ஒரு பழத்தை கைல குடுத்து சாப்பிடுன்னா என்ன பண்ணி வச்சுருக்கு பாருங்க இந்த ரங்கமணி?
அண்ணே! இது நல்லதில்லண்ணே நல்லதில்ல… ஏண்ணே எம்மேல இம்புட்டு கோவம்? அப்டி என்ன சொல்லிபுட்டேன்னு கொலவெறியோட அலையிறே நீயி… அப்டியே அடிக்கிறதா இருந்தாலும் நேர்ல வந்து அடி… யார் கேட்பா?.. வாரவன் போறவம்லாம் அடிச்சிட்டு போம்போது என் அண்ணன் நீ, உனக்கு அடிக்க உரிமையில்லையா?! நீ எம்புட்டு அடிச்சாலும் தாங்குவேம்ணே அத விட்டுட்டு சின்னபுள்ளதனமா ஆளை வச்சு அடிக்க சொல்றியே… பெரிய மனுஷன் பண்ற காரியமாயா இது?….
உனக்கும் எனக்கும் பிரச்சனை இருந்ததென்னவோ உண்மைதான், ஆனா உன்னைய தேர்தல்ல எதிர்ப்பேன்னு சும்மா ஒரு பேச்சுக்குதாண்ணே சொன்னேன். அதை நம்பி பயபுள்ளைக திடீர்னு ஒரு நா வந்து நீயும் ரவுடிதான் ஜீப்ல ஏறுன்னுட்டாங்க. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ஒர்த்தில்லையான்னு சொன்னாலும் ஒருத்தன் கேக்கலையே… சரி விடு ஆனது ஆயிபோச்சு ஹிஸ்டிடில நம்ம பேரும் வரட்டும்னு நெனச்சி சரின்னு தலையாட்டுனேன்.
இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புதூன்னு பிரச்சாரத்துக்கு போனா… சும்மா சொல்லப்பிடாது நம்ம மக்கள் பாசக்கார பயபுள்ளைகண்ணே… போற எடம்மெல்லாம் கூட்டமா கூடி உசுப்பேத்தி விட்டுகிட்டே இருந்தாங்க. ஆனா இப்பதான் தெரியுது என்னை ரணகளமாக்கத்தான் கூடியிருக்காங்கன்னு…. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….
அப்போ அங்கே பேசுனதெல்லாம் உனக்கு கெட்டதா தெரியும். ஆனா நல்லா யோசிச்சி பார்ண்ணே. நான் உனக்கு செஞ்சது எல்லாமே நல்லதுதாண்ணே.
உன்ன குடிகாரன்னேன் எதுக்கு?… தமிழ் நாட்ல முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடதான் இருக்கு. நாட்டுல முக்காவாசி பேரு குடிகாரன்தான் (மன்னிச்சுகிங்கையா ஒரு ஃப்லோல வந்துடுச்சி இனிமே குடிகாரர்னே சொல்றேன் நீங்களும் கெளம்பி வந்து கும்மிராதிங்க)… நான் உன்னை குடிகாரர்னு அடையாளம் காட்ட போய்தான்…அத்தனை பேரும், ஓ நம்மாளு… இவரு செயிச்சா நமக்கும் ஏதாவது செய்வாருன்னு நினைச்சு அவன்பாட்டுக்கு “ஙங்கு ஙங்குன்னு” குத்தி தள்ளி, உன்னை ஜெயிக்கவச்சான். ஞாயப்படி எனக்கு நன்றி சொல்லி மாலை போட்டு தூக்கி வச்சி ஆடணுமாக்கும் நீ….அத விட்டுட்டு அடிக்க வர்றாராமாம் அடிக்க…
அப்புறம் எதிர் கட்சி டிவில என்னிக்காவது உன்னய காட்டியிருக்காங்களா?… ஆனா தேர்தல் ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்க தலிவர டிவில காட்னத விட உன்ன பத்தி காட்னதுதாண்ணே அதிகம். அதுக்கெல்லாம் காரணம் இந்த கைப்புள்ளங்கிறதையே மறந்துட்டு பேசுறே நீ.
நான் எதிர்த்தவன்லாம் வீணா போனதா சரித்திரமே இல்லைண்ணே. ஒத்த எம்மெல்ஏ.வா சுத்திக்கிட்டு இருந்த உனக்கு இம்புட்டு எம்மெல்ஏ எப்படிகிடைச்சாங்க அப்படிங்கிறதை யோசிச்சு பார்த்தேன்னா இம்புட்டு கோவம் வராது உனக்கு.
இது தெரிஞ்சுகிட்டுதான் நம்ம சிங்கும், ஒபாமாவும் அடுத்த எலெக்ஷனுக்கு அவங்களுக்கு எதிரா பேசச்சொல்லி இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணியிருக்காங்க…. வேணும்னா நீயும் ஒன்னு போட்டுக்கோ.
அத விட்டுட்டு அடிக்கணும்னு கங்கணம் கட்டிட்டு அலையிற நீயி. உனக்கு ஆசையாயிருந்த பார்டர்ல போயி தீவிரவாதியை பிடி, தெருவுல போற ரவுடியை அடி ஆனா இந்த பச்ச மண்ண போயி அடிக்கணும்னு நெனக்கிறியே வெக்கமாயில்லை… உன்னைய நினைச்சா சிப்பு சிப்பாத்தான்யா வருது.
ஆனா ஒன்னுண்ணே யார் என்னை சீண்டுனாலும், போங்கடான்னு என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருந்தப்பல்லாம் இம்பூட்டு பிரச்சனை இல்லண்ணே. என்னைக்கு திரும்பி சீண்டனூம்னு நினைச்சனோ அன்னியிலிருந்துதான் பிரச்சனை. எல்லாத்தையும் சிரிக்க வச்ச எம்பொழப்பு இன்னிக்கு சிரிப்பா சிரிக்கிது…
அப்புறம் இன்னொரு விசயம்… ஸ்..ஸ்ஸ்ஸ்.. காத பக்கத்துல கொண்டா… அந்த கட்சியினாலதான் நீ செயிச்சேன்னு சொன்னேன்ல அது சும்ம பேச்சுக்கு… உன்ன உசுப்பேத்தி உடுறதுக்காகத்தான் அப்படி சொன்னேன்…
ம்ம்ம்ம்… உங்களையெல்லாம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என் பொழப்பு ரணகளாமாகி கிடக்கு…
கைப்புள்ளயின் சோகத்தை சொல்லியவர்: http://sinekithan.blogspot.com
==
–
தலைவரோட பேத்தி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு
ஓடினதை செய்தியாப் போட்டதுக்காகவா இவ்வளவு
கோபப்படறார்..?
–
ஊஹூம்…அதுக்குத் தலைப்பு ‘தலைவரின் பேத்தி
டிரைவருடன் ஓட்டம்’னு போட்டுட்டாங்களாம்…அதான்..!
–
============================================
–
தலைவரோட வீடு கோயில் மாதிரி..!
–
அவ்வளவு சுத்தமா..?
–
ஊஹூம்…வாசல்ல நிறைய செருப்பு கிடக்கும்.!
–
=========================================
–
ஒவ்வொரு தடவை பூட்டை உடைச்சுத் திருடும்போதும்,
மனசு கிடந்து அடிச்சுக்கும்..!
–
இது தப்புன்னா..?
–
இவ்வளவு நல்ல பூட்டையெல்லாம் வீணா
உடைக்கிறோமேன்னு..!
–
==========================================
–
தொழில்ல இந்த அளவுக்கு நஷ்டம் அடையக் காரணம்
என்னன்னு ஜோசியர்கிட்டே கேட்டதும்…
–
வாஸ்து சரியில்லைன்னாரா..?
–
ஊஹீம் என் ‘தோஸ்து’ சரியில்லைன்னார்..!
–
=======================================
பத்திரிகைக்காரங்க மேல தலைவர் ரொம்ப கோபமா
இருக்காரே, ஏன்..?
–
அவர் பீகார்ல கொஞ்ச நாள் இருந்ததை, திகார்ல
இருந்ததா எழுதிட்டாங்களாம்..!
–
–
==========================================
–
என் பையனைக்காட்டிலும் உன் பையன் பரீட்சையில
மார்க் கம்மியாத்தானே வாங்கினான்…
அவனுக்கு எப்படி இன்ஜினீயரிங் சீட் கிடைச்சது..?
–
பிச்சை எடுப்பவர்:- பேமன்ட் கோட்டாவுல சீட்
வாங்கிட்டேன் தாயீ..!
–
==========================================
–
இந்த டாக்டர் போலின்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க..?
–
‘நாளைக் உங்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணனும்…
காலையிலேயே மெரீனா பீச்சுக்கு வந்திடுங்க’ன்னு
சொன்னாரே..!
–
>குட்டி.மு.வெங்கடேசன்
==========================================
–
வாரப் பத்திரிகைக்கு தட்டச்சு செய்கிறவர்கிட்டே குற்றப்
பத்திரிகையை ‘டைப்’ பண்ணக் குடுத்தது தப்பாப்
போச்சா…ஏன்?
–
‘இவை யாவும் கற்பனையே…யாரையும் எவரையும்
குறிப்பிடுவது அல்ல’ன்னு கடைசியில ஒரு ‘லைன்’
அடிச்சுத் தொலைச்சிருக்கார்..!
–
>ஜெயாப்ரியன்
==========================================
நன்றி: குமுதம்
ரசித்த இடம்: http://rammalar.wordpress.com
சிரித்து சிரித்து வயிறு புண்ணானால் அதற்கு நம் கம்பெனி பொறுப்பல்ல!… படங்களைப்பாருங்க….’உலகிலுள்ள அரசியல்வாதிகளின் மக்கள் மன்ற நடவடிக்கைகளைப் பார்க்கறப்போ ’ நம்மாளுங்கக் கிட்ட தான் பாடம் படிச்சிருப்பாங்களோ ’ன்னு நினைக்க வைக்குது!
சீனாக்காரன் மட்டும் எந்தச் சிக்கலுமில்லாம எப்படி முன்னேறுகின்றான் என்பதை கடைசிக் காட்சியைக் கண்டால் புரியும். – ஹி… ஹி… அதுவும் நம்மாளுங்ககிட்ட இருந்து காப்பியடிச்சது மாதிரித்தான் தெரியுது!
கடைசியாக சீனா…
என்னே…அமைதி!
என்னே…ஆதரவு!
என்னே…ஒத்துழைப்பு!
இவுகளும் நம்ம முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் தான் பாடம் படிச்சாங்களோ?!?!
நண்பர் நெல்லி மூர்த்தி அவர்களுக்கும் அவருடன் பகிர்ந்து கொண்டநண்பர் திரு. பாலமுருகன் அவர்களுக்கும் நன்றி!
நாம் பல நேரம் நம் தங்கமணிகளின் படைப்பாற்றலை உணர்வதில்லை. இங்கே பாருங்கள் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருள்களை எப்படி அலங்கரித்திருக்கிறார்கள் என்று!
ரசித்த இடம்: http://thakaduthakadu.blogspot.com
அவங்க ரசிச்ச இடம்: http://ideaswu.blogspot.com