ஒருத்தன் இண்டர்வ்யூ போனானாம். ஆஃபீஸர் டேபிள்மேல துப்பாக்கிய வெச்சு, ‘நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை’ன்னாராம்.
”பொண்டாட்டியக் கொன்னு, கிடைக்கற வேலை வேணாம்”ன்னுட்டு போய்ட்டான் அவன்.
ரெண்டாவது வந்தவன்கிட்டயும், ஆஃபீஸர் அதையே -நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை – சொன்னார். அவன் துப்பாக்கிய எடுத்துட்டு நேரா அந்த ரூமுக்குப் போனான். அங்க அவனோட மனைவி நின்னுட்டிருந்தாங்க. அவங்க முகத்தைப் பார்த்ததும் மனசு மாறி, துப்பாக்கியை ஆஃபீஸர்கிட்டயே குடுத்து ‘போய்யா – நீயும் உன் வேலையும்’ன்னுட்டுப் போய்ட்டான்.
மூணாவது ஒருத்தன் வந்தான். அவன் பொண்டாட்டி, நெக்ஸ்ட் ரூம்ல இருந்தாங்க. அவன்கிட்டயும் ஆஃபீஸர் அதைச் சொன்னார். அவன் துப்பாக்கியத் தூக்கீட்டு அந்த ரூமுக்குப் போனான்.
கொஞ்ச நேரத்துல அந்த ரூம்லேர்ந்து அவனோட மனைவி ‘ஐயோ.. அம்மா’ன்னு அலர்ற சத்தம்.
ஆஃபீஸர் ஓடிப் போய்ப் பார்த்தார். மனைவி தலைல ரத்தம் ஒழுகுது. வந்த ஆஃபீஸர் ஓடிப்போய்த் தடுக்க, அவன் சொன்னான்:
“சார்…. கொல்லச் சொல்லீட்டு உள்ள புல்லட் வைக்காம குடுத்துட்டீங்க. அதான் திருப்பிப் போட்டுச் சாத்தீட்டிருந்தேன்
Courtesy: பரிசல்காரன் கிருஷ்ணா in G+