.
அதனால டீ, காபி தவிர்த்து சுடுதண்ணி மட்டும் தான் நமக்கு
போட வரும். என்னா நா சொல்றது சரிதானா?”.
“உண்மைதாக்கா”
“சரி அதனால ஒன்றும் பிரச்சின இல்ல! இந்த பக்கம் நிறைய
தோழிகள், ப்ளாக்ஸ்பாட்டுல வகை வகையான சமையலைப்
பத்தியும், அவைகளை சமைக்கும் முறைப்பத்தியும் வண்ண
வண்ணமா படங்களைப் போட்டு அசத்துறாங்க!! அவைகளையும்
ஒரு முறைக்கு ரெண்டு முறை போயி படிச்சுப் பாரு. சந்தேக-
மிருந்தா அவங்களுக்கே கமெண்ட்ஸ் போட்டு விளக்கம் கேளு.
அழகா பதில் தருவாங்க! சும்மா லேப்டாப்பை தலகாணிக்கி
கீழே வச்சுக்கிட்டு தூங்காதே! சரியா?
“எல்லாம் சரீக்கா…ஆனா..க்கா ?”
“என்னடி ஆனாக்கா ஆவன்னாக்கா.. ?”
“அவரு டூட்டி முடிஞ்சு வந்த உடனே வெடுவெடுன்னு விழுறாரு!
அதுக்கு நீங்க எதுவுமே சொல்லலையே. அதாங்… க்கா!!”
“இரிடி…பறக்காதே! ஒன்னு ஒண்ணாத்தானே சொல்லணும். அவங்க
டூட்டி முடிஞ்சு சோர்ந்து போய் தான் வீட்டுக்கு வருவாங்க!
அப்பவும் கூட, உன்னோடு செல்லில் பேசி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டுதானே வராங்க!! அப்ப செல்லில் உன்னோடு பேசிய பிறகு, அவங்க வீட்டுக்கு வரும் நேரத்தை
கால்குலேட் செய்து மனதுக்குள் வச்சுக்க. இதுக்கு கம்ப்யுட்டர்
எல்லாம் தேவையில்லை!! (ஏஏஏ..யப்பா ரொம்ப படிச்சவங்களா
இருப்பாங்க போலிருக்கே!!) அதற்குள் காபியோ, டீயோ, டிஃபனோ,
அல்லது ஸ்ட்ரைட்டா சாப்பாடோ சாப்பிடுபவர்கள் என்றால்
அவைகளை ரெடி செய்து வைத்து விடு. குளித்து விட்டு சாப்பிட,
அவங்க மனசு சந்தோஷமா இருந்தா எவ்வளவு எலக்ட்ரிசிட்டி
ஷேவ் ஆகுதுன்னு நீயே பாரு!! சரியா??
“ஹி.. ஹி…சரீக்கா??”
“நா என்னத்த சொல்லிப்புட்டேன்னு இப்படி ஹி..ஹி..ன்னு
இளிக்கிரே! கவனமா கேளு புள்ளோய்!”
“சரீக்கா..சரீக்கா..!!”
“அத விட்டுபுட்டு அவங்க வர்ற வரைக்கும், டிவி தொடர், காமெடி
ஷோ பார்க்கலாம்னு உட்கார்ந்துட்டீன்னு வச்சுக்கோ, பிறகு நாம
காமெடிபீஸாகி விடுவோம். தெரிஞ்சுதா??”
“ஆமாக்கா, அதான் அவரு வெடுவெடுன்னு விழறாரா..!! இப்ப
தானே புரியுது. நீங்க மேலே சொல்லுங்கக்கா!”
“ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ. புருஷா எல்லோரும்
குழந்தைங்க மாதிரி. நாம சிரிச்சா அவங்களும் சிரிப்பாங்க.
அவங்க சிரிச்சா நம்ம மனசும் வீடும் நிறைஞ்ச மாதிரி. அவங்க வரும்போது அழகா டிரஸ் பண்ணி கொஞ்சம் சிரிச்ச மாதிரி
முகத்த வச்சுக்கோ! வந்த உடனே எந்த கவலைப்படும் விஷயத்-
தையும் சொல்லிடாதே! நீ வாங்கி வரச் சொன்னதில் ஏதும்
மறந்து வந்துட்டாங்கன்னாலும், “போய் வாங்கிட்டு வாங்கன்னு
விரட்டாதே!”, “பரவாயில்லிங்க, சமாளிச்சுக்கலாம்” என்று சொல்லி அட்ஜஸ்ட் பண்ணு” , புரியுதா?
“அச்சச்சோ… எம்பூட்டு விஷயம் அழகழகா சொல்றீங்க!”
“சரி சரி…மற்றதெல்லாம் ஒன்னற தோழிகளும் அம்மாவும்
சொல்லிக் கொடுத்திருப்பாங்க அதுபடி மனசில வாங்கி நடந்துக்க,
எல்லாம் சரியா வரும். என்னா புரியுதா..!!”
சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.
“சும்மா தலைய தலைய ஆட்டாதே!! காலையில் ‘அவங்க’ ஆப்பீஸ் போறதுக்கும், ‘ஆணி’ புடுங்கிட்டு வர்றதுக்கும், வாழ்க்கையின் அந்திம
நாள் வரைக்கும் அவங்களுக்கு உதவும்கரங்கள், என்றால் அது நாம
தான், இதில் எந்தவித மூன்றாம் நாலாம் கருத்துக்கும் இடமில்லை.
இப்ப நீ ஜாக்கெட்டில் காலர் வச்சிருந்தீன்னா ஒருதடவை தூக்கி
விட்டுக்கோ. தப்பே இல்ல!!”
அம்மாடி… கொஞ்ச நேரத்துக்குள்ளார அவங்க பாட்டுக்கும் எவ்வளவு சொல்லிக்கிட்டே போய்ட்டாய்ங்க!!
அதற்குள் நான் புறப்படவேண்டிய நாலாம் நம்பர் பஸ் வந்துடுச்சு. ஏறிட்டேன்.!! கண்டக்டர், “ரைட்.. ரைட்” விசில் கொடுத்தார்.
ஒட்டு கேட்டு வந்து சொன்னவர்: http://mabdulkhader.blogspot.com
விளம்பர அட்டையை கண்ட நான் அந்த கடையினுள் நுழைந்தேன் ‘நாய் எப்படி பேசும்’ என்ற எண்ணத்தோடு. முதலாளியிடம் கேட்ட போது பின்னால் கட்டி போட்டிருப்பதாக சொன்னான். பின்பக்கம் சென்ற நான் அங்கு ஒரு நாய் கட்டி போடப்பட்டிருப்பதை கண்டேன். நீதான் அந்த பேசும் நாயா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னது அந்த நாயும். சரி உன்னை பற்றி சொல் என்றேன்.