Posts Tagged ‘comedy piece’

ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

“ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை”

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

“அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ…….?”

# காலங்கள் மாறினாலும்… மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை..

Courtesy: Facebook

Wife: U had lunch?

Husband(in fun mood) : U had lunch?

Wife : Im asking u.
Husband : Im asking u.

Wife: U copying me?
Husband: U copying me?

Wife: Lets go shopping

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Husband: I had lunch..

ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்போ..
போன் வந்துச்சி … பார்த்தா புது நம்பர்…
யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்…

” Helo… யாரு? ! “ன்னேன்.

” நான் யாருங்குறது இருக்கட்டும் … உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? “ன்னு கேட்டான்.

” பண்ணுதே.. ! “ன்னேன் நான்

” Computer Work பண்ணுதா.? “ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

” அதுவும் Work பண்ணுதே..! “ன்னேன் நான்.

அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,
” அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..? … நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ …

 

Courtesy: Facebook

ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி

ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?

ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?

ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?

ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.

****
http://thendhisai.blogspot.in/2012/12/5.html

புது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்

‘  மனைவியை  எப்படி சாமாளிப்பது ‘?

 

 

கூகுள் தேடல் முடிவு  அறிவிப்பு
‘இன்னும் தேடல் நடக்கிறது ‘
வெறுத்துவிட்டான்
கூகுள்  ,………..
கூகுள்  …………
பண்ணி  பார்த்தேன் கிடைக் கவில்ல
 யாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல
Courtesy: http://poovizi.blogspot.in

ஃப்ரம் ஃபேஸ்நூல் :

தேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.

1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை

அட் த டைம் 1 காக்கா கம் அன்ட் அபேஸ் த வடை.

தென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.

ஏ நரி கம் அன்ட் செட்

“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”

தென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.

டொபக்கடீன்னு வடை பெல் டவுன்

த நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே

மாறல்::

“Vadai Poche“

ஆர் யு சிரிச்சிங்???? — feeling Haa Haa Hooo.

Courtesy: https://plus.google.com/111899839791634214271

ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..

ரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..

அதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..

மனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்…? யோசிச்சி பாருங்க…

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,

5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.
அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு
போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம
இறுந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,
5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,
எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.
அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்
விட்டுடுங்கன்னு சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்
எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்
ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த
காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.

இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.
இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்.

Courtesy: Facebook

எளிய முறையில் பெண்களின் மனதை புரிந்து கொள்ள 10 வழிமுறைகள்

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்…!!!!!!

Courtesy: Facebook

ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப் பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப் பார்த்தான்.
அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன் வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.

உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது போல்தெரிகிறதே…” என்றான்.

சர்வர் முதலில் மழுப்பினான். அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.

“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப் பிடித்தான் அவன்.

“சம அளவு சார்!” என்றான் சர்வர்.

“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.

சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு? சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரைதான் சம அளவு. அந்த அளவில் தான் கலப்போம்” என்றான் சர்வர்.

 

Courtesy: Facebook

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்…

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்…
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது…

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி.

”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான்

”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

”என்ன தெனாலிராமா இது ” கேட்கிறார்க்ள..

”பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ”எனகிறான்தெனாலிராமன்…

திருடன் பிடிபடுகிறான்….

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் .அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் .
பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் .
நார்வே ஆளின் துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து அவர் மறுபடியும் விபத்தில் மாட்டினார்.
அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் .
உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .
நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வேகாரர் சொன்னார்,

“‘ங்கொய்யால …. உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது !

FB-படித்ததில் பிடித்தது

பொதுவா நாங்க தினமும் 8.30 மணிக்கு
எங்க ஆபீசை மூடிடுவோம்..

ஆனா நேத்து 9.00 மணி ஆகியும்
ஆபீஸ்ல தான் இருந்தோம்..
IPL Match பாத்துகிட்டு….

” உன்னை விட… இந்த உலகத்தில் ஒசந்தது
ஒண்ணுமில்ல…. ஒண்ணுமில்ல….! ”

( என் மொபைல் ரிங் ஆகுது… என் Wife
கூப்பிட்ட இந்த ரிங்டோன் தான் வரும் )

உடனே எங்க கடை பையன் ஓடி போய்
T.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..!

( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல
” ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்
கிலிகிலியான்னு ” சவுண்ட் வருமே..
மாட்டிப்போம்ல..! )

” ஹலோ… ”

” மாமா… எப்ப வீட்டுக்கு வருவீங்க..? ”

” வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..
ஒரு அரைமணி நேரம்..! ”

” இன்னும் அரைமணி நேரமா..?! ”

( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே
தெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது
என் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்
அதிகம் தான்.. )

” மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே
கெளம்பிட்டீங்க..! கொஞ்சம் நேரம் கூட
வீட்ல இல்ல.. ”

” முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க
வேண்டி இருந்தது.. அதான்..! ”

” இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,
எப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு
இருக்கேன்..! ”

( அடடா.. என் மனைவியோட அன்புக்கு
முன்னாடி இந்த ஐ.பி.எல் எல்லாம்
என் கால் தூசு…! )

” இதோ உடனே வந்துட்டேம்மா… ”

நான் கடை பசங்களை பாத்து..

” இழுத்து மூடுங்கடா ஆபீசை..
நாளைக்கு ஹைலைட்ஸ் பாத்துக்கலாம்..! ”

அவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி
பாத்தானுங்க…

அடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.

” அப்பா “-னு ஓடி வந்து என் ரெண்டு
பசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.

” வந்துட்டீங்களா.! “-னு என் Wife கிச்சன்ல
இருந்து சந்தோஷமா வந்தாங்க…

( “அன்பாலே அழகாகும் வீடு ” – அது இதானோ..!? )

நான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..

” ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..
Temple Run 2 விளையாடணும்.. அதுக்காக
தான் நாங்க ரொம்ப நேரமா Waiting..! ”

” அடப்பாவிகளா..?!! ”

ரசித்த இடம்: http://gokulathilsuriyan.blogspot.in

நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச
நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,

என்னை எழுப்பி…

பயத்துல கட்டிப்பிடிச்சிட்டாங்களா?

.ஊஹூம்… அந்த
மாடல்லே கொலுசு வேணும்னு
கேட்டா..!

ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார்.

குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.

இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான்.

இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார்.முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான்.முனிவர் அவனிடம், சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன்.

இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான்.இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம்

Courtesy: Facebook

செல்வா சிறந்த கடவுள் பக்தர் என்பது நாமறிந்ததே.
சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை நேரம் செல்வா ஒரு சிற்றுண்டிக்கடையில் அமர்ந்து அவித்த முட்டை ஒன்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவும் போதுதான் அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அதுவும் ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதும் ஞாபகத்திற்கு வந்தது.
”ஐயோ! ” வெனத் தலையில் அடித்துக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்கு வந்தார்.தெய்வக்குத்தம் ஆகிவிட்டதேயென்று ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு மிகச்சிறந்த யோசனை தோன்றியது. சந்தோசத்தில் செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தமிழ்ப்பட வில்லன்களைப் போல வானத்தைப் பார்த்து இரண்டு முறையும் பூமியைப் பார்த்து இரண்டு முறையும் சிரித்துவிட்டு ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து “ இன்று நான் இட்டது சைவ முட்டை” என்று எழுதினார்.
பின்னர் பக்கத்தில் குப்பையைக் கிளறிக்கொண்டிருந்த கோழியைப் பிடித்து அதன் காலில் மை தடவி வழுக்கட்டாயமாக அதனை அந்த வெள்ளைப் பேப்பரில் கோழியின் கால் ரேகையைப் பதித்தார்.
அதாவது கோழி அன்று இட்ட முட்டை சைவம் என்று கோழியே உறுதியளித்துள்ளது என்பதே செல்வாவின் யோசனை. அதற்கான சாட்சிதான் இந்தப் பத்திரம்.
பின்னர் வழக்கம்போல அன்று மாலை கோவிலுக்குச் சென்றார். ஆனால் திடீரென்று அவர் முன்னால் தோன்றிய கடவுள் “ முட்டை சாப்பிட்டுட்டு கோவிலுக்குள் வராதே! “ என்று மிரட்டலாகச் சொன்னார்.
“ ஐயனே நான் முட்டை சாப்பிட்டது உண்மைதான், ஆனால் அது சைவ முட்டை. இதோ அந்தக் கோழியே சாட்சியளித்துள்ளது!” என்று அந்தப் பேப்பரைக் கடவுளிடம் நீட்டினார் செல்வா.
அதை வாங்கிப்பார்த்த கடவுள் ஒரு புன்னைகையுடன் சொன்னார் “ லூசு, இது சேவலோட கால் ரேகை!”
ரசித்த இடம்: http://www.selvakathaikal.blogspot.in
செல்வாவின் நண்பர் ஒருவர் செல்வாவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அங்கு அவர் கண்ட காட்சிகள் சிரிப்பினை வரவைத்தன. மேலும் சில இடங்களில் குழம்பியும் போனார்.
வீட்டின் முற்றத்தின் ஒரு பக்கத்தில் கொசுக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் கொசுவின் படம் போட்டு அனுமதி இல்லை என்பதுபோல அதன்மேல் சிவப்புக் கோடு போடப்பட்டிருந்தது. அவர் செல்வாவின் நண்பர் என்பதால் ஒரு பக்கம் இருப்பது படித்த கொசுக்களுக்கான எச்சரிக்கை , மற்றொரு பக்கம் இருப்பது படிக்காத பாமரக் கொசுக்களுக்கான எச்சரிக்கை என்பதைப் புரிந்து கொண்டார்.
அதே போல இன்னும் கொஞ்சம் உள்ளே சென்றவர் அங்கு கண்ட காட்சியால்  சிரிப்பினை அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்துவிட்டார். அங்கு பூனை போன்ற ஒரு வடிவம் செய்து அதன் மேலே எலிகள் ஜாக்கிரதை என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வடிவத்தினை ஒரு எலி தின்றுகொண்டிருந்தது.
” டேய் , உன்னோட பூனைய எலி திங்குதுடா ? “என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
” ச்சே ..அந்த எலிக்கு இருக்குற தைரியம் கூட நான் வளர்த்த பூனைக்கு இல்லையே ! ” என்று சலித்துக்கொண்டார் செல்வா.
” என்ன சொல்ற ? “
” ஆமா இதே மாதிரி இரும்புல எலி மாதிரி பண்ணி இது மாதிரி எதாச்சும் வந்தா பிடிக்கணும்னு நான் வளர்த்த பூனைகிட்ட சொன்னேன் .. அந்தப் பூனை அந்த இரும்பு எலிய கொஞ்சநேரம் கடிச்சுப் பார்த்திட்டு அப்புறம் கீழ போட்டிருச்சு.. இப்ப உண்மையான எலி வந்தா கூட பிடிக்க மாட்டேங்குது ! “
நண்பருக்கு மேலும் சிரிப்பு. அப்பொழுது செல்வா ” அங்க ஒரு மெழுகுவர்த்தி ஏத்தணும் , நான் எவ்ளோ நேரம் முயற்சி பண்ணினேன் ..ஆனா கெட்டுக் கெட்டுப் போகுது . நீ பத்த வச்சுத் தரியா ? ” என்றார்.
” சரி வா ” என்று செல்வாவுடன் அவர் காட்டிய அறையை நோக்கிச் சென்றார். அந்த அறையின் நுழைவாயிலிலும் அதே போல ஒரு பக்கத்தில் ” காற்றுக்கு அனுமதி இல்லை, மீறினால் பலூனில் அடைக்கப்பட்டு பாம் வைத்துக் கொல்லப்படும்” என்று எழுதப்பட்டிருந்தது. இதை படித்ததும் நண்பருக்கு மறுபக்கத்தில் எப்படி எழுதியிருப்பான் என்று ஆச்சர்யம் வந்தது. மறுபக்கத்தில் மோட்டார் ஒன்று பொருத்தப்பட்டு ஒரு குழாயின் மூலம் அதிலிருந்து வந்த காற்றானது அந்த இடத்தில் வெளியேறுமாறு வைக்கப்பட்டு அங்கே அனுமதி இல்லை என்பது போன்ற சிவப்புகோடு போடப்பட்டிருந்தது.
” டேய் என்னடா , இது ? “
” அதான் நான் இங்க மெழுகுவர்த்தி வச்சா வச்சா காத்து வந்து அணைச்சிடுது. அதனாலதான் இப்படி ! “
” அதுக்கு ஏன் இப்படி ? “
” லூசாடா நீ , காத்துக்கு உருவம் இல்லைல , அதுக்கு எப்படி சிம்பல் போடுறது , அதான் ஒரிஜினல் காத்து அடிக்கிற மாதிரி செட் பண்ணிட்டேன் ” என்றார் செல்வா.
” இப்ப மெழுகுவர்த்தி கெட்டுப் போறதுக்கு காரணமே இந்த மோட்டர்ல இருந்து வர்ற காத்துதான் , உன்னப் பார்த்து சிரிக்கிறதா அழுகறதா ? ” என்றவாறு அந்தக் குழாயை பிடுங்கினார்
ரசித்த இடம்: www.selvakathaikal.blogspot.in

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

பெண்: 😐

****************************************

ரசித்த இடம்: G+ இல் Rajagopal SM

காலைல எழுந்திருக்க ரொம்ப லேட் இன்னைக்கு.

அவசர அவசரமா ப்ரஷ் பண்ணிட்டு, ‘சுடுதண்ணி வெச்சிருப்பாங்களே’ன்னு சமையல் அறைக்குப் போனேன்.

நம்ம வீட்ல ஹீட்டர்லாம் கெடையாது. இட்லிப் பானைலதான் சுடுதண்ணி வைப்பாங்க. நல்ல்ல்லா சுடணும், சீக்கிரம் ஆகணும்னு மூடிபோட்டு தண்ணி சுட வைப்பாங்க.

நான் சமையலறைக்குப் போனப்ப, அந்த இட்லிப் பாத்திரம் கொதிச்சுக்கிட்டிருந்தது. ‘ப்பா.. இன்னைக்கு செம்ம குளியல் போடணும்டா’ன்னு அவசர அவசரமா பக்கத்துல இருந்த துணியை எடுத்துப் பாத்திரத்தைப் புடிச்சுகிட்டே பாத்ரூம் போய் வெச்சேன்.

துண்டெடுக்க போறமுன்னாடி வெளாவி வைக்கலாம்னு பாத்திரத்தைத் தொறந்தா…

உள்ள இட்லி வெந்துகிட்டிருக்கு!

மண்டைகாஞ்சு போய் ‘உமா பார்க்கறதுக்குள்ள மறுபடி கொண்டு போய் வெச்சுடணும்டா’ன்னு எடுத்தா, பின்னாடியே நிக்கறாங்க!

——-

கெளம்பறப்ப பூரிக்கட்டையைத் தொடைச்சுட்டு இருந்தாங்க. அநேகமா இன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன் வீட்ல.

G+ இல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர்: பரிசல்காரன் கிருஷ்ணா

RT @maethaavi: பையில் பணமிருக்கும் மனிதனுக்கு இருக்கும் தைரியம், கடவுளுக்கே அதை பிச்சை போட சொல்லுகிறது..
RT @Alexxious: வேலை இடம் சரி இல்லை என்பவர்களே , துப்புரவு பணியாளர்கள் வொர்க் அட்மாஸ்ஃபியர் பார்க்க ஆரம்பித்தால் உலகம் நாறிடும் !!
RT @MissLoochu: மனைவி சீரியல் பார்க்க கணவன் டிவிட்டரில் மொக்கை போட குழந்தை திருதிருன்னு முழிக்கும் உலகமிது
RT @RealRenu: ரகசியம்னு சொல்லிட்டு ஊருக்கே கேட்குற மாதிரி காதுல சொல்ற கலை குழந்தைகளுக்கு மட்டுமே தெரிந்தது !
RT @tamilyouthcafe: மற்றவரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவர்கள் என்பதற்கு சரியான உதாரணம் ERASER

RT @karaiyaan: முதலாவது நமக்கு பெண்ணாக பிறக்கட்டும் – தவறவிட்ட உனது முதலிருபது வருடங்களை அவள் உருவில் கண்டு ரசிப்பேன்!! RT @KaarVannan Superb!
RT @arasu1691: கோபித்துக்கொண்டால் சமைக்காமல் படுத்துக்கொள்வது மனைவி..சமைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வது அம்மா #அம்மா
RT @sweetsudha1: ஒரு வெஜ் பி‌ட்ஸா கொடுங்க! நாலா கட் பண்ணட்டுமா? எட்டா கட் பண்ணட்டுமா? நாலாவே கட் பண்ணுங்க. என்னால எட்டு ‌‌பீஸ திங்க முடியாது
RT @Siva_Buvan: நீ LO LO னு அவ பின்னாடி அலையணும்.. அதுக்கு அவ VE VE VE னு சொல்லிட்டுப் போவா..! #இதாம்லே LOVE!

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6 பாக்கலன்னா பார்த்துருங்க

எங்க கணக்கு வாத்தியார் இன்னைக்கு பயங்கர கடுப்புல வந்தாரு. இப்போ தான்  இடைவகுப்புதேர்வு முடிஞ்சுச்சு. சரி ரொம்ப சொதப்பிட்டோம் போலன்னு மெல்லமா என்னன்னு கேட்டா நம்ம பசங்க எழுதுன சில பதில்களை காமிச்சாரு. ஏன் அவருக்கு கோவம் வந்துச்சுன்னு தெரியல. உங்களுக்கு ஏதாவது புரியுதான்னு சொல்லுங்களேன்

.

.

.

.

.

.

.

.

.

Courtesy: Google images

கையில 15,000 ரூபா இருக்கு
என்ன பண்ணலாம்..?

Fridge-ஐ மாத்திட்டு புதுசு வாங்கலாமா..?

TV-ல விளம்பரம் வர்ற அந்த
புது மாடல் Fridge கூட பாக்க
நல்லா தான் இருக்கு.,

கூடவே Offer-ல ஒரு குக்கர் வேற
தர்றாங்கலாம்..

சரி., நாளைக்கே அதை வாங்கிடலாம்..!

இப்படி சில பேர் டக்கு டக்னு முடிவு
எடுத்துடறாங்க.. இது ரொம்ப தப்பு..!

( ஆமா.., இதுல என்ன தப்பு இருக்கு..? )

” என்ன தப்பு இருக்கா…? சொல்றேன்
நோட் பண்ணிக்கோங்க…! ”

1. 15,000 ரூபா இருக்குங்கறதுக்காக
அதை செலவு பண்ண நினைக்கிறது
முதல் தப்பு.

2. பழசுங்கறதுக்காக நல்லா இருக்குற
ஒரு பொருளை மாத்த நினைக்கிறது
ரெண்டாவது தப்பு.

3. புது Fridge வாங்கணும்னு முடிவு
பண்ணினதும்., உடனே வாங்கிடணும்னு
துடிக்கிறது மூணாவது தப்பு.

4. ” எந்த Fridge நல்லா இருக்குன்னு..? ”
தெரிஞ்சவங்க நாலு பேர்கிட்ட Opinion
கேக்காதது நாலாவது தப்பு.

5. Free-யா வருதேன்னு தேவையில்லாத
குக்கர்க்கு ஆசைப்படறது அஞ்சாவது தப்பு..!

6. Offer-ன்னு சொல்லி தரமில்லாத
Fridge-ஐ வாங்க நினைக்கிறது
ஆறாவது தப்பு..!

இப்படிக்கு..,

வீட்டில் சொல்ல முடியாததை எல்லாம்
தைரியமாக Blog-ல் சொல்லுவோர் சங்கம்..

சேலம் கிளை.

( அவ்வ்வ்வ்….!!! )
.

சேலம் கிளை தலைவர் முகவரி: http://gokulathilsuriyan.blogspot.com

RT @iamkarki: 4வது படிக்கும் போது ஹோம் ஒர்க் பன்ணலைன்னு கவலைப்பட்ட நண்பனிடம், நீதான் ஹாஸ்டலில் இருக்கிறியேன்னு ஆறுதல் சொன்னேனாம். #அம்மா கொசுவர்த்தி
RT @iamkarki: சில பொண்ணுங்க வேலைன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துடுறாங்க. சாக்ஸ கைல போட்டுட்டு ஷூவ கால போட்டுட்டு ஒரு பொண்ணு ஆஃபீஸ் போகுது
RT @Tottodaing: சுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்களின் பணம் முதலீடு?: விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவு # என்ன பாண்டியா!.. இப்டி ஆயிடுச்சே பாண்டியா!
RT @thoatta: வாக்கிங் போன எங்க தெரு பெருசுகளை ஜாக்கிங் ஓட விட்டுக்கொண்டிருக்கிறது காத்து.!
RT @aLLiSweLLsR: குசும்பு NO 1 RT @NforNeil: வறுமை கோட்டை அழிக்கவாவது இனி நம் நாட்டில் அதிக அளவு ‘ரப்பர்’ மரங்கள் வளர்க்கபடவேண்டும்
RT @_santhu: ஜோசியம் பார்ப்போமா மாட்டோமான்னு அவங்களுக்கு ஜோசியம் தெரியாதா?? எதுக்கு ஒவ்வொருத்தரா ஜோசியம் பாக்றிங்களான்னு கேட்டுக்ட்டு
RT @thoatta: எல்லா ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் ஒரு முறை அமைச்சரானா அது தமிழ்நாடு, எல்லா எம்.எல்.ஏக்களும் ஒரு முறை முதல்வரான அது கர்நாடகா
RT @Tottodaing: ஆசைப்பட்டவுடன் கேட்டுவிடுவது, கிடைக்காவிட்டால், அழுதுவிட்டு அத்தோடு மறந்து விடுவது! # நமக்கு இல்லாமல் போயிற்றே…. குழந்தை மனது!
RT @drkvm: RT@iamkarki சைட்டடிக்க வேண்டியது அம்மாவையா பொண்ணையான்னு சந்தேகம் வந்தா உங்களுக்கு வயது 28-30

பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5 பாக்கலன்னா பார்த்துருங்க

கணக்கு என்றாலே நம்மில் பலருக்கு ஆமணக்கு, அதிலும் இவர்கள் சொல்லித்தருவது போல கணக்கு போட்டால் விடை சரியாக வராது…சிரிப்பு தான் வரும்…  வார இறுதி, சிரிச்சுக்கிட்டே  சந்தோசமாக உங்கள் விடுமுறையை ஆரம்பிக்க  இந்த காணொளிகளை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்கிறேன்.

Courtesy: http://adhithakarikalan.wordpress.com

கேள்வி: 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ஓவியர்கள் பற்றி எழுதவும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
பதில்: அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள்!
Back Bench Boyz Rockzzzzzzz 🙂

Courtesy: Vijay Saravanan

ஆமாங்க.சும்மா சும்மா’வ பற்றி எழுதிய பதிவ சும்மா படிங்க.என்ன இத்தன ‘ சும்மா’ன்னு பாக்கீறீங்களா?.இது ‘சும்மா’ என்ற வார்த்தையை பற்றிய பதிவு.
‘சும்மா’ என்கிற வார்தைக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு.அதைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம்.

·         ஒருவனிடம் “இன்னிக்கு முழுவதும் வீட்டில் என்ன செய்தாய்?”என்று கேட்டால் அவன் கூறுவான் “சும்மாதான் இருந்தேன்.” என்று.அப்படியென்றால் “சும்மா” என்பது இங்கு எதையுமே செய்யாமல் வெட்டியாக இருந்ததை குறிக்கிறது.
·         ஒருவன் ஒரு பெண்ணை உற்று பார்த்துக்கொண்டே இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அந்த பெண் அவனிடம் “எதுக்கு என்னை பார்த்தாய்?” என்று கேட்டால் அவன் கூறுவது “சும்மாதான் பார்த்தேன்” என்பதாகத்தான் இருக்கும்.இங்கு அவன் அந்த பெண்ணிடமிருந்து தப்பிக்க ஏதோ கூறவேண்டுமென்று ‘சும்மா’என்கிறான்.
·         “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டால் அதற்கு மற்றொரு கேள்வியை கேட்பீர்கள் “எதற்காக கேட்கிறாய்?”என்று.அதற்கு ஒரு சிலர் “சும்மாதான் கேட்கிறேன்” என்று பதில் அளிப்பார்கள்.இங்கு ‘சும்மா’ என்றால் ‘தெரிந்து கொள்ள’ என்ற அர்த்ததில் வருகிறது.
·         “என்ன பன்ற?”
“சும்மா,படிச்சுக்கிட்டு இருக்கேன்”
இங்கு ‘சும்மா’ என்பது கருத்தோடு ஒரு செயல் செய்வதை குறிக்கிறது.
·         “என்ன திடீரென்று என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்?”
“சும்மா,இந்த பக்கம் வேலை இருந்தது.அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்”
இங்கு ‘சும்மா’ என்பது எதேர்ச்சையாக நடைபெற்ற செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
·         “நேர்க்காணல் என்னவாயிற்று?”
“வழக்கம் போலதான்.வேலை கிடைக்காது என்று தெரியும்.சும்மாதான் போயிட்டு வந்தேன்.”
இங்கு ‘சும்மா’ என்பது நடக்கப் போவதை தெரிந்துகொண்டே செய்வதை குறிக்கிறது.
·         “புது பேனாவா?”
“ஆமாம்.இந்த புத்தகத்தை வாங்கும்போது சும்மா கெடச்சுது.”
‘சும்மா’ என்பதற்கு ‘இலவசம்’ என்றும் பொருள் வருகிறது.
·         “இந்த குழந்தை சும்மா சும்மா அழுவுது” என்று நாம் கூறுவதுண்டு.இங்கு ‘சும்மா சும்மா’ என்றால் ‘அடிக்கடி’ என்று பொருள்படுகிறது.
·         “சும்மா இருக்கிறவனை ஏண்டா வம்புக்கு இழுக்குற?”
‘சும்மா’ என்றால் வம்புக்கு போகாமல் தன் வேலையைப் பார்த்தால் என்பது அர்த்தம்.
·         வகுப்பறையில் வாத்தியார் “எல்லாம் பேசாம சும்மா இருங்க” என்றால் அமைதியாக இருங்கள் என்று அர்த்தம்.
·         யாராவது உங்களை தொந்தரவு செய்துகொண்டிருந்தால் “கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறாயா?” என்று கேட்போம்.அதாவது “என்னை தொந்தரவு செய்யாதே” என்பதற்கு மாற்றாக அதை கேட்கிறோம்.
·         “அந்த பையில ஏதாவது இருக்கா?”
“இல்ல.சும்மாதான் இருக்கு.”
அதாவது காலியாக இருக்கிறது.
·         வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர் உங்களுக்கு எதுவும் எடுத்து வரவில்லை என்றால் “வெளிநாட்டிலிருந்து வருகிறீர்கள்.சும்மாவா வருவது?” என்று கேட்போம். ‘சும்மா’ என்பது வெறும் கையோடு வந்ததை குறிக்கிறது.
·         “அய்யோ! பாம்பு!”
“அய்யோ! எங்க?”
“ஏய்! பயந்துட்டியா? சும்மா சொன்னேன்.”
‘சும்மா’ என்பது ‘பொய்’ என்று பொருள் தருகிறது.

இந்த மாதிரி ‘சும்மா’ என்ற வார்த்தை நேரம் மற்றும் இடத்திற்கு தகுந்தாற்போல் தனது அர்த்தத்தை மாற்றிக்கொள்கிறது.‘சும்மா’பற்றி இன்னும் எழுதவேண்டும் என்றால் சும்மா எழுதிக்கிட்டே போகலாம். ஆனா உங்களுக்கு கடுப்பாகுமே!
அப்புறம் ஏன் இத எழுதினேன்னா கேக்கிறீங்களா? அது ஒன்னும் இல்லைங்க.நானும் வீட்டில சும்மாதான் இருக்கேன்.அதான் சும்மா எழுதினேன்.
சும்மா உக்காந்து யோசிச்சது: http://tamilcrazy.blogspot.in

இவங்க ஏன் இப்படி வண்டி ஓட்டுறாங்க தெரியுமா?

இப்போ

இப்போ  இப்போ

இன்னும் கண்டு பிடிக்க முடியலையா?

அவங்க கிட்ட ரெண்டு சக்கர வாகனம் ஓட்ட தான் licence இருக்காம். அதான்

courtesy: http://www.funtoosh.com

கோழிப்பண்ணை வச்சார் சர்தார்ஜி! முதல்ல 100 கோழிக்குஞ்சுகளோட ஆரம்பிச்ச சர்தார் விரைவிலேயே இன்னொரு 100 குஞ்சுகளுக்கு ஆர்டர் குடுத்தாரு..! அடுத்த மாசமே இன்னொரு 100 வாங்கினாரு!

சப்ளை பண்றவர்: என்ன சிங்கு..? வியாபாரம் எகிறுது போலருக்கு…?

சர்தார்ஜி: எங்கே..? எல்லா குஞ்சும் செத்து செத்து போகுது…!

சப்ளை பண்றவர்: என்னது..? செத்துடிச்சா..? தண்ணியெல்லாம் காமிச்சியா…?

சர்தார்ஜி: அதெல்லாம் சரியாதான் செஞ்சேன்! மண்ணு தான் சரியில்லேன்னு நெனைக்கிறேன்…!

சப்ளை பண்றவர்: என்னது? மண்ணா..?

சர்தார்ஜி: ஆமாம்.. ரெண்டு அடி ஆழத்துல பொதைச்சாலும் கோழி முளைக்க மாட்டேங்குது…! அரை அடி ஆழத்துல பொதைச்சாலும் முளைக்க மாட்டேங்குது…!

சப்ளை பண்றவர்: தலைசுத்தி விழுந்தான்!

ஏன்னா…, சர்தார் முதலில் வச்சிருந்து விவசாயப் பண்ணை!

courtesy: http://eutamilar.eu

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாது அப்பா
இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு?
நீதி: சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை.

ஆங்கில மூலம்: http://rammalar.wordpress.com

சமீபத்தில் திருமணமான உயிர் நண்பன், படத்துக்கு கூப்பிட்டாக் கூட ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுனான். இடையில இடையில அவன் மனைவியோட சிரிப்புக்குரல் வேற கேட்டுச்சு. ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடுறானேனு, டவுட்டோட,

“ஏன்டா ஸ்பீக்கர் போட்டு பேசுறியாடா?”னு கேட்டேன்.

“இல்லையே”ன்னான்.

“ம்.. சரி சரி..  அப்புறம் மச்சி.. பழைய ஃபிகர் சுப்ரபா கூட இன்னும் கான்டாக்ட் இருக்காடா?”ன்னு ஒருவார்த்தைதான் கேட்டேன்.

அப்ப கட் ஆன கால்தான்.

# பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு

Courtesy: http://valaimanai.blogspot.in

தொப்பி வியாபாரி.. குரங்குகள் தொப்பி தூக்கிக் கொண்டு ஓடின.. வியாபாரி தான் போட்டிருந்த தொப்பி கீழே போட்டார் எல்லாக் குரங்குகளும் தொப்பியைத் தூக்கி எறிந்தன.. இப்படியான படக் கதை எல்லோருமே சின்ன வயசிலே பாடப் புத்தகத்திலே படித்திருப்போம்

ஏன் குரங்கு இப்படி செய்ய வேண்டும்

சார்லஸ் டார்வின் ஒருதரம் குறிப்பிட்டாராம் : யாராவது ஜேவலின் த்ரோ போட்டியில் வேலை எறிவதைப் பார்க்கும் போது, நம்மை அறியாமல், நாமும் முட்டியை அவர் போலவே செய்வதுண்டு, அதே போல் கத்திரிக்கோலை வைத்து யாராவது எதையாவது வெட்டும் போது, அதைப் பார்ப்பவரின் தாடை இறுகியும் பின்னர் தளர்வதுமுண்டு

சினிமாவிலே வரும் உணர்ச்சிக் காட்சிகளில், பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வருவது

Giacomo Rizzolatti என்பவரின் ஆராய்ச்சிகளைப் பற்றி வாசிக்க நேர்ந்தது ( உபயம் : The Tell Tale Brain என்ற புத்தகம்… இந்தப் புத்தகத்தை நாலு தரம் முழுசாக வாசித்து விட்டேன்.. அங்கிருந்து மேலும் வாசிக்க வேணும் என்பதான சங்கதி Giacomo Rizzolatti பத்தினது)

மிரர் நியூரான் என்பதைக் குறித்த இவரது ஆராய்ச்சி, தொடர் ஆராய்ச்சி அதன் விபரங்கள் ரொம்பவுமே வசீகரிக்கிறது

Giacomo Rizzolatti பத்தின விபரம் ( போன் நம்பர் , இமெயில் ஐடி உட்பட http://www.unipr.it/arpa/mirror/english/staff/rizzolat.htm இங்கே சிக்குகிறது)..

இங்கே அவரின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பிடிஎப் கிடைக்கிறது

“அப்படி என்ன கண்ணு விரிய இத்தனை காலங்கார்த்தால எழுந்து எல்லார் தூக்கமும் கெடுத்து லைட் போட்டுண்டு படிச்சாறது”

ரொம்ப ஆர்வமாக என் கேட்ட என் மனைவிக்கு விளக்கம் சொன்னேன்

“எனக்கு இப்போது டீ வேண்டும்,, எதோ பொஸ்தகம் அலமாரிலேர்ந்து எடுத்து வரச் சொல்லப் போறன்.. இது மாதிரி என் இன்டென்ஷன் எல்லாம் என்னோட ஆக்டிவிடிலேர்ந்து உன் மூளைல இருக்கிற மிரர் நியூரான் பண்றதாம்.. மிரன் நியூரான்ன்னா என்னான்னா…… ” நல்ல விளக்கமா சொன்னேன்

“எல்லா பொண்ணுங்களுக்கும் அப்படின்னா இந்த மாதிரி மிரர் நியூரான் ஜாஸ்தி இருக்குனு சொல்லுங்கோ”

“அது தெரியலம்மா ஆனா ராமசந்திரன் பொஸ்தகத்திலே வேற மாதிரி போட்டிருக்கு”

“என்ன போட்டிருக்கு”

“மனுஷாளை விட சிம்பன்சி, ஒரங்குட்டான் மாதிரி பிராணிகளுக்குத் தான் மிரர் நியூரான் ஜாஸ்த்தியாம்”

எனக்கு ரிஃப்ளெக்ஸ் போதவில்லை.. வேகமாக எறியப்படும் கரண்டி முன் நெற்றியில் படாமல் விலகிக் கொள்ளத் தெரியவில்லை

Courtesy: G+ Chandramowleeswaran. V

ஒருத்தன் இண்டர்வ்யூ போனானாம். ஆஃபீஸர் டேபிள்மேல துப்பாக்கிய வெச்சு, ‘நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை’ன்னாராம்.

”பொண்டாட்டியக் கொன்னு, கிடைக்கற வேலை வேணாம்”ன்னுட்டு போய்ட்டான் அவன்.

ரெண்டாவது வந்தவன்கிட்டயும், ஆஃபீஸர் அதையே -நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை – சொன்னார். அவன் துப்பாக்கிய எடுத்துட்டு நேரா அந்த ரூமுக்குப் போனான். அங்க அவனோட மனைவி நின்னுட்டிருந்தாங்க. அவங்க முகத்தைப் பார்த்ததும் மனசு மாறி, துப்பாக்கியை ஆஃபீஸர்கிட்டயே குடுத்து ‘போய்யா – நீயும் உன் வேலையும்’ன்னுட்டுப் போய்ட்டான்.

மூணாவது ஒருத்தன் வந்தான். அவன் பொண்டாட்டி, நெக்ஸ்ட் ரூம்ல இருந்தாங்க. அவன்கிட்டயும் ஆஃபீஸர் அதைச் சொன்னார். அவன் துப்பாக்கியத் தூக்கீட்டு அந்த ரூமுக்குப் போனான்.

கொஞ்ச நேரத்துல அந்த ரூம்லேர்ந்து அவனோட மனைவி ‘ஐயோ.. அம்மா’ன்னு அலர்ற சத்தம்.

ஆஃபீஸர் ஓடிப் போய்ப் பார்த்தார். மனைவி தலைல ரத்தம் ஒழுகுது. வந்த ஆஃபீஸர் ஓடிப்போய்த் தடுக்க, அவன் சொன்னான்:

“சார்…. கொல்லச் சொல்லீட்டு உள்ள புல்லட் வைக்காம குடுத்துட்டீங்க. அதான் திருப்பிப் போட்டுச் சாத்தீட்டிருந்தேன்

Courtesy: பரிசல்காரன் கிருஷ்ணா in G+

பிரான்ஸ் நாட்டில உள்ள ரெண்டு நண்பர்கள் நீண்ட நாளைக்கு அப்புறமா சந்தித்திருக்கிறாங்க. “காட்டான் அண்ணே, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு” அப்படீன்னு துஸிப் பையன் சொல்லியிருக்கான். பதிலுக்கு காட்டானும் ஆமாங்க, “ரொம்ப நாளாச்சு துஸியந்தன்” அப்படீன்னு பேசியிருக்காரு.
“அப்படீன்னா வாங்கண்ணே, காப்பி சாப்பிட்டு பேசுவோம்”என்று எதிர்த்தாப்பில இருந்த காப்பி சாப் பக்கமா கையை காண்பித்து கேட்டிருக்காரு துஸி.
“இல்ல தம்பி, நான் வீட்டிற்கு போற டைம்மாகுது” அப்படீன்னு சொல்லி நழுவப் பார்த்திருக்காரு காட்டான்.
“ரொம்ப நாளைக்கு அப்புறமா பார்த்திருக்கோம். சொல்லுங்கண்ணே,ஒங்க வீட்டுக்காரங்க, புள்ளைங்க எல்லோரும் சௌக்கியமா இருக்காங்களா?” அப்படீன்னு கேட்டிருக்காரு துஸி.
“நான் வீட்டிற்கு போகனும்”, அப்படீன்னு மறு மறுபடியும் சொல்லியிருக்காரு காட்டான்.

இதனால ரொம்பவே கடுப்பான துஸி, “என்னங்க அண்ணே! ரொம்ப நாளைக்கு அப்புறமா ரெண்டு பேரும் மீட் பண்ணியிருக்கோம். வீட்டிற்கு போக துடிக்கிறீங்க. வீட்டில ஏதாச்சும் விஷேசங்களா?” அப்படி கேட்டிருக்காரு. ”விஷேசம் ஒன்னுமில்லை.என் பொண்டாட்டி சாப்பிடாம எனக்காக காத்திட்டிருப்பா” அப்படீன்னு சொல்லியிருக்காரு காட்டான்.
“அடடா! கையை கொடுங்க சார்! இந்தக் காலத்தில இப்படி ஒரு பொண்டாட்டியா! அதுவும் கணவன் வரும் வரைக்கும் காத்திருந்து சாப்பிடுற பொண்டாட்டியா!” ஆச்சரியமா இருக்கே! என்று துஸியும் காட்டான் சாரைப் பத்தி பெருமையா பேசியிருக்காரு.
“அடப் போங்க தம்பி!அவங்களாச்சும் எனக்காக சாப்பிடாம காத்திட்டிருப்பதாவது. நான் போய் தான் அவங்களுக்கே சமைச்சு போடனும்” அப்படீன்னு சொன்னாரு காட்டான்.

Courtesy:  www.thamilnattu.com

ரங்கமணி: “இன்னிக்கி சமையல் என்ன பண்ணப் போறே?”
தங்கமணி: “நீங்க சொல்றதப் பண்ணீட்டாப் போச்சு.”
ரங்கமணி: “பருப்பும் சாதமும் பண்ணீடு.”
தங்கமணி: “நேத்து ராத்திரி தான் பருப்பும் சாதமும் சாப்டீங்க.”
ரங்கமணி: “காலிஃப்ளவர், உருளைக் கிழங்கு கூட்டு?”
தங்கமணி: “கொழந்தைங்களுக்கு அது புடிக்காதே.”
ரங்கமணி: “அப்போ பூரியும் சோளேயும் பண்ணு.”
தங்கமணி: “பூரி சோளே எனக்கு ஒத்துக்கறது இல்லீங்க. ஜீரணமாக மாட்டேங்குதுங்க.”
ரங்கமணி: “முட்டெக்கறி எல்லருக்கும் புடிக்குமே? அதெப்பண்ணு.”
தங்கமணி: “இன்னிக்கி வியாளெக் கெளெமெயாச்சே. எனக்கு விரத நாளு இல்லியா? முட்டெக் கறி எப்படிங்க பண்ணறது?”
ரங்கமணி: “பரோட்டா பண்ணீடேன்.”
தங்கமணி: “ராத்திரிலெ போய் பரோட்டாவா?”
ரங்கமணி: “அப்போ ஹோடல்லேந்து எதுனா வர வழிச்சுடலாம்.”
தங்கமணி: “தினோம் ஹோட்டல் சாப்பாடு வாணாங்க.”
ரங்கமணி: “பின்னெ மோர்க்குழம்பு சாதம் பண்ணீடு.”
தங்கமணி: “தயிர் இல்லியே.”
ரங்கமணி: “இட்லி சாம்பார் பண்ணு.”
தங்கமணி: “அதெப்படிங்க? திடீல்னு சொன்னா இட்லி பண்ண முடியும்? மொத நாளே மாவு அரைச்சு வெச்சாதாங்க இட்லி பண்ண முடியும். இல்லேன்னா அரைச்ச மாவு சாயங்காலமே வாங்கிட்டு வந்திருக்கணும்.”
ரங்கமணி: “மேகீ நூடுல்ஸ் பண்ணீடு.”
தங்கமணி: “நூடுல்ஸ் ஒரு சாப்பாடுங்களா? வயிறு ரொம்பாதுங்களே.”
ரங்கமணி: “அப்பொ என்னதான் பண்ணப் போறே ராத்திரிக்கி சமையல்?”
தங்கமணி: “நீங்க என்ன சொல்லுறீங்களோ அதைப் பண்ணுறேங்க.”

ரங்கமணி: “*?*?*?*? (மனதுக்குள்: கஞ்சி வரதப்பா… கஞ்சியாவது வருமாப்பா?)”

G+ டொனால்ட் ராபர்ட் பகிர்ந்தது

நாட்டில எல்லாரும் பொட்டி தட்டுரவங்கள பத்தி திட்டி கிட்டே இருக்கீங்க. பொட்டி தட்டுரவங்க வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கு தெரியுமா?

நம்ம Google கிட்ட கேட்டப்போ கொடுத்தாரு இந்த படங்களை

போன சனிக்கிழமை என் பையன்
ஸ்கூல்ல Parents Meeting..

ஓவ்வொரு Parents Meeting-மே
ஒரு கண்டம் தான்..

ஸ்கூலுக்கு போன உடனே
எங்க பையனோட க்ளாஸ் மிஸ்ஸு
கண்ணுல சிக்கிட்டோம்..

உடனே அவங்களும் என் பையனோட
அருமை ( ?! )., பெருமைகளை (?! )
மூச்சு விடாம பேச ஆரம்பிச்சிட்டாங்க..

” உங்க பையனை என்னால Control
பண்ணவே முடியல சார்..! ”

” ஏன் மேடம்..?! என்ன ஆச்சி ”

” 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல
உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே
தாவிட்டே இருக்கான்..

2. பக்கத்துல இருக்குற பசங்களை
க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா
தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்…

3. திடீர்னு எந்திரிச்சு ” டவுட் மிஸ்னு ”
Subject-க்கு சம்பந்தமே இல்லாம
எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்..

4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!

5.அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறான்..!

நான் என்னதான் சார் பண்றது..?!! ”

” உஸ்ஸப்பா.. Same Complaint..! ”

” Same Complaint-ஆ..? என்ன சார்
சொல்றீங்க..?! ”

” டீச்சர் மாறிட்டாங்க.. ஆனா
Complaint மட்டும் மாறலைன்னு சொல்ல
வந்தேன்..! ”

” ஓ.. போன வருஷம் 3rd Std மிஸ்ஸும்
இதே தான் சொன்னாங்களா..?! ”

” ஹி., ஹி., ஹி… இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! ”

” ??!?!?!!! ”
.

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் “உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?”அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர்  மதித்து வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. “”புரியவில்லை” என்றேன்.

“என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன்.  நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.”
மீண்டும் “புரியவில்லை” என்றேன்.”நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவு செய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்.”
 “உன்னுடைய பங்கு என்ன?” என்றேன்.
“பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறவேண்டும், அமெரிக்கா ஈரான்மீது தாக்குதல் நடத்த வேண்டும், அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் இது போன்ற பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன்.இதற்கு என் மனைவி எப்பொழுதும் இதற்கு மறுத்துப் பேசுவதே இல்லை….!!!!!!”

பொருட்களை பாதுகாக்க நம் மக்கள் என்ன எல்லாம் செய்வாங்க தெரியுமா?








படங்கள் உதவி: http://chellakirukkalgal.blogspot.com

டேய் !நான் உன்னை என்ன வாங்கிட்டு வரச்சொன்னேன் …..
ஷூ வாங்கிட்டு வரச்சொன்னிங்க….
எத்தனை ஷூ வாங்கிட்டு வரச்சொன்னேன்
ரெண்டு ஷூ
ரெண்டு வாங்கிட்டு வரச்சொன்னேனா ,ஒண்ணு இங்கே இருக்கு ,இன்னொரு ஷூ எங்கே
அதாண்ணே இது……..
டேய் ! !!!!!??????????????

courtesy: http://haasya-rasam.blogspot.com

“என்னங்க?”

“சொல்லு…” என்றேன் டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே

தான் பேசுவதை நான் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து

டிவிய ஆப் பண்ணினாங்க

“ஐயோ… ஏய் ஏய்… ரிமோட் குடு தங்கம்… ” என பதறினேன் 

“வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு… நான் சொல்றத

காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்…”

“காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்… மொதல்ல ரிமோட் குடு”

“நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்… அப்புறம் நீங்க தாராளமா பாருங்க… எங்க…” என தங்கமணி

ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த நான் 

“தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா… இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ்

பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்… கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு

மறுபடி போட்டுருக்கான்… ரிமோட் குடு” என நான் பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க

(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும் கேட்டீங்கன்னா உங்கள சாம்பல்

பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்…:)))))

இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு “சரி சொல்லு… என்ன விசயம்?” னேன்.

“எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல..”

“ம்… இருக்கா இருக்கா… அவளுக்கென்ன இப்போ…” என்றேன் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே

“அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்… எங்கம்மா போன் பண்ணினாங்க…

போய் பாத்துட்டு வந்துடலாம்”

“இப்பவா…?” என பயந்து போய் கேட்டேன், எனக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை

“இல்ல… இப்ப நேரமாய்டுச்சு… நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க…

போயிட்டு வந்துடலாம்” “நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன… மொதல்ல ரிமோட் குடு”

என டென்ஷன் ஆனேன். “நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல”

“சரி வரேம்மா… ரிமோட் குடு” என்றேன் பொறுமை இழந்தவனாய்.

“ச்சே… ’16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு’ டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு….

சகிக்கல” என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி

தங்கமணி சொல்வது என்காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்… ரிமோட் கையில் கிடைத்ததும்

டிவியில் முழ்கினேன்.

*************************

ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு என் சுயநினைவுக்கு வந்தேன்.

அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி என் பக்கத்துல வந்து உக்காந்தாங்க

“ஏங்க….?” என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க

“என்ன தங்கம்?” என திகிலாய் விழித்தேன். 

“அது… உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்…” என தங்கமணி சிரித்து கொண்டே கூற

“அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே… கன்னிகாதானமா” என முணுமுணுத்த

நான், தங்கமணி முறைப்பதை பார்த்ததும் சமாளிப்பாக “அது…. உன்னை போல ஒரு புத்திசாலிய

சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்… ” என்றேன் 

“சரி… என்னை நல்லா பாருங்க…” என தங்கமணி அன்போடு கூற

“ஐயயோ… என்னாச்சு தங்கம்…” என பதறினேன்.

“என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்…” என சவால் பார்வை

பார்த்தார் தங்கமணி

“அடக்கடவுளே… தங்கம்… வேண்டாம் இந்த சோதனை… இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா

எதாச்சும் சமைப்பியே…அது வேணும்னாலும் செஞ்சு குடு… சத்தமில்லாம சாப்பிடறேன்…”

என டெர்ரர் ஆனேன்.

“இங்க பாருங்க… நீங்க சொல்லித்தான் ஆகணும்… அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்…”

என்றார் தங்கமணி தீர்மானம் போல்

“ஐயோ… யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி…”என முதலில் விழித்த நான் பிறகு “அடடா…

இவ மூஞ்சில தான் முழிச்சேனா…. ஹும்… ” என முணுமுணுத்தேன்,  “சரி சரி…சொல்றேன்”

என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தேன்.


என்ன இவ்ளோ யோசனை…சட்டுன்னு சொல்லுங்க… என்ன மாற்றம்…” என தங்கமணி அவசரப்பட
“இரும்மா… தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்” என டென்ஷன் ஆனேன்.
“சரி சரி…சீக்கரம்…” என்றார் தங்க்ஸ்”ம்… ஆ… கண்டுபிடிச்சுட்டேன்… ” என்றேன்.
பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா
பாத்துக்கோங்களேன்” சொல்லுங்க சொல்லுங்க… ” என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும்
“அது… நீ கம்மல் போட்டு இருக்க” என  நான் பெருமையாய் கூறவும்”பின்ன இதுக்கு முன்ன
கமண்டலமா போட்டிருதேன்” என தங்கமணி முறைக்க

“இல்லம்மா… வேற மாதிரி தானே போட்டு இருப்ப” என தப்பிக்க பார்த்தேன்.

“அதெல்லாம் இல்ல… நான் சொன்ன மாற்றம் வேற…கண்டுபிடிங்க” என்றார் தங்கமணி விடுவென என

“அதில்லையா… ஹும்… வேற என்ன…?” என மீண்டும் வசீகரன் ஆனேன் நான்.

கொஞ்சம் நேரம் யோசித்த பின்  “அடப்பாவமே…உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ

டீப்பா பாக்கலையே தங்கம்…எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்…” என தங்கமணியை பாவமாய் பார்க்க

ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி “சரி விடுங்க… உங்களுக்கு இதெல்லாம் வராது” என எழுந்து

போய் விட்டார்

“அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்” னு ரொம்ப

ஹாப்பி ஆனேன், பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா…!!!)

கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி “ஏங்க… கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே…”என கேள்வியை முடிக்கும் முன்

“ஆமா…நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே…  என்ன அழகு இல்லையா தங்கம்” என முகம் எல்லாம்

பூரிக்க கேட்டேன் நான். பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி “ஆமா ஆமா…

அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க” என வலை விரித்தார்

“ஆமாம் தங்கம்… அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்” என தங்கமணி எதிர்பார்த்தது

போல் வலையில் விழுந்தேன் “அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?” என தங்கமணி குழியை ஆழமாய்

தோண்ட தன் அபிமான நடிகை பற்றி தங்கமணி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான நான்

“என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா… நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்… ப்ளாக் பேன்ட் …

நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்”

“ஆமா ஆமா…சூப்பர்… அது சரி… அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?”

“என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ… கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார்

டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு…நடுல கூட ஒரு ஸ்டோன்

கூட இருந்ததே, நீ பாக்கலையா” என நீட்டி முழக்கினேன்.

அடுத்த கணம் தங்கமணி “நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என கண்ணை கசக்க,

அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த நான் “ஐயயோ…என்னாச்சு தங்கம்” என பதற

“யாரோ ஒரு நடிகை… அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்… அந்த சிறுக்கி… அவ கம்மல்,

டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து

ஒரு மணி நேரம் கழிச்சு கூட… உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்… எப்பவும் வட்ட பொட்டு

வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு

ஆசையா கேட்டா… ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல…

நான் போறேன்… எங்க அம்மா வீட்டுக்கே போறேன்” என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே

உள்அறைக்குள் சென்றார்

நான் என்ன செஞ்சேன்னு சொல்லி தான் தெரியணுமா… வழக்கம் போல “சொந்த செலவுல சூனியம்

வெச்சுக்கிட்டனே”னு பீலிங்ல இருக்கேன். ஹையோ ஹையோ…:)))

“குழந்தை பாவம்….”

“அதை ஏண்டி திட்டுற…”
உனக்கு கொஞ்சமாவது புள்ளைய வளர்க்க தெரியுதா?  என்று எங்க வீட்டு ப.சிதம்பரம், அதாங்க.. எங்க வீட்டு home minister என் பொஞ்சாதி.. அவளை தான் இப்படி ஒரு கேள்வி கேட்டு திட்டினேன்.  பின்ன என்னங்க…எப்ப பாத்தாலும்   ஜெயலலிதாவிடம்  அடிவாங்கி கூட்டணியை விட்டு வெளியே  தலைதெறிக்க ஓடி வர்ற  வைகோ,   விஜயகாந்த்  மாதிரி, நான் பெத்தெடுத்த   பயபுள்ள,  அவன் அம்மாகிட்ட அடிவாங்கிட்டு  வீல்ல்ல்ல்ல்…னு கத்திகிட்டே  வீட்டுக்கு வெளியே ஓடி வந்தாங்க…  எனக்கு உயிரே  போச்சுங்க..   என்ன இருந்தாலும் நான் பெத்தெடுத்த புள்ள இப்படி அழும்போது எனக்கு செம கோவம் வந்துடுங்க… இன்னைக்கு எனக்கு தாங்கமுடியாம தான் இப்படி கேட்டுட்டேன்…
வழக்கம் போல நாம கோவமா கேள்வி கேட்டா பிரதமர் ஆயிடுவா.. ஒரு பதில் கூட வராது.. இத்தனை தடவை  கலைஞரா அமைதியா இருந்த நான் இந்த தடவ அன்ன ஹசாரே மாதிரி திரும்ப திரும்ப கேட்டேன்ங்க… ஒரு பதில் தாங்க சொன்னா.. எனக்கு பெரிய தன்மான பிரச்னையாகி போச்சு..
“உங்க புள்ளைய ஒரு மூணு மணிநேரம் சமாளிச்சி பாருங்க….” அப்போ தெரயுமுன்னு” சொன்னா பாருங்க…
அட நம்ம ஆபீஸ்ல நாம எத்தன பயபுள்ளைங்கள சமாளிக்கிறோம்… இந்த மூணு வயசு புள்ளைய சமாளிக்க மாட்டோமான்னு”…. அவளை கூட்டிட்டு கிளம்பிட்டேங்க.. மாலை ஆறு மணி இருக்கும்..
என் பொண்ணுக்கு பைக் னா உசுருங்க… அவளுக்கு அழகா டிரஸ், தொப்பி, செருப்பு எல்லாம் போட்டுவிட்டு, முன்னாடி உக்கார வச்சிக்கிட்டு ஸ்டார்ட் பண்ணிட்டு கேட்டேன்.. “பாப்பா எங்க போகலாம்..”
 “பீச்க்கு போலாமா?”.. என்று என்னை பார்த்து சிரித்தாள்.  ஓகேனு சொல்லி சிரித்தேன் என்னோட பைக் பீச் நோக்கி பறந்தது….
சிக்னலில் ரைட் எடுக்கணும்.. ரைட்ல இன்டிகேடர் போட்டுட்டு திரும்பி போகும்போது.. பின்னாடி வந்த ஆடோகாரன் .. சாவு கிராக்கி… left இன்டிகேடர் போட்டுட்டு right ல போறான் பாருனு என்ன திட்டிட்டான்.. எனக்கு கோவம் தலைகேறியது… என்னடானு  பாத்தா என் பயபுள்ள இன்டிகேடர் பட்டன்ல கை வச்சிக்கிட்டு.. டிக்…டிக்..னு விளையாடிகிட்டு இருக்கு…
கண்ணா அத தொட கூடாது.. ஆட்டோ மாமா, அப்பாவ எப்படி கேவலமா திட்டிட்டு போறாரு பாருனு .. செண்டிமெண்டா பேசினேன்.. நம்ம பொண்ணாச்சேசொன்னதும் புரிஞ்சிக்கிட்டு மண்டைய ஆட்டுனா. அப்பா fast ஆ போங்கப்பா என்றாள்… நம்ம சொன்னத அவ கேட்டா.. அவ சொல்றத நம்ம கேக்கலாமேனு.. வண்டி அறுபதை தொட்டு பறந்தது.. அய்யா..ஜாலி…..னு என் பொண்ணு என்னை பெருமையா பாத்தான்… இப்பவும் நான் என் பொண்டாட்டிய திட்டிட்டே போனேன்.. புள்ளைய வளர்க்க தெரியுதா அவளுக்கு…
அவளை நினைத்ததும் அறுபது எழுபதானது…அடுத்த நொடி..அப்படியே அவள் தொப்பி பறந்து என் முகத்தில் ஒட்டி கொண்டது… எனக்கு ஒன்னும் தெரியாமல்.. மெதுவாக பிரேக் போட்டு…நான் நிறுத்தும்முன்பே ஒரு “டமார்” சத்தத்துடன் நின்றது… முன்னே ஸ்விப்ட் கார் லைட் காலி… உள்ளே இருந்து ஒரு ஆள் என்னிடம் பேசும்முன்பே 500 ருபாய் நோட் ரெண்டை எடுத்து நான் நீட்ட.. மனிதர் என் நிலை உணர்ந்து வண்டியை எடுத்தார்… அங்கிருந்து கிளம்பிவிடலாம்னு வண்டிய எடுத்து கொஞ்ச தூரம் போன பிறகு.. என் புள்ள அழ ஆரம்பித்தது… என்ன என்று கொஞ்சம் கோபமுடன் நான் கேட்க.. என் தொப்பி வேணும்ம்ம்ம்ம்ம்ம்….ஒரே கத்தல்.. அவ தொப்பியை காணோம்… சரிடா செல்லம் வாங்கிக்கலாம்..புதுசா… இப்படி ஏதோ சொல்லி சமாளிச்சு.. அவ வாயை மூடினேன்..
பெசன்ட் நகர் பீச் வந்ததும்.. ஒரு சூப்பர் ஆன்டி எதிரே வரவும்.. அப்பா அது யாருன்னு கேட்டா. நான் என் மனைவி பக்கத்தில் இல்லாததால் “உங்க சித்தி”டா  செல்லம்னு சொல்ல, அவன் இல்லப்பா… அது எங்க மிஸ் என்றாள். இல்லடா சித்தி தான்டா என்றேன்.. உடனே என் கையை விட்டு விலகி அந்த ஆன்டி அருகே ஓடினா. நான் உடனே அவளை இழுக்க ஒடும்முன்,   “நீங்க எனக்கு மிஸ்ஆ? .. இல்ல சித்தியா?” னு கேட்க.. அவங்க “ஐ ஆம் யுவர் மிஸ் ஒன்லி”னு சொல்லிவிட்டு என்னை பார்த்து முறைத்துவிட்டு சென்றார்.  “அப்பா.. அவங்க எங்க ஸ்கூல் மிஸ், உனக்கு தெரியாதா?”  என்றானே பார்க்கலாம்..” எனக்கு தலை சுற்றி லேசாக மயக்கம் வந்தது.. பயபுள்ளைக்கோ வாயெல்லாம் பல்..
மணி எட்டு. மூன்று மணி நேர சவாலில் இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி இருந்தது.. இதுக்கு மேல நமக்கு தாங்காதுடா மவனேன்னு.. அவளை தூக்கி வண்டில போட்டுட்டு… வீட்டை நோக்கி பறந்தேன்… வாசலிலே என் குலதெய்வம் நாங்கள் வரும் அழகை பார்த்தவாரே.. ஏங்க… இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு என்றாள்.. நானோ.. நம்ம பொண்ணு ரொம்ப சமத்துடி…ரெண்டு மணி நேரம் நான் அப்படி பாத்துகிட்டேன்.. போடி உள்ளே..என்றேன்..
எங்கங்க தொப்பிய காணோம், ஒரு செருப்ப காணோம்… ஏங்க இப்படி பொறுப்பு இல்லாம இருக்கீங்க என்றாள்… இதை எல்லாம் பாத்துகிட்டு இருந்த பயபுள்ள ஒன்னு சொன்னுச்சு பாருங்க….
“அம்மா…. அப்பாவ ஆட்டோமாமா, எங்க மிஸ் எல்லோரும் திட்டிட்டாங்க..”,  “நீயும் திட்டாதேம்மா” … “அப்பா பாவம்”
சொந்த சோகத்தை புலம்பியவர் : http://sathish-chandran.blogspot.com/
இப்போ நீங்க ப்ரீயா இருக்கிறீங்களா?
அப்போ கீழ போங்க
அட… போய் தான் பாருங்க சார்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்பவும் ப்ரீயா
அப்போ மேல போங்க .
ஒரு பெண் தனியாக கோல்ப் விளையாடி கொண்டு இருந்தாள். அவள் அடித்த பந்து அருகில் இருக்கும் புதருக்குள் பொய் விழுந்தது. அங்கு அவள் ஒரு தவளை வலையில் சிக்கி இருப்பதை கண்டாள்.  இவளை பார்த்ததும் அந்த தவளை “என்னை நீங்கள் இந்த வலையிலிருந்து விடுவித்தால், நான் உங்களுக்கு மூன்றுஆசைகளை நிறைவேற்றி தருவேன்” என்று சொன்னது. அந்த பெண் அந்த தவளையை வலையிலிருந்து விடுவித்தாள்.
தன் ஆசைகளை சொல்ல அந்த பெண் தயாரான போது, அந்த தவளை குறுக்கிட்டு “ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அது போல பத்து மடங்கு உன் கணவருக்கும் கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் என்றது.
சரி என்ற பெண் “முதல் ஆசையாக நான் உலகிலே மிக அழகான பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள்.  தவளை “நன்றாக யோசித்து விட்டாயா?உன் கணவனும் உலகிலே மிக சிறந்த ஆணழகனாக இருப்பான். எல்லா பெண்களும் அவனை கண்டது மயங்கி அவனிடம் செல்வர். இது பரவாயில்லையா?” என்று கேட்டது. அவளும் சம்மதிக்கவே, அப்படியே நடந்தது.
இரண்டாவது ஆசையாக “நான் உலகிலே பணக்கார பெண் ஆக வேண்டும்” என்று கேட்டாள். தவளை “தருகிறேன். ஆனால் உன் கணவன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக இருப்பான். சம்மதம் தானே” என்று கேட்டு அந்த ஆசையையும் நிறைவேற்றி தந்தது.
மூன்றாவது ஆசையாக ‘எனக்கு சிறிய அளவிலே ஹார்ட் அட்டாக் வர வேண்டும்’ என்று கேட்டாள்.
இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்களை சாதாரணமாக நினைக்காதிர்கள். எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு”
பெண் வாசகர்களுக்கு – கதை இங்கே முடிந்து விட்டது. தயவு செய்து அடுத்த இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்.
ஆண் வாசகர்களே – நீங்கள் தொடருங்கள்.
கணவனுக்கு அந்த பெண்ணுக்கு வந்ததை போன்று பத்து மடங்கு குறைவாக ஹார்ட் அட்டாக் வந்தது.

இந்த கதையின் நீதி என்ன என்றால் “பெண்கள் தங்களை புத்தி சாலியாக நினைத்து கொள்வார்கள் ஆனால் அப்படி இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது”. அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்

பின்குறிப்பு: நீங்கள் ஒரு பெண் வாசகராக இருந்து இன்னமும் இதை வாசித்து கொண்டிருந்தால், ஆண்கள் சொல்வதை கேட்க பழகுங்கள். 🙂
சிவா காயத்ரியை உயிருக்கு உயிராக நேசித்தான். அவளும் அப்படிதான்.ஒருவர் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற எண்ணம் அவர்களுக்குள் ஆழமாக உருவானது. அவர்கள் காதல் நாளுக்கு நாள் வலுவாக, ஆழமாக, சுவாசமாக வளர்ந்துகொண்டே போனது..
சிவாவின் குடும்ப நிலை.. காயத்ரியின் படிப்பு..  இது தான் அவர்களுக்கு தடையாக இருந்தது. எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தயாராக இருந்தனர்,  மாறாத காதலுடன்.
திடீரென்று அவளுடைய அப்பாவுக்கு அவர்கள் காதல் தெரிய வந்தது.வழக்கமான அப்பா தான். அடி உதை மிரட்டல்.. வீட்டில் சிறை வைக்கப்பட்டாள். அவர்களால் சந்திக்கவே முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவள் அப்பாவிடம் அவளை பெண் கேட்டு சிவா வீட்டிற்கே போனான். சொந்த பந்தங்கள் சேர்ந்து அவனை விரட்டி விட்டது..
அன்று இரவு தொலைபேசியில் இருவரும் அழுதனர்.  மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்தனர்.
யாருக்கும் தெரியாமல் சிவா ரயில் நிலையம் வந்து அவளுக்காக காத்திருந்தான். நேரம் கடந்தது.. காயத்ரி வரவில்லை. காத்திருந்தான்..வரவே இல்லை.
குழம்பிய அவன் அவளுடைய வீட்டிற்கு சென்று பார்க்க முடிவு செய்து புறபட்டான். வழியில் அவன் நண்பர்கள் வழிமறுத்து, அந்த அதிர்ச்சியான தகவலை அவனிடம் கூறினர்.
“காயத்ரி தற்கொலை செய்துகொண்டாள்“
ஆம்.. காயத்ரி கிளம்பும்போது அவளுடைய தந்தை பார்த்துவிட்டதாகவும் அவளை அடித்ததாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.
அவன் அவனாக இல்லை.. வெறி பிடித்தவனாய் ஓடினான். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.  காயத்ரியை புதைத்து விட்டார்கள்.
அழுதான்.. அழுதான்.. அவனால் அதை மட்டும் தான் செய்ய முடிந்தது..
பல நேர தேற்றளுக்குப் பிறகு வீடு வந்தான்..
வெகுநேரம் பித்துப் பிடித்தவன் போல இருந்தவன், திடீரென கத்தியால் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டான். ஆனால் விதி வலியது. காப்பாற்றப்பட்டுவிட்டான்.
வேறு வழி? காலம் போன போக்கில் நடைபிணமாய் நடமாடினான்.
ஒரு நாள் மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான். காயத்ரியின் நினைவில் இருந்து அவனால் மீள முடியவில்லை..
 “ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போன காயத்ரி?  நான் என்ன தப்பு பணினேன்?”  கதறி அழுதான்.
அப்போது திடீரென்று தொலைபேசி சிணுங்கவே எடுத்து பார்த்தான்.Display-ல் காயத்ரி என்று வந்தது.. குழப்பத்தில் நெற்றியைச் சுருக்கினான் சிவா.
ஒருவேளை அவள் வீட்டிலிருந்து வேறு யாரவது அழைக்கலாம் என்று காதில் வைத்து..
“ஹலோ” என்றான்.
“சிவா..  சிவா… ” என்று அழுகுரல் கேட்டது.
ஒரு நிமிடம் நடுங்கித்தான் போனான்.. உடல் சட்டென வியர்த்தது..
“இது.. இது… என் காயத்ரியின் குரல்.. ஆனால்.. ஆனால்.. எப்படி?”பதறினான்.. பயந்தான்..
என்ன செய்வதென அறியாமல் அழைப்பை துண்டித்து விட்டான்..
தனக்கு ஏற்பட்டது கனவாக, பிரமையாக கூட இருக்கலாம். சதா காயத்ரியையே நினைத்துக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட உளைச்சலாக இருக்கலாமென ஆறுதல் படுத்தினான்.
மீண்டும் அங்கு மௌனம் நிலவியது. நிமிடங்கள் கரைந்தன..
ஒன்று.. இரண்டு.. மூன்று..
முழுதாக பதினைந்து நிமிடத்திற்குப் பின் மீண்டும் மணி ஒலித்தது.
அதே காயத்ரி..
உள்ளூர பயம் இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான் சிவா.
சிவா: “ஹலோ..”
காயத்ரி: “சிவா.. சிவா..  எப்படி இருக்கீங்க?”
மீண்டும் அதே குரல்.. யாராவது தன்னை காயத்ரி குரல் மாதிரி பேசி ஏமாற்றுகிறார்களோ???
இல்லை சத்தியமாக இல்லை. காயத்ரியின் குரல் அவனுக்கு அத்துப்படி. எத்தனையோ நாட்கள் காதலாகக் கேட்டு மயங்கிய அதே குரல்.. நிச்சயம் இது காயத்ரி தான். ஆனால்…. ஆனால்…
ஆயிரம் கேள்விக் கணைகள் அவனுள் எழ ஆரம்பித்த நொடி.. மீண்டும் அந்தக் குரல்..
காயத்ரி: “ப்ளீஸ் சிவா.. பேசுங்க.. ஏன் எங்கிட்ட பேச மாட்டீங்கிறீங்க??”
தொண்டைக்குழியில் ஏற்பட்ட நடுக்கத்தை அடக்கிக்கொண்டு பேசினான் சிவா.
சிவா: “நீ…….. நீ இறந்துட்டனு சொன்னங்க.. ஆனா ….” குரலில் பயம் தெரிந்தது..
“புதைச்ச இடத்துக்கு கூட நான் வந்து பாத்தேனே… பின்ன எப்படி…”புரியாத புதிராய் கேட்டான்.
காயத்ரி: “ஹா ஹா ஹா ”..
பேரொளியாய், இடியென ஒரு சிரிப்பொலி எழுந்து அடங்கியது..
மீண்டும் பேச ஆரம்பித்தாள்.. ”புதைச்சா என்ன? நான் எங்க இருந்தாலும் உங்க காயத்ரி தான். என்னால உங்க கூட பேசாம இருக்கவே முடியாது..செத்தாலும் கூட..”
முகத்தில் வியர்வை வழிய, துடைக்க மறந்தவனாய் பயத்தில் உறைந்தவனாய் சிவா..
சிவா: “எ… எ… என்ன சொல்ற?? அதெப்படி முடியும்???”
அப்போது… அப்போது.. திடீரென ஒரு குரல் கேட்கிறது…
அது….
அது…
எங்களுடைய டவர் எங்கும் இருக்கும்…
ஏர்டெல்.. ஒரு அற்புதமான நெட்வொர்க்..
டின் டி டி டின் டின்….
———————-
இன்னும் என்ன பாக்குறீங்க??? கதை அவ்ளோ தான்.
(பின்ன தலைப்பு ஏன் அப்படி வச்சிருக்கனு கேக்குறீங்களா??? பதிவு தான் டெரரா இல்ல.. தலைப்பாவது டெரரா இருக்கட்டுமேனு தான்… எப்பூடிஈஈஈஈ…)
போய் வேலையப் பாருங்க.
நொந்த இடம்: http://chellakirukkalgal.blogspot.com

தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான  கருவியின்முன் ஊதச் சொன்னார்.அவன் சொன்னான்,”அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.”அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..உடனே அவன் பெருங்குரலில்,”இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு  நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,”அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.உடனே ஓட்டுனர்,”இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.”சற்று மனம் தளராத அதிகாரி  சொன்னார்,”சரி,பரவாயில்லை.எனக்காக இதோ,இங்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில்  நடந்து வா.”இப்போது அவன் கத்தினான்,”இதுவும் என்னால் முடியாது.”ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அவன் சொன்னான்,”ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.”இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்

கதை கேட்ட இடம்:  http://jeyarajanm.blogspot.com

இனிமேல் குடும்ப ப்ளாக் எழுதகூடாதுன்னு தான் நினச்சேன். ஆனா எழுதும்படியா ஆயிடுச்சி.  சிவா சொல்றான்..  “மச்சி இப்படியே எழுதிட்டே  போனா,  நம்ம பதிவர் சமூகம் உனக்கு  சீரியல்  பதிவர்னு  பேரு  வச்சிடும்“னு  சொல்லி பயம் காட்றான்.  “ஏங்க அப்படியா…?”  ஆனா நமக்கு ஒரு பிரச்சனைன்னு ஆண்டவன் கிட்ட சொன்னா ஒரு பதிலும் வரல.  ஆனா நம்ம நண்பர் பயபுள்ளைங்க,  பதிவர் சமூக மக்காவும் எதாவது சொல்லும்ல..   அட திட்டுனா கூட பரவா இல்லீங்க.. அதுவும் ஒரு ரெஸ்பான்ஸ் தான்...( நம்ம பொழப்பு ஏன் இப்படி…?  சரி விடு.. படிக்கிறவங்க நிலைமை.. ?   அதை பத்தி நமக்கெதுக்கு… நாம படிக்கல..? ) 
முன்குறிப்பு : மேற்கொண்டு படிக்கும் முன் பொண்டாட்டியோ,  தங்கச்சியோ அருகில் இருந்தால் படிப்பதை தவிர்க்கவும்.  மீறி படித்தால்.. மேலே போட்டோவில் இருக்கும் என் நண்பரின் நிலை தான்.   பயபுள்ள சொன்ன பேச்சை கேக்காம பொண்டாட்டி இருக்கும்போதே படிச்சிபுட்டான்.

இந்த தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டிக்கும், கூட  பொறந்த  தங்கச்சிக்கும் இடையில் நான் படுற பாடு இருக்கே.. அப்பப்பப்பா…   ஒரு நாள் என் பொண்டாட்டி, தங்கச்சி  ரெண்டு பேரையும் காமிச்சி யாரடா செல்லம் புடிக்கும்னு ஒரு வீணா போன கேள்விய என்  மூணு வயசு பையன  பார்த்து கேட்டுபுட்டேன்..  அந்த பயபுள்ள தங்கச்சிய பாத்து கை நீட்டிட்டு,  என்னைய நக்கலா பாத்துட்டு சிரிச்சிட்டு போயிடுச்சி…  ஆனா தங்கச்சியோ.. பெருமை பொங்கும் பாசமுகத்தோட போகவும்.. ( மற்றவை உங்க கற்பனைக்கே… ஐ..ஐ.. நான் திட்டு வாங்கினதெல்லாம் ப்ளாக்ல  சொல்ல மாட்டேனே… அதையே சொல்லி சொல்லிடெர்ரர் காட்டுவீங்க…).  ஆனா என் பையன பாத்து என் பொண்டாட்டி ஒன்னு சொன்னா..  “அப்பன போல தானே புள்ளையும் இருக்கும்”.

கூட பொறந்த தங்கச்சி மேல பாசம் வைக்கலாம்.  தொட்டு  தாலி கட்டுன பொண்டாட்டி மேல பாசம் வைக்கலாம்.  ஆனா ரெண்டு பேரும் இருக்கும் போது நம்ம வீட்டு பூனை குட்டிமேல தான் பாசம் வைக்கணும்.  ஆனா நான் “மனைவி சொல்லே மந்திரம்”, “தாய்க்கு பின் தாரம்”, மனைவி ஒரு மாணிக்கம் “  படங்களை ஒரு தடவை பார்ப்பேன். ஆனா “திருப்பாச்சி”,  “பாசமலர்”, “முள்ளும் மலரும்” படங்கள ரெண்டு ரெண்டு தடவ பாத்துருவேன்…. அவ்ளோ தங்கச்சி பாசம்.   இதான் என் பிரச்சனையே

ஒரு தடவை இந்த முக்கோண பாச போராட்ட்டதுல என் பொண்டாட்டி கேட்டுட்டா உனக்கு நான் முக்கியமா, உனக்கு தங்கச்சி முக்கியமா? முடிவு பண்ணிக்கோ?  இது என்னங்க கேள்வி?  அம்மா புடிக்குமா? அப்பா புடிக்குமா? னு  ரெண்டு வயசு பாப்பா கிட்ட கேட்டா அது என்னங்க சொல்லும். அந்த நிலமையில நான் நின்னேன்.  அதுவும் இந்த பொண்ணுங்க பாசமே வைக்க மாட்டாங்க.. ஆனா தங்கச்சி மேல பாசம் வைக்கிற வீட்டுக்காரன் மேல அப்படி ஒரு பாசம் பொங்கும்.

சரி மக்களே.. இன்னைக்கு ஒரு முடிவு எடுதுரனும்னு முடிவு பண்ணிதான் இந்த பதிவே போட்டேன். தங்கச்சியா?  பொண்டாட்டியா?   பதில் சொல்லுங்க. உங்க பதிலை வச்சி தான் ஒரு முக்கிய முடிவு எடுக்க போறேன்.  கொஞ்சம்
யோசிச்சி பதில் சொல்லுங்க மக்கா…  இந்த தடவ பப்ளிக் வோட்டு தான்… மக்கள் தீர்ப்பு தான்.. மகேசன் தீர்ப்பு.
பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு விஷயத்த நல்லா ஞாபகம் வச்சிகோங்க.  கூட பொறந்த தங்கச்சின்னு
சொன்னது என் கூட பொறந்தது இல்ல.. என் பொண்டாட்டி கூட பொறந்த தங்கச்சி..  (  என்னங்க.. எதையோ 
தேடற  மாதிரி  இருக்கு..  எதை  கொண்டு  அடிச்சாலும்  உடைய   போறது உங்க மானிட்டர் தான்…) 

நேத்து சாயந்தரம் என் குட்டி பையன் ஸ்கூலிலிருந்து வந்து ஃப்ரெஷ் அப் பண்ணிக்கிட்டு ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். , அவன் ஹேண்ட் புக்கை எடுத்துக்கிட்டு  அப்பு! அம்மா  கேள்வி கேட்பேனாம். நீ பதில் சொல்வியாம்ன்னு கேட்டேன். வீட்டு வாசல்ல ஏழரை நாட்டு சனி எட்டி, என்னை உற்று  பார்ப்பதை அறியாமல்…,

நான் கேள்விகளை கேட்க, பதில் சொல்லி, சொல்லி கடுப்பான அவன், எப்ப பாரு என்னையவே கேள்வி கேக்குறியேம்மா! இன்னிக்கு ஒரு நாளைக்கு நான் கேள்வி கேட்குறேன் நீ பதில் சொல்லும்மான்னு சொன்னதற்கு…, சரி சரின்னு மண்டையை ஆட்டினேன். ஏழரை சனி மெல்ல உள்ளே வந்து என் பக்கத்தில் அமர்ந்ததை அறியாமல்…,

1.தண்ணீரை “தண்ணீ”ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை “பன்னி”ன்னு சொல்லமுடியுமா?
…………………………………………………………………..
2.மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் புடிக்கறவனை மாணவன்னு சொல்ல முடியுமா?
…………………………………………………………..
3.புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,
ஆனா, கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா? .
………………………………………………………….

4. ஃபேண்ட் போட்டுக்கிட்டு முட்டி போடலாம்..,
முட்டி போட்டுக்கிட்டு ஃபேண்ட் போட முடியுமா?
………………………………………………………….
5. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..,
ஆனால் ஐய்யராத்துல மீன் புடிக்க முடியுமா?
……………………………………………………..
5.  இட்லி பொடியை தொட்டு  இட்லி சாப்பிட முடியும்.
ஆனால், மூக்கு பொடியை வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?
……………………………………………………..

6. கோலமாவில் கோலம் போடலாம் ,
கடலை மாவில் கடலை போட முடியுமா?
…………………………………………………………
7. சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா

washing சோடாவாகுமா?
…………………………………………………………………
8. பாம்பு எத்தனை தடவை படமெடுத்தாலும்
அதால், ஒரு முறையாவது  ஒரு படத்தையாவது
தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுமா?
…………………………………………………………………..
9.என்னதான் கோழிக்கு வயிறு ஃபுல்லா தீனி போட்டு வளர்த்தாலும்,
கோழி முட்டைதான் போடும்.
100/100 லாம் போடுமா?.
………………………………………………………………….
10. நீ எவ்வளவு பெரியா படிப்பாளியா இருந்தாலும்,
பரிட்சை ஹால்ல போய் எழுதத்தான் முடியும்.
படிக்க முடியுமா?ஐயா சாமி, என்னை ஆளை விடு.., ன்னு
எழுந்து ஓட ஆரம்பித்தேன்.அம்மா! அம்மா! எங்கேம்மா ஓடுறே. இனிமே இதுப்போல கேட்கமாட்டேன். வாம்மா வந்து உக்காரும்மா. இனி, சமர்த்தா படிக்கலாம். என் செல்ல அம்மா தானே நீன்னு கொஞ்ச ஆரம்பித்தபின் தான் மீண்டும அவன் அருகில் வந்தமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தோம்.

மொக்கையானவர்: http://rajiyinkanavugal.blogspot.com

இந்த வருடத்தின் சிறந்த அடிமை விருது இவருக்கு வழங்க படுகிறது.

ஒருவர்: உங்க முகத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்…!

மற்றவர்: இருக்காதே! என் முகம் எப்பவும் என்கூடத்தான் இருக்கும்!

பி.ஜெபா ஷைனி,

=============================================

* (பரீட்சை ஹாலில்)

ரகு : வயித்தைக் கலக்குதுடா..!

ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?

.சு.கவின்சூரியா,

=====================================

முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?

ஆசிரியர்: நீங்க விக்கறீங்கஅவன் வாங்குறான்..!

பி.கவிதா,

======================================

* வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!

கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!

துரை.இராமகிருஷ்ணன்,

=======================================

அப்பா: என்னடாமார்க் ஷீட்ல ரொம்ப கம்மியா மார்க்
வாங்கிட்டு வந்திருக்கே?

பையன்: விலைவாசி ரொம்ப ஏறிப்போச்சுப்பா
எதையுமே நிறைய வாங்க முடியல

இரா.அனுக்கிரஹா,

=======================================

சோமு: என்னப்பாவியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?

ராமு: எல்லாமே தலைகீழா நடக்குது!

சோமு: என்னப்பா சொல்றே..?

ராமு: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன்
இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்..!

.அருண்பாலாஜி

=======================================
நன்றி: சிறுவர் மணி

ரசித்த இடம்:  http://rammalar.wordpress.com

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்பரிசு..”ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.

“மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!

G+ ல்  ஈரோடு தங்கதுரை பகிர்ந்தது

கூகிளில் அலுவலக ஆணி சம்பந்தமாக ஒரு படம் தேடி கொண்டு இருந்த பொழுது இது மாதிரி ஒரு படம் வந்துச்சு. உடனே ஆணிய விட்டுட்டு இத பத்தி தேடினேனா. வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு












இந்த பதிவின் பாகம் 1 பாக்கலன்னா இங்க பாக்கலாம்

கூகிளில் அலுவலக ஆணி சம்பந்தமாக ஒரு படம் தேடி கொண்டு இருந்த பொழுது இது மாதிரி ஒரு படம் வந்துச்சு. உடனே ஆணிய விட்டுட்டு இத பத்தி தேடினேனா. வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு










1. நான்: ஏன் பப்பு உனக்கு 7 வயசுதான் ஆகுது எப்ப பாரு 70 வயசு கெழவி மாதிரி பேசாதே

வர்ஷா : அம்மா அவ ஃப்ரெண்ட் எல்லாம் யாருன்னு தெரியாதா? பாட்டி, அத்தை பாட்டி, பக்கத்து வீட்டு கற்பக பாட்டி..

பப்பு : மறக்காம அம்மாவையும் சேர்த்துக்க

தேவையா? எனக்கு சொன்னேன் :)))

2.

வர்ஷா : அம்மா ஏம்மா அழுதா கண்ணுல தண்ணி வருது?

நான் : தெரியலைடா

பப்பு: இதெல்லாம் ஒரு கேள்வியா? எவ்ளோ தண்ணி குடிக்கறே, பாதி ஒன் பாத்ரூம்ல போகும் மீதி கண்ணுல வரும

தேவையா .. வர்ஷாக்கு :))

3. முடிவெட்ட பார்லர் கூட்டிட்டு போனேன், அங்க அவங்க கேக்கறாங்க, அவளுக்கு பப்பு ரொம்ப ஃப்ரெண்ட்.

பப்பு செல்லம் என்ன கட்டிங் வேணும்? மஷ்ரூமா? .பாய்கட்டா?

பப்பு : அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி, எங்கம்மாக்கு குளிக்க வைக்க எது ஈஸியோ அதை வெட்டுங்க

எல்லாரும் சிரிச்சாங்க..(ஊரே சிரிச்சுதுன்னும் சொல்லலாம்)

#புள்ளயா பெத்து வச்சிருக்கேன் 🙂

விஜி ராம் அவர்கள் G+ இல் பகிர்ந்தது

IPhone, IPad, ITouch போன்றவைகளை இந்த ஸ்டீவ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டு  நல்ல பெயரோடும் புகழோடும் போய் சேர்ந்துவிட்டார். அவரின் இந்த நல்ல சேவையை நான் தொடர்ந்ததால் எனக்கு என் மனைவியிடம் கிடைத்த பெயர்தான்IBad என்பதாகும். அதோடு இருந்திருந்தால் பரவாயில்லை ஆனால் எனக்கு நேர்ந்த விபரிதத்தை கண்டால் யாருமே எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்க மாட்டீர்கள். அப்படி என்ன நடந்தது என்று கேட்கீறிர்களா? அதை கடைசியில் பார்க்கலாம்.

அதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை இங்கே கொஞ்சம் விபரமாக சொல்லுகிறேன். அதை படியுங்க முதலில் மக்கா..
எனக்கு   பிறந்த நாள் வந்துச்சுங்க…. என் பிறந்த நாளுக்கு என் மனைவி iPhone வாங்கி கொடுத்தாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமுங்க….யாருக்குதான் சந்தோஷம் வராதுங்க…
ஒரு 2 மாசம் கழித்து என் அண்ணன் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPad வாங்கி கொடுத்தாங்க…அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க…
போன மாசம் என் பொண்ணுக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க அப்ப என் மனைவி அவளுக்கு iPod Touch வாங்கி கொடுத்தாங்க…
அவளுக்கும் ரொம்ப சந்தோசமுங்க.
இந்த மாசம் என் மனைவிக்கு பிறந்தநாள் வந்துச்சுங்க….இந்த ஸ்டீவ் வேற புதுசா ஏதும் கண்டுபிடிக்காம போய்ட்டாருங்க…நான் என் மண்டைய போட்டு உடைச்சேங்க….என்னடா வாங்கி கொடுக்குறதுனு…. என் மனைவியோ எல்லோருக்கும் i ல ஆரம்பிச்ச பொருளாதான்  வாங்கி கொடுத்து இருக்கா எனவே அவளுக்கும் அது மாதிரி பொருளாதான் வாங்கி கொடுக்கனுமுனு நல்லா யோசிச்சு அவளுக்கு கடைசியா நல்ல அழகாக லைட் வெயிட்டா இருக்க கூடிய iRon Box  வாங்கி கொடுத்தேங்க…
இதுல என்னங்க தப்பு ? அப்ப ஆரம்பிச்சுதுங்க வினை….
என் மனைவி என் திறமையை, ஸ்மார்ட்னசை புரிஞ்சுக்க தவறிட்டாங்கனு நினைக்கிறேனுங்க… நான் வாங்கி கொடுத்த இந்த iRon Box  ஹோம் நெட்வொர்க்கோட கனெக்ட் பண்ணினால்  நிறைய பயன்பாடுகள் இருப்பது அவளுக்கு தெரியலைங்க… உதாரணமாக இதை எதோடு எல்லாம் தொடர்பு கொள்ளலாம் என்பதை அவளிடம் சொன்னதை நான் உங்களுக்கும் சொல்லுகிற்னுங்க..இதை iWash, iCook and iClean போன்றவைக்ளோடு இணைத்து உபயோகிக்கலாமுங்க
ஆனா என் மனைவி இதை எல்லாம் கேட்டுவிட்டு என் ஸ்மார்ட்னசை புரியாம என்னை  iKnock பண்ணிட்டு இப்ப அவள்iMad ஆகி iNag* பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்போ என் நிலமை இப்படி iBad ஆகிபோச்சு (///*nag – someone (especially a woman) who annoys people by constantly finding fault//)
என் கூட வேலை  பார்க்கும் அமெரிக்க நண்பர் சொன்ன ஜோக்கை வைத்து என் வழியில் நான் இதை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். கொஞ்சமாவது சிரித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன்.
புலம்பியவர்: http://avargal-unmaigal.blogspot.com

பார்க்க முரட்டுத் தனமா இருந்த ஒரு ஆள் தன்னோட பைக்கில ஒரு பாருக்கு போனான். வண்டியை பாருக்கு முன்னாடி நிறுத்திட்டு உள்ளே போய் சாப்ட்டு வெளியே வந்தான். அங்கே அவன் பைக்கை காணோம்!

“அப்படியா!”ன்னுட்டு பாருக்குள்ளே போய், ”நான் இன்னும் ஒரு கிளாஸ் சாப்பிடப் போறேன். நான் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள என் பைக் வரலை, எங்க ஊர்ல நான் என்ன பண்ணேனோ அது இங்கயும் நடக்கும்!” அப்படின்னு கோபமா கத்தினாரு.

உடனே பார் மேனேஜேரு அங்க இருந்த ஆளுங்க எல்லாம் எப்படியோ தேடி அவர் வண்டியை கண்டு பிடிச்சு பார் முன்னாடி நிறுத்திட்டாங்க. பைக்காரனும் கிளம்பினான்.  கிளம்புறப்ப ஒருத்தர் கேட்டாரு…

“சார் உங்க ஊர்ல என்ன நீங்க பண்ணீங்க?”

அவன் பதில் சொன்னான் “வீட்டுக்கு நடந்தே போனேன்!”

நேத்து ஒரு நியூஸ் படிச்சேன் புதுசா ஒரு படம் எடுக்குறாங்களாம் பேரு 6, எல்லாம் 6 மாசம் / 6 வாரம் / 6 நாள் / 6 மணி / 6 நிமிஷம் / 6 செகண்ட்-ல நடக்குற சம்பவங்கள் கதையாம். சரி நாமளும் 6 வச்சி ஏதாவது பதிவை தேத்த முடியுமான்னு யோசிச்சேன் அதோட விளைவு கீழே

கல்யாணம் பண்ண 6 வாரத்துல / 6 மாசத்தில / 6 வருசத்தில என்ன நடக்குது

கொஞ்சல்ஸ்

6 வாரத்தில        :    ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு நெனச்ச நேரம் எல்லாம்
6 மாசத்தில        :    எப்பயாவது ஐ லவ் யு
6 வருசத்தில    :    லவ்வா  அப்பிடின்னா?

ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வந்தா

6 வாரத்தில        :    அன்பே    நான் வந்துட்டேன் – சாயந்தரம் 6 மணிக்கே
6 மாசத்தில        :    வந்துக்கிட்டே இருக்கேன் – சாயந்தரம் 8 மணிக்கு
6 வருசத்தில    :    (மனைவி பையன் கிட்ட) நீ தூங்குடா உங்க டாடி எப்ப வருவாரோ தெரியாது  – மணி நைட் 11 மணி


பரிசு

6 வாரத்தில        :    செல்லம் நான் ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் உனக்கு பிடிச்சு இருக்கா பாரேன்
6 மாசத்தில        :    பூ ஏன் பேக்-ல இருக்கு கொஞ்சம் சாமிக்கு போட்டுட்டு நீ கொஞ்சம் வைச்சுக்கோ
6 வருசத்தில    :    இந்தா பணம் ஏதாவது வாங்கிக்கோ

ஃபோன் அடிச்சா

6 வாரத்தில        :    கண்ணு உனக்கு தான் ஃபோன் உங்க அம்மா லைன்-ல
6 மாசத்தில        :    ஃபோன் உனக்கு தான் இங்க இருக்கு
6 வருசத்தில    :    எவ்வளவு நேரம் ஃபோன் அடிக்குது பாரு சீக்க்ரம் எடுத்து தொலையேன்

சமையல்

6 வாரத்தில        :    இவ்வளவு ருசியா நான் சாப்பிட்டதே இல்லை
6 மாசத்தில        :    இன்னைக்கு என்ன சமையல்
6 வருசத்தில    :    இன்னைக்கும் அதே தானா

டிரஸ்

6 வாரத்தில        :    இந்த டிரஸ்-ல நீ தேவதை மாதிரி இருக்கே
6 மாசத்தில        :    திருப்பியும் புது டிரஸ் எடுத்து இருக்கியா
6 வருசத்தில    :    இவ்வளவு காசு போட்டு இப்ப புது டிரஸ் தேவையா

6 வருசமா உக்காந்து ஆராய்ச்சி பண்ணது: http://meithedi.blogspot.com

எப்பவாச்சும் மனசுக்கு கஷ்டமா இருந்தா ஏதாவது புரட்சிக் கருத்துக்களைப் படிச்சு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்குவேன். போன வெள்ளிக்கிழமையும் அப்படித்தான் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, சமையல் வேலைல ஆண்களும் பெண்ணுக்கு உதவி செய்யணும்..அப்படி செய்யாதவங்க ஆணாதிக்கவாதிகள்னு போட்டிருந்துச்சு. அதைப் படிச்ச உடனே எனக்கு சந்தோசம் தாங்கல. இந்த நல்ல காரியத்தை உடனே செய்யறதுன்னு முடிவு பண்ணேன்.
அது ஈவ்னிங் காஃபி போடற நேரம். அதனால தங்கமணிகிட்ட “இன்னிக்கு நாந்தான் காஃபி போடுவேன். நீ சமையல் கட்டுப் பக்கமே வரக்கூடாது”ன்னு சொல்லி ஹால்ல உட்கார வச்சுட்டு, கிச்சன்ல பூந்தேன். அது ‘இந்த மனுசன் நல்லாத்தானே இருந்தாரு..இன்னிக்கு என்னாச்சு’ன்னு குழம்பிப்போய் ஹால்ல உட்கார்ந்துட்டாங்க.
நானும் பால் சட்டியை (இதுக்கு என்னமோ பேர் சொல்வாங்களே..) அடுப்புல வச்சி, பாலை ஊத்திட்டு, அடுப்பை பத்தவச்சேன். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. முதல்ல, தங்கமணிகிட்ட நல்ல பேர் வாங்கிக்கலாம். அப்புறம் ‘மனைவி என்ன சமையல் எந்திரமா?’ன்னு தலைப்பு வச்சி வெள்ளிக்கிழமை ஃபுல்லா நாந்தான் சமைச்சேன்னு டுபாக்கூர் பதிவு எழுதி புரட்சிவாதி ஆயிடலாம். முடிஞ்சா டேமேஜான பேரையும் சரி பண்ணிடலாம்னு பல திட்டங்கள் மனசுல.
அப்புறம் தான் பார்க்குறேன், பால் ஒரு மாதிரி திரிஞ்சு போச்சு. என்னடா இது, எக்ஸ்பைரி ஆன பாலான்னு பார்த்தா, அதுல ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒருவேளை பால் சட்டில ஏதாவது இருந்திருக்குமோன்னு டவுட் வந்துச்சு. சரின்னு, திரிஞ்ச பாலை கீழ கொட்டிட்டு, மறுபடி நல்லா பாத்திரத்தைக் கழுவினேன்.
ஹால்ல இருந்து ‘இன்னும் முடியலியா’ன்னு சவுண்ட் வந்துச்சு. ‘இதோ ரெடி..ஒரே நிமிசம்’னு சொல்லிட்டு, மறுபடி பாலை ஊத்தி அடுப்பை பத்தவச்சேன். ச்சே..பெண்ணியவாதி ஆகறதுன்னா இவ்வளவு கஷ்டமா-ன்னு ஃபீல் பண்ணிக்கிட்டே அடுப்பைப் பார்த்தா..அடங்கொக்கமக்கா…பால் மறுபடியும் திரிஞ்சு போச்சு!
’நம்மளே திருந்த நினைச்சாலும் விதி விட மாட்டேங்குதே..எப்படி இது’-ன்னு கன்ஃபியூஸ் ஆகி நிக்கும்போது, தங்கமணி பொறுமை இழந்து உள்ள வந்துட்டாங்க.
‘என்ன ஆச்சு?’ன்னு ஒரு அதட்டல்.
நான் பரிதாபமா ‘இப்பிடி ஆயிடுச்சு..பாரு’ன்னு திரிஞ்ச பாலை காட்டிட்டு ”என்ன பிரச்சினை? ஏன் இப்பிடி ஆகுது”ன்னு கேட்டேன்.
அதுக்கு அவங்க “பாலுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியலேன்னா, அப்படித் தான் ஆகும்’னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க.
’அய்யய்யோ’-ன்னு அந்த பால் பாட்டிலை பார்த்தா Laban-ன்னு இங்கிலீஸ்ல எழுதிட்டு காச்சாமூச்சான்னு அரபில என்னமோ எழுதியிருக்கு..தயிருக்கு இங்கிலீஸ்ல லபான்னு பேரா.இப்படி கேள்விப்பட்டதே இல்லையே-ன்னு யோசிக்கும்போதே
“உங்களுக்கு எதுக்கு இந்த வேலை…ஏதாவது பதிவு எழுதுனமா..கமெண்ட்டுக்கு மிக்க நன்றின்னு பதில் போட்டமான்னு இல்லாம இது தேவையா..”-ன்னு கிச்சன்ல இருந்து விரட்டி விட்டுட்டாங்க.
நம்ம எழுத்துத் திறமையை மெச்சுறாங்களா..இல்லே நீ பதிவெழுதத் தாண்டா லாயக்குன்னு கேவலப்படுத்தறாங்கன்னே புரியலையே..
காஃபியில்
கலந்து
கொடுத்தேன் – என்
காதலை!
-ன்னு ஒன்னுக்குக் கீழ ஒன்னா ப்ளூகலர்ல போல்டா எழுதி அருமை கமெண்ட் வாங்குவோம்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே.
பாலும் வெள்ளையத்தான் இருக்கு..தயிரும் வெள்ளையாத்தான் இருக்கு..ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தா, ரெண்டுமே குழுகுழுன்னு தான் இருக்கு..நான் என்ன செய்ய…எவ்வளவு திட்டம் வச்சிருந்தேன்..எல்லாம் பாழா(!) போச்சே..

ரங்கமணியின்காபி அனுபவத்தை தெரிந்து கொண்ட இடம்: http://sengovi.blogspot.com

என்னோட வெஜ் சாம்பார் செய்வது எப்படி பதிவு பார்த்து அத ட்ரை பண்ணி இருப்பிங்க. இதோ என்னோட அடுத்த சமையல் குறிப்பு. இந்த சமையல் குறிப்பு முக்கியமா ஆண்களுக்காக அதுவும் திருமணம் ஆகாத கன்னி பையன்களுக்காக மட்டுமே. அதனால மத்தவங்க தயவு செய்து இதுக்கு மேல படிக்காதிங்க.

– முதலில் அதிகாலை ஐந்து மணிக்கு எந்திரிக்கவும்! என்னது அது ரொம்ப கஷ்டமா? யோவ், அலாரம் வச்சு எந்திரியுங்கையா! எதிரிச்சு, பாத்ரூம் போங்க!பிரஸ் எடுத்து, பல்லு வெளக்குங்க! அப்புறம் முகத்தை கழுவி, இன்னும் ஏதாவது மிச்சம் மீதி வேலைகள் இருந்தா, அதையும் முடிச்சுட்டு, மெதுவா பாத்ரூம விட்டு, வெளிய வாங்க!

யோவ், எடுபட்டபயலே, சமையல் குறிப்பு சொல்றதாதானே பேச்சு! அப்புறம் என்ன பாத்ரூம்ல, மூஞ்சி கழுவுறதப் பத்தி, சிறப்புரையாற்றிக்கிட்டு இருக்கே?” அப்டீன்னு டென்சன் ஆவாதீங்க! பொறுமை! பொறுமை!!

ஓகே! பாத்ரூம்ல இருந்து வெளியே வந்துட்டீங்களா? யோவ்…. அதெல்லாம் வந்து ரொம்ப நேரமாச்சு! மேல சொல்லுய்யா!, சரி, இப்போ நீங்க நேரா பூஜை அறைக்குப் போங்க! உங்க இஸ்ட தெய்வம் எதுவோ, அதை நல்லா மனசார கும்புடுங்க! எதுவும் தப்பா நடந்துடக்கூடாதுன்னு நல்லா கடவுள வேண்டிக்குங்க! ஆமா…. இருநூறு கோடி ரூபா பட்ஜெட்டுல படம் எடுக்குறார் பாரு! எதுவும் தப்பா நடக்கக்கூடாதாம்!

அப்புறம், ஒரு பேனா, ஒரு நோட் புக், கேமரா வசதியுள்ள உங்க செல்ஃபோனு இதெல்லாத்தையும் எடுத்துக்குங்க! யோவ்…. நிறுத்துயா! சமையல் குறிப்பு சொல்றதுன்னுதானே, நம்மளையெல்லாம் லெட்டர் போட்டு வரச்சொன்னே! அப்புறம் என்ன, விஜய் டி வி ல வர்ர, ‘ அது இது எது’ ப்ரோகிராம்ல வர்ர மாத்தியோசி ரவுண்ட் மாதிரி, மாத்தி மாத்தி பேசுறே!

அண்ணே, எதுக்கு அவசரப்படுறீங்க! மேல படியுங்க!

இப்போ, உங்க அம்மாவைக் கூப்பிடுங்க! அம்மா தூங்கறாங்களா? இன்னும் சத்தமா கூப்பிடுங்க! இப்போ அம்மா எந்திரிச்சு வர்ரா! ‘ குட்மோர்னிங் அம்மா’ சொல்லுங்க!

அம்மா கேப்பா ‘ எதுக்குடா, இப்ப கத்துறே’!
அதுக்கு நீங்க சொல்லணும்! “ அம்மா இன்னிக்கு நான் சமையல் பண்ணலாம்னு இருக்கேன்”

‘ என்னது சமையல் பண்ணப் போறியா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்! போய் வேற வேல இருந்தாப் பாரு!”

“ இல்லம்மா, நான் இன்னிக்குச் சமைச்சே ஆகணும்! “

“ அதுக்கு என்னைய என்ன பண்ணச் சொல்லுறே?”

“ கிச்சன் எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா, கொஞ்சம் சவுகரியமா இருக்கும்”

அப்டீன்னு நீங்க சொன்னதும், உங்கம்மா உங்கள மொறைச்சுப் பார்ப்பாங்க! சப்போஸ், இதெல்லாம் எங்க சமைச்சு உருப்படப்போவுது? அப்டீன்னு திட்டவும் கூடும்! அதெல்லாத்தையும் கண்டுக்காதீங்க! நீங்க திட்டுவாங்கறது இதுதான் மொதல்தடவையா என்ன? ( எல்லாப் பதிவர்களுமே வீட்டுல திட்டு வாங்குறதா, ஒரு வாய்மொழித் தகவல் சொல்லுது )
இப்போ, கிச்சன் எங்க இருக்குன்னு உங்கம்மா, சொல்லிட்டாங்களா? நேர கிச்சனுக்குப் போறீங்க! வாசல்ல நின்னு, சிவாஜி கணேஷன் மாதிரி, இடுப்புல கையை வச்சுக்கிட்டு, ஒரு வாட்டி மேலேயும் கீழேயும் கிச்சனை உத்துப் பாருங்க!

அப்புறம் உங்க செல்ஃபோன்ல, கிச்சன ஃபோட்டோ எடுங்க! ஏன்னா, வரலாற்றில முதல் முறையா கிச்சனுக்குப் போறீங்க இல்லையா? அதுதான் இந்தப் ஃபோட்டோ!

சரிங்க! நம்ம சமையல் குறிப்பு பகுதியில இன்னிக்கு, கிச்சனை எப்படிக் கண்டுபுடிக்கறது? அப்டீன்னு பார்த்தோம்! இனிமேல்தான் சமைக்கறது பத்தி சிந்திக்கணும்!

அதை அப்புறமா சொல்லித் தாரேன்! ஓகே வா?

என்ன இன்னும் வெயிட் பண்றீங்க? நீங்க கெளம்புனா தான் இந்த சமையல் குறிப்பா எனக்கு சொன்ன அண்ணன் ஐடியா மணி கிட்ட அடுத்த பாகம் கேட்க போக முடியும். கெளம்புங்க கெளம்புங்க

குப்பு சுப்பு ரெண்டு பேரும்,  இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற (trucking) போனாங்க.

அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு. கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி

மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே  சுப்பு எடுத்தாரு ஓட்டம், ஆனா குப்பு தன்னோட பேக்-ல  இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.

இதை பார்த்த சுப்பு “ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா சீக்கிரம் வாலே புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்” மின்னு சொன்னாரு

“நெசம் தாம்லே  புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்”

தெரிந்து கொண்ட இடம்: http://meithedi.blogspot.com

அப்துல் கலாம் எஞ்சினியரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த நேரம். அன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை..அவசரமான வேலை போய்க்கிட்டு இருந்திருக்கு..அவருக்குக் கீழ வேலை செய்ற ஒருத்தரு சாயந்திரம் ஆகவும் கலாம்கிட்ட தயங்கித் தயங்கி வந்திருக்காரு.
கலாம் ‘என்ன விஷயம்’னு கேட்கவும் ‘என் குழந்தைக்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு கேட்டிருக்காரு. அதுக்கு கலாம் ‘நோ..நோ..நீங்க இல்லேன்ன இங்க வேலை நின்னிடும்..வேணாம்’னு சொல்லிட்டாராம். அவரும் வருத்தத்தோட வேலை செஞ்சுட்டு நைட்டு லேட்டா வீட்டுக்குப் போனா குழந்தை புது ட்ரஸ் போட்டுக்கிட்டு, நிறைய விளையாட்டுச் சாமானோட விளையாடிக்கிட்டு இருந்துச்சாம்.
‘எப்படி இது’ன்னு கேட்கவும் கலாம் வந்து குழந்தையை வெளில அழைச்சுக்கிட்டுப் போயி இதெல்லாம் வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களாம்..தனக்குக் கீழ வேலை செய்றவர் மேல மட்டுமில்லாம அவர் குடும்பத்து மேலயும் கலாம் காட்டுன அக்கறை தான் அவரை எல்லாருக்கும் பிடிச்சவரா, ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியா உயர்த்துச்சு’ – அப்படீன்னு முன்னாடி ஒரு புக்ல படிச்சேன்.
அப்போ நானும் டெல்லில இருந்தேன். இந்த மாதிரி தன்னம்பிக்கை புக் படிச்சா ‘மெலீனா’ பார்த்த மாதிரி ரெண்டு மூணு நாளைக்கு எஃபக்ட்டு கும்முனு நிக்கும். அப்புறம் பழைய குருடி, கதவைத் திறடி தான்..அந்த கலாம் மேட்டர் படிச்சப்புறம் நாமளும் நம்ம ஜூனியர்ஸ்கிட்ட கனிவா நடந்துப்போம்னு முடிவு பண்ணேன்..
ஒரு நாளு டைட் ஒர்க்..அதாவது ரொம்ப வேலை..அவசர வேலை..எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு வேலை செஞ்சுக்கிட்டு இருந்தோம். அப்போ என் ஜூனியரு ஒருத்தன் தலையைச் சொறிஞ்சுக்கிட்டே வந்து நின்னான்.
நானும் புக் படிச்ச எஃபக்ட்ல கனிவா ‘என்னப்பா..என்ன விஷயம்’னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான் ‘என் லவ்வர்க்கு இன்னைக்கு பர்த் டே..வெளில கூட்டிப்போறதா சொல்லியிருந்தேன். போலாமா?’ன்னு!
இல்லே..தெரியாமத் தான் கேட்கேன்..அந்த ஆண்டவன் ஏண்ணே என்னை மட்டும் இப்படி சோதிக்கான்? ஒருவேளை இன்னொரு தமிழன் ஜனாதிபதியா வர்றது அவனுக்குப் பிடிக்கலியோ?
புலம்பலை ரசித்த இடம்:  http://sengovi.blogspot.com

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.










பாகம் 1, பாகம் 2, பாகம் 3 பார்க்கலன்னா இப்போ பார்த்துருங்க

1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். (விதி இரண்டைப் பார்க்கவும்)

2. ஹீரோக்களின் எண்ணிக்கை ஹீரோயின் எண்ணிக்கைக்கு சமமாக இல்லையெனில் உபரியான ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் அ) இறக்கவேண்டும் ஆ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ஸ்விட்சர்லாந்து போன்ற சமாச்சாரங்களில் பட இறுதியில் காணாமல் போகலாம்.

3. ஒரு படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தால், அவர்கள் இருவரும் காட்டுமிராண்டித்தனமாக குறைந்தது 5 நிமிடம் சண்டை போடவேண்டும் (சகோதரர்களாக இருந்தால் 10 நிமிஷம்)

4. எந்த கோர்ட் சீனிலும், ‘அப்ஜக்ஸன் மைலார்ட் ‘ என்ற வசனம் இருந்தே ஆகவேண்டும். அந்த வசனத்தை ஹீரோவோ அல்லது அவரது வழக்குறைஞரோ சொன்னால், அது ஓவர் ரூல்டாகவும், இல்லையெனில் அது ஸஸ்டெய்ண்ட் ஆகவும் ஆகவேண்டும்.

5. ஹீரோவின் சகோதரி ஹீரோவின் உயிருக்குயிரான தோழனை (அதாவது இரண்டாவது ஹீரோ) கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இல்லையெனில் அவள் படம் ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் வில்லனால் கற்பழிக்கப்படவேண்டும். அவள் பின்னால் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்.

6. சேஸ் நடந்தால், ஹீரோ எப்படியும் வில்லனை பிடித்துவிடவேண்டும், அது மாட்டுவண்டி காரை துரத்தினாலும் சரி.

7. ஹீரோ வில்லனை நோக்கி சுட்டால்,

அ) குறி தவறவே தவறாது

ஆ) துப்பாக்கிக் குண்டு தீர்ந்து போகும். (அப்படியாயின் கைச்சண்டைதான்).

வில்லன் ஹீரோவை நோக்கிச் சுட்டால், நிச்சயம் குறி தவறும். இல்லையெனில் அது இரண்டாவது (சாகவேண்டிய) ஹீரோ.

8) எல்லா சண்டைக் காட்சிகளும் நடக்கவேண்டிய இடம்

அ) சட்டிப்பானைகள் இருக்கும் இடம்

ஆ) சந்தை.. காய்கறி இன்ன இதர சாமான்கள் தள்ளுவண்டியில் இருக்கும் இடம்

இ) கண்ணாடி பாட்டில்கள் .. இவை அனைத்து நிச்சயம் உடைக்கப்படவேண்டும்

9) காணாமல் போய் சேரும் சகோதரர்கள் பற்றிய கதை இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் தெரிந்த குடும்பப் பாடல் ஒன்று நிச்சயம் வேண்டும். இது

அ) சகோதரர்கள் பாடவேண்டும்

ஆ) கண்குருடியான அம்மா பாடவேண்டும் (இறுதிக்காட்சியில் அவளுக்கு கண்பார்வை கிட்டும்)

இ) குடும்ப நாய் அல்லது பூனை

10) போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் படத்தில் வந்தால் இரண்டு வகையில் வருவார்கள் (போலீஸாக ஹீரோ இல்லாத பட்சத்தில்)

அ) படு நேர்மையான போலீஸ் அதிகாரி பெரும்பாலும் ஹீரோவின் அப்பா. டைட்டில் போடுவதற்கு முன்னால் இவர் சாகவேண்டும். அப்பாவாக இல்லாத பட்சத்தில், கெட்ட ஹீரோ (அண்டி ஹீரோ)வை ‘சட்டத்திலிருந்து நீ தப்பமுடியாது ‘ என்று பேசிகொண்டே 23ஆவது ரீல் வரை துரத்திவிட்டு, இறுதியில் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துவைத்து தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும்.

இ) படு மோசமான கெட்ட போலீஸ் அதிகாரி. உண்மையான வில்லனின் கையாள். கிளைமாக்ஸில் ஹீரோவால் சாகவேண்டும்.

விதிகளை தெரிந்து கொண்ட இடம்: thothavanda.blogspot.com

நான் ரசித்தேன்……………………நீங்களும்???????????????

ரசித்த இடம்: http://flypno.blogspot.com/

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.









பாகம் 1, பாகம் 2 பார்க்கலன்னா இப்போ பார்த்துருங்க

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.









பாகம் 1 பார்க்கலன்னா இப்போ பார்த்துருங்க

(டெலிபோன் மணி அடிக்கிறது)

தங்கமணி : காய் நறுக்கறதுக்குள்ள நாப்பது போன்… ச்சே…  ஒரு வேலை செய்ய விடறாங்களா (என முணுமுணுத்தபடி வந்து போன் எடுத்து)
ஹெலோ (என்றாள் ஸ்டைலாய்)

எதிர்முனையில் ஒரு பெண் : சத்ஸ்ரீஅகால்ஜி

தங்கமணி : என்னது சசிரேகாவா? அப்படி யாரும் இங்க இல்லங்க

(ச்சே… இந்த ராங் நம்பர் தொல்ல பெரிய தொல்லையா போச்சு என முணுமுணுக்கிறாள்)

எதிர்முனை : நை நை
தங்கமணி : (ஏற்கனவே வேலை கெடுகிறதே என கடுப்பில் இருந்த தங்கமணி இன்னும் கடுப்பாகி) என்னது? யார பாத்து நை நைனு சொன்ன? என் வீட்டுக்காரர் கூட அப்படி சொன்னதில்ல… பிச்சுபுடுவேன் பிச்சு

எதிர்முனை : நை நை ஜி… (என அந்த பெண் ஏதோ சொல்ல வருவதற்குள்)

தங்கமணி : என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? மறுபடி நை நை’ங்கற

எதிர்முனை : Is this XXXXXXX? (என ஒரு போன் நம்பர் சொல்லி கேட்க)
தங்கமணி : நோ நோ ராங் நம்பர் (என போனை கட் செய்தவள் “ஹ்ம்ம்.. வேற வேலை இல்ல இதுகளுக்கு… ராங் கால் பண்ணினதும் இல்லாம என்னை வேற திட்டுது… கொழுப்பு” என முணுமுணுத்தபடி வேலையை தொடர்ந்தாள்)

சிறிது நேரத்தில் ரங்கமணி என்ட்ரி….

“ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா…. என்னா வெயிலு என்னா வெயிலு… சாயங்காலம் வரைக்கும் கொளுத்துது போ” என்றபடி மின் விசிறியை சுழல விட்டார்

“ஹ்ம்ம்… ஊட்டில ஒரு வேல பாருங்க… குளுகுளுனு இருக்கலாம் வருஷம் பூரா” என்றாள் கேலியாய்

“ஏன் அண்டார்டிக்கால பாத்தா வேண்டாம்பியோ?” என்றார் அவரும் கேலியாய் பதிலுக்கு

“ஹும்க்கும் இங்க இருக்கற ஆக்ராக்கு போய் தாஜ் மகாலை பாக்க வழியைக்காணோம்… இதுல அன்டார்டிக்காவாம் ஆப்ரிகாவாம்” என கழுத்தை நொடிக்கிறாள்

“பாத்து பாத்து… ரெம்ப திருப்பாத, கழுத்து சுளுக்கிக்க போகுது…”

“இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல”

“ஏன் தங்கம்? என்னமோ 5ம் நம்பர் பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்ல எறங்கற மாதிரி இங்க இருக்கற ஆக்ராங்கற… அது போகணும் ரெண்டு நாளு ட்ரெயின்ல”

“மனசிருந்தா அமெரிக்காவும் அரை மையில் தான்… மனசில்லைனா அடுத்த தெருவும் அரை நாள் தொலைவு தான்”

“ஆரம்பிச்சுட்டயா உன் பழமொழி ரீமிக்ஸ் வேலைய? அது சரி… என்ன டிபன் இன்னிக்கி?” என பேச்சை மாற்றுகிறார்

“சேமியா கிச்சடி”

“எப்ப பாத்தாலும் இதே தானா? வேற எதாச்சும் வெரைட்டியா செய்யேன்”

“என்னது? எப்ப பாத்தாலும் இதேவா? இன்னைக்கி காலைல பொங்கல் செஞ்சேன், நேத்து சாயங்காலம் தோசை காலைல ஆப்பம், முந்தின நாள் சாயங்கலாம் அடை காலைல உப்மா, அதுக்கு முந்தின நாள் சாயங்காலம் இட்லி காலைல எலுமிச்சபழ சேவை… இதுக்கு மேல என்ன வெரைட்டி செய்ய சொல்றீங்க?” என முறைக்கிறார்

“அதில்லம்மா… இந்த சப்பாத்தி சன்னா, பூரி மசால், நான் குருமா, புலாவ் பச்சிடி இப்படி எதுனா செய்யலாமே?”

“அதுக்கு எவளாச்சும் ஹிந்திகாரியா பாத்து கட்டி இருக்கணும்…” என்கிறாள் கடுப்பாய்

“ஹ்ம்ம்… இப்ப யோசிச்சு என்ன புண்ணியம்?” என வேண்டுமென்றே சலித்து கொள்கிறார்

“ஓஹோ… அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?” என தங்கமணி டெரர் லுக் கொடுக்க

“இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல தங்கம்… நீ மட்டும் ‘உம்’னு ஒரு வார்த்த சொல்லு….”

அதற்குள் இடைமறித்து “என்ன சொன்னீங்க?” என தங்கமணி முறைக்க

“ஹி ஹி… அதில்ல தங்கம்… உனக்கும் கூட மாட உதவியா… ” என்றவர், தங்கமணி ருத்ரதாண்டவம் ஆட தயாராவதை உணர்ந்து

“ஹா ஹா… டென்ஷன் ஆகாத… சும்மா கிண்டலுக்கு சொன்னேன்… நான் டிரஸ் மாத்திட்டு வரேன்… கிச்சடி எடுத்து வெய்யி சாப்பிடலாம்” என்றபடி அறைக்குள் செல்கிறார்

அவர் சென்ற பின், ஏனோ தங்கமணிக்கு சற்று முன் வந்த ராங் கால் நினைவுக்கு வந்தது

“ஒருவேளை அந்த பொண்ணு பேசினது ஹிந்தியா இருக்குமோ” என ஒரு நொடி நினைத்தவர், “என்னமோ இருக்கட்டும் ராங் கால் பத்தி நமக்கென” என மேல் வீட்டுக்கு விளையாட சென்ற மகளை அழைத்து வர செல்கிறாள்
“வா தங்கம்… டிபன் வேலை எல்லாம் ஆச்சா?” என வரவேற்கிறாள் மேல் வீட்டு ஐஸ்வர்யா

“செஞ்சாச்சு ஐஸு…  இனி தான் சாப்பிடணும்… அதான் பாப்பாவ கூட்டிட்டு போலாம்னு வந்தேன்” என்றாள்

“உனக்கு விஷயம் தெரியுமா தங்கம். நம்ம வசந்தி, அவ வீட்டுக்காரரை டைவர்ஸ் பண்ண போறாளாம்”
“ஐயையோ என்னாச்சு?” என்கிறாள் தங்கமணி அதிர்ச்சியாய்

“அதையேன் கேக்கற… என்னமோ சொல்லுவங்களோ, கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும்….னு…அப்படி தான் ஆச்சு கதை… இந்த காலத்துல யாரையும் நம்பறதுக்கில்ல”

“ஹ்ம்ம்… ” என்றாள் யோசனையாய் “சரி, அவர் டிபன் சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கார், நான் அப்புறம் வரேன்… பாப்பா வா போலாம்” என மகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறாள்

அன்றிரவு….“கிச்சடி நல்லா இருந்தது தங்கம்” என்றார் ரங்கமணி

“ம்… அது சரி… உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?”

“என்ன இப்படி கேட்டுட்ட? கல்யாணம் ஆன புதுசுலையே சொன்னனே”

“ஆமா, வெவரங்கெட்டவ ஒருத்தி சிக்கினானு சும்மா என்ன என்னமோ புருடா விட்டீங்க… அதெல்லாம் யாரு நம்பினா”

“அடிப்பாவி, எல்லாம் நேரம். அப்படினா நான் அப்ப சொன்ன எதையுமே நீ காதுலையே வாங்கிக்கலையா?” என்றார் பாவமாய்

“இப்படி பாவமா மூஞ்சிய வெச்சுட்டு கேட்டாலும் அதே பதில் தான்..”

“ஹும்… நான் கூட என் புது பொண்டாட்டி எவ்ளோ அக்கறையா நாம பேசறத ரசிச்சு கேக்கறான்னு நினைச்சு எவ்ளோ சொன்னேன்… எல்லாம் வீணா போச்சே” என பீலிங் காட்டுகிறார்

“சரி சரி… அத விடுங்க… உங்களுக்கு ஹிந்தி நல்லா பேச தெரியுமா?” என மேட்டர்க்கு வருகிறார்

“ஹிந்தி மட்டுமில்ல, பஞ்சாபி கூட கொஞ்சம் பேசுவேன்” என்றார் பெருமையாய், பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்

“எப்படி கத்துகிட்டீங்க?” என ஆர்வம் போல் காட்டி விசயத்தை கறக்க முயல்கிறாள் தங்கமணி

“அது… எங்க ஆபீஸ்ல ஒரு பஞ்சாபி பொண்ணு இருந்தா… சும்மா சொல்லக்கூடாது… நல்ல பொண்ணு… லஞ்ச் எல்லாம் எனக்கும் சேத்து கொண்டு வருவா… அதுவும் அந்த புலாவ் & நவரத்னகுருமா டேஸ்ட் இன்னும் நாக்குலையே இருக்கு போ” என சிலாகிக்கிறார், தற்போது தன் நாக்கில் சனி பகவான் ‘தாம் தரிகிட தீம் தரிகிட’ என ஜதி பாட ரெடியா இருக்கறது தெரியாம

தங்கமணி கோபத்தை கட்டுப்படுத்தியபடி “ஓஹோ.. அதான் சப்பாத்தி, நான், புலாவ் எல்லாம் வேணும்னு கேட்டீங்களோ?”

“ஹி ஹி… ஆமாம்… அந்த பொண்ணு தான் கொஞ்சம் ஹிந்தி பஞ்சாபி எல்லாம் சொல்லி குடுத்தது”

“அவள மனசுல வெச்சுட்டு தான் கொஞ்ச நேரம் முன்னாடி ‘நீ மட்டும் உம்’னு சொல்லு’ னு சொன்னீங்களோ”

“என்ன தங்கம் நீ…”

“அதுவும் எனக்கு கூட மாட உதவியா?”

“ஐயோ… என்னை கொஞ்சம் பேச விடேன்…”

“ஐயையோ… இப்படி மோசம் போயிட்டனே… அம்மா அப்பா, என்னை இப்படி ஒரு மனுஷன்கிட்ட சிக்க வெச்சுட்டீங்களே” என தங்கமணி அழத்துவங்க

“என்னாச்சு தங்கம்? நீ கேட்ட கேள்விக்கு தானே பதில் சொன்னேன்” என ஒன்றும் புரியாமல் ஜெர்க் ஆகிறார்

“எனக்கு தெரியும்…எல்லாம் தெரியும்… அவ பேரு கூட சசிரேகா தானே… ” என அழுகிறாள் தங்கம்

“இல்லையே… அவ பேரு ஜெய்பரீத் ஆச்சே..” என அந்த நேரத்துலயும் திருத்தம் செய்கிறார்

“ஓஹோ… அவ பேரு ஊரு போன் நம்பர் எல்லாம் மனப்பாடமா இருக்கா?”
“இல்ல தங்கம்…” என்றவரை பேச விடாமல்

“நீங்க பொய் சொல்றீங்க… அவ பேரு சசிரேகாதான்… இன்னிக்கி போன் பண்ணி இருந்தா.. எடுத்த உடனே சஸ்ரிகாஜினு என்னமோ சொன்னா… என்னை கூட நை நை’னு என்னமோ திட்டினா… நான் சுதாரிச்சதும் வேணும்னே ராங் நம்பர் மாதிரி நடிச்சுட்டு கட் பண்ணிட்டா”

“ஐயோ…இல்ல தங்கம்….அது வந்து…” என ரங்கமணி சொல்ல வருவதை காதில் வாங்காமல்

“நான் எங்க ஊருக்கே போறேன்… நாளைக்கே போறேன்” என தங்கமணி புலம்பல் தொடர்கிறது

அதுக்கப்புறம் ரங்கமணி தனியா உக்காந்து பொலம்பினது இதான்

“அட ஆண்டவா… அது சசிரேகாவும்  இல்ல லலிதாகுமாரியும் இல்ல, சத்ஸ்ரீஅகால்ஜி… பஞ்சாபி மொழில சத்ஸ்ரீஅகால்ஜினு சொன்னா நாம வணக்கம் சொல்ற மாதிரினு இவளுக்கு எப்படி சொல்லி புரிய வெக்கறது… ஹும், சப்பாத்தி கேட்டது ஒரு குத்தமா… என் கெட்டநேரம், இன்னைகினு பாத்து ஏதோ ஒரு பஞ்சாபி லூசு ராங் கால் பண்ணி இருக்கு, நான் வசமா சிக்கிட்டேன்… இவ ஒருத்திய சமாளிக்கவே நான் திணறிட்டு இருக்கேன். இதுல இன்னொன்னு வேற வேணுமா? ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பபா…”

புலம்பலை ரசித்த இடம்:  http://appavithangamani.blogspot.com

முஸ்கி : என்னது சமையல் குறிப்பா? என்ன பண்ணி தொலையிறது இந்த குரூப்ல ” கல்யாணம் ஆகாத பசங்க இருக்காங்க ” ” ( எப்பவும் ) கல்யாணமே ஆகாத பசங்களும் இருக்காங்க..  அவங்களுக்காக தான்.. இது.. ( எல்லாம் என் தலையெழுத்து.. )

( கம கமக்கும் வெஜ் சாம்பார் )

தேவையான பொருட்கள் :

கிச்சன் :1 (உங்க வீட்டில் இருக்கணும் )

கேஸ் அடுப்பு : 1 (இரண்டு பர்னர் கொண்டது )

கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )

கேஸ் : தேவையான அளவு

பாத்திரம் : 2 (சைஸ் உங்களுக்கு தேவையான அளவு )

கரண்டி : 2 ( பாதாள கரண்டி இல்லை )

டேபிள் ஸ்பூன் : 3 ( டேபிள் இல்லாமல் )

லைட்டர் : 1 ( இல்லாவிட்டால் தீப்பெட்டி )

தண்ணீர் : 6 லிட்டர்

டுஸ்கி : நோ , நோ ….. இதுக்கே கோவப்பட்டு அருவாள எடுத்தா எப்படி? இன்னும் செய்முறை வேற இருக்கே ?

செய்முறை :

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் ,லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பைபற்ற வைக்கவும்.ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து இரண்டு பாத்திரங்களையும் கழுவி கொள்ளவும் ,ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின் மேல் வைக்கவும் ,அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதிக்க வைத்த நீரை வைத்து அடுத்த பாத்திரத்தைகழுவவும் ,பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரை எடுக்கவும்..அதை அந்த பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

இப்போது சுவையான “வெஜ் சாம்பார்” ரெடி .அடுத்து உங்கள் இஷ்டம் போல் வலது பக்கத்து ( தக்காளி….. தப்பி தவறி கூட இடது பக்கத்து வீட்டுக்கு போயிடாதிங்க செருப்படி விழும் , நேத்துதான் சாம்பார் ஓசி வாங்கி இருக்கோம் ) வீட்டிலோ ,எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி ,இந்த சுவையான “வெஜ் சாம்பார்” ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

டிஸ்கி : ஹி,ஹி,ஹி…….. இன்னும் நிறையா ஐட்டம் இருக்கு ஒன்னு ஒன்னா எடுத்து விடுறேன் .

இப்படிக்கு

மங்குனி அமைச்சர்

தலைவர்

ஓசியில் உடம்பை தேத்துவோர் சங்கம்

சமையல் குறிப்பு படித்து நொந்த இடம்: http://www.terrorkummi.com

ரிமோட் கண்ட்ரோல் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பேசுகிறது…

ஐயோ வாங்க என் வாழ்க்கையை பற்றி கேளுங்க, எல்லாரும் என்னை நோன்டோ நோன்டுன்னு நோன்றாயிங்க, உங்களை நோண்டு நோன்டுன்னு நோன்டுனா உங்களுக்கு எப்பிடி இருக்கும்…??

இதுக்காக எனக்கு எப்போ சான்ஸ் கிடைக்குதோ, அப்பப்போ சோபா’க்கு கீழே போயி ஒளிஞ்சிகிடுறேன், இருந்தாலும் தடியணுக, தடிச்சிக, சோபா’மேலே ஏறி உக்காருறதுனால எனக்கு மூச்சி முட்டுது…!!!

நீங்க நல்லா காத்து வாங்கிட்டு உக்காந்து இருக்கீங்க, என்னை மட்டும் மூச்சி முட்ட வைக்கிறீங்க, உங்க மேல யாராவது குண்டா உக்காந்தா, உங்களுக்கு எப்பிடி இருக்கும்…???

நீங்க சிரிக்கனும்னாலும் என்னை நோன்டுறீங்க, அழனும்னாலும் [[சீரியல்]] என்னை நோன்டுறீங்க, திட்டனும்னாலும் [[விஜய்]] என்னை நோன்டுறீங்க…..??? கோவம் வந்தா என்னை தூக்கி எதுக்குடா எறியுறீங்க ராஸ்கல் ம்ஹும்…..!!! [[இதை ஹிந்தியில் சொல்லும் போது இன்னும் சூப்பரா இருக்கு…!!!]]

கதை கேட்ட இடம்: http://nanjilmano.blogspot.com

கிரிக்கெட்ல நம்மள நல்லா ஏமாத்தறாங்கப்பா..

எப்படி தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப.., Wicket Keeper
விக்கெட் விழாம தடுக்கணும் தானே…!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-னு சொல்றாங்களே..
அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம
இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night Watchman-னு
சொல்வாங்க.. ஆனா அவரும் மேட்ச் முடிஞ்ச
Ground-ஐ காவல் காக்காம ரூம்க்கு தூங்க
போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க.. ஆனா
கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும்
Light எரிஞ்சாலும்., ஒரு பக்கத்தை மட்டும்
“OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச உடனே ஒருத்தரை
மட்டும் தான் ” Man of the Match “-ன்னு
சொல்லுறாங்க.. அப்ப மீதி பேரெல்லாம்
Women-ஆ..?

தெரிந்து கொண்ட இடம்: www.terrorkummi.com

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.










@vembaikrishna

அரசுடிவிக்காக உள்ளூர்சானல்கள் முடக்கம்., சீக்கிரம் செய்யுங்கம்மா… தமிழன் பாடபுத்தகம் இல்லையென்றால் கூட ஒத்துக்குவான்; டிவி இல்லாம செத்துருவான்.
@iKrishS
சதானந்தா-வை முதல்வராக்கியிருக்கும் எடியூரப்பாவிற்கு, அமாவாசை சத்யராஜ் கலக்கிய அமைதிப்படை டிவிடி யை அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளேன்.
@aadhireyan

சிறிய கரித்துண்டால் ஒருவருடைய மானத்தை தீர்மானித்துவிடுகிறோம்.

@iParisal
பிச்சைக்காரர்கள் ஒரு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை. போலீஸ்காரர்கள் நூறு ரூபாய்க்கு கம்மியாய் வாங்குவதில்லை.

@kanapraba
சின்னத்திரை நாடகம், இசை, நடன நிகழ்ச்சி, talk show எல்லாவற்றிலும் அழுகை, செண்ட்டிமெண்ட் கண்டிப்பாக இருக்கணும் என்பது எழுதப்படாத விதியோ.
@sheik007
சென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டை தடுக்க பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா திருட்டு.. #ஆட்டை ஆப் தி இயரு..

@ThalaThalapati
சிங்கம் சிங்கம் மன்மோகன் சிங்கம்

@cheethaa
சோம்பேறி என்பவன் செய்கிற வேலையை பாதியிலேயே
@anuthinan
கதிர்காம கந்தனின் நூலை கையில் கட்டி விடும் அன்பு அம்மாவுக்கு கூட நான் அந்த முருகன் போல இருப்பதில் உடன்பாடில்லை!!!! # ஆண்டி கோலம்.
@Kannamoochi
எந்த வேலையையும் மறுநாளுக்குத் தள்ளிப் போடாதீங்க. …. இன்றைக்கே யாரையாவது செய்ய சொல்லிடுங்க!
@umakrishh
ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் காரணங்களை மனம் கற்பித்துக் கொள்கின்றது அதற்கு சாதகமாகவே .

@naiyandi
அய்ய…ஜாலி, டீச்சர் லீவு! வா சிதம்பரம் கொஞ்ச நேரம் வாயை திறந்து கத்தி விளையாடலாம் -மன்மோகன் சிங்:-)

@PoetVM
@kodaangi
தெரிந்தவர்களிடம் நான் அதிகம் எதிர்ப்பார்ப்பது; எதிரில் வரும் போது ஒரு சிறு புன்னகை தான்!
@Vaanmugil
விக்ரம் நன்றாக நடிப்பார். அஜித் நன்றாக நடப்பார். விஜய் நன்றாக பறப்பார்.
@kodaangi
ஒருவழிசாலையிலும் இரு பக்கமும் பார்த்து கடக்க நேரிடுகிறது நம்மூரில்!
@pokkiris
இவ்வருடம் மழை அவ்வளவாக பொழியாது என்ற இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பு, நம்பிக்கை அளிக்கிறது.
@kolaaru
பைக் சாவி தொலைஞ்சுபோனா கூட மிஸ்ட்கால் கொடுத்து பாக்கலாம்னு லாஜிக்கே இல்லாம ஒரு யோசன வருது..மூளை வேலை முழுவதும் மொபைல் !

@pokkiris Is this true? If so, Explosive information!!!!

@minimeens
மனைவியை பிரிய அர்னால்ட் முடிவு.! #பாருங்கய்யா அவ்ளோ பெரிய பலசாலி, அவராலயே முடியல. சொம்மா எங்ககிட்ட வந்துக்கிட்டு.!!!

@araathu
பிரச்சனைகளை சமாளிப்பவர் – கலைஞர் . பிரச்சனைகளை உருவாக்கி சமாளிப்பவர் – ப்ப்புரட்சித்தலைவி.

@g_for_guru

தங்கபாலுவும் டிராவிடும் ஒன்றுதான்..எப்பிடி பால் போட்டாலும் அடிக்கவும் மாட்டேங்குறானுங்க..அவுட்டும் ஆக மாட்டேங்குறானுங்க..நான்சென்ஸ்!!
@Ganesukumar
சினிமா வில்லன்கள் எவ்ளோ வளர்ச்சியடைந்தாலும் அலைபேசியை இயக்க மட்டும் தெரிவதில்லை. # அவனுக்கு போன போடறா …

@krpthiru
நான் சற்று முன் பார்த்து முகம் சுளித்தவனின் மூச்சை இப்போது நான் சுவாசித்து கொண்டிருக்கலாம் ! # அன்பே கடவுள் !
@arattaigirl
தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளும்பாடம்… அடுத்த முறை ‘தவறை சரியாக செய்ய வேண்டும்’ என்பதாக இருக்கக்கூடாது

@Kaniyen
நண்பனுக்கு தெரியாமல் அவனுடைய அழுக்கு சாக்ஸை குப்பைதொட்டியில் போட்டுவிட்டேன்”நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமேதப்பில்லை”

@Tparavai
எக்செல் சீட்டையே வெறித்துக் கொண்டிருக்கிறார் என் பாஸ்.நாம் மாற்றாதவரை அதில் எதுவும் மாறாது என அவருக்கு தெரியவில்லை பாவம்..
@thoatta
மாநகர வாழ்க்கை எனக்கு தந்தது மிதமான தொப்பை, மாநகரத்திற்கு நான் தந்தது முடிந்தளவு குப்பை.!!!
@kolaaru
மண்வெட்டியின் ஓயாத உழைப்பிற்கும்,துண்டாகும் மண்புழுக்களுக்கும் சமயத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறது எனது மனிதாபிமானம்

@powshya
அறுவடை செய்யப்பட்ட வயல் வெளியை விரைந்து கடக்கின்றன பறவைகள்.

@selvu

பல்லி விழும் பலன்கள் உண்மைதான்.நேற்று பக்கத்து வீட்டுப் பாட்டி மீது பல்லி விழுந்துதது, இன்று 4 பேர் இறந்துவிட்டதாக பேப்பரில் பார்த்தேன்!
@arasu1691

எல்லாவற்றிலும் நம்பிக்கையிருக்கும் மனிதர்கள் இருக்கும் வரை எல்லாவற்றிற்கும் பரிகாரம் இருக்கிறது ஜோசியகாரர்களிடம்..

இந்த கீச்சுக்களை தொகுத்தவர்: பாரத் பாரதி

புதுசு புதுசா கண்டுபிடிக்கிறதுக்கு
அடிப்படையான விஷயம் அதீத கற்பனை தான். இந்த மாதிரி
விஷயத்தில இப்பல்லாம் Photo Editing Softwares ரொம்பவே நல்லா
Use ஆகுது.  மனுசப்பசங்க “Monitor” அடிச்சிக்கிட்டே  “Monitor” முன்னாடி
உக்காருவாங்க போல. நல்லா தான் யோசிக்கிறாங்க.

இனிமே உள்ளாற மழை பெய்தாலும் கவலை இல்லை.

இந்த ஒத்த Mouse போதாது, நம்மளுக்கு.

          பல்லு விலக்கும் போதாவாது போனுக்கு ரெஸ்ட் கொடுங்கப்பா!
                          நம்மளுக்கு வேற Keyboard இல்ல கொடுத்தாங்க.
                                                             இரும்மா சூடு ஆறட்டும்.

Flashback வரப்போகுது .

கணிப்பொறி அடிமைகள் பற்றிய கேலிசித்திரங்கள்; சிறிது பழையது ஆனாலும் இன்றைய உலகத்தை காட்டுவது. அதனால் உங்கள் பார்வைக்கு

பாகம் 1 பார்த்து விட்டீர்கள் என நம்புகிறேன்

நம்ம பில்கேட்ஸ் கம்பெனியோட நகைச்சுவை பாகம் 1 படிச்சுருப்பீங்க. இதோ உங்கள் பார்வைக்கு மேலும் சில

கடைசியாக…

நண்பர் Rama Sethu Ranga Nathan G+ல் பகிர்ந்து கொண்டது

வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?

நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.

வித்யா : என்ன குழப்பம்?

நித்யா : நிறைய சாப்ட்வேர் இஞ்சினியருங்க ஜாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியருங்க வேற ஃபீல்ட்ல இருக்கற

பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை செலக்ட் பண்றதுனு தெரியல. நீதான் சாப்ட்வேர் இஞ்சினியராச்சே. எனக்கு கொஞ்சம் சஜஷன் சொல்லு.

வித்யா : சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன பொசிஷனு சொல்லு.

நித்யா: முதல் மாப்பிள்ளை மேனஜரா இருக்காரு.

வித்யா : மேனஜரா? அப்படினா எப்பவுமே எதோ பிஸியா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது ராத்திரி பகலா கஷ்டப்பட்டு உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா நைட் கேப் (cab) அரெஞ்ச் பண்றனு சொல்லுவாரு. டேய் ராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வித்யா: ஆஹா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப நம்ம எஸ்கேப். அடுத்து இருக்கறவரு டெஸ்ட் இஞ்சினியரு.

நித்யா: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் கரெக்டா சொல்லுவாரு. நீ பத்து வெரைட்டி சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன் வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வித்யா: அப்ப இவருக்கும் நோ சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு பெர்ஃபார்மன்ஸ் டெஸ்ட் இஞ்சினியராம்.

நித்யா : இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட 10 நிமிஷமாச்சுனா, காபி நல்லா இருக்கானு பார்க்க மாட்டாரு. 5 நிமிஷத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிஷமா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது இன்ஸ்டண்ட் காபி, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வித்யா: அப்ப சாப்ட்வேர் மாப்பிளையே வேண்டாம்னு சொல்றியா?

நித்யா: யார் அப்படி சொன்னா? சாப்ட்வேர்லயே இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் டெவலப்பர் கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வித்யா: அவுங்களை பத்தி சொல்லேன்.

நித்யா: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம “அறிவாளி” படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு “நீ ரொம்ப நல்லவனு”சொல்லனும். அவ்வளவு தான்.

வித்யா: இது சூப்பரா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்…

G+ல் நண்பர் போஸ்கோ ஆனந்தராஜ் பகிர்ந்தது

நாட்டில் மடிக்கணினிகளின் எண்ணிக்கை அலைபேசிகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் இப்படி தான் பழைய மடிக்கணினிகளை உபயோகிக்க வேண்டி வரும் …

படங்கள் உதவி: http://www.tamilcomedyworld.com

கணிப்பொறி அடிமைகள் பற்றிய கேலிசித்திரங்கள்; சிறிது பழையது ஆனாலும் இன்றைய உலகத்தை காட்டுவது. அதனால் உங்கள் பார்வைக்கு
 

கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
இறுதியில் மதிப்பெண்ணை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிப்பெண் 
1 . ஆண்/ பெண் இணைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு   தோணுவது.
   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை
2. நீங்கள் விரும்பும் படம்
   அ) காதல்                    ஆ) சண்டை                       இ) ஏதுமில்லை
3. “அந்த காலத்துல நாங்கல்லாம்….” என அடிக்கடி சொல்வீர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
4. ஓடும் பஸ்ஸில் ஏறுவிர்களா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
5. அடிக்கடி கோவம் வருமா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
6. காதல் கவிதைகள் படிக்க விருப்பமா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
7. உடை விஷயத்தில் அலட்சியமாக இருப்பிர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
8. மொபைல் பயன் படுத்துபவர்களை கண்டால் கோவம் வருகிறதா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

மதிப்பெண் கண்டுபிடித்துவிட்டிற்களா ?
முடிவு :









































எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை, நான் என்றும் இளமைதான் என நினைப்பவர்கள் யாரும் இந்த டெஸ்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். வயசானா போல பீலிங் உள்ளவங்கதான் மார்க் என்னனு தேடுவிங்க.. 

ஹைய்யா எல்லாருக்கும் பல்பா.
நான் உங்களுக்கு கொடுத்த பல்பை எனக்கு வழங்கியவர்:  http://rajamelaiyur.blogspot.com

Surreal but Real

Minor Paddle

Dean Potter – on the line, solo at Taft Point

Falling Up

NOT PHOTOSHOPPED. It actually came out like this.

GeorgeV wrapped building

I’ve heard of a headless horseman, but this is rediculous!

Minor Air

Big hand, little city

Waterworld

Waiting autumn

What is really real? Can you trust your senses?

The Writer

A gull for every buoy.

Please don’t fall, cloud

Playing with perspective

winter kiss II

நன்றி: http://www.webdesigncore.com


என்ன மாமு நாங்களும் சும்மா கலக்குவோம்ல


தீயா வேல செய்யணும்


மேக் டொனால்ட் உங்களை கடுப்புடன் வரவேற்கின்றது


இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே வந்தால் என்ன


ஏலே ஆம்ஸ்ராங்கு உன்னால மட்டுமா முடியும்?


என் இனிய பொன் நிலவுடன்


யாரது ?? காத்தமுத்து பேரனா நீயி??


மலர்களே மலர்களே இது என கனவா??


ரொம்ப குண்டாயிட்டமோ ?


என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை


மாப்பு எவனோ வட்சிடான்யா ஆப்பு


தூக்கு மேடை எங்களுக்கு பூச்சோலை


காலங்காத்தால ஒரு தம்மு இல்லேன்னா செத்துறாலம் போல இருக்குதே ….


ஹாய் ஐ எம் ஹுங்காய் சிபிஐ ஆபிசர் பிரோம் சீனா


பார்த்த முதல் நாளே அவளை பார்த்த முதல் நாளே


ஸ்பைடர் மேன் ரிட்டர்ன்


அட அட அட அட ….பால் குளியல் சூப்பர் ..


இந்த கோடை வெயிலுக்கு ஜில்லுனு ஒரு பீர்


அவன் ஒரு சுத்த பட்டிக்காடு ஹ ஹ ஹ ஹ ஹா ஹா


அய்யய்யோ குளிருதே …


என்னை காப்பாற்ற யாருமே இல்லையா??


என் செல் பில்லை கட்ட ஒருத்த சிக்கிடாண்டி


காதலித்து பார் உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்


என்ன கொடும சரவனா எனக்கு மட்டும் ஒருத்தனும் சிக்குரானுங்க இல்லையே ….


நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம்

வித்தை கண்ட இடம்: http://qaruppan.blogspot.com

இந்த பதிவின் பாகம் 1 பார்த்து ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதோ பாகம் 2 உங்களுக்காக

உலகில் சர்வாதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாமல் போய் விடலாம். ஆனால் அவர்களைப் பற்றி ஜோக்குகள் இல்லாமல் போகாது. இதோ சில:
———
ஒரு சர்வாதிகார நாட்டில் பார்க்கில் இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் ”தூ’ என்று துப்பினார்..
அவரைப் பார்த்து மற்றவர் சொன்னார்:

“நமது ஜனாதிபதியின் உரையைப் பற்றி பொது இடத்தில் அபிப்பிராயம் தெரிவிப்பது தவறு.”
*
ஓர் அரசியல்வாதி பொதுக்கூட்டத்தில் முழங்கினார் பெருமையாக. “இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் நானேதான்” கூட்டத்திலிருந்து ஒரு குரல்: `மன்னிப்பு ஏற்கப்பட்டது.’
*
ஒரு சர்வாதிகாரி பெரிய துணிக் கடைக்குச் சென்றார். விலையுயர்ந்த சூட் ஒன்று அவருக்குப் பிடித்திருந்தது. “என்ன விலை?” என்று கேட்டார். “விலையெல்லாம் எதுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை” என்று கடைக்காரர் குழைந்தார்.
“சேச்சே… இலவசமாக எதையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்” என்றார்.
கடைக்காரர் உடனே, “சரி, இதன் விலை இரண்டு ரூபாய்” என்றார்.
சர்வாதிகாரி நாலு ரூபாயை அவரிடம் கொடுத்து, “அப்படியானால் இரண்டு சூட் எடுத்துக் கொடுங்கள்” என்றார்.
*

ஹிட்லரைப் பற்றிய சில கேலி ஜோக்குகள் அவர் காதுக்கு எட்டின. யார் இந்த ஜோக்குகளை ஆரம்பித்து வைத்தவர் என்று கண்டுபிடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அரும்பாடு பட்டு ஒரு முதியவரைக் கண்டுபிடித்து வந்து ஹிட்லரிடம் விட்டார்கள்.
“என்னய்யா, நீர்தான் என்னைப் பற்றி கேலி ஜோக்குகளைப் பரவ விடுகிறீரா? நான் இறந்தால் உலகம் முழுதும் கொண்டாடுவார்கள் என்கிற ஜோக் உங்களுடையது தானே?”
“ஆமாம்.”
“நான் ஆற்றில் மூழ்கிய போது ஒருவர் காப்பாற்றுகிறாராம். அவருக்கு நான் நன்றி தெரிவித்த போது, `நன்றி எதுவும் வேண்டாம். நான்தான் உங்களைக் காப்பாற்றினேன் என்று வெளியே யாருக்கும் சொல்லாமலிருந்தாலே பெரிய உதவியாயிருக்கும்’ என்ற ஜோக்கும்…”
“ஆமாம். என்னுடையதுதான்.”
“இவ்வளவு துணிச்சலா உங்களுக்கு? நான் யார் தெரியுமா? உலகிலேயே சர்வ வல்லமை படைத்தவன்.இன்னும் ஆயிரம் ஆண்டுகள் என் வம்சம்தான் உலகை ஆளப் போகிறது என்பது தெரியாதா?”
“அய்யய்யோ, இப்போது நீங்கள் சொல்வதுதான் முதல்தர ஜோக்! ஆனால் இந்த ஜோக்கை நான் சொல்லவில்லை. இதுக்கு முன்னே நான் இதைக் கேட்டதுகூட இல்லை” என்றார் அந்த முதியவர்.
*
குருஷ்சேவுக்குப் பயங்கர கோபம் கேலி ஜோக்குகள் சொல்பவர்கள் மீது. “இந்த மாதிரி யாராவது ஜோக் சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு வந்து என் முன் நிறுத்துங்கள்” என்று உத்தரவிட்டார்.
அதிகாரிகள் ஒரு ஜோக் எழுத்தாளரைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.
குருஷ்சேவின் மாளிகைக்குள் நுழைந்த அவர், அதன் ஆடம்பர அலங்காரங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்.
அவரைப் பார்த்து குருஷ்சேவ், “என்ன, சாப்பிட்டு விடுவது போல் பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
“பரவாயில்லை. நீங்கள் வசதியாகத்தான் இருக்கிறீர்கள.”
“அதற்கென்ன, பார்த்துக் கொண்டே இரு. இன்னும் இருபது வருஷங்களில் இந்த நாட்டில் உள்ள எல்லாரும் இப்படித்தான் இருக்கப் போகிறார்கள்” என்றார்.
“ஆஹா, ஒரு புது ஜோக் எனக்குக் கெடைச்சுது” என்றார் ஜோக் எழுத்தாளர்.
*
பயில்வான் போன்று இருந்தத ஒரு ஆசாமி, தெருவில் எதிரே வந்த நோஞ்சான் ஆசாமியின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
நோஞ்சான் திருப்பி அடிக்கத் தயங்கி, “ஏ… என்னை நிஜமாக அடிச்சியா? இல்லை விளையாட்டா அடிச்சியா?” என்று கேட்டான்.
“நிஜம்மாத்தான் அடிச்சேன். அதுக்கு என்ன?” என்று கர்ஜித்தான் பயில்வான்.
“அதுதானே… எனக்கு விளையாட்டெல்லாம் பிடிக்காது. கெட்ட கோபம் வரும்…” என்று சொல்லிக் கொண்டே நடந்தான் நோஞ்சான்.
*
பள்ளிக்கூட ஆசிரியை மாணவர்களுக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். “அப்போது கடவுள் அங்கு தோன்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ரொட்டியும், வெண்ணெயும் கொடுத்தார்…” என்றாள்.
ஒரு மாணவன், “டீச்சர், கடவுள் என்பவர் கிடையாது என்று சர்வாதிகாரி நேற்றுகூட டி.வி.யில் சொன்னாரே” என்றான்.
டீச்சருக்கு உதறலெடுத்தது. உடனே சமாளித்துக் கொண்டு, “இது கற்பனைக் கதைதான். ரொட்டியும், வெண்ணையும் எங்கே இருக்கிறது நமது நாட்டில்? அது கற்பனைதானே! அதுபோல் கடவுளும் கற்பனைதான்” என்றார்

ரசித்த இடம்: http://kadugu-agasthian.blogspot.com/





==


தலைவரோட பேத்தி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு
ஓடினதை செய்தியாப் போட்டதுக்காகவா இவ்வளவு
கோபப்படறார்..?

ஊஹூம்…அதுக்குத் தலைப்பு ‘தலைவரின் பேத்தி
டிரைவருடன் ஓட்டம்’னு போட்டுட்டாங்களாம்…அதான்..!

============================================

தலைவரோட வீடு கோயில் மாதிரி..!

அவ்வளவு சுத்தமா..?

ஊஹூம்…வாசல்ல நிறைய செருப்பு கிடக்கும்.!

=========================================

ஒவ்வொரு தடவை பூட்டை உடைச்சுத் திருடும்போதும்,
மனசு கிடந்து அடிச்சுக்கும்..!

இது தப்புன்னா..?

இவ்வளவு நல்ல பூட்டையெல்லாம் வீணா
உடைக்கிறோமேன்னு..!

==========================================

தொழில்ல இந்த அளவுக்கு நஷ்டம் அடையக் காரணம்
என்னன்னு ஜோசியர்கிட்டே கேட்டதும்…

வாஸ்து சரியில்லைன்னாரா..?

ஊஹீம் என் ‘தோஸ்து’ சரியில்லைன்னார்..!

=======================================

பத்திரிகைக்காரங்க மேல தலைவர் ரொம்ப கோபமா
இருக்காரே, ஏன்..?

அவர் பீகார்ல கொஞ்ச நாள் இருந்ததை, திகார்ல
இருந்ததா எழுதிட்டாங்களாம்..!


==========================================

என் பையனைக்காட்டிலும் உன் பையன் பரீட்சையில
மார்க் கம்மியாத்தானே வாங்கினான்…
அவனுக்கு எப்படி இன்ஜினீயரிங் சீட் கிடைச்சது..?

பிச்சை எடுப்பவர்:- பேமன்ட் கோட்டாவுல சீட்
வாங்கிட்டேன் தாயீ..!

==========================================

இந்த டாக்டர் போலின்னு எப்படிக் கண்டு பிடிச்சீங்க..?

‘நாளைக் உங்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணனும்…
காலையிலேயே மெரீனா பீச்சுக்கு வந்திடுங்க’ன்னு
சொன்னாரே..!

>குட்டி.மு.வெங்கடேசன்
==========================================

வாரப் பத்திரிகைக்கு தட்டச்சு செய்கிறவர்கிட்டே குற்றப்
பத்திரிகையை ‘டைப்’ பண்ணக் குடுத்தது தப்பாப்
போச்சா…ஏன்?

‘இவை யாவும் கற்பனையே…யாரையும் எவரையும்
குறிப்பிடுவது அல்ல’ன்னு கடைசியில ஒரு ‘லைன்’
அடிச்சுத் தொலைச்சிருக்கார்..!

>ஜெயாப்ரியன்
==========================================
நன்றி: குமுதம்

ரசித்த இடம்: http://rammalar.wordpress.com

ஒரு காட்டில் உள்ள மரத்தில், உங்களை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்ருகாங்க. அந்த கயிறை ஒரு மெழுகுவர்த்தி எரித்து கொண்டிரிக்கிறது. கீழே,நீங்க எப்ப கீழே விழபோறிங்கன்னு ஒரு சிங்கம் வேற வைடிங்க்ல இருக்கு. இந்த சூழ்நிலைல எப்படி நீங்க தப்பிபீங்க???

விடை கீழே….
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

நீங்க ஹாப்பி பெர்த்டே பாடுனிங்கண்ணா சிங்கம் ஓடி போய் மெழுகுவர்த்தியை அணைச்சிடும்….. நீங்க எஸ்கேப்….. இப்ப நான் எஸ்கேப்…


அடிப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய இடம்: எறும்பு 

கணவனும் ஸ்ப்ளிட் ஏசியும் ஒன்று தான். வெளிய எவ்வளவு சவுண்ட் விட்டாலும் வீட்டுல சைலன்ட் மோடு தான்.

கணவன் என்பவன் குடும்பத்தில் தலை மாதிரி; மனைவி என்பவள் கழுத்து மாதிரி; கழுத்து தான் தலை எந்த பக்கம் பாக்கணும்னு முடிவு செய்யும்.

ஒவ்வொரு ஆணும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். சந்தோசம் மட்டுமே வாழ்க்கையா என்ன?

கல்யாணமாகாத ஆண்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும். அவர்கள் மட்டும் சந்தோசமாக இருப்பது நியாயமா? – ஆஸ்கார் வைல்ட்

பணத்திற்காக கல்யாணம் செய்து கொள்ளாதிர்கள். எளிதாக பணம் கடன் வாங்கி கொள்ளலாம்.

தீவிரவாதத்தை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு கலியாணம் ஆகி ரெண்டு வருடம் ஆச்சு. – சாம் கினிசன்

காதலுக்கு கண் பார்வை இல்லை. கலியாணம் தான் கண் பார்வை தருகிறது.

ஒருவன் தன மனைவிக்காக கார் கதவை திறந்து விடுகிறான் என்றால் ரெண்டில் எதோ ஒன்று புதுசு: கார் இல்லை மனைவி

நான் என் மனைவியின் கரங்களை எப்போதும் பற்றி கொண்டே இருக்கிறேன். இல்லை என்றால் ஷாப்பிங் போய்டுவா

என் நண்பன் ஒருவன் திருமண மோதிரம் சின்ன கை விலங்கு போல இருப்பதாக கூறி திருமணத்திற்கு மறுக்கிறான். #கிலவர் பாய்

                உள்ள இறங்கு மாப்ள ஒரு குளியல் போட்டுறலாம் 

 

                           

                                 நான் இப்பத்தான் lkg  ல சேந்திருக்கேன் 

 

                                                         
                                                            என்னடா மொறைப்பு 

 
                       

               எப்படி ? கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்கேனா ?

 

 இதுக்கு மேல பேசுனீங்க …அத்தனை பேரையும் பெட்ரோல்       ஊத்தி                   கொளுத்திடுவேன்  ஆமா 

 

                                         

                                                     ச்சீ  …….ஆசைய பாரு 

 

                           

                       மாப்ள நீ இனிமேல் எப்படி வேணும்னாலும் திட்டிக்க 

 

  ஹீரோவா ஆகணும்ன்னா நம்மள மாதிரி பெர்சனாலிட்டி வேணும்

 

இந்த பல்ல பாத்துதான் பல பொண்ணுங்க மயங்கியிருக்காங்க 

 

                                          ஏய் …நீ ரொம்ப அழுக்கா இருக்க 

 

                              பான்பராக் கரைதான் வேற ஒண்ணுமில்ல 

 

நாக்கை நீட்ட சொல்றான் எப்படின்றத சொல்லி குடுக்க மாட்டேன்றான் 

 

இந்த போட்டோசுக்கும் ஹன்சிகாவுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறீங்களா? எனக்கும் தெரியலீங்க. நான் இந்த பதிவ சுட்ட கூடல் பாலாவுக்கும் தெரியலன்னு நெனைக்கிறேன். தெரிஞ்ச சொல்லிருப்பாரு.

பிக் பாஸ்: இந்த ஆண்டு உங்கள் செயல்திறன், நன்றாக இருந்தது. எனவே, இந்த ஆண்டுக்கான உங்கள் மதிப்பீடு: “சராசரி”

குமார்: என்ன? ‘சராசரி’ எப்படி வந்தது?

பிக் பாஸ்: … ம்ம்ம் ஏனென்றால் … uhh … உங்களுக்கு டொமைன் பற்றிய அறிவு குறைவாக இருந்தது

குமார்: ஆனால் கடந்த ஆண்டு நான் ஒரு டொமைன் நிபுணர் ஆக இருக்கிறேன் என்று தானே நீங்கள் என்னை இந்த ப்ரொஜெக்டில் டொமைன் ஆலோசகராக நியமித்தீர்கள்

பிக் பாஸ்: .. ம்ம்ம் , .. uhh …  உங்கள் டொமைன் அறிவு இந்த ஆண்டு குறைந்து இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

குமார்: என்ன???

பிக் பாஸ்: ஆமாம், நான் நீங்கள் purchase டொமைனில் அறிவை வளர்த்து கொள்ள வில்லை.

குமார்:  அது சரி தான். ஆனால் manufacturing டொமைனில் இருக்கும் நான் ஏன் purchase டொமைனில் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்?

பிக் பாஸ்: இது தான் உங்களிடம் எனக்கு பிடிக்காத அடுத்தது. எல்லாவற்றிற்கும் எதாவாது பதில் சொல்லி கொண்டே இருக்கீங்க.

குமார்: அப்படியா? (குழப்பமாக தலையை சொறிகிறார்)

பிக் பாஸ்: அடுத்து, நீங்கள் உங்கள் தொடர்பு திறன்களை மேம்படுத்த வேண்டும்.

குமார்: என்ன? தொடர்பு திறன் மேம்படுத்த வேண்டுமா?  நான் “வர்த்தகம் தொடர்பாடல்” குறித்து பயிற்சி அளித்த பொது நீங்கள் கூட அமர்ந்து குறிப்பு எடுத்தீர்களே! மறந்து விடீர்கள?

பிக் பாஸ்: ஓ அது? Errr … சரி .. அதாவது, நீங்கள் உங்கள் சமூக நடைமுறைக்கேற்ற உடன்பாடான தொடர்பாடல் மேம்படுத்த வேண்டும்.

குமார்: அப்படியா? அது என்ன நான் கேள்வி படாத ஒன்றாக இருக்கிறதே!

பிக் பாஸ்: பார்த்தீர்களா? இதை தான் நான் நீங்கள் இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று சொன்னேன்.

குமார்:  மனதுக்குள் (அட ங்கோயாள!)

பிக் பாஸ்: அடுத்து, நீங்கள் உங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும் திறன்களை கூர் தீட்ட வேண்டும். நீங்கள் எடுத்து கொடுத்தவர்கள் எல்லாம் இரண்டு மாதத்திலே ஓடி விட்டார்கள்.

குமார்:  சார், அது என் தவறு அல்ல. நீங்கள் அவர்கள் பின்னால் உட்க்கார்ந்து வேலை செய்வதை பார்ப்பேன் என்று சொன்னதால் தான் அவர்கள் அடுத்த நாளே ராஜினாமா செய்தார்கள். இன்னும் இரண்டொருவர் தற்கொலை கூட செய்ய முயற்சித்தது காப்பாற்றப்பட்டனர்.

பிக் பாஸ்: (அதிர்ச்சியை சமாளித்தவாறே ) ம்ம் … எப்படியோ, நான் உனக்கு ஒரு நல்ல மதிப்பீடு அளிக்கவே விரும்பினேன். ஆனால் நம் அலுவலக விதிகள் படி உனக்கு  ‘சராசரி’ மட்டுமே கொடுக்க முடிந்தது.

குமார்: அது ஏன் என்று எனக்கு விளக்க முடியமா?

பிக் பாஸ்: அது ஒரு சிக்கலான செயல்முறை தான். அதை நீ அறிந்து கொள்ள விரும்ப மாட்டாய் என நெனைக்கிறேன்.

குமார்: இல்லை சார்.  நான் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். தயவு செய்து விளக்குங்கள்.

பிக் பாஸ்:  சரி. நீ கேட்டதால் உனக்கு மட்டும் சொல்கிறேன். நாங்கள் எல்லாரும் ஒரு அறையில் கூடுவோம். அனைவரின் பெயரை துண்டு காகிதங்களில் எழுதி மேலே தூக்கி எறிவோம். தரையில் விழும் பெயர்களுக்கு “சராசரி” கொடுப்போம். மேசை மீது விழும் பெயர்களுக்கு ‘நல்லது’ கொடுப்போம். எங்களால் பிடிக்க முடிந்த பெயர்களுக்கு ‘மிக சிறந்தது’ கொடுப்போம்.  பேனில் சிக்கி கொள்ளும் பெயர்களுக்கு ‘சிறந்தது’ கொடுப்போம்.

குமார்: (கண்களை உருட்டி கொண்டே) யாருக்கு “மோசம்” கொடுப்பீர்கள்?

பிக் பாஸ்: நாங்கள் பெயர் எழுத மறந்தவர்களுக்கு தான்.

குமார்: (கடுப்புடன்) எப்படி சார் பேனில் துண்டு காகிதம் சிக்கும்?

பிக் பாஸ்: (பதற்றத்துடன்) இப்போது நீ எங்கள் 20 ஆண்டு கால நடை முறை பற்றி கேள்வி கேட்கிறாய். இது உனக்கு நல்லதில்லை!

குமார்: (மயக்கம் போட்டு விழுகிறார்)

நன்றி: http://funnyclick.blogspot.com/

பார்பதற்கு விக்கிபீடியா கலைக்களஞ்சியம் போலவே தோற்றம் அளிக்கும் தளம்,முற்றிலும் தவறான தகவல்களையே கொடுக்கும் தளம்,காமெடிக்காக மட்டுமே

அந்த தளத்தில் google என்று டைப்பி தேடினேன்

கிடைத்தது

Did you mean: Evil Empire?

No standard web pages containing all your search terms were found.

Your search – Rat – did not match any documents.

Suggestions:

  • Help me, HELP ME! THEY GOT ME OH MY GOD OH MY GOD GOING DOWN MAYDAY MAYDAY(end transmission)
  • It’s a trap!
  • Oh, for God’s sake check your spelling!
  • Escape from your mum’s closet. Even living in New York is better than that place.
  • Run before they find you.
  • Forget the last one – no one can escape from google, just kill your self now.
  • Quit searching for illegal Child porn, it’s fucking illegal dude!.
  • Or Just Fuck off and eat Mr. Hydes giant balls.

அந்த தளத்திற்கு செல்ல சொடுக்கவும் இங்கே
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்லாவே இருக்கும்.

கண்டுபிடித்து சொன்னது: http://jillthanni.blogspot.com

இனிமேல 25 பைசா காயின பணப் பட்டுவாடாவிற்கு பயன்படுத்த முடியாது. கேள்விப் பட்டதும் ஒரு சில சிந்தனைகள்.. முழுக்க முழுக்க மாதவனின்  சொந்தக் கற்பனையே..  மறைமுகமாகவும் எவரையும் குறிப்பிடவில்லை இப்பதிவு.
ரெடி ஸ்டார்ட்..
கோவில் உண்டியலுல இப்போது இருக்குற(!) 25 பைசா காசெல்லாம் என்ன ஆகும் ?
இதுக்குத்தான் நாலு நாளு முன்னாடியே உண்டியல ஓபன் பண்ணி.. 25 பைசாவலாம் கோவில் கணக்குல பேங்குல கட்டி இருக்கணும்…
——————————
நண்பர் (செல்வாமாதிரி ஒரு ஆளு) சொன்னாரு..
நண்பர் : நா 25 பைசா காயின இப்பவும் ‘செல்ல’ வைப்பேன்..
நான்     :  எப்படி ?
நண்பர் : இப்படித்தான் பாருங்க, http://www.youtube.com/watch?v=C4ohRdGFvBM
எப்படி செமையா உருண்டு போகுது (செல்லுது) பாருங்க..
நீங்கதான்.. கையால சரியா சுழட்டி விடனும்.. அப்பத்தான் அது சரியாச் ‘செல்லும்
—————————–
அதே நண்பர் மளிகை கடையில சிப்பந்தியா வேலை பாத்தாருன்னா..
கடை சிப்பந்தி  : உங்க பில்லு அமவுண்டு அம்பது ரூபாய் 75 பைசா..
வந்தவர்  : இந்தாப்பா அம்பது ரூபாய் நோட்டு.. ம்ம்.. ஒரு ரூபாய் காயின்.
கடை சிப்பந்தி : ம்ம்.. 25 பைசா காயின் செல்லாது……
                            ஒரு ரூபாய் காயின் வேணாம், பாக்கி தரமுடியாது……
                            ஒரு ரூபாய் நோட்டு தாங்க………..
வந்தவர் : ஒரு ரூபாய் காயின், ஒரு ரூபாய் நோட்டுல என்ன வித்தியாசம். நோட்டு கொடுத்தா பாக்கி எப்படி சில்லறை தருவ ?
கடை சிப்பந்தி : இப்படித்தான்..
நாலு பாகமாக  ‘ஒரு ரூபாய்’ நோட்டை சரியாக மடித்து அதில் ஒரு பாகத்தை கிழித்துத் தொடுத்தார் பாக்கி சில்லறைக்கு பதிலாக.
—————————————-
என்னது, 25 பைசா காயின் செல்லாதா ? அதை ஏன் இவ்ளோ லேட்டா சொல்லுறாங்க ?
நாங்கதான் எங்க ஊருல அம்பது பைசா கூட யூஸ் பண்ணுறதில்லையே..
நாங்கலாம் அவ்ளோ ‘அட்வான்ஸா’ இருக்கோமில்ல..
தெரிந்து கொண்டது: http://madhavan73.blogspot.com/

ஒரு நிறுவனம் பிடித்த உடை தினத்தை வெள்ளி என்று தீர்மானிக்கிறது. அவர்கள் அதை அறிவிக்க ஒரு கடிதம் வெளியிட்டனர்.

Week 1

Memo 1: Effective this week, the company is adopting Fridays as Casual Day. Employees are free to dress in the casual attire of their choice.

Week 3

Memo 2: Spandex and leather micro-miniskirts are not appropriate attire for Casual Day.

Week 6

Memo 3: Casual Day refers to dress only, not attitude.

Week 8

Memo 4: A seminar on how to dress for Casual Day will be held at 4 p.m. Friday in the cafeteria. A fashion show will follow. Attendance is mandatory.

Week 9

Memo No. 5: As an outgrowth of Friday’s seminar, a 14-member Casual Day Task Force has been appointed to prepare guidelines for proper casual-day dress.

Week 14

Memo 6: The Casual Day Task Force has distributed a 30-page manual entitled “Relaxing Dress Without Relaxing Company Standards.” A copy has been distributed to every employee.

Week 18

Memo 7: Company is providing psychological counseling for employees who may be having difficulty adjusting to Casual Day.

Week 20

Memo 8: We are no longer able to effectively support or manage Casual Day. Casual Day is discontinued

  • மூழ்கி கொண்டிருக்கும் Titanic கப்பலில் இருந்து முதலில் வெளியே வரலாம்.
  • சாக்லேட்களால் பிரச்சினைகள் தீர்ந்து விடும்
  • திசை தெரியாமல் சுற்றி திரிவதை விட வழி கேட்பது நல்லது என்ற அறிவு எனக்கு உண்டு.
  • சப்போர்ட் டீமில் இருந்து எங்களுக்கு தான் முதல் பதில் வரும்.
  • கணிப்பொறியை எப்படி வீணாக்கினாலும் எங்களை திட்ட மாட்டங்க.
  • முட்டாள் ரங்கமணிகளின் அருகில் இருக்கும் போது நாங்கள் தேவதைகளாக தெரிவோம்.
  • ரங்கமணிகள் சீக்கிரம் இறந்து போக அவர்களின் insurance பணம் நாங்கள் அனுபவிப்போம்.
  • மற்ற தங்கமணிகளை விகல்பமின்றி கட்டி பிடிக்கலாம்.
  • மற்ற தங்கமணிகளை பாராட்ட அவர்கள் பின்புறம் தட்ட தேவை இல்லை.

Mr.பிரபாகரன்.. இவர் தான்
எங்க +1 Maths மாஸ்டர்..

எங்களுக்கு அவர் Maths மாஸ்டரா
வந்ததுக்கு இந்த நாடே அவருக்கு
கடமைப்பட்டு இருக்கு..

( இல்லன்னா.. நாங்க Maths-ல
Centum எடுத்து., அதனால Cut-Off-ல
200/200 வந்து., டாக்டர் சீட் கிடைச்சி.,
MBBS படிச்சி, MD முடிச்சி., FRCS
படிக்க லண்டன் போயி, அப்புறம்
வெளி நாட்லயே செட்டில் ஆகி……

உஸ்ஸப்பா.. சொல்லும் போதே
இப்படி மூச்சு வாங்குதே..!! )

ஒரு தடவை கிளாஸ்ல அவர்
” பிதோகரஸ் தியரம் ” எடுத்துட்டு
இருந்தாரு..

அப்ப கிளாஸ்ல இருக்குற மொத்த
36 பேர்ல 34 பயலுக மனசுக்குள்ள
அந்த ” பிதோகரஸ்சை ” கண்டபடி
திட்டிட்டு இருந்தானுக..!

ம்ம்…அன்னிக்கு ” பிதோகரஸ்சை ”
திட்டாத அந்த ரெண்டு நல்ல உள்ளங்கள்..
நானும்., என் Friend ஆனந்தும்..

( அரை தூக்கத்துல இருக்கும் போது
எங்களால யாரையும் திட்ட முடியாது.
ஹி., ஹி., ஹி.! )

அப்ப திடீர்னு Mr.பிரபாகரன்
என் பக்கத்துல இருந்த ஆனந்த்-ஐ
எழுப்பி….

Board-ல வரைஞ்சி வெச்சிருந்த
ஒரு முக்கோணத்தை காட்டி..

” இதுல ” C “-யோட Value-ஐ
எப்படி கண்டுபிடிப்ப..? அந்த
Formula சொல்லு..! ”

அவன் திரு திருன்னு முழிச்சான்..

” என்னடா.. முழிக்கிற..? ”

” சார் அது வந்து.. ”

” சரி ஒரு பேச்சுக்கு இந்த முக்கோணத்துல
A = 3 , B = 4-னு வெச்சுக்க… அப்ப ” C “-ன்
Value என்ன..? ”

அவன் ” டக்னு ” Answer சொல்லிட்டான்..

” C = 7 சார்..! ”

” என்னாது 7-ஆ..? ஏழு எப்படிடா வரும்.?
ஏழு எப்படி வரும்.? கிளாஸ்ல ஒழுங்கா
கவனிச்சா தானேன்னு ” ஆனந்த்-ஐ
அடி பின்னி எடுத்துட்டாரு..

( நல்லவேளை நான் எஸ்கேப்..! )

கிளாஸ் முடிச்சப்புறம்..
ஆனந்த் என்கிட்ட ரொம்ப பீல்
பண்ணி சொன்னான்..

” ஏன்டா.. எனக்கொரு நியாயம்..
அவருக்கு ஒரு நியாயமாடா..? ”

” என்றா சொல்ற..? ”

” பின்ன., அவரு மட்டும் A = 3,
B=4 ன்னு ஒரு பேச்சுக்கு சொல்லலாம்..
நான் மட்டும் ” C = 7 “-னு
ஒரு பேச்சுக்கு சொல்ல கூடாதா..?! ”

” அட ஆமா.. இது கூட லாஜிக்கா தானே
இருக்கு..?!! ”

( என் பக்கத்துல உக்காந்து இருக்கறதால
இந்த பையனுக்கு தான் எவ்ளோ அறிவு..?!! )

அனுபவத்தை சொன்னது: http://gokulathilsuriyan.blogspot.com

வர..வர..இந்த வெளிநாட்ல இருக்கவங்க தொல்ல தாங்கலப்பா… இங்கே இருந்து ஒட்டகம் மேய்க்கிறதுக்கு ஓசில போக வேண்டியது..சிங்கப்பூர் போறேன்..சிலுக்குபட்டி போறேன்னு அங்க போயி குப்ப கூட்ட வேண்டியது.. ஆனா அவனுங்க ஆர்குட்லயும்..ஃபேஸ் புக்லயும் பண்ற அட்டகாசம் தாங்க முடியலடா சாமி..ஒட்டகம் மேக்கிரவன் ஒபாமாகிட்ட நிக்கிறமாதிரி போட்டோ போடறான்… ஒன்ற டாலர் பஸ் காச மிச்சம் புடிக்க நடந்து போற நாதாரிங்க… பென்ஸ் காருகிட்ட நிக்கிற மாதிரி போட்டோ போடறான்!

 

சீன் போடற எல்லோருக்கும் இது ஒரு எச்சரிக்கை!

 இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே. இது மெயிலில் வந்தது தமிழில் அளித்திருக்கிறோம் அவ்வளவுதான்!

ஏண்டா உங்க கைய கால வச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதா? உங்களுக்கு வாழ்க்கையில என்னடா லட்சியம்? அடுத்தவங்களை பொறாமைப்பட வைக்கிறதா? அப்புறம் ஏன் உங்க புரொஃபைல் பிக்சருங்களை அடிக்கடி மாத்திகிட்டே இருக்கீங்க? என்ன காரணம்? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்!

 

ஒத்துக்கிறோம், நீங்கெல்லாம் வெளிநாட்டுக்கு போய்ட்டீங்க. உங்க ஒன்னுவிட்ட இரண்டுவிட்ட சித்தப்பா, மாமால்லாம் உங்களை நினைச்சி பெருமைப்படுவாங்க. எங்களுக்கும் சந்தோசம்தான். அதுக்காகதானே ஏர்போட் வந்து டாடாலாம் காமிச்சு வழியனுப்பி வச்சோம். ஆனா உங்க போட்டோக்களை வச்சி எங்களை ஏண்டா சாவடிக்கிறீங்க?

 

சரி, ஒத்துக்கிறோம், நாங்க அந்த இடத்தையெல்லாம் மேப்ல மட்டும்தான் பார்த்துருக்கோம், நிஜ வாழ்க்கையில இல்ல. அவ்வளவுதானே? அதுக்காக ஏன், நீங்க ஒருநாள் விட்டு ஒரு நாள் புது படத்தை போடுறீங்க. உங்களுக்கு என்னதான் வேணும்? உங்களுக்கு தேவை, நாங்கெல்லாம் ‘like’-ஐ அழுத்திட்டு “வாவ், சூப்பர், கலக்கலா இருக்கு” இப்படி கமெண்ட் போடணும், அதானே? நீங்க ரகசியமா ஒவ்வொரு நிமிசமும் எல்லா கமெண்டையும் பார்ப்பீங்க. நாலு நாள் கழிச்சு “எல்லோருக்கும் நன்றி!” அப்படின்னு ஒரே வார்த்தையில முடிச்சிட்டு போயிடுவீங்க!

 

சரி, அதைக் கூட ஒத்துக்கலாம். நீங்க நிறைய காசு செலவு பண்ணி அங்க போயிருக்கீங்க, அதனால உங்களை எல்லோரும் பாராட்டனும்னு நினைக்கிறீங்க. புரியுது. ஆனா ஏண்டா செடி, மரம், நாய், பூனைன்னு இதையெல்லாம் புரொஃபைல் பிக்சர்ல போடுறீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? லூசுப்பசங்களா!

அப்புறம் இன்னொரு ரகம் இருக்கு. அதாவது அவங்க படத்துக்கு பதிலா அவங்க குழந்தை படத்தை போடுறது. இந்த மாதிரி ஆளுங்களை பத்தி நாங்க பேசக் கூட விரும்பலை.

 

எல்லாத்தோட பெஸ்ட் லேடிஸ்தான். ஏனுங்க அம்மிணி, உங்க படத்தை கருப்பு வெள்ளையா மாத்தி போட்டா, திடீர்னு அது அழகாயிடுமா? மத்தவங்க உங்களை பார்த்து “ஆஹா. என்ன அழகு! என்ன அழகு!” இப்படி நினைக்கனும், அப்புறம் உங்களுக்கு friend request அனுப்பனும். ம்.. அப்படித்தானே? எங்களுக்குதானே தெரியும் நீங்க எப்படி இருப்பீங்கன்னு!.

 

நீங்க இங்கயும் ஒன்னும் செஞ்சதில்ல. கல்யாணம் ஆகி அங்க போயிட்டு, அங்கேயும் ஒன்னும் செய்யாமதான் இருக்கீங்க. இதில பெருமைப்பட என்ன இருக்கு? இதில தினமும் நீங்க என்ன சமைச்சீங்கன்னு அப்டேட் பண்ணுறது வேற “நான் இன்று என் அன்புக் கணவருக்காக தயிர் சாதம் சமைத்தேன்!

 

சமைச்சீங்களா? உண்மையாவா? இதில வேற அந்த லூசு ஹஸ்பெண்டும் வந்து லைக் போடுவாரு அப்புறம் பொது இடத்தில சொல்வாரு. “தேங்க்யூ டார்லிங், உம்ம்ம்ம்மா…

 

நீங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே? இந்த மாதிரி விசயமெல்லாம் அநாகரிகம்னும் பொது இடத்தில இப்படியெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு உங்களுக்கு தெரியாது? நீங்க இந்தியாவை விட்டுட்டு போனா உடனே எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?

 

அப்புறம் நீங்க சமைச்ச சாப்பாட்டோட படத்தை மிக ருசியானது எச்சில் ஊறவைக்கும்ன்னு தலைப்போட வேற போடறது…சாப்பாட்டு பார்த்தால்ல தெரியும்.. எச்சில் ஊறுமா, வாந்தி வருமான்னு! இதில வெளிநாட்டுக்காரங்க யாராவது வந்து அது எப்படி செய்யறதுன்னு கேக்கறது! கொய்யால, நீ இண்டர்நெட்டுதானே யூஸ் பண்ணுறே? கூகுள்ள தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.

 

சரி எனக்கு இப்ப ஒன்னு சொல்லுங்க, நீங்க இந்தியாவில இருந்தப்ப ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கீங்களா? உங்க அண்ணனும் நல்ல பையன் தான். அவனுக்காக ஒரு நாளாவது சமைச்சிருக்கீங்களா? யோவ் கணவன்களா, நாங்க உங்களையும்தாம்பா கேட்கிறோம், நீங்க இங்க இருந்தப்ப, ஒருதடவையாவது, உங்கம்மா சாப்பாடு நல்லாயிருக்குனு பாராட்டியிருக்கீங்களா?

 

கணவன் மனைவி இரண்டு பேரும் இந்த மாதிரி லூசுத்தனமான விளையாட்டுகளை விளையாண்டுகிட்டு வருசத்துக்கு 365 நாளும் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறீங்க. ஆனா சொல்வீங்க, “நாங்க கிங் கோல்ஸ் ஓரியண்டல் பேலசின் 35வது மாடியில் சூப்பர் டின்னர் சாப்பிட்டோம். செம சைனீஸ் ஃபுட்!” ஏம்பா அது வெறும் சைனீஸ் ஃபுட் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு சீன் போடறீங்க? இந்தியா சீனாவுக்கு பக்கத்திலதானே இருக்கு.

 

அப்படின்னா உண்மையா என்ன நடக்குதுனு  உங்களுக்கு தெரியலன்னா, இப்ப சொல்றோம் கேட்டுகுங்க. அங்க யாருமே சந்தோசமா இல்ல. நீங்க எவ்வளவு சம்பாதிச்சாலும், சந்தோசமா இருக்க போறதில்ல. வெஸ்டர்ன் டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டு, “நாம ஏன் இங்க வந்தோம்?”னு யோசிச்சிகிட்டு மட்டும்தான் இருப்பீங்க.

 

நாங்க இந்த உண்மையெல்லாம் சொன்னேன்னா, உடனே நீங்க உங்க ஐ- புரோடக்டெல்லாம் என்கிட்ட காமிப்பீங்க. இதப்பாருங்க, ஐபேட்2-லாம் இங்கேயும் கிடைக்குது, தெரியுமா? அதனால கம்முனு நாங்க சொல்றத கேளுங்க. உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க.

 

இப்ப நீங்க நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம், எங்களுக்கெல்லாம் பொறாமை, அதான் இப்படியெல்லாம் பேசுறோம்னு, இல்லையா? இதப்பாருங்க, நாங்களும் அங்கெயெல்லாம் போய் இந்த மாதிரியெல்லாம் செஞ்சாலும் இப்படித்தான் பேசுவோம். உங்களால என்ன செய்ய முடியும்?

 

இப்படிக்கு

உள்ளூர் டீக்கடை பெஞ்சு
.. 

நன்றி:

மொழி பெயர்ப்பு உதவி:எஸ்.கே,வைகை 

டீக்கடையில் புலம்பியதை ஒட்டுக்கேட்ட இடம்: http://terrorkummi.blogspot.com

நம்ம மங்குனி போன வாரம் புதுசா
ஒரு கம்ப்யூட்டர் வாங்கினாராம்..

அதுல ஏகப்பட்ட  பிரச்னைன்னு
அந்த கம்பெனிக்கு ஒரு லெட்டர்
எழுதியிருக்காரு பாருங்க..
சான்ஸே இல்ல

மங்கு ஒரு சிறந்த அறிவாளின்னு (?!)
நமக்கெல்லாம் தெரியும்.. அது
இனிமே உலகத்துக்கே தெரிய போகுது
இந்த லெட்டர் மூலமா…

To
&%^$#@&*^%$#- HCL,

( மங்கு அந்த கம்பெனிக்காரனை
கெட்ட வார்த்தையில திட்டினதை
எல்லாம் நாம எடிட் பண்ணிடலாம்..
நமக்கு ஒரு 5 பக்கமாவது மிச்சமாகும்.. )

போன வாரம் நான் வாங்கின
கம்ப்யூட்டர்ல ஏகப்பட்ட தப்பு இருக்கு..

1. என் Keyboard-ல ABCD எல்லாம்
வரிசையா இல்லாம இடம்
மாறி மாறி இருக்கு..

2. என் Key Board-ல Control Key
இருக்கு. ஆனா எத்தனை தடவை
அழுத்தினாலும் என் Wife-ஐ என்னால
Control பண்ணவே முடியல.

3. தப்பு பண்ணினப்ப Wife-கிட்ட
மாட்டிக்காம இருக்க Escape Key-ஐ
அழுத்தி பார்த்தேன்.. அதுவும் சரியா
வேலை செய்யல.. தர்ம அடி..

4. என் Key Board-ல ரெண்டு
‘ Shift ‘ Keys இருக்கு. அதுல
எது Day Shift..? எது Night Shift..?

5. அந்த TV-ல ( Monitor ) சேனல்
மாத்தற பட்டனே இல்ல..
முக்கியமா நீங்க Remote தரலை..
( யாரை ஏமாத்த பாக்கறீங்க.?! )

6. ஆபீஸ்ல இருக்கும் போது
பல தடவை ” Home ” Button-ஐ
அழுத்தி பாத்துட்டேன்.. அது என்னை
வீட்டுக்கே கூட்டிட்டு போகலையே..

7. ” $ ” Button-ஐ அழுத்தினா
அமெரிக்க டாலர் வரலை..

8. அதே மாதிரி ” காபி ” Button-ஐ
அழுத்தினாலும் ” காபி ” வரைல..
என்னய்யா கடை வெச்சு நடத்தறீங்க..?
( எலே மங்கு.. அது ” Coffee ” இல்ல.,
” Copy ” )

9. Caps Lock-ன்னு ஒரு Button இருக்கே.
அதை வெச்சு எங்க வீட்டு மெயின்
கேட்டை பூட்ட முடியுமா..?

10. என் பையன் Homework தப்பா
எழுதினப்பா ” Delete ” Key அழுத்தி
பார்த்தேன்.. ஆனா தப்பா எழுதினதெல்லாம்
அது அழிக்கலையே..

இதையெல்லாம் எனக்கு சரி பண்ணி
தரல.. பிச்சுபுடுவேன் பிச்சு…

இப்படிக்கு
அன்பு மங்குனி அமைச்சர்
( ஆமா.. இப்ப இது ஒண்ணு தான்
குறைச்சல்.! )

டிஸ்கி : அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide Attempt பண்ணினதுக்கும்., இந்த
லெட்டர்க்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.

மங்குனியின் கடிதத்தை தெரியாம படிச்சு எனக்கு சொன்னது: http://gokulathilsuriyan.blogspot.com

உங்களை மரியாதைக் குறைவா திட்டிட்டோமோன்னு மனசுக்கு
கஷ்டமா இருந்துச்சு…!

அதுக்காக மன்னிப்பு கேட்க வந்தீங்களா..?

இல்லை…மரியாதையா திட்டிட்டு போகலாம்னு வந்தேன்..!

=================================================

ஆனாலும் அவர் அநியாயத்துக்கு முன் ஜாக்கிரதைப் பேர் வழியா
இருக்கிறார்…!

என்ன செய்கிறார்..?

தனக்கு கொலஸ்ட்ரால் இருக்குங்கிறதுக்காக கோயிலில் தேங்காய்
உடைக்கிறதேயே நிறுத்திட்டார்…!

==================================================

காதலிச்ச உங்களை கைவிட முடியலே…

அதனால…?

கல்யாணம் பண்ணிக்கிட்டு டைவர்ஸ் பண்ணிடலாம்னு இருக்கேன்…!

==================================================

‘செல்’ பேச்சு கேட்காதேன்னு எழுதிப் போட்டிருக்கியே…ஏன்..?

என் மாமியார் செல்போன் மூலமா என் கணவருக்கு துர்போதனை பண்றாரே…!

====================================================
(படித்ததில் பிடித்தது)

படித்து பிடித்து சொன்னவர்: http://rammalar.wordpress.com

சாயிந்தரம் வீட்டுக்கு போனா அங்க ஜூனியர் ( என்பையன் தாங்க) படிக்காம ஜாலியா டி.வி பாத்துக்கிட்டு இருந்தான் , எனக்கு வந்துச்சே பாருங்க கோவம் ………

“டேய் , அறிவுகெட்டவனே ஏன்டா படிக்கிற நேரத்துல இப்படி டி.வி பாத்துக்கிட்டு இருக்கியே நீயல்லாம் எப்படி உருப்புடுவ ?”

” யோவ் லூசு ”

“என்னது லூசா ? ”

“ஆமாய்யா , இப்போ எதுக்கு கரடியா கத்துற ?”

“இப்படியே படிக்காம டி.வி பாத்தா அப்புறம் பெரியவனா ஆனதும் வேலை கிடைக்காம மாடு மேயிக்கதான் போகனும்.”

“போய்யா…..என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???”

“என்னடா சொல்ற ?”

“இலவச அரிசி வாங்கி

இலவச கிரைண்டர்ல அரைச்சு

இலவச கேஸ் அடுப்புல இட்லி சுட்டு

இலவச மிக்ஸ்சில சட்னி அரைச்சு சாப்ட்டு

இலவச திருமண உதவிப்பணம் வாங்கி

இலவச திருமணம் பண்ணிக்கிட்டு
இலவச கான்கிரீட் வீட்டுல

இலவச மிசாரத்துல

இலவச ஃபேன் போட்டு

இலவச டி.வில

இலவச நெட் கணக்சன்ல

இலவசமா உல்லாசமா படம் பாக்குறத விட்டு கஷ்ட்டப்பட்டு என்னா ம@#த்துக்கு நான் படிக்கனும் அப்புறம் உன்னைய மாதிரி லோள்படனும்???”

இதுல

இலவச ரெண்டு ஏக்கர் நிலத்த என்னபன்றதுன்னு வேற யோசிக்கணும் .

என்ன படிக்கலைன்னா…………..

இலவச சைக்கிளும்

இலவச லேப் டாப்பும் கிடைக்காது…….. நோ பிராப்ளம்….. அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது ”
வாழ்க ஜனநாயகம்

டிஸ்கி : வேறு ஏதாவது இலவசம் விட்டுப் போயிருந்தால் என்னை மன்னித்தருளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

SMS படித்து சொன்னவர்: http://manguniamaicher.blogspot.com

(producer தனது ஆபிசில் சில தெலுங்கு பட விசிடிகளை பார்த்து கொண்டிருந்தார். )

director: சார்! உள்ள வரலாமா சார்?

prod: யோவ்! பாரதிகௌதம்….என்னய்யா ஆளே காணும்? வா வா…உட்காரு.

dir: சார், போன தடவ நீங்க தான் சார் என்னைய அடிச்சு விரட்டிவுட்டீங்க!

prod: ஆமா யா! பன்னி கதை, நாய் கதைனு சொன்னா….கோபம் தான் வரும்! சரி, அப்பரம்..இப்ப என்ன படம் direct பண்ணிகிட்டு இருக்க?

(மேசையில் இருந்த தெலுங்கு பட விசிடிகளை பார்த்த கௌதம்)

dir: சார், என்ன சார், தெலுங்கு படம் எடுக்க போறீங்களா?

prod: அது ஒன்னுமில்லையா, சிம்பு கால்ஷீட் இருக்கு. அப்படியே ஏதாச்சு ஒரு தெலுங்கு படத்த ரீமேக் பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

dir: என்ன சார் நீங்க? நீங்க இப்படி பண்ணலாமா? ரீமேக் படமெல்லாம் எடுத்தா, எங்கள மாதிரி creative ideas இருக்குற இயக்குனர்களுக்கு வாய்ப்பு இல்லாமா போயிடாதா சார்:)

prod: அதலாம் ஒன்னும் போகாது. உங்கிட்ட கதை இருக்கா? சொல்லு?

dir: ஆமா சார்! உங்களுக்கு தெலுங்கு படம் மேல இப்படி ஒரு மோகம் இருக்குன்னு எனக்கு தெரியும் சார். என்கிட்ட ஒரு script இருக்கு. ஒரு படம், 5 கதை…..

prod: (வாய் விட்டு சிரித்தார்)

dir: சார், இது காமெடி கதையா? action கதையான்னு கூட தெரியாம ஏன் சார் சிரிக்கிறீங்க?

prod: உன்கிட்ட கதை இருக்குதுனு சொன்னதே பெரிய காமெடி, அதலயும் 5 கதைனு சொன்ன பாத்தீயா….(சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்)

dir: சார், கிண்டல் பண்ணாதீங்க…கதைய கேளுங்க….5 கதை, 5 characters, எல்லாரும் வெவ்வேற வாழ்க்கை வாழுறாங்க…ஆனா கடைசில ஒரு ipl match சந்திக்குறாங்க. அங்க என்ன நடக்குது….அது தான் சார் கதை. எப்படி?

prod: படத்துக்கு title?

dir: பூமி, கீழே tagline ‘எங்க காமி?’

prod: என்னய்யா? என்னைய பாத்தா geography professor மாதிரி இருக்கா? இந்த 5 பட கதை எல்லாம் உனக்கு ஒத்து வராது. ஒரே கதை, நல்ல கதையா சொல்லு?

dir: so

prod: அதான் சொல்லிட்டேன்ல. நீ தான் கதைய சொல்லனும்.

dir: so

prod: என்னய்யா மறுபடி மறுபடியும் so? கதை இருக்கா இல்லையா?

dir: ஐயோ சார், கதை பெயரே அது தான் சார்!

prod: என்னது?

dir: சோ!

prod: (முகம் மலர்ந்தது) ரொம்ப வித்தியாசமா இருக்கே!

dir: எனக்கு தெரியும் சார்! உங்களுக்கு இந்த கதை பிடிக்கும்னு. இந்த படம் முழுக்க ரொம்ப hi techல போகும் சார். படத்துல hero ஆப்பிள் விக்கிறவரு!

prod: ஆப்பிளா? யோவ்…சாத்துகுடி, மாம்பழம்…இப்படி ஏதாச்சு விக்க சொல்லுய்யா!

dir: சார்! அந்த ஆப்பிள் இல்ல. apple products விக்கிறாரு. iphone salesman.

prod: ஓ…ஓ…சரி சரி.

dir: ஹீரோவோட ஆயுதமே iphone4 தான். அத வச்சு ரோட்ல நடக்குற traffic குற்றங்களையும், அரசியல் வாதி பண்ணுற தப்புகளை ஃபோட்டா எடுத்து, facebookல upload பண்ணுறதுனு அவரோட பொழப்பு!

prod: (அமைதியாக இருந்தார், கொஞ்சம் நேரம் கழித்து) படத்துல ஹீரோயின்?

dir: சார், நம்ம ஊர் பொண்ணு தான் போடனும். அந்த காலத்துல famousஆ இருந்த ஹீரோ அல்லது ஹீரோயின் பொண்ண போட்டால் தான் சரியா இருக்கும்!

prod: ஏன்?

dir: சார்! நம்ம படத்துல எல்லாத்தலயும் புதுமை புகுத்திகிட்டே இருக்கனும் சார்! நவரச நாயகன் கார்த்திக் பொண்ண போடலாமா?

prod: யோவ் அவருக்கு பொண்ணே இல்லையா!

dir: தேவையானி பொண்ணு?

prod: யோவ்…அதுங்க இப்ப தான் எல்கேஜி போகுதுங்க!

dir: ம்ம்….ரம்பாவுக்கு….

prod: நீ வாய மூடு! ஆமா எதுக்கு இப்படிப்பட்ட ஹீரோயின் தேவை?

dir: இந்த படத்துல ஹீரோயினுக்கு கண்ணு பெரிசா இருக்கனும்! அந்த கண்ண வச்சு ஒரு சூப்பர் ஹிட் பாடல் ஒரு புது கவிஞர் எழுதியிருக்கார்!

prod: கதை ஓகே ஆவறதுக்கு முன்னாடியே பாட்டு ரெடி ஆயிட்டா!??

dir: இப்ப எல்லாம் ready-made பாடல்கள் trend. எந்த படத்துக்கும் பாட்டு always ரெடி.

prod: சரி, அந்த புது கவிஞர் யாரு?

dir: (புன்சிரிப்புடன்) நான் தான் சார்!

prod: கொடுமை!

dir: சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

prod: ஐயோ ரொம்ப பெருமையா இருக்குனு சொல்ல வந்தேன். பாட்டு வரிய சொல்லு.

dir: ஹீரோயின் கண்ணு ஷார்ப்பா இருக்குது…அதனால…

“உன் கண்ணு கண்ணமாபேட்டே, அதுல ஏன் என்னைய கொன்னுபுட்ட?”

இப்படி போகுது சார் பாட்டு. இந்த பாடல norway உள்ள ஒரு மலை உச்சியில ஒரு சுடுகாடு இருக்கு. அங்க தான் ஷுட் பண்ண போறோம்.

prod: ஏன்? நம்ம ஊரு சுடுகாட்டுல இந்த பாட்ட எடுக்க முடியாதா?! (கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் வந்தது)

dir: சார், இந்த பாட்டுல highlightஏ அந்த மலையில் ஒரு சின்ன கல்லு ஒன்னு தொங்கும். அங்க நீன்னுகிட்டு ஆடுனும் நம்ம ஹீரோவும் ஹீரோயினும்.

prod: இந்த ஷாட் பாட்டுல எவ்வளவு நேரம் வரும்?

dir: 10 secondக்கு மேலே காட்ட மாட்டோம்! இந்த பாட்டுல ஒரு speciality இருக்கு.

prod: என்ன அது? (கிண்டலாய் இழுத்தார்)

dir: உலகத்துல உள்ள famous சுடுகாடுகள் இருக்கும் இடத்துக்கு போய் ஷுட் பண்ணுவோம்:)) பாட்டு சூப்பர் ஹிட், எழுதி வச்சுக்குங்க சார்!

prod: போன தடவ என்ன பண்ணேன் நான்?

dir: அடிச்சு விரட்டுனீங்க!

prod: இப்ப விரட்டி அடிக்க போறேண்டா!

dir: ஐயோ சார்!!!

prod: அடிங்க!!!

(அச்சமயம், ஒரு வெள்ளக்காரன் tea glassவுடன் உள்ளே நுழைந்தான்.)

dir: என்ன சார்? வெள்ளக்காரன் எல்லாம் office boyயா வச்சு இருக்கீங்க?

வெள்ளக்காரன்(ஆங்கிலம் கலந்த தமிழில்): நான் office boy இல்ல. tour guide! உங்க ஊருல முக்காவாசி பேரு எங்க ஊருல வந்து தான் படம் எடுக்குறாங்க! அதுக்கு நான் தான் guide.

dir: norway நான் பார்த்தே ஆகனும்.

வெள்ளக்காரன்: உங்க ஊருலே அழகு அழகா இடம் இருக்கு. அதவிட்டுட்டு ஏன் தான் எங்க ஊருல வந்து நாசம் பண்ணுறீங்களோ!!??

*முற்றும்*

இந்த கதை கேட்ட கதையயும் சொன்னது: http://enpoems.blogspot.com

director: “ATM productions வழங்கும் ஆத்தா, பயணம்” இது தான் சார் ஓபனிங்.

producer: யோவ்! கதைய முதல சொல்லுய்யா!

director: சார், இது ஒரு கிராமத்த கதை சார்! ஒரு பெரிய….

producer: wait wait…உன் பேர் என்ன சொன்ன?

director: பாரதி கௌதம்.

producer: ஹாஹாஹா…என்னய்யா பேரு இது?

dir: பாரதிராஜா மாதிரி கிராமத்த படத்த கௌதம் மேனன் மாதிரி ரொம்ப ஸ்டைலீஷா எடுக்கனும்னு ஆசை. அதான்…இந்த பேர வச்சுகிட்டேன்!

prod: சரி கதைய சொல்லு!

dir: சார் ஓபினிங் சீன்….ஒரு பெரிய மாட்டுவண்டி, யாருமில்லாத railway station வெளியே நிக்குது. தண்டவாளத்த long shotல காட்டுறோம். அங்க இருக்கற clockஎ close upல காட்டுறோம். பயங்கரமா காத்து அடிக்குது சார்! மரத்துலேந்து இலை எல்லாம் கீழே விழுது சார்.

prod: எனக்கு தூக்கம் வரதுய்யா! catchingங்கா ஒன்னு இல்லையா!??

dir: சார், அதுக்கு தான் சார் வரேன். எப்போதுமே lateஏ வர train அன்னிக்கு மட்டும் சீக்கிரம் வந்துடுச்சு சார்.

prod: இது ரொம்ப புதுசா இருக்கே…வெரி குட்…மேல சொல்லு.

dir: எல்லாரும் நினைப்பாங்க. நேரம் சரியா இருக்குனு. ஆனா, எல்லாருக்கும் அது bad time!- அப்படின்னு பின்னாடி narration voice போடுவோம் சார். அந்த trainலேந்து ஒரு வயசான பாட்டி கண்ணு ஆபிரேஷன் முடிஞ்சு வறாங்க. கூடவே அவங்க பேத்தியும் இருக்கா.

prod: தமன்னா callsheet என்கிட்ட இருக்கு. அவங்கள இந்த ரோல போட்டுடுவோம்.

dir: இல்ல சார். பாட்டியும் பேத்தியும் ஒரு ஆளு தான் சார் பண்ணனும். double action sir.

prod: தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்…. நீ கதைய மேல சொல்லு.

dir: கண்ணாடி போட்ட ஒரு mechanic அதே ரயில வந்து இருங்குறாரு.

prod: அது என்னய்யா கண்ணாடி போட்ட மெக்கானிக்?

dir: பாரதிராஜா படத்துல கண்ணாடி போட்ட ஹீரோ வர மாதிரி நம்ம படத்துலயும் ஹீரோ கண்ணாடி போடுறாரு சார்…

prod: characters மட்டுமே சொல்லிகிட்டு இருக்க…கதைக்கு போய்யா! கதை இருக்கா இல்லையா?

dir: சார் வரேன் சார். இன்னும் நிறைய characters இருக்கு. ஒரு சின்ன பொண்ணு, 16 வயசு பொண்ணு சினிமால நடிக்கனும்னு ஆசைப்பட்டு ஓடி வறா அதே ரயில.

prod: கிராமத்துக்கு ஏய்யா வறா?

dir: ரயில் மாறி ஏறிட்டா சார்! (கண் கலங்குகிறார்)

prod: அப்பரம் என்ன ஆகுது? அந்த 16 வயசு பொண்ணா யார போடலாம்?

dir: நமீதா.

prod: நமீதாவா? நீ சொல்ற கதையவிட இது இன்னும் shockingஆ இருக்கே!

dir: கவலைப்படாதீங்க சார். ரெண்டே மாசம் 35 கிலோ குறைப்பாங்க. 16 வயசா மாறுவாங்க! நான் guarantee சார் அதுக்கு!

prod: சரி கதையில அப்பரம் என்ன ஆகுது…..

dir: புதுசா கல்யாணம் ஆனா ஜோடி, அமெரிக்கா return ஒரு பையன் – இத்தன பேரும் அந்த stationல நிக்குறாங்க. shot freeze!

எழுத்து-இயக்கம்: உங்கள் பாரதி கௌதம்
அப்படினு போடுறோம் சார்!

prod: title credits எல்லாம் editor பாத்து பாரு. அந்த மாட்டுவண்டி எதுக்கு வெளியே நிக்குது?

dir: பின்னிட்டீங்க சார்! ஒரு audienceஆ இந்த படத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க. i like it sir. அந்த மாட்டுவண்டில தான் இவங்க எல்லாருமே கிராமத்துக்குள்ள போறாங்க. அந்த மாட்டுவண்டிய ஓட்டுறது அந்த கிராமத்துக்கே தெய்வம் மாதிரி.

prod: ஆமா அந்த ரோலுக்கு யார….

dir: சார் என் friend நவீன்குமார் பண்ணனும் சார். ‘அந்த பக்கம் போகாதீங்க இந்த பக்கம் வாங்க’ அப்படினு ஒரு ஹிட் படம் எடுத்தாரே அவரு சார்.

prod: ஓ ஆமா ஆமா!

dir: இந்த powerful role அவர் தான் பண்ணனும். என் படத்துல அவர் கண்டிப்பா நடிச்சே ஆகனும்.

prod: அவர் எடுத்த முந்தைய படத்துல கூட நீ நடிச்ச தானே?

dir: ஆமா சார். இப்படி மாத்தி மாத்தி நடிச்சு கொடுக்குறது தானே சார் இப்ப trend!

prod: (தலையில் அடித்து கொண்டார்) அப்பரம் அந்த மாட்டுவண்டிக்கு என்ன ஆகுது?

dir: திடீரென்னு மழை பெய்யுது. வண்டி வழில breakdown ஆவுது?

prod: மாட்டுவண்டி breakdownஆ? டேய் லாஜிக்கே இல்லையடா இதுல!??

dir: சார், வண்டில problem சார். அத சரி பண்ண மெக்கேனிக் கீழே இறங்கி வேலை பாக்குறாரு. அந்த வேலை பாக்குற ஸ்டைல பாத்து தமன்னாவுக்கு காதல் வரது?

prod: பாட்டி தமன்னாவுக்கா? பேத்தி தமன்னாவுக்கா?

dir: சார், பேத்திக்கு தான் சார் காதல் வரது!

prod: இப்படிலாம்கூட காதல் வருமா?

dir: சார் இது ஒரு வித்தியாசமான காதல் சார்! தமிழ் சினிமாவுல இப்படி ஒரு காதல் காட்சிய audience பாத்து இருக்க மாட்டாங்க!

prod: சரி சொல்லு….

dir: இங்க ஒரு பஞ் டயலாக் சார்! மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, “தம்பி, ஏன் உருட்டுறீங்க?”

அதுக்கு மெக்கேனிக் பஞ் டயலாக் சொல்றாரு,
“உருட்டுறதுல நான் பூனை மாதிரி.
மிரட்டுறதுல நான் யானை மாதிரி.”

அப்படியே மெக்கேனிக் கண்கள close upல காட்டுறோம். கண்ணு சிவந்து போகுது சார்.

prod: யோ, பாட்டி சொன்னதுக்கு எதுக்கு டா பஞ் டயலாக்?

dir: சார், audience விரும்புவான் சார். நீங்க பாருங்க? இது தான் 2011 வருஷத்துல ஹிட் பஞ் டயலாக்கா வர போகுது. இந்த ஒரு பஞ் தான் படத்த 100 நாள் ஓட வைக்க போகுது.

prod: (producer தன் கோபத்தை அடக்கி கொள்கிறார்)

dir: repair பண்ணி முடிச்ச பிறகு வண்டி கிளம்புது…. போற வழில மின்னல், இடி, மழை… ஒரே இருட்டு! நாலு பேரு காட்டுக்குள்ளேந்து வராங்க. முஞ்சிய மூடி இருக்காங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது. கையில எல்லாருமே gun வச்சு இருக்காங்க. வண்டில இருக்குற எல்லாரையும் close upல காட்டுறோம். அப்படியே அடுத்த ஷாட்…. முஞ்சிய மூடி இருக்குற நாலு பேருல ஒருத்தர் மட்டும் name tag போட்டு இருக்காரு…. name tagஎ close upல காட்டுறோம்.

“அக்ரம் கான் – son of wasim khan”

இங்க தான் interval block!

எப்படி சார் கதை?

prod: எந்த தீவிரவாதிய்யா name tag போட்டு இருப்பான்?

dir: சார், நம்ம ஒரு வித்தியசாமன படம் எடுக்கறதயே நீங்க அப்பெப்ப மறந்துடுறீங்க!!

prod: சரி 2nd halfல கதை?

dir: இந்த கிராமத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம்? the mystery unfolds…….

prod: ஆமா? அப்பவே கேட்கனும்னு இருந்தேன். அந்த மெக்கேனிக் ரோலுக்கு…. யார போடலாம்னு…

dir: கார்த்தி தான் இதுக்கு சரியான மேச்.

prod: யோவ்… அவருக்கும் தமன்னாவுக்கும் ஏதோ கிசுகிசு….

dir: இருக்கட்டும் சார். நம்ம படத்துக்கு அப்பரம் அவங்க ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு தான் சார் பெருமை.

prod: யோ, அப்படிலாம் ஒன்னும் நடக்ககூடாதுய்யா! இன்னும் ரெண்டு படத்துக்கு தமன்னா கால்ஷீட் வாங்கி வச்சுருக்கேன்ய்யா!

dir: சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict! 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்!

prod: என்னய்யா நீ வேற……? சரி இந்த படத்துக்கு location எங்க?

dir: america. chicago பக்கத்துல இருக்குற ஒரு கிராமம்.

prod: என்னது? அமெரிக்காவா? யோ…. இந்த கதைக்கு எதுக்கு டா அமெரிக்கா.

dir: சார், போன படத்துல எச்சி துப்புற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சியவே நாங்க switzerlandல தான் shoot பண்ணுனோம்.

prod: (கையில் வைத்திருந்த பேப்பரை மேசையில் வீசினார்.) நான் கொலவெறியா போறதுக்குள்ள ஓடி போயிடு! நீ எல்லாம் ஒரு director??? உன்கிட்ட கதை கேட்டேன் பாரு…என்னைய…..

dir: சார் சார்…. கோபம் படாதீங்க சார்! என் குருநாதரின் ‘நடுநிசி நாய்கள்’ படம்
மாறி ‘பரதேசி பன்னிகள்’ அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்…. அந்த கதைய கேக்குறீங்களா சார்?

producer: எடு அந்த வெளக்கமாத்த!!!!!!!

கதை கேட்ட கதைய சொன்னது: http://enpoems.blogspot.com

Aptitude டெஸ்டில்: அதிகாரி: நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி: நான் சொன்னத நீங்க சரியா கேக்கல போல. திருப்பி கேக்கிறேன். நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி: சரி வேற மாதிரி கேக்கிறேன். நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆரஞ்சு, அப்புறமா ரெண்டு ஆரஞ்சு, அப்புறமா ரெண்டு ஆரஞ்சு குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆரஞ்சு இருக்கும்?
ரங்கமணி: ஆறு ஆரஞ்சு சார்.
அதிகாரி: சரி. இப்ப சொல்லு. நான் உன்கிட்ட முதல்ல ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள், அப்புறமா ரெண்டு ஆப்பிள் குடுக்கிறேன். உன் கிட்ட இப்ப எத்தனை ஆப்பிள் இருக்கும்?
ரங்கமணி: எழு ஆப்பிள் சார்.
அதிகாரி (கடுப்புடன்): அது எப்படியா எழு வரும்?
ரங்கமணி: என்கிட்டே ஏற்கனவே ஒரு ஆப்பிள் இருக்கே சார். அதான்..

பின்குறிப்பு: ரங்கமணிக்கு இன்னும் வேலை கெடைக்கல அப்படின்னு உங்களுக்கு தனியா சொல்லணுமா என்ன?. உங்க அலுவலகத்தில் ஏதாவது சான்ஸ் இருந்தா சொல்லுங்களேன்…

என்னதிது? கி.மு / கி.பி தெரியும், காமு சோமு தெரியும்,  டீ காபி கூட தெரியும், இது என்ன புதுசா க.மு Vs  க.பி னு மண்டைய பிச்சுக்கரீங்களா….

அதான்… அதான் வேணும் எனக்கு…. நாலு பேரை மண்டைய பிச்சுக்க வெச்சா அன்னைக்கி நான் நிம்மதியா தூங்குவேன்…. ஹி ஹி ஹி… ஒகே ஒகே நோ டென்ஷன்….

விசியத்துக்கு போவோம்…. க.மு Vs  க.பி னா கல்யாணத்துக்கு முன் Vs கல்யாணத்துக்கு பின். அதாவது ரங்கமணிகள் ஒரே situation ஐ கல்யாணத்துக்கு  முன்னாடி எப்படி ஹீரோ மாதிரி டீல் பண்ணுறாங்க, அதே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி (!!!!?????) மாறி போய்டராங்கங்கறதை  இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னை போன்ற அப்பாவி தங்கமணிகள் சார்பாக எடுத்து இயம்பவே இந்த பதிவு… ம்ம்ம்ம்…. மூச்சு வாங்குது போங்க…

இப்போ உங்க முகம் அப்படியே “வதனமோ சந்திர பிம்பமோ” னு சொல்லுற மாதிரி பிரகாசமாகுதா அப்போ நீங்க ஒரு “தங்கமணி”, அதே கேப்டன் படத்துல வர்ற மாதிரி கண்ணு இன்ஸ்டன்ட்ஆ சிவக்க உதடு துடிக்க மொறைக்கரீங்களா அப்போ நீங்க ஒரு “ரங்கமணி”

எப்படி நம்ம கண்டுபிடிப்பு…? ஒகே ஒகே…. நோபல் பரிசு எல்லாம் வேண்டாம்னு சொன்னா நீங்க கேக்கவா போறீங்க…. சரி சரி ரெண்டு மட்டும் குடுங்க போதும்…. எங்க வீட்டு showcase ல அவ்ளோ தான் எடம் இருக்கு…

********************************************

சிச்சுவேசன் ஒண்ணு - ரங்கமணிக்கு காய்ச்சல், ஆனாலும் Sincere சிகாமணியா பிசினஸ் விசியமா வெளியூர் போய் இருக்கார். அப்போ அவருக்கு போன் வருது 

கல்யாணத்துக்கு முன் : "ஹலோ சொல்லு டார்லிங்.... இப்போ தானே பேசின. என்ன? ஓ...எனக்கு இப்போ ஒடம்புக்கு பரவாயில்லயானு கேக்க கூப்டியா.... உனக்கு என் மேல எவ்ளோ அன்பு.... நான் ரெம்ப லக்கி"

கல்யாணத்துக்கு பின் : "சொல்லு. என்ன? மீட்டிங்ல இருக்கேன்... ம்... சரி வெய்யி....வேலை இருக்கு.... அப்புறம் பேசறேன்" (மனதிற்குள் - வெளியூர் வந்தும் மனுசன நிம்மதியா விடாம...ச்சே....)

********************************************

சிச்சுவேசன் ரெண்டு - ரங்கமணியும் தங்கமணியும் பீச்சில் அமர்ந்து இருக்கிறார்கள் 

கல்யாணத்துக்கு முன்: "எப்படி தங்கமணி இப்படி கோர்வையா கதை சொல்ற மாதிரி அழகா பேசற? நீ பேசறதை கேக்கறதுக்கே ஆபீஸ் எப்படா முடியும்னு இருக்கு எனக்கு தினமும்"

கல்யாணத்துக்கு பின்: "ஏன் இப்படி தொணதொணக்கற? உனக்கே வாயே வலிக்காதா? ( மனதிற்குள் - இதுக்கு பேசாம நான் ஆபீஸ்ல உக்காந்து internet browse பண்ணிட்டாச்சும் இருக்கலாம்)

********************************************

சிச்சுவேசன் மூணு - ரங்கமணியும் தங்கமணியும் கோவிலில். தங்கமணி ஒரு பெண்ணின் வளையலை காட்டி "அழகா இருக்கில்ல" னு சொல்றாங்க 

கல்யாணத்துக்கு முன்: (மனதிற்குள்) "வாவ்.... காதலிக்க ஆரம்பிச்சு 100 வது நாளுக்கு என்ன கிப்ட் வாங்கறதுன்னு மண்டைய ஒடைச்சுட்டு இருந்தேன்... வளையல் வாங்கி surprise ஆ அசத்தணும்"

கல்யாணத்துக்கு பின் : (மனதிற்குள்) "ஐயோ..... கல்யாண நாள் வேற வருதே... பர்சை காலி பண்ணாம விடாது போல இருக்கே. எப்பவும் போல காது கேக்காத மாதிரியே maintain பண்ணிக்கணும்.... அதான் நமக்கும் நல்லது நம்ம பர்சுக்கும் நல்லது"

********************************************

சிச்சுவேசன் நாலு - ரங்கமணியும் தங்கமணியும் ஒரு உணவகத்தில். ரங்கமணி காளிப்ளவர் மஞ்சூரியனை ரசித்து சாப்பிட "உங்களுக்கு ரெம்ப பிடிச்சதா... இருங்க chef கிட்ட எப்படி செய்தாங்கன்னு கேட்டுட்டு வரேன்"

கல்யாணத்துக்கு முன்: "எனக்கு ஒண்ணு பிடிக்கிதுனதும் இவ்ளோ ஆசையா கத்துக்க நினைக்கிறியே... இதுக்காகவே எப்படி சமைச்சு போட்டாலும் சந்தோசமா சாப்பிடுவேன்"

கல்யாணத்துக்கு பின்: "போதும் போதும்....ஏன்? எனக்கு காளிப்ளவர் மஞ்சூரியன் புடிக்காம போகணுமா?"

********************************************

சிச்சுவேசன் அஞ்சு - ரங்கமணிக்கு அசைவம் பிடிக்காது என்றதும் தானும் அதை சாப்பிடபோவதில்லை என்கிறார் தங்கமணி 

கல்யாணத்துக்கு முன்: "ஏம்மா? உனக்கு புடிச்ச எதையும் நீ எனக்காக தியாகம் பண்ண கூடாது. சரியா"

கல்யாணத்துக்கு பின்: "ஏன்? உனக்கு பிடிக்காத எதையாச்சும் என்னை விட சொல்ல போறியோ?" (இப்படி குதர்க்கமா யோசிக்கறது எல்லாம் ரங்கமணி போஸ்ட் குடுத்த அடுத்த நொடி வந்துடும் போல)

********************************************

சிச்சுவேசன் ஆறு - தங்கமணி புது புடவை கட்டி இருக்கிறார். "எப்படி இருக்கு?" னு ரங்கமணி கிட்ட கேக்கறாங்க 

கல்யாணத்துக்கு முன்: "புடவை சுமார் தான்... ஆன நீ கட்டி இருக்கறதால அதுக்கு மவுசு கூடிப் போச்சு"

கல்யாணத்துக்கு பின்: "பொடவை எல்லாம் நல்லாத்தான் இருக்கு....."  (அதுக்கப்புறம் ஒரு "indifferent look " அதுக்கு என்ன அர்த்தம்ன்னு ரங்கமணிகளுக்கே வெளிச்சம்)

********************************************'

சிச்சுவேசன் ஏழு - தங்கமணி அவங்க தோழி கல்யாணத்துக்காக வெளியூர் போறதா சொல்றாங்க 

கல்யாணத்துக்கு முன்: "என்னது ரெண்டு நாளா? சான்சே இல்ல... என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதும்மா. வேணும்னா நல்ல காஸ்ட்லி கிப்ட் வாங்கி அனுப்பிடலாம்"

கல்யாணத்துக்கு பின்: "அப்படியா.... பிரிண்ட்ஸ் எல்லாம் பாத்தா என்னை மறந்துடுவ இல்ல? வேணா இன்னும் ரெண்டு நாள் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாயேன்... உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்" (மனதிற்குள் - ஐ....தங்கமணி என்ஜாய்... உடனே நம்ம கோஷ்டிக்கு போன் போட்டு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணனும்....) "என்னமா நீ இன்னும் போலயா?"

********************************************'

ஏழுக்கு மேல எழுதினா ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கறதாவும் அதோட விளைவா ஆட்டோ இல்ல லாரியே வரும்னும் நம்பத்தகுந்த வட்டார செய்திகள் வந்தபடியால் அப்பாவி தங்கமணி உங்களிடம் இருந்து விடை மற்றும் வடை பெறுகிறாள்....  எஸ்கேப்......

Disclaimer Statement: இந்த பதிவை படிச்சதும்.... அதன் விளைவாக உங்கள் வீட்டில் நடக்கும் அடிதடி, சட்டி பானை பாத்திர சண்டை, இன்னும் மற்ற பிற (!!!???) விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல... இந்த Disclaimer Statement மூலமாக சொல்லி கொள்வது என்னவென்றால் கேஸ் கோர்ட் எல்லாம் செல்லாது செல்லாது செல்லாது... (ஹி ஹி ஹி)

இப்படிக்கு,
முன்ஜாக்கிரதை மற்றும் முன் ஜாமீன் புகழ் - அப்பாவி தங்கமணி
தாங்க்ஸ்

முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்… அதை மறந்து டென்ஷன் ஆகி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல…:))

“டாக்டர் ப்ளீஸ்… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல”

“இன்னொரு முறை சொல்லுங்க…” என டாக்டர் சந்தோசமாய் பாட்டு படிக்க

“என்ன டாக்டர் இது? நாங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்… உங்களுக்கு விளையாட்டா இருக்கா?” என அந்த பெற்றோர் கோபமாய் பேச

“சரி சரி… பேஷன்ட் எங்க?”

“இதோ… உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது தான் பேஷன்ட்”

“என்ன விளையாடறீங்களா? முழுசா முள்ளங்கி பந்தாட்டம் இருக்கற ஒரு ஜென்மத்தை என்னமோ ஐ.சி.யு கேஸ் மாதிரி எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்லனு சொல்லி ஏன் ஆசைய கிளப்பினீங்க?” என இப்போது கோபம் கொள்வது டாக்டர் முறையானது

“ஐயோ டாக்டர்… நீங்க என் புள்ளகிட்ட பேசி பாருங்க,உங்களுக்கே புரியும்” என அவன் அம்மா கூற

“அப்படியா?” என பேஷண்டை அளவெடுப்பது போல் பார்த்த டாக்டர் “உங்க பேர் என்ன?” என கேட்க

“எந்த பேரை கேக்கறீங்க? சொந்த பேரா இல்ல ப்ளாக் பேரா?”

“அதென்ன ப்ளாக்?” என டாக்டர் விழிக்க

“என்ன ப்ளாக்ஆ? ச்சே… நீங்க எல்லாம் என்ன டாக்டர்? அது வலைப்பூ… நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து…” என பேஷன்ட் விளக்கம் கூற

“ஓ… முழுசா முத்திடுச்சு போல” என மனதிற்குள் நினைத்த டாக்டர் “எப்போல இருந்து இந்த மாதிரி இருக்கு?” என டாக்டர் பெற்றோரிடம் கேட்க

“நானே சொல்றேன் டாக்டர்?” என்ற பேஷன்ட் “ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்… திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் ‘நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே… நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது’னு கேட்டார்… அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது” என உணர்ச்சிவசப்பட்டார்

“சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தவன் ஒருத்தன்…இப்ப மாட்டிட்டு முழிக்கறது நான்” என மனதிற்குள் புலம்பிய டாக்டர் “அப்படி என்ன தான் எழுதுவீங்க?” என கேட்க

“எதை வேணாலும் எழுதுவேன் டாக்டர்… உதாரணத்துக்கு சொல்லணும்னா… ஒரு நாள் ஒரு கரப்பான் பூச்சிய அடிச்சுட்டேன்… அதை ‘நானும் கரப்பானும்’னு ஒரு போஸ்ட் போட்டேன்….இன்னொரு நாள், ஒரு பிச்சகாரனுக்கு பத்து பைசா போட அவன் இன்னும் பத்து பைசா சேத்து திருப்பி குடுத்தான், அதை ‘பிச்சையிடம் பிச்சை’ ஒரு போஸ்ட் போட்டேன்”

“அட கருமமே…அதெல்லாமா எழுதுவீங்க…படிக்கறவன் காரி துப்ப மாட்டான்”

“ஐயோ போங்க டாக்டர்… உங்களுக்கு விசயமே புரியல… அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல” என அவர் பெருமிதமாய் கூற

“கருமம் கருமம்” என தலையில் அடித்து கொண்ட டாக்டர் “அது சரி… இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்?”

“அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்… பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்… ட்ரெயின்ல போறப்ப தோணும்… தலைவலிக்கரப்ப தோணும்… தோணும் போது தோணும்… தோணாத போதும் தோணும்… தோணனும்னு நினைக்கறப்ப தோணாது… ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்… தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்… ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது…அவ்ளோ ஏன்? இப்ப கூட ‘மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்’னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது”

“என்னது மெண்டல் டாக்டரா?” என டாக்டர் டென்ஷன் ஆக

“ப்ளீஸ் டாக்டர்… தப்பா எடுத்துக்காதீங்க… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என பேஷன்டின் அப்பா கூற, அந்த “எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என்ற வாசகம் டாக்டரின் கோபத்தை காணாமல் போக செய்தது

“இங்க பாருங்க தம்பி… இப்படி நினைச்ச மாதிரி எல்லாம் எழுத கூடாது… அது நல்லதில்ல” என டாக்டர் அட்வைஸ் போல் கூற

“என்ன நல்லதில்ல? மழைல ஒரு பூ கீழ விழுகரத பாத்தா என்ன தோணும் தெரியுமா?

ஒருமுறை பூத்த பூ
ஒரே மழையில் விழுந்ததே
இன்னொருமுறை பூக்குமா
இருந்தாலும் அது போல் வருமா!!!

அதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!

இந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க?”

“இங்க பாருங்க… நீங்க எழுதறது சமுதாயத்துக்கு உபயோகமா இருக்கணும் ” என டாக்டர் புரிய வைக்க முயன்றார்

“கண்டிப்பா… அப்படி கூட எழுதி இருக்கேன்… நான் எழுதின ‘குட்டையில் ஊறிய மட்டை’ போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது… அது மட்டுமில்ல, என்னோட ‘மண்டையில் ஒரு மரிக்கொழுந்து’ கதைய ஒரு கோமா பேஷன்டுக்கு தினமும் படிச்சு காட்டினதுல நாலே நாளுல அவர் ராவோட ராவா வீட்டுக்கு ஓடி போயிட்டாராம்… இப்ப அந்த ஹாஸ்பிடல்ல அதான் ட்ரீட்மென்ட்ஆ யூஸ் பண்றாங்களாம்… இப்ப சொல்லுங்க எவ்ளோ உபயோகமான வேலை எல்லாம் செய்யுது என் பதிவுகள்”

“ஸ்ஸ்ஸ்ஸ்ப்பப்பா…. எப்படி புரியவெக்கறது?” என வெகு நேரம் யோசித்த டாக்டர் “இங்க பாருங்க தம்பி… எதாச்சும் தத்துவம் பித்துவம்னு எழுதினாலும் உபயோகம்…” என டாக்டர் முடிக்கும் முன்

“ஓ இருக்கே… ஜில்லுனு ஒரு மோர்னு ஒரு அருமையான பதிவு இருக்கே” என உற்சாகமாகிறார் பேஷன்ட்

“என்னது? மோர்ல என்ன கொடும தத்துவம் இருக்கும்?” என டாக்டர் குழம்புகிறார்

“என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? மோர் எப்படி தயாராகுது… பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்… இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?”

“ம்… உனக்கு முத்தி போச்சுன்னு புரியுது?” என தலையில் அடித்து கொண்டார் டாக்டர்

“ஹையோ ஹையோ… இதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீங்க பக்குவப்படலை டாக்டர்… அதாவது… எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்”

ஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது… ஒருவாறு சமாளித்து “தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா…” என்பதற்குள்

“டாக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா… நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா… மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா….”

அதற்குள் டாக்டர் “ஹா ஹா ஹா ஹா… ஹி ஹி ஹி ஹி….” என கை தட்டியபடி சிரிக்கிறார்

“அப்பாடா… வழக்கம் போல புரியாத மாதிரி பேசினதும் இந்த டாக்டரும் மெண்டல் ஆய்ட்டாரு” என பதிவர் மனதிற்குள் சிரித்து கொள்கிறார்

“ஐயையோ என்னாச்சு… ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு?” என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க

“ஹா ஹா ஹா…. ஹி ஹி ஹி… நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல… நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல… இன்னும் தெளிவா சொல்லணும்னா…” டாக்டர் நிறுத்தாமல் பேசி கொண்டே போனார் தன் சட்டையை கிழித்தபடி

“ஐயையோ… இந்த டாக்டருக்கும் பைத்தியம் புடிக்க வெச்சுட்டானே நம்ம புள்ள” என அந்த பேஷன்டுடன் வந்த அம்மா தலையில் கை வைத்து அமர

“என்ன சொல்றீங்க? இதுக்கு முன்னாடி வேற டாக்டர்’க்கு இதே மாதிரி ஆகி இருக்கா?” என அங்கிருந்த நர்ஸ் கேட்க

“ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்… இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்… இவர் தான் நூறாவது… கங்க்ராட்ஸ் சிஸ்டர்”என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி

அந்த நர்ஸ் பயமாய் ஒரு பார்வை பார்க்க “ஹ்ம்ம்… இனி இந்த ஊர்ல ஒரு டாக்டரும் பாக்கி இல்ல… வேற ஊர்ல தான் விசாரிக்கணும்” என பேஷன்டின் அம்மா முடிக்கும் முன் நர்ஸ் எஸ்கேப் ஆகி இருந்தார்

:))))

நான் சட்டைய கிழிச்சுகிட்ட இடம்: http://appavithangamani.blogspot.com

அண்ணே வந்துட்டேன் ..

எங்கே போயிருந்தேடா செல்லம்

தேர்தல் ஆணையத் தலைவரோட ,‘கா’ விட்டுட்டு வெளி நடப்பு செய்துட்டு உண்ணாவிரதம்,குடியா விரதம்,மௌனவிரதம்ன்னு இருந்துட்டேண்ணே..

ஏண்டா செல்லம்,

போங்கண்ணே இந்த தேர்தல் விதியே எனக்குப் புடிக்கலைண்ணே..

எதுக்குடா செல்லக்கண்ணு

பின்னே என்னண்ணே, நான் இந்ததேர்தல்ல நிக்கலாம்ன்னு இருந்தேண்ணே இந்த சின்ன தகறார்லே மிஸ் பண்ணிட்டேண்ணே….

அது என்னடா சின்ன தகறாரு..?.நீ எப்பவுமே பெரிய தகறாருபிடிச்சவனாச்சே…

அண்ணே சின்னத்தகாறார்னா தேர்தல் சின்னம்ணே..

என்னடா ஆச்சு ?

எனக்கு பிடிச்ச பாய் சின்னம் கேட்டேண்ணே…தர மாட்டேன்னுட்டாங்க அதான் நிக்கலை..

.பாய்ன்னா ???

அதாண்ணே பாய்..எம் ஃபார் மேட்… பா ஃபார் பாய் …

ஓ அந்த பாயா ?படுக்கற பாயச் சொல்றியா? நான் நம்ம கறிக்கடை பாய்ன்னு நினைச்சேன்…அது சரி அந்த பாய் மேலே உனக்கு என்னடா அவ்வளவு பிரியம்…அதைப் போய் சின்னமா கேட்டிருக்கே..
.
அண்ணே எலக்‌ஷண்லே நின்னு ஜெயிச்சா ஒரு ராசியான சின்னமா இருந்தாத்தானே நமக்கு நல்லது…

அடேடே நல்ல எண்ணம்தான் ,தொகுதிக்கு .நிறைய சேவை பண்ணலாம்ன்னு சொல்ல வரியா ?சீமண்ணை லைட் தலயா…

தொகுதியா ????அப்படின்னா என்னண்ணே…

கிழிஞ்சுது போ ..!அதுவே தெரியாம தேர்தல்ல நிக்றியாக்கும்…

எல்லாரும் அப்படித்தாண்ணே நிக்கிறாங்க

சரி சொல்லித் தொலைடா …எதுக்கு உனக்கு பாய் சின்னம் வேணும்….?

பாய் சின்னத்திலே நின்னு ஜெயிச்சாதானே நல்ல …….

.நல்ல ……நல்ல …சொல்லித்தொலையேண்டா நல்ல ?????

”நல்ல சுருட்டலாம்ணே…

ரசித்த இடம்: http://haasya-rasam.blogspot.com/

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….. வெயில் மண்டைய பொளக்குது . அதுல பைக்ல  டிராவல் பன்றது  மண்டை காயுது . என்ன பண்ணலாம் …….???????
பேசாம சூரியனுக்கு புல்லா ஏ.சி பண்ணிடலாமா ???
இம்ம்ம் …. அது சரிவராது கரண்ட்டு பில்லு ஜாஸ்த்தியா வரும் …… வேற என்ன பன்னலாம் ???????
என்னோட குளோஸ் பிரண்டுதான் பைக் மெக்கானிக் , நேர அவன் வொர்க் சாப் போனேன்
” மாமா வெயில் தாங்க முடியல என் பைக்கு  ஏ .சி போட்டு குடேன் “
” என்னானானானாது ………????”
” சென்ட்ரலைஸ்டு  ஏ.சி பண்ண முடியாட்டியும் பரவாஇல்லை ரெண்டு சீட்ட மட்டும் ஏ.சிபன்னி குடு “
” டேய் , மாப்ள நான் ஏற்கனவே காலைல என் பொண்டாட்டிகிட்ட செருப்படி வாங்குன வேகாலத்துல இருக்கேன் , மரியாதையா ஓடிப்போயிடு  அநியாயமா என்னைய ஒரு கொலைகாரனாக்காத “
அப்பத்தான்  ஏற்கனவே பிரண்டு கூட பைக்ல போகும் போது ஏ.சி போடச்சொல்லி பொலேர்ன்னு அடிவாங்கினது எனக்கு டக்குன்னு நியாபகம் வந்துச்சு , சரி பைக்கு ஏ.சி மாட்ட முடியாது போல ………..
” சரிடா மாமா பைக்கு ஏ.சி  பன்னமுடியாட்டி பரவாயில்ல , அட்லீஸ்ட் என் ஹெல்மெட்டுக்காவது ஏ.சி போட்டுகுடேன் “
” அடிங் ………. பிக்காளிப் பயலே , நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைடா உன்னைய மாதிரி ஆளுக இனி உயிரோட இருக்கக்கூடாது ” “
அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு ஸ்பானர   எடுத்துக்கிட்டு என்னைய நோக்கி கொலை வெறியோட  வந்தான் “
ஹே,ஹே,ஹே……. யாருகிட்ட? நம்ம கிட்டேயா?? ,நாங்க மானத்துல தமிழ் நாட்டு அரசியல்வாதிக ஜாதி ……  டக்குன்னு கால் விழுந்துட்டேன் …..
“மாமா கோபப்படாத எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிடலாம் “
“……ங்ங்ங்கொய்யாலே…. பஸ்ட்டு உன்னைய தீத்துட்டு, அப்புறம் கோர்ட்டுல பேசிக்கிறேன்டா   “
அப்படியும் விடாம ஸ்பானரால  அடிக்க வந்தான் ………..
முடியுமா? , நடக்குமா ??…… நாமெல்லாம் யாரு ?????
பின்னங்கால் பிடரில அடிக்க  எடுத்தே….ன் பாரு ஓட்டம் ……… நேரா ஒரு ஹெல்மெட் விக்கிற கடைல போயி நின்னேன் …..
அங்க இருந்த பொண்ணு என்னைய  பைத்தியக்காறன பாக்குற மாதிரியே பாத்துச்சு .
” மேடம் , என்னோட ஹெல்மெட்டுல  ஏ.சி போடணும்  “
” என்னங்க சார் ?”
” என்னோட ஹெல்மெட்டுக்கு ஏ.சி பண்ணனும் “
இப்போ அந்த பொண்ணு  பைத்தியத்துக்கு  வைத்தியம் பாக்குற வைத்தியர பைத்தியமாக்குற பரம்பர பைத்தியக்காறன பாக்குறது மாதிரி   என்னை பாத்துச்சு
“இம்ம்ம்மம்ம்ம்ம் ………..ஆயிரம் ரூபா ஆகும் , பரவாயில்லையா ?”
“அட இவ்ளோ சீப்பா இருக்கே , உடனே பண்ணிக்குடுங்க மேடம் “
” பஸ்ட்டு பணத்த  கட்டுங்க “
” ஓகே மேடம் , இந்தாங்க “
பத்து நிமிஷம் ……….. என்னா  அழகா ஏ.சி போட்டு குடுத்துட்டாங்க பாருங்க ….
*
*
*
*
*
*
*

ஹி.ஹி.ஹி………. எப்புடி நல்லா இருக்கா ????

ஏ.சின்னா இப்படியா இருக்கும்……… குளு ,குளுன்னு இருக்கனுமே ????? ஒரே குழப்பமா இருக்கே ………..
ஆள் வைத்து அடிக்க முகவரி இதோ: http://manguniamaicher.blogspot.com/

அண்ணாத்த தங்கமணிகிட்ட பத்து கேள்விகள்  கேக்கராருங்களாமா… அதை படிச்சு போட்டு அப்பாவியான நானே பொங்கிட்டனுங்க…அதானுங்க இந்த எதிர் பதிவு…

அண்ணாரு கேட்ட ஒரு ஒரு கேள்வியும் “பதிவு”ன்னும் அதுக்கு என்னோட மறுமொழிய “எதிர் பதிவு”ன்னும் போட்டு இருக்கறனுங்… படிச்சுபோட்டு உங்க கருத்த சொல்லி போட்டு போங்… சரிதானுங்….

பதிவு 
உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

எதிர் பதிவு 
எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே…நல்லதுக்கு காலம் இல்ல… வேற என்ன சொல்ல

பதிவு 
ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு 
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்… எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்…. அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது… போய் பாருங்க…ஹா ஹா ஹா

பதிவு 
அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

எதிர் பதிவு 
சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்… வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்… என்ன நான் சொல்றது….? (தேவையா இது தேவையா…ஹா ஹா ஹா)

ஒரு நாள் ஒரே நாள்… கிட்சன்ஐ போர்களமா மாத்தாம ஒரு உப்மா செய்ங்க அப்புறம் பேசலாம் மத்ததெல்லாம் (உடனே “நான் செய்வேனே”னு நாலு பேரு சொல்லுவீங்கன்னு தெரியும்…நான் நாலு நல்லவங்கள பத்தி பேசலைங்ண்ணா… மிச்சம் 96 பேரு தான் எங்க டார்கெட்….ஹி ஹி ஹி)

பதிவு 
பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

எதிர் பதிவு 
என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு…. நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா… நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு …. (இப்ப என்ன சொல்லுவீங்க… இப்ப என்ன சொல்லுவீங்க…ஹா ஹா ஹா)

பதிவு 
குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எதிர் பதிவு 
அதுதாங்க மல்டி-டாஸ்கிங்…. ஓ… அப்படின்னா என்னனே ரங்க்ஸ்களுக்கு தெரியாதில்ல… அதாவது… ஒரு வேலை செய்யறப்பவே அவகாசம் கெடைச்சா பின்னாடி வேண்டியதையும் பாத்து வெச்சுக்கறது பெண்களுக்கே உரிய ஒரு குணம்… இல்லேனா உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்… ஹே ஹே ஹே…

பதிவு 
எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

எதிர் பதிவு 
என்ன கொடுமைங்ண்ணா இது? “ஆகாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்” னு சொல்றாப்ல பேச்சு…. அரைச்சாலும் தப்பு அரைக்கலைனாலும் “என் தங்கமணிக்கு சமயல் அறையே எங்க இருக்குன்னு தெரியாது”ன்னு ஒரு டயலாக் சொல்லுவீங்க… ஏங்க கேக்க ஆள் இல்லைன்னு பேசறீங்களோ….? ஹும்… 33 % அரசாங்கம் குடுத்தாலும் வீட்டுல என்னிக்கி தான் விடியுமோ…

பதிவு 
உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எதிர் பதிவு 
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க… நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே… (ஹா ஹா ஹா)

பதிவு 
எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

எதிர் பதிவு 
உங்கள போல கை வீசிட்டு கெளம்ப நாங்க என்ன நீங்களா? உங்களுக்கு கிளம்பறது ஒண்ணு தான் வேலை… எங்களுக்கு அதுவும் ஒரு வேலை… அதோட சமைக்கறது (நீங்க மேல சொன்னாப்ல அந்த நேரத்துல தானே உங்க சொந்த காரங்க கூட அரட்டை அடிச்சுட்டு நாங்க mixie போடறத வேற கிண்டல் பண்ணுவீங்க… பின்ன என்ன ஹெல்ப் பண்றதா போச்சு…), பிள்ளைகள கிளப்பறது, வீட்டை ஒழுங்கு பண்றது எல்லாமும் இருக்கே (கரெக்ட் தானே பாஸ்…)

பதிவு 
பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எதிர் பதிவு 
//”போதை வஸ்துக்கள்”// உங்களுக்கு ஏங்ண்ணா எல்லாமும் இப்படியே தோணுது…? ஓ… நீங்க ரங்கமணி ஆச்சே… அப்படி தான் இருக்கும்… யூஸ் பண்றதெல்லாம் பிட் நோட்டீஸ் அடிச்சு சொல்லிட்டா பண்ண முடியும்… எல்லாம் பண்றது தான்..

பதிவு 
எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

எதிர் பதிவு 
அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்… ஆண்டவா காப்பாத்து…

பத்து கேள்வி கேட்டீங்களே… உங்ககிட்ட ஒரே கேள்வி…

அது எப்படிங்ண்ணா அத்தனை நேரம் வெட்டியா டிவி பாத்துட்டு இருந்தாலும் தங்கமணிக ஒரு வேலை சொல்றப்ப மட்டும் ரங்கமணிகளுக்கு முக்கியமான போன் கால் இல்லைனா ஆபீஸ் வேலை வருது…

என்னமோ போங்க… இனிமே பொண்ணுகள புரிஞ்சுக்கவே முடியலைன்னு யாரும் சொன்னா நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா… ஹா ஹா ஹா

பதில் சொன்னது: http://appavithangamani.blogspot.com

வாழ்க்கையில் பலரும் பலவைகைப்பட்ட தவறுகளை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ செய்வர். பெரும்பான்மையானோர் அப்படி அவர்கள் வாழ்கையில் நிச்சயமாக ஒரு தடவையாவது செய்திருக்கக்கூடிய அல்லது எதிர்காலத்தில் செய்ய கூடிய தவறுகள்.
திருமணம் செய்தல்
திருமணம் புரிந்த எல்லா ஆண்களும் திருமணம் அவர்கள் வாழ்க்கையில் விட்ட பெரிய தவறு எனக்கூற கேட்டும் நாமும் அதன் விளைவுகளை விளங்கி கொன்டாலும் நிச்சயம் செய்திருப்போம்.அல்லது எதிர்காலத்தில் செய்வோம்.
ஓவர் மப்பு
நிச்சயம் அநேகமானோர் வாழ்கையில் ஏதாவது ஒரு தடவையாவது விருந்து காரணமாகவோ/அல்லது துன்பம் காரணாமாக ஓவரா அடித்துவிட்டு ரகளை பண்ணுவார் அல்லது கவிழ்ந்தடித்து எதுவுமே தெரியாமால் வீழ்ந்து கிடப்பர்.
தாறு மாறா வண்டி ஓட்டல்
எந்த வகை வண்டியாவது வைத்திருக்காலாம்.ஆனால் எதோ நினைப்பில் தவறாக ஒட்டி சென்று மோதி “பேமானி ஊட்டாண்ட சொல்லிட்டு வந்தியா” என்று திட்டு வாங்கியாகனும்.அல்லது போலீசிட்ட காசை தொலைக்கணும்.
பலான மேட்டர்
நிச்சயம் அநேகமானோர் பலான ஐட்டம் பாத்தே இருக்கணும். சிலவேளை களில் அந்த மாதிரி இடத்துக்கு தனியாகவோ நண்பர்களின் தூண்டுதலில் போயிருக்கலாம்.அல்லது விடினும் எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது.
செல்லப்பிராணியை தொலைத்தல்
சிலவேளைகளில் வீட்டு உறுப்பினர்களின் குறிப்பாக குழந்தைகளின் செல்லப் பிராணிகள் பெரும் தொந்தரவாக அமையும் பட்சத்தில் எங்காவது கொண்டு போய் விட்டுட்டு வந்து “ஓடி போயிட்டுது போல” என பொய் கூறல்.
நூல் விடுதல்
வேலைத்தளத்தில் அல்லது வேறு எங்காவது ஏதாவது ஒரு பொண்ணுக்கு லைன் போட்டு இருக்கலாம்.அது பொது ஆனால் வேறமாதிரி பிளானோட லைன் போட்டு மாட்டிக்கிடுதல் தான் சிறப்பாக நடக்ககூடிய ஒரு விடயம்.
பாவ்லா காட்டுதல்
அனகமானோர் முதற் தடவையாக இரவு விடுதிக்கு செல்லும் போது சம்பந்த மில்லாத ஆடை அணிந்து சென்று முதற் தடவையாக முக்கி முக்கி பீர் அடித்து, ஆட தெரியாமல் ஆடி அடுத்தநாள் நண்பர்களின் கேலிக்காளாகல்.
ஆப்படித்தல்
பிடிக்காத ஒருவனைப்பற்றி இரகசியங்களையோ அல்லது இல்லாததும் பொல்லாததும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி சிக்கலில்மாட்டி வைத்து வஞ்சம் தீர்த்துக்கொள்ளல்.பிறகு ஒன்றும தெரியாதது போல் சென்று நலம் விசாரித்தல்.
முன் எச்சரிக்கை
அநேகமானோருக்கு இப்படி அனுபவம் இருக்கும்.இன்றைக்கு நமது பேர்ஸ் காலியாக வாய்ப்புள்ளது என உணர்ந்து வேண்ட்டுமென்றே வீட்டில் வைத்து விட்டு சென்று மறந்து வந்திட்டேண்டா மச்சான் எனல்.சென்றாலும் சொற்ப பணத்துடன் செல்லல்.
பிஸி ஆக நடித்தல்
வீட்டிலோ,அல்லது கல்லூரியிலோ,அல்லது அலுவலகத்திலோ நல்ல பெயர் எடுக்கவும் மேலதிக வேலைகளை பெறுவதில் இருந்து தப்பிக்கவும் ஏதாவது ஒன்றுடன் வேலையாக இருப்பது போல காட்ட பல தில்லாலங்கடிகள் செய்தல்.
இன்னொன்றுக்கு முயற்சி
ஒருவர் காதலியோ அல்லது மனைவியோ உடன் இருக்கும் போதே இவர்களை விட இன்னும் அழகான ஒரு பெண்ணை காணும் போது மயங்கி மனைவி கூட இருப்பதையும் மறந்து ஜொள்ளு விட்டு மாட்டிக்கொள்ளுதல்.
கெடுத்தல்
தமது காரியம் ஆகவேண்டும் என்பதற்காக அடுத்தவன் இதனால் பாதிக்கப் படுவான் என தெரிந்தும் நேர்மையானவர்களை கூட லஞ்சமோ அல்லது லாவகமாகவோ கதைத்து ஐஸ் வைத்து தன்பக்கம் இழுத்து காரியத்தை முடித்தல்.
அறிந்த இடம்: http://www.sangkavi.com/
<<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். – வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா
<<>> புது செல்போன் வாங்கியிருக்கேன் : அதுல வாஷிங் மெஷின், மிக்சி, ஓவன் ன்னு எல்லாமே இருக்கு! # மேட் பை மேனியாக்.
<<>> மனைவியோட சமையல் வாசனை அருமைன்னு சொல்லற மனசு, மூக்கு அடைச்சிருக்கும்போதுதான் வருது… # வாழ்க பயம்!
<<>> நடுநிசி நாய்கள் படம் பார்த்தேன் – ஏற்கனவே அந்த படத்தை பத்து தடவை பார்த்த உணர்வு! # மீள்செயல் ஒழிக!!
<<>> மனிதன் நிலவுல தண்ணீரும், ஐஸ்சும் இருக்குன்னு கண்டுபுடிச்சிருக்கானாம் – நாம சரக்கோட போனா போதும்!! # யாரை மட்ட கட்டலாம்?
<<>> அலுவலகத்துல, காதல் திருமணமா? ஏற்பாட்டு திருமணமா? ன்னு வாக்குவாதம் – எப்டி செத்தா என்னாங்கடான்னு தோனுது எனக்கு! # நார்மலாதான் இருக்கேன்
<<>> மதத்துக்காக சாக விரும்புற மாக்கானுங்க, உடனே செத்து தொலைங்க – பாக்கி இருக்கிறவங்க வேலைய பார்போமுல்ல?? # வெங்காயம்
<<>> ஏழு வருஷம் நானும் என் மனைவியும் சந்தோஷமா வாழ்ந்தோம் 🙂 அப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டோம் 😦
<<>> உயிர் காப்பீடு: நீங்க 50,000 கொடுங்கள் – நீங்க செத்த உடன் திருப்பி தருகிறோம் !! – SLO”GUN”
<<>> முட்டாளுங்க கூட சகவாசம் வச்சிகிறது எவ்வளவு சுகம்… – என்னமா என்னை புகழ்றானுங்க….ம்?
<<>> ஓம் நித்தியாநந்தா ஸ்வாமியே நமக-ன்னு 100 தடவை சொல்லுங்க – இல்லனா, கடைசி வரை உங்க மனைவி கூட மட்டும் தான்! # கப்லிங்ஸ்
<<>> நான் ஏன் பொய் சொல்ல போறேன்?? என் பொண்டாட்டி என்னை கேள்வி கேட்கலைன்னா.
<<>> அடிக்கடி ROFL ன்னு எழுதுறவங்க என் ரூமுக்கு வாங்க… கூட்டி பல நாள் ஆகுது!
<<>> ஏய்.. எனக்கு லோன் வேண்டாம்ன்னு எத்தனை தடவ சொல்றது? நானும் அதே பேங்க்லதான் வேலை செய்றேன். # HDFC ஊழியர்
<<>> மருத்துவமணை குடும்ப கட்டுபாடு பிரிவு கதவின் மேல் உள்ள வாசகம் – “தயவுசெய்து பின்புற கதவை உபயோகிக்கவும்” # டீட்டெய்லு??
<<>> இந்தியாவுல ஊழல் என்பது, குளிக்கும்போது உச்சா போவது மாதிரி.. தப்புன்னு தெரிஞ்சும் சுகமா செய்வோம்! # அவன நிறுத்த சொல்லு..நா நிறுத்துறேன்
<<>> சில சமயங்களில் இன்டர்நெட் வேலை செய்யலைன்னா… கம்ப்யூட்டரே வேலை செய்யாதது போல பிரமை!! # எனக்கு மட்டுமா?
ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com
ராமு: வக்கிலுங்க கிட்டேயும் டாக்டருங்க கிட்டேயும் உண்மையை சொல்லணும்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?
சோமு: ஒரு வேலை, நம்ப கிட்ட எவ்வளவு பணம் இருக்குதுங்கற உண்மை தெரிஞ்சப்பின்னாடி அதுக்கேத்தமாதிரி வேலை செய்வாங்களோ என்னமோ?

சோமு: 
கோழியில இருந்து தான் முட்டை வந்தது. ஏன்னா, முட்டையில இருந்து சேவல் வர்றதுக்கும் வாய்ப்பு இருக்கே
ராமு: 
சரி! கோழியில இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில இருந்து கோழி வந்ததா?
ராமு: சரி! ஒருத்தன் 8 அடிக்கு ஃப்ளூட் ஒன்னு செய்தான். அதுக்கு என்ன பேரு வைச்சான் சொல்லு?
சோமு: அது பெரிசா இருந்ததாலே புல்லாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் குழல்ன்னு பேரு வெச்சிருப்பான். ஜோக் புரியலையா புல்Long குழல். இப்போ புரிஞ்சதா?
ராமு: ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
மெயில்ல (Train) மயிலை ஏத்தலாம்; அது தாங்கும். ஆனா மயில்ல மெயில் ஏத்தினா அது தாங்குமா? அது செத்துடும்.
சோமு: நானும் ஒரு தத்துவம் சொல்றேன் கேளு!
எருமை மேல சவாரி செய்றவன் எமன்.
புருஷன் மேல சவாரி செய்றவ வுமன்
ராமு: பொம்பளைங்க எல்லாம் சேர்ந்து உன்னை அடிக்க வரப்போறாங்க பாத்து பேசுப்பா!
சோமு: அப்படி வந்தா சரணாகதி தான். சட்டுனு அவங்க கால்ல விழுந்திட மாட்டேன்.
ராமு: நீ செய்தாலும் செய்வே சரி! இந்த பஞ்ச் டயலாக்கை கேளேன்!
பறந்து பறந்து அடிச்சா, அது ரஜினி
மறந்து மறந்து அடிச்சா, அது கஜினி
சோமு: சூப்பரு!
ராமு: ஒரு பெரியவரு, கையில கொம்பு வைச்சிட்டு, கல்யாண சத்திரத்தை சுத்தி சுத்தி வந்திட்டே இருந்தாராம் எதுக்கு சொல்லு சோமு?
சோமு: இது ரொம்ப சிம்பிள்! கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிருன்னு சொல்லுவாங்க இல்லை. அதனால காக்கா குருவி ஓட்டுறதுக்காக இருக்கும்.
அதை இப்படியும் சொல்வாங்க தெரியுமா? கல்யாண சத்திரத்தில, ஆடு மாடுங்களை உள்ளே விடமாட்டாங்க. ஏன்னா? கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிரு. அதை, இதுங்கல்லாம் மேய்ஞ்சிட்டு போயிடக்கூடாது இல்ல.
ராமு: ஆட்டோ ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ஆட்டோ ஓட்டுவாரு
ராமு: பஸ் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: பஸ்சை ஓட்டுவாரு
ராமு: ட்ரைன் ட்ரைவர் எதை ஓட்டுவாரு?
சோமு: ட்ரைன் ஓட்டுவாரு
ராமு: சரி! அப்போ ஸ்க்ரு ட்ரைவர்???…
ரெண்டு அக்காங்க பேசிக்கிறாங்க!
விமலா: உன் புருஷன் தங்கமானவருன்னு சொன்னே!
கமலா: ஆமாம் சொன்னேன்.
விமலா: அதுக்காக அவரு பாதுகாப்பா இருக்கணும்னு, அவரை பீரோல வைச்சிப் பூட்டுறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல.
விமலா: எங்க விட்டில இன்னைக்கி விலை உயர்ந்த சமையல்ப்பா!
கமலா: அப்படி என்னப்பா செய்தே?
விமலா: 22 கேரட்ல பொரியலும், 18 கேரட்ல குழம்பும் வைச்சேன்
தங்கமணி: என்னங்க! ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
ரங்கமணி: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

குறிப்பு: ஜாலியா சிரிங்க! ஜாலியா ஜோலியைப் பாருங்க! சில ஜோக்ஸ் எப்பவோ எங்கேயோ படிச்சது. பெயர் தெரியாத, முகம்தெரியாத ஜோக்ஸ் எழுத்தாளர்கள், சமூகத்துக்கு நல்லா சேவைச் செய்றாங்கப்பா! எழுதிய புண்ணியவான்க எல்லோருக்கும் தேங்க்ஸ்ங்கோ!

சிரித்த இடம்: http://uravukaaran.blogspot.com

நல்ல பதிவு. நண்பர் செங்கோவி இட்டது. copyright இல்லாததால் லிங்க் இங்கே:
பொம்பளைகளுக்கு ஏன்யா இம்புட்டு ஞாபக சக்தி?

திருவள்ளுவரும் ஹனிமூனில் வாங்கிய தர்ம(பத்தினி) அடியும்


  • கல்யாணம் பண்றதுல தப்பில்லை! நல்ல மனைவி அமைந்தால், உங்கள் வாழ்கையில் சந்தோஷம்! இல்லையென்றால் நீங்க தத்துவஞானி!! – சாக்ரடீஸ்
  • தீவிரவாதத்தை பற்றி எனக்கு பயமில்லை, ஏன்னா..நான் கல்யாணம் முடிச்சு 2 வருசம் ஆகுது! – சேம் கினிசன்
  • எனக்கு நடந்த இரண்டு கல்யாணத்திலும் ராசியில்லை.. முதல் மனைவி என்னை விட்டு போயடவிட்டாள்! இரண்டாவது மனைவி இன்னம் கூடவே இருக்கா!! – பேட்ரிக் முரே
  • உலத்திலேயே கடினமான கேள்வி – பெண்களுக்கு என்ன வேண்டும்? என்பதுதான் – சிக்மென்ட் பிராட்.
  • ஒரு நல்ல அருமையான வழி உங்கள் மனைவியின் பிறந்தநாளை ஞாயாபகம் வைத்துக்கொள்ள.. ஒரு தடவை அதை மறப்பதுதான்! – பிராங்களின்.
  • ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள், அவள் பக்கம் தப்பு இருந்தால்.. – மில்டன் பியர்லி
  • சந்தோஷமான திருமண வாழ்கையென்பது கொடு பெரு என்ற தத்துவத்தின் அடிப்படைதான். கணவர் கொடுக்கனும்! மனைவி வாங்கிக்கனும்!! – யாரோ
  • “காதல் என்பது நீண்ட அழகான கனவு! கல்யாணம் என்பது அலாரம்!!” – இயான் வுட்
  • பெண்னுக்கு எல்லாமும் வேண்டும், ஒரே “ஆண்” னிடம்!
    ஆனுக்கு ஒன்றே ஒன்று வேண்டும், எல்லா “பெண்” னிடம்!!

ஆண்கள் மட்டும் நம்பும் உண்மைகள்:

  • பீரோ நிறைய துணிமனிகளை அடிக்கி வச்சிகிட்டு, மனைவிமார்கள் டிரஸ்சே இல்லாத மாதிரி “நைட்டியில” அலையறது ஏன்னு பிரியல?
  • 337 அயிட்டத்தை பாத்ரூம் குள்ள வச்சிகிட்டு, போனா போகுதுன்னு 2 பொருட்களை வச்சிக நமக்கு எடம் தர்றது ஏங்க? (அவங்க வச்சிருக்குற பாதி அயிடத்தோட பெயரே தெரியாது நமக்கு)
  • புதுசா கல்யாணமான ஆண் சந்தோஷமாக இருந்தால் ஏன்னு தெரியும்! ஆனா.. கல்யாணமாகி “10 வருடம்” ஆன ஆண் சந்தோஷமா இருந்தா ஏன்னு தெரிய மாட்டுது!!
  • பெண்கள் ஒருமணி நேரமா எழுதுன “மளிகை லிஸ்டை”, அவங்க கடைக்கு போகும்போது எடுக்க மறந்துட்டு போறது… ஏங்க?
  • பெண்கள் அவர்களது தோழிகளை அவர்கள் வீட்டில் பாத்து அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், “அதே தோழியிடம்” 2 மணி நேரம் போன் செஞ்சு பேசுறது… ஏங்க?
  • பெண்கள் ஷாப்பிங் போகும் போதும், வீட்டை பெருக்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும், போன் பேசும் போதும், மெயில் அனுப்பும் போதும் மேக்கப் போட்டுகறாங்ளே.. ஏங்க? (மேல இருக்கறது பாதிதான்!!)
  • பெண்கள் சமைக்கும் போது.. இப்படி செய்யி, அப்படி செய்யுன்னு சொல்லாத நம்மல பார்த்து.. கார் அல்லது பைக் ஓட்டுபோது “பிரேக் போடுங்க”, “அப்டி வளைக்காதீங்க”, “பார்த்து ஓட்டுங்க”ன்னு சொல்றது… ஏங்க?
  • தேவையான பொருளை தள்ளுபடியில போட்டா கூட வாங்க நாம யோசிக்கிறபோது, “தேவையே இல்லாத பொருளை தள்ளுபடியில” போட்டுடாங்கன்னு.. தளராம கிளம்பி, தகதகன்னு தள்ளிகிட்டு வராங்களே… ஏங்க?(இன்னும் ஏங்க? போட நிறைய இருந்தாலும்.. என்னோட “ஏங்க” எகிறி..எகிறி அடிப்பாங்க என்பதால, இத்தோட நிறுத்திகிறேன்!)

ஆண்கள் மட்டும் ரசிக்கும் தமாசுகள்

இரு நண்பர்கள், பார்டியில்…
ந1 : “என் மனைவி தேவதை! ”
ந2 : “நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!”

நிச்சயத்தின்போது…
மகன்: “யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!”
அப்பா: “உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!”

மகன்: “கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?”
அப்பா: “தெரியலப்பா… இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!”

மனைவி: “ஏங்க.. திருடுபோன “கிரிடிட் கார்ட்” பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?”
கணவன்: “திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!”

இரண்டு நண்பர்கள் பாரில்…
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. “மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!”

பொட்டு பட்டாசு:
மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க… 5 வார்தை மந்திரம்!
“என்னை மன்னிச்சிகோ!” & “நீ சொன்னா சரிதான்!”

ரசித்த இடம்: http://kalakalkalai.blogspot.com

என்னடா இவரு கன்னத்துல கைவச்சுகிட்டு கப்பல் கவிழ்ந்த மாதிரி சோகமா இருக்கிறாரேன்னுப் பார்க்கிறீங்களா?! பின்ன என்னங்க… எப்படி இருந்த இவரை இப்படி போட்டோ மார்ப்பிங்க்ல கவிழ்த்தா சோகமா இல்லாம சுகமாவ இருக்கும்?!

நம்ம ஊர் அரசியல் தலைவர்களைப் போல், அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் மாறினால் எப்படி இருக்கும் என நகைச்சுவை நயத்துடன் கணிணி துணையுடன் வரைந்த ஓவியங்களைக் காணுங்கள்! இதை எனக்கு மின் அஞ்சல் செய்த கத்தார் தோழர் திரு பிஜூ அவர்களுக்கும், இதனை பிரசுரித்த in.com இணையதளத்திற்கும் நன்றி! முகந்தெரியாத குசும்புக் கலைஞர், கணிணி ஓவியருக்கு நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

கவி : நவீனா…….. அடி வாங்கப்போற நீனு இப்ப…

நவீன் :  இரு இரு..!!  நானும் சின்ன புள்ளையில இருந்து பாக்கறேன், இந்த அம்மாங்க புள்ளைங்கள அடிக்கறது ” ஒன் சைட்” ஆவே இருக்கே…. ??என்ன கதை இது???  பேலன்ஸ் இல்லாத இந்த  ஒன் சைட் ரூல் போட்டது யாரு..???  காலம் பூரா அம்மாங்க அடிப்பாங்க…புள்ளைங்க வாங்கனுமா..? என்ன நியாயம் இது? அதுக்கு முதல்ல நீ…பதில் சொல்லு…

கவி: இப்ப என்ன….?  உனக்கு என்னை அடிக்கனுமா?

நவீன் : ஹா ஹா ஹா.. .ஆனாலும் உன் காமெடி சென்ஸ் க்கு  அளவே இல்லாம போச்சிம்மா…… நீ இருக்க சைஸ் க்கு நானெல்லாம் அடிச்சா…  ஹய்யோ ஹய்யோ.. .. .. என் கால் ஹைட் கூட இல்ல நீனு… ..போ..போ… போ…..வேலைய பாரு.. போ………

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…. !!

*************************
காலிங் பெல் அடிக்க, கதவை திறக்கிறேன்.. நவீன்  & ஃப்ரெண்ட்ஸ் குரூப் நிற்கிறார்கள்

கவி ; :)) ஹாய் கைஸ்… :)) வாங்க.வாங்க….

வெங்கட் : ஹாய்….ஆன்ட்டி, யூ லுக் வெரி சிலிம்ம்ம்ம்…

கவி : ஏன்ன்டா???

வெங்கட் : நிஜம்மா த்தான் ஆன்ட்டி, லாஸ்ட் டைம் பாத்ததுக்கு ..ரியலி யூ பிக்கெம் தின் ஆன்ட்டி…

கவி : திருப்பியும் ஏன்ன்டா.. ???

நவீன் : டேய் சனியனே.. ………..மதியம் கண்டிப்பா சோறு போடுவாங்க……….. போதும்……வந்து தொல… !!

கவி :  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்….
**********************************

துணி துவைக்கும் போது ஏகத்துக்கு திட்டிக்கொண்டே இருக்கிறேன்..

நவீன் : எச்சூச்சுமி… ஏன் என்னவோ தனியா பேசிக்கிட்டேஏஏஏஏ இருக்க? எனி கிளைமெட் சேன்ஜ் ப்ராப்ளம்..??

கவி : (செம கடுப்பில்) ம்ம்ம்ம்…எல்லாம் என் தலை எழுத்து. .எரும மாடுங்களோட துணியெல்லாம் துவைக்கனும்னு இருக்கு……….

பழம்நீ:  ஏன்டா, அவ கை தான் வீங்கி இருக்குன்னு தெரியுமில்ல, உன் துணிய நீ துவைச்சிக்கோன்னு சொன்னேனில்ல.. ஏன் செய்ய மாட்டற. .அவ பாரு எவ்ளோ கேவலமா திட்டறான்னு……

நவீன் : ஹா ஹா.. :))) எது கேவலம்.?!! அம்மா புள்ளைய திட்டறதெல்லாம்…. காலங்காலமா நடக்கற ஒரு சாதாரண விஷயம். இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணவே கூடாதுப்பா..
.
பழம்நீ : உன்னால…… என்னையும் சேர்த்து திட்டறாடா…

நவீன் : அய்யய்ய என்ன உங்களோட பெரிய பிரச்சனையா போச்சி… பொண்டாட்டின்னா அப்படித்தான்ப்பா…. நீங்களும் ரியாக்ட் செய்யாம இருங்க.. அவங்க பாட்டுக்கும் கத்திட்டு….  இருப்பாங்க… ஆனா ஒரு ஸ்டேஜ்ல ….பாருங்க…வேலயும் முடிஞ்சி இருக்கும் .. இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணா அப்புறம் நாம வேல செய்ய வேண்டியதா போயிடும்ப்பா…!

கவி : அடப்பாவி… :(((((( !
********************************

நவீன் : அப்பா, சனிக்கிழமை, க்ளாஸ் வைக்கறாங்க.. என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். உங்களுக்கு ஃபோன் வரும், காலேஜ் வந்து, கையக்கட்டிக்கிட்டு பவ்யமா நின்னு, “என் புள்ள மேல தான் தப்புன்னு சொல்லாதீங்க.” என் மானம் மரியாதை எல்லாம் போயிடும்….அவங்கக்கிட்ட “ஆமா அவன் வரமாட்டான் அவனுக்கு வேற வேல இருக்குன்னு சொல்லுங்க ” சரியா…!

பழம்நீ: …………………………….. (என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. …….

நவீன் : என்ன அவங்கள பாக்கறீங்க. சொன்னது புரிஞ்சிச்சாஆ…?

பழம்நீ: ……………………….(என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. …….

நவீன் : அப்பா உங்க கிட்ட தான் பேசறேன்..என்ன அவங்கள லுக் விடறீங்க..???

கவி :  டேய்…புரியலையா..? நீ  அப்படியே என்னை மாதிரி இருக்கியாம். !! :))))))))))  ஆனா, இந்த சீன் க்கு எல்லாம், அப்பா சரி வரமாட்டார்டா….  நான் வேணும்னா காலேஜ்’க்கு வரேன்…….சண்டப்போட்டு ரொம்ப நாள் ஆச்சிடா.. ப்ளீஸ், ப்ளீஸ்…நான் வரேண்டா….

பழம்நீ :………….. (என்னைப்பார்க்கிறார்.. பல்லை நற நறவென கடித்துக்கொண்டு) …….அதான்……அப்படியே.. …….

கவி :...ஹி ஹி… எப்படிப்பா உங்களுக்கு மட்டும் பல்லை கடிச்சா இவ்ளோ  சத்தம் வருது.. நாங்க கடிச்சா வரலியே.. ?!

பழம்நீ:  (ரொம்பவும் கடுப்பாகி.. வேற என்ன நற நற நற தான்… )

*******************

சமையல் அறையில் இருக்கிறேன், பழம்நீ தனியாக ஹாலில் பேசிக்கொண்டு இருப்பது கேட்கிறது..
பழம்நீ: …கடவுள் கிட்ட.. ஒரு சாதாரண.. .ரொம்ப சாதாரண பொண்ணு வேணும்னு தான் கேட்டேன்.. .ஆனா.. எனக்கு இப்படி ஒரு எக்ஸ்ட்ராடினரி பொண்ணை கொடுத்து……………….
கவி : (கொடுத்து ன்னு சொல்லும் போது – வெளியே எட்டி பார்க்கிறேன்……….)
பழம்நீ: (நான் பார்ப்பதை கவனித்தவர்) என்னை பெருமைப்படுத்திட்டாரேஏஏஏ..!! ( :(((((((((((( )
கவி:  ப்பா…நான் எட்டி பாத்ததுக்கு அப்புறம் ஒரு கேப் விட்டீங்களே.. அதை ஃபில் பண்ணுங்க…..உண்மையில என்ன சொல்ல வந்தீங்க??? அதை சொல்லுங்க..
பழம்நீ: சே..சே…. இல்லையே….. நிஜம்மாவே உன்னை நினைச்சி எனக்கு எப்பவுமே பெருமைத்தாண்டி… நீ ஒரு ……………..நீ ஒரு……….
நவீன் :  நீ ஒரு லூசு …. ன்னு சொல்றாரு ம்மா..!! :)))))
கவி :   அவ்…… இவன் எப்ப வந்தான்… . ?!!  :((((((((

************************

கவி : ஏன்டா..அந்த பொண்ணு ஏன் இவ்வளாம் குட்டியா ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு இருக்கு… ஃபேஸ் புக் ல பார்த்தேன்…
நவீன் : அவ ஸ்டெல்லா மெரிஸ் ல ப்டிக்கறா…அப்படித்தான் ட்ரஸ் பண்ணுவா… அது இருக்கட்டும், அவ ஷார்ட்ஸ் போட்டு இருந்தா உனக்கு என்ன?
கவி :  .  வீட்டுல ன்னா பரவாயில்ல.. காலேஜ் கூடவா அப்படி போறா?
நவீன் :  அவ என்ன ட்ரஸ் போட்டா உனக்கு என்னம்மா. .ஏன்ம்மா என் உயிர வாங்கற…நீ ஏன் இதெல்லாம் கேக்கற…
கவி : இல்லடா.. ச்சும்மா பொது அறிவை வளக்கலாம்னு தான்…
நவீன் : அது அறிவு இருக்கவங்க செய்ய வேண்டியது ..
கவி : :((((((((((((((

****************

பழம்நீ : ஆமா ஏதோ ஆசிரமத்துல போயி சேர போறேன்னு சொன்னியே எப்ப போக போற….??
கவி : ……………????????? ………………. (என்ன குடும்பம் டா இது ?!! )
நவீன் : ஹா ஹா ஹா ஹா ஹா….. ஹய்யோஓ ஹய்யோஒ…. இந்த மாதிரி அவங்க சொன்னதை நீங்களும் நம்பிட்டீங்களா??? ஹா ஹா :))))))
பழம்நீ:  அடிக்கடி சொல்றாடா… அதான் கேட்டேன்
நவீன் : ம்க்கூம்.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா சொல்றாங்க ஆனா போகத்தான் மாட்டறாங்க… :)))))), உங்களுக்கும் கொஞ்ச நாள்ல பழகிடும்….. .விடுங்க :)))))))
பழனி : அப்ப போகவே மாட்டாளா…:(((((((
கவி :  :(((((((( . .. மே ஐ கம் இன்….. ..நீங்க இரண்டு பேரும் என்னைப்பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். வில் யூ போத் க்ளோஸ் தி டோர்.!!
நவீன் : அத நீ செய்தா இந்த வீடே நிம்மதியா இருக்கும் நீயும் ஆசிரமத்துக்கு  போக வேண்டி இருக்காது. !!
கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…
************
நவீன் : (சீரியஸாக) அம்மா  காலையில் செய்யற டிபன் எல்லாம் நீ ஏன் மதியம் செய்யற ???கவி : ??????????????????????

நவீன் : (மறுபடியும் சீரியஸ்) எப்பவுமே பொங்கல் எல்லாம் காலையில் தானம்ம்மா செய்வாங்க??

கவி : ஞே !!

(அவ்வ்வ் நான் செய்து வைத்திருந்தது என்னவோ சிக்கன் பிரியாணி..?!!! .. :(((((((, என்னா கிருவித்தனம்!!  புள்ளையா இது..?!! )

ரசித்த இடம்: http://kavithavinpaarvaiyil.blogspot.com/

என்னோட ரவுண்டு குட்டியோட டெஸ்க்டாப், பப்ளிக் ப்ரொஃபைல் படங்கள் எல்லாமே ஒரு மார்கமாக, டெரராக இருக்கும். அதாவது, பார்த்தாவே முகம் சுளிக்க வைக்கும் ஸ்கல், எலும்புக்கூடு, வாயை பிளந்து, நாக்கு தள்ளி, கண்கள் பிதுங்கி இருக்கும் விகாரமான அனிமேடட் படங்கள், அசிங்கமான ஆங்கில வாசகங்கள் கொண்ட படங்கள், விதவிதமான வானரங்கள் அல்லது எல்லாவற்றையும் மிஞ்சும் அவனுடைய புகைப்படம் என்று பார்த்தவே பயங்கரமாக இருக்கும்.

நேற்று அதிசயமாக, ஒரு மயில் தோகை விரித்து ஆடும் படம் வைத்திருந்தான். நம்ம புத்தி என்னைக்கு நல்லா இருந்து இருக்கு, உடனே என் மண்டை குடைய ஆரம்பித்தது. என் புள்ளைக்குள் ஏதாவது மாற்றம் வந்துடுத்தோன்னு, பக்கத்தில் போயி உட்கார்ந்து நைய நையான்னு புடுங்க ஆரம்பித்தேன்.

“என்னடா அதிசயம் மயில் படம் போட்டு இருக்க… என்ன மேட்டர்?”

“உனக்கு புரியாது மதர்… ”

“புரியும் சொல்லு.”.

“இல்ல மதர்.. அது பீட்டர் ல சொல்லனும், சொன்னா உனக்கு புரியாது..”

“நீ முதல்ல சொல்லு. .புரியுதா புரியாம இருக்கான்னு பார்க்கலாம்..”

“இல்ல மதர். விடு, .உனக்கு புரியாது.. அதை பீட்டர் ல தான் சொல்ல முடியும்.. பீட்டர் உனக்கு புரியாது..”

“அட..சொல்லுடா. .ஒரு வேள உனக்கே தெரியாதோ. .தெரியாதத பீட்டர் பீட்டர் னு சொல்றியோ. .சொல்லித்தொலடா”

“உனக்கு ஏன் இப்படி மண்டை கொடையுது.? “.

“இல்ல நீ சொல்லாம நான் விட மாட்டேன். .நீ இந்த மாதிரி படம் எல்லாம் வச்சிக்க மாட்ட, எனக்கு காரணம் சொல்லு…”

“ஏன்ன்ன்ன்ன்ன்ன்ம்மா இப்படி இருக்க. .போய் தொல”

“மாட்டேன். .சொல்லு போறேன்..”

“சரி உன் அறிவுக்கு எட்டுதான்னு பாரு. .இது ஒரு 3 டைமன்ஷன் …  உனக்கு என்ன  தெரியுது ன்னு பார்த்து சொல்லு…”

“……………………..(ரொம்பவும் கூர்ந்து கவனித்து -தேவையா????? )   எனக்கு ஒரு லேடி கோல்ட் கலர் துப்பட்டாவை கழுத்தில் மாட்டி நிற்கற மாதிரி இருக்கு… ம்ம்ம்ம்ம்…….சரியா..”

“ஹி ஹி……… இல்ல..”

“…………. இல்லையா..?  (திருப்பி ஒரு கூர்ந்து) இண்டியானா ஜோன்ஸ் ல ஒரு கிரிஸ்டல் ஸ்கல் வருமே.. அது மாதிரி இருக்கு….’

“ஹா ஹா ஹா. .இல்லவே இல்ல..”

“……… கிர்ர்ர்ர்ர்ர்… ((திருப்பி திருப்பி…கூர்ந்து) ஒரு ரவுண்டு.. அதை உற்று பார்த்துக்கிட்டே வந்தா ஒரு புள்ளியா போயிக்கிட்டே இருக்கு உள்ள… ”

“ஹா ஹா ஹா ஹா. .அம்மா ஆனாலும் நீ இருக்க.. பாரு. .நானு என்ன சொன்னேன் 3 டைமன்ஷன் தானே சொன்னேன்.. 3 இமேஜ் தெரியுதுன்னா சொன்னேன்.. . :)))) , அப்பவே சொன்னேன் கேட்டியா உனக்கு பீட்டர் புரியாதுன்னு 3 டைமன்ஷன்னு சொன்னதே உனக்கு புரியல.. :)) கிளம்பு…”

“…………..?????? அப்ப நீயே சொல்லு உனக்கு என்ன தெரியுது..”

“ரூம் ல “tron ledacy” படம் பார்க்க போனப்ப ஒரு 3D கண்ணாடி கொடுத்தான் அதை போட்டு பார்த்து சொல்லு..”

அவன் ரூமுக்கு போயி அதை தேடி கண்டுப்பிடிச்சி கொண்டுவந்து போட்டு பார்த்தால்………………………………. (ஒரு மண்ணும் தெரியல… :(()

“டேய்.. ஒன்னுமே தெரியலடா.. எனக்கு மயில் தாண்டா தெரியுது..”

“ஹா ஹா ஹா. .ஆமா மயில பார்த்தா மயில் தான் தெரியும்.. பின்ன வேற என்ன தெரியுமாம்..??”

” :(( அப்ப 3 டைம்னஷன் அது இதுன்னு சொன்ன??? ”

“ச்ச்சும்மா..டைம் பாஸ்… :))))))) ரொம்ப சின்சியரா… கண்ணாடி எல்லாம் போட்டுட்டு வந்து பாக்கற…”

“கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்………7 1/2 ….புள்ளையாடா நீனு..???”

“ஒழுங்கா ஒன்னும் இல்லன்னு சொன்னா நீ போகமாட்ட.. அதான்..கொஞ்சம் அலைய விட்டேன். .இப்ப ஓடி போன்னு சொன்னா..ஓடிப் போவதானே.. ??? :))))))))))

” :((((( ம்ம்ம்ம்ம்…..போறேன்………. ”

***********

இன்னைக்கு பார்க்கிறேன்.. ஒரு டைகர்..படம் இருக்க.. … ”

“ஹை.. என் இம்சை தாங்காம மாத்திட்டியா.. ???”

தலையில் அடித்துக்கொள்கிறான்.. “ஏன்ன்ன்ன்ம்மா இப்படி இருக்க… ?? அது ஆட்டோமேடிக் ம்மா…தினம் மாறிக்கிட்டே இருக்கும்.. !!”

*****************

ரசித்த இடம்: http://kavithavinpaarvaiyil.blogspot.com

 

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

இன்னமும் ஊடகங்கள் தி.மு.க. வினரைத் தான் கலாய்க்கின்றனறேத் தவிர, கோட்டை மாற்றம், சமச்சீர்க் கல்வி, மருத்துவக் காப்பீடு… எனப் பற்பல விஷயங்கள் கார்ட்டூன் வாயிலாக ஊடகங்கள் பிரதிபலிக்கும் என எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் ஆளும் கட்சியின் சர்ச்சைகளுக்குரிய முடிவுகளுக்கெதிராக கல்கி வார இதழை தவிர வேறெந்த ஜனரஞ்சக இதழ்களிலும் நானறிந்த வரையில் கார்ட்டூன்களைக் காண முடியவில்லை.   நீதிமன்றங்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கான பணியினை அவ்வப்போது புரிகின்றன.  ஊடகங்கள் ஆளும் அரசினைக் குறைக் கூறவேயில்லையே என்பது என் புலம்பலல்ல. எவரெவர் எதைப் புரிந்திடினும் அதைத் தயங்காமல் தன்மைக்கேற்ப வாழ்த்தவும் வீழ்த்தவும் ஊடகங்கள் முனையவேண்டும் என்பதே என் போன்றோரின் அவா.

சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த தினமணி, தினமலர், கல்கி, விகடன் & துக்ளக் தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!

ரசித்த இடம்: http://nellimoorthy.blogspot.com

1.செருப்புடன் வேலை செய்ய ஜெ அமைச்சருக்கு உத்தரவு#அப்படியே பொறுப்புடன் வேலை செய்யவும் உத்தரவு போட்டா தேவலை-இப்படிக்கு கடுப்புடன் ஒரு சாமான்யன்

2. மரபுக்கவிதைங்கறது முதிர் கன்னி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி#டேஸ்ட்  டிஃபர்ஸ்  ( அப்போ பின் நவீனத்துவக்கவிதைன்னா முகம் காட்டாம நமக்கு முதுகு காட்டி பஸ்ல உட்கார்ந்துட்டு வருமே அந்த ஃபிகரா? ராஸ்கள்.. சொல்றாம் பாரு வெளக்கம்.. )
3. ஹை கிளாஸ் ஃபிகர் கழுத்தில் எந்த ஆபரணங்களும் அணியாமல் இருந்தால்கூட ரசிக்கும் ஆண்கள் மிடில் கிளாஸ் ஃபிகர் எந்த ஆபரணம் அணிந்தாலும் ரசிப்பதில்லை#ஜெண்ட்ஸாலஜி
4. ஆஃபீசில் இருந்து கணவன் எப்போ வருவான் என மனைவி காத்திருப்பாள்.வீட்டுக்குப்போகவேண்டுமே என்று வருத்தத்தோடுஆஃபீசை விட்டு கணவன் கிளம்புவான்#ஆஃபீஸாலஜி
5. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிவதும் ஒரு வித சுதந்திரமே என பெண்ணும், அது ஆண்களைக்கவர செய்யும் குறுக்கு சால் தந்திரமே என்று ஆணும் நினைக்கிறார்கள்#கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
6. என்றென்றும் பாதுகாப்பான வாழ்வு வேண்டும் என பெண்ணும்,அன்றைய பொழுது ஜாலியாக கழிந்தால் சரி என ஆணும் நினைப்பதால் தான் பிரச்சனை வருகிறது #சைக்காலஜி
7. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு பிரத்யேக நறுமணம் உண்டு.அது இயற்கையின் நியதி.ஆனால் இதை பெண்ணிடம் சொல்லிக்கொண்டிராதே#சைக்காலஜி
8. திருமண நாள் அன்று மணப்பெண் குதூகலமாக இருக்கிறாள்.பிறகும் அவ்வாறே..ஆனால் மாப்பிள்ளை அன்று ஒரு நாள் மட்டுமே பரவசமாக இருப்பான்#ஜெண்ட்ஸாலஜி
9. என்னதான் நாசூக்கு ,நளினம் இவற்றில் கை தேர்ந்தவளாக இருந்தாலும் பப்ஸ் சாப்பிடும்( தியேட்டர் இடைவேளை ) பெண்கள் குழந்தைகள் போல் தான் உதடுகளில் சிதற விடுகிறார்கள்#லேடீஸாலஜி
10. ரெட்,யெல்லோ,ரோஸ் என 3 நிறங்களில் 3 ரோஜாப்பூக்களை ஒரே ஹேர்பின்னால் கூந்தலில் சூடிய பெண் புதுக்காதலியாக அவதாரம் எடுத்தவளாக இருப்பாள்#லேடீஸாலஜி ( அப்பாடா.. டைட்டிலை நியாயப்படுத்தியாச்சு)
11. தன் நட்பு வட்டாரத்தை திருமணத்திற்குப்பின் சடார் என துறக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடிகிறது#லேடீஸாலஜி

12. சிநேகிதிகள் ஆண்களுடனான சந்திப்பில் சாப்பிட்டாச்சா? என்ன சாப்பிட்டீங்க? என நலம் விசாரிக்கிறார்கள்,ஆண்களுக்கு அப்படி கேட்க தெரிவதில்லை

ரசித்த இடம்: http://adrasaka.blogspot.com

1.ஸ்டிக்கர்பொட்டை விட சாந்துப்பொட்டே உனக்கு அழகு,ஏன் எனில் ஸ்டிக்கர்பொட்டை நீயே வெச்சுக்குவே,சாந்துப்பொட்டை நான் உனக்கெ வெச்சு விடுவேன்#லவ்வாலஜி இன் டெக்கரேஷன்

—————————
2. சினிமாவில் ரீமேக் மாதிரி வெற்றி பெற்ற நம் காதலை மீண்டும் வேறொரு லொக்கேஷனில் இருந்து ஆரம்பித்துப்பார்த்தால் என்ன?#ரெஃபிரஸ் லவ்

——————————–

3. காதலி எப்போதும் காதலனுக்கு ரியல் எஸ்டேட் தான்,அவள் மதிப்பு ஏறிக்கிட்டே இருக்கும்,அவன் சொல்லும் கவிதைகள் மட்டும் ரீல் அப்டேட்ஸ்
———————————
4.காதலியால் நிராகரிக்கபட்ட காதலர்கள் முற்றிலும் நம்பிக்கை இழப்பதில்லை,ரீ எண்ட்ரி சான்ஸூக்காக காத்திருக்கிறார்கள்#லவ்வாலஜி

———————————–

5. வீட்ல மாப்ளை பார்த்துட்டு இருக்காங்க அதனால… என நீ ஆரம்பிக்கும்போதே எலிமினேஷன் ரவுண்டில் நான் அபாயமான கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன்
—————————–
6. ஏமாற்றிய காதலியை பழி வாங்க வேண்டும் என எந்த காதலனும் நினைப்பதில்லை, அப்படி நினைத்தால் அது காதல் இல்லை#லவ்வாலஜி

—————————

7. காதல் தோல்வியில் இருந்து மீள பெண் அதிக பட்சம் 6 மாதங்களே எடுத்துக்கொள்கிறாள்,ஆண் 6 வருடங்கள் ஆனாலும் காயத்துடன் காத்திருக்கிறான்
————————-
8. ரசத்தில் கறிவேப்பிலை போல் காதலியின் வாழ்வில் காதலன்.ரசத்தில் சீரகம் போல் காதலன் வாழ்வில் காதலி இரண்டற கலந்து விடுகிறாள்
————————
9.சித்தர்கள் மடம்,சாமியார்கள் மடம் என்பது போல் ஃபிகர்கள் மடம் என்று ஒன்றை கட்டி வைத்தால் செமயா இருக்குமே?ஏற்பாடு செய்யுமா புதிய அரசு?#எக்ஸ்பெக்டேஷன்
—————————

10. என்னைப்பற்றி கவிதை சொல்லுங்க என்றதுக்கு ஏன் என் கையைப்பிடிக்கறிங்க? என்றாள் காதலி.நீ தானே உன்னை “பற்றி” கவிதை சொல்ல சொன்னாய் என்றேன்#கில்மாலஜி

ரசித்த இடம்: அட்ரா சக்க 


ரசித்த இடம்: http://valaimanai.blogspot.com/

தயாரிப்பாளரின் மேசையில் எந்த டிவிடிகளுமே இல்லை. அச்சமயம், நம்ம இயக்குனர் பாரதி கௌதம் உள்ளே வருகிறார்.

இயக்குனர்: என்ன சார் காலியா இருக்கு மேசை. படம் எடுக்க போறது இல்லையா சார்?

தயாரிப்பாளர்: அட போயா? இப்போதைக்கு சினிமா காலியா தான் இருக்கு.

இ: ஏன் சார் அப்படி சொல்றீங்க?

த: எல்லாரும் கிரிக்கெட் விளையாட போயிட்டா அப்பரம் நான் யார வச்சு படம் எடுக்குறது?

இ: ஹாஹாஹா…ஐயோ சார் அதான் இந்த சோகமா!? இவங்க போனா என்ன? நம்ம கிரிக்கெட் வீரர்கள் தான் இப்போ டான்ஸ் போட்டி, பல்பொடி விளம்பரம் அப்படினு நடிக்க வந்துட்டாங்களே! இவங்கள வச்சு படம் எடுப்போம் சார்!

த: நீ சொல்றது உண்மை தான்! நம்ம virat kohli நல்லா அழகா smart இருக்குறார்… அவர வச்சு ஒரு படம் பண்ணலாமா பாரதி?

இ: ஹிந்தி படம் எடுக்க போறீங்களா?

த: இல்ல, தமிழ் படம் தான்!

இ: தமிழ் படத்துல நடிக்கறதுக்கு எதுக்கு சார் இவ்வளவு அழகு தேவை? இங்க பாருங்க இவர…. இவர் நடிச்சாருன்னா…படம் செம்ம ஹிட்!
(ஒரு ஃபோட்டோவை நீட்டுகிறார்!)

(ஃபோட்டோவை வாங்கி பார்த்து, முகம் சுழிப்புடன்)

த: யோவ்! யாருய்யா இது? shave பண்ணி 10 வருஷம் ஆனா மாதிரி! முடி என்னய்யா…விளக்கமாறு மாதிரி இருக்கு!

இ: என் தெருவுல இருக்கும் வளரும் ரவுடி.

த: வளரும் ரவுடியா???

இ: வளரும் கலைஞன் மாதிரி, வளரும் ரவுடி!!

த: இந்த மூஞ்சிய எப்படிய்யா படத்துல காட்டுறது!

இ: சார், என்ன சார் புரியாம பேசுறீங்க! இப்ப உள்ள trendஏ உங்கள தெரியாதா!? இந்த ரவுடி செம்ம ஹிட் ஹீரோவா வருவார் பாருங்க!

த: எப்படிய்யா சொல்றீங்க??

இ: சார், இந்த ஃபோட்டோவ படம் புடிச்சு உங்க மனைவிக்கும் பொண்ணுக்கும் mms அனுப்புங்க? அவங்க reaction பாத்த பிறகு நீங்களே சொல்வீங்க!

(இயக்குனர் சொன்ன படி செய்தார் தயாரிப்பாளர். சற்று நேரத்தில் இருவரிடமிருந்து பதில் வந்தது)

மனைவி: ஆபிஸ் நேரத்துல, இப்படி பயம் காட்டுற மாதிரி ஃபோட்டோ அனுப்புற?? வீட்டுக்கு வா, உங்க அம்மா ஃபோட்டோவ காட்டி பயம் காட்டுறேன் பாரு!

இ: என்ன சார்? உங்க மனைவி செம்ம டென்ஷனா ஆயிட்டாங்க போல!

த: யோ! என்னய்யா வம்புல மாட்டிவிட பாக்குறீயா?

இ: சார், பொறுங்க. உங்க பொண்ணு ஸ் எம் ஸ படிங்க

பொண்ணு: டாடி!! omg! who is this? so hot! so cute! semma rowdy look! awesome! super! you better fix him for your next movie. I’m going to share this picture with my collegemates!

த: (ஆச்சிரியத்துடன்) என்னய்யா நடக்குது?

இ: நான் தான் சொன்னேன்ல. எந்த ஒரு ஹீரோ முகம் ஆண்ட்டிஸ்க்கு பிடிக்காம, அவங்க பொண்ணுங்களுக்கு பிடிக்குதோ, அந்த ஹீரோ தான் டாப் ஹீரோ!

த: என்னமோ போயா! இது எல்லாம் சரியா வருமானு தெரியல!

இ: சார், இவர் நல்ல கிரிக்கெட் ஆடுவாரு சார்! தமிழ் படம் ஹீரோவுக்கு இதவிட வேற என்ன தகுதி வேணும்!?

த: (சலிப்புடன்) புதுசா எதாச்சு செய்யுவோம்? ஒரு reality tv show பண்ணா என்ன?

இ: பின்னீட்டீங்க சார்! இப்ப அது தான் hot business.

த: என்ன நிகழ்ச்சி பண்ணலாம்?

இ: பாட்டு போட்டி! airtel வழங்கும் cute singer இம்முறை உலகத்தையும் தாண்டி!

த: நல்லா தான் இருக்கு!

(ஒரு வாரம் சென்றது, நிகழ்ச்சி தேர்வு சுற்று நடந்தது. தேர்வு சுற்று அறையில், இயக்குனரும் தயாரிப்பாளரும் காத்து கொண்டிருந்தனர்)

த: உன்னைய நம்பி இதுல இறங்குறேன், பாத்து பண்ணுய்யா!!

இ: கவலைய விடுங்க! தேர்வு சுற்றே 15 episode காட்டலாம்! அப்பரம் டாப் ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோ சுற்று, மொக்கை ஹீரோக்களின் லவ் டூயட்ஸ், மொக்கை ஹீரோயின்களின் solo சுற்று, wildcard round 1, wildcard round 2, wildcard round 3, mega wildcard round, semi final 1, semi final version 2.0…இப்படி ஒவ்வொரு episode கணக்கு பண்ணாலே, பல கோடிய அள்ளிடலாம் சார்!

த: ஆமா, நமக்கு என்னமோ பாட்டு தெரிஞ்ச மாதிரி judge பண்ண வந்துட்டோமே, உனக்கு ஏதாச்சு சங்கீதத்த பத்தி தெரியுமா?

இ: மத்தவங்க பொண்டாட்டிய பத்தி நான் பேச மாட்டேன் சார்?

த: பொண்டாட்டியா????

இ: பாடகர் கிரீஷ் பொண்டாட்டி தானே சங்கீதா? அவங்கள பத்தி எனக்கு ஒன்னு தெரியாது சார்!

த: யோ! சங்கீதா இல்லையா? சங்கீதம்!!!!!!!

இ: (சிரித்து கொண்டே) அத பத்தி தெரியாம இருக்குமா? நான் எப்படி judge பண்றேன் மட்டும் பாருங்க!

(முதல் போட்டியாளர் வந்தார். பாடினார்)

இ: நீங்க பாடின மூன்றாவது வரில அந்த ரெண்டாவது வார்த்தையல கொஞ்சம் landing note தப்பா போயிட்டு!

த: (இயக்குனர் காது அருகே சென்று, மெதுவாய்) அவர் பாடினதே இரண்டு வரி தான். நீ என்னத்த மூன்றாவது வரிய கண்டு பிடிச்ச?

இ: (சமாளித்து கொண்டு) ஓகே, சார்! நீங்க அடுத்த ரவுண்டுக்கு selected.

(அடுத்த போட்டியாளர் பாடி முடித்தார்)

இ: சூப்பர்! சூப்பர்! இந்த சின்ன வயசுல….(கண் கலங்கினார்)

த: (இயக்குனரிடம் மறுபடியும் காது அருகே சென்று) அநியாயம் பண்ணாத டா! இவருக்கு 55 வயசு ஆச்சு! இது உனக்கு சின்ன வயசா? நல்லாவே பாடுல…reject him.

இ: (அமைதியான குரலில் தயாரிப்பாளரிடம்) சார், நல்லாவே பாடாம இருக்கறவங்கள தான் choose பண்ணனும். அது தான் புது rule.

(வெளியே வாக்குவாதம் நடந்தது. அதை சமாளிக்க ஓடினர் இருவரும்)

ஒரு அம்மா: எங்க புள்ள பாடனும்.

த: இல்ல மேடம். இது பெரியவங்க நிகழ்ச்சி.

ஒரு அம்மா: என் புள்ள, சின்னபுள்ள, இப்ப தான் 6 வயசு ஆகுது. சும்மா ஒரு guest appearance மாதிரி பண்ண வைங்க.

இ: மேடம், கவலைய விடுங்க! அடுத்த seasonல உங்க பையனுக்கு சான்ஸ் இருக்கு.

த: அடுத்த seasonக்குள்ளவா? இப்ப தான் பையனுக்கு 6 வயசு.

இ: சார், நம்ம ஒரு சீசன முடிக்கறதுக்குள்ள பையன் வயசுக்கு வந்து மேஜர் ஆயிடுவான் சார்.

(பிரச்சனையை சமாளித்த உற்சாகத்தில் உள்ளே வந்தனர் இருவரும். அடுத்த போட்டியாளர் பாடி கொண்டு இருக்கும் வேளையில்…)

இ: நிறுத்துங்க! (கத்தினார்)

த: (ஆச்சிரியம் அடைந்தார்)

இ: என்னங்க பண்றீங்க?? (போட்டியாளர் மிரண்டு போயிட்டார்)

த: (இயக்குனரிடம்) யோ! what’s happening?

இ: அவர் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு தெரியுமா?

போட்டியாளர்: சாரி சார்! நான்….மறுபடியும் பாடவா?

இ: நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்!

(அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். போட்டியாளரின் சித்தி உள்ளே நுழைந்தார் கையில் ஒரு கேக். அனைவருக்கும் அப்போது தான் புரிந்தது. அனைவரும் கை தட்டினர்.)

சித்தி: இன்னிக்கு celebration time! எங்க கொள்ளு தாத்தா ஒருத்தர் இருந்தாரு. அவரோட நினைவு நாள் இன்னிக்கு. அதான்…(சிரித்து கொண்டே உள்ளே நுழைந்தார்கள் போட்டியாளரின் மொத்த குடும்பத்தினரும். இயக்குனரும் சேர்ந்து கொண்டார் கொண்டாடத்தில். கேமிரா மேன் ஒவ்வொரு angleலாய் படம் எடுத்தார்!)

த: (கோபத்துடன்) என்னய்யா நடக்குது!!! எல்லாரும் ஓடி போயிடுங்க!

(அனைவரையும் விரட்டினார்!!!)

இ: சார்… என்ன சார்?

த: நீ பேசாதய்யா!!??

இ: (புன்னகையித்து கொண்டே) சார், அங்க பாருங்க சார்?

த: என்ன?

இ: இப்ப பாடினாரே அவர் காதுல எத்தன தோடு போட்டு இருந்தார் தெரியுமா?

த: அவர சித்தியவிட அவருக்கு தான் நிறைய இருந்திருக்கும். அதுக்கு இப்ப என்ன?

இ: சார், ஒரு ஐடியா சார்? why not we start ‘நம்ம வீட்டு காது குத்து’ show?

த: உனக்கு இன்னிக்கு கும்மாங்குத்து தாண்டா!!! (விரட்டி கொண்டு ஓடினார் இயக்குனரை பிடிக்க!)

 

ரசித்த இடம்: http://enpoems.blogspot.com/

 

பேருந்தில் ந‌ட‌த்துன‌ரிட‌ம் காசு கொடுத்து ப‌ய‌ண‌ச்சீட்டு வாங்கும்போது அடிக்க‌டி ந‌ட‌க்கும் விஷ‌ய‌ம் இது. 5.50 ப‌ய‌ண‌ச்சீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால், 4 ரூபாய்தான் திருப்பி தருவார். எப்போதும் அவ‌ர் த‌ரும் பாக்கி சில்ல‌றையில் 50 காசு குறைவாக‌ இருக்கும். வெறும் 50 காசுதானே என்று நீங்க‌ள் சொன்னாலும், அது என் காசு. இருந்தாலும் அதை கேட்காம‌ல் விட்டுவிடுவேன், கேட்காம‌லிருப்ப‌து த‌ப்பென்று தெரிந்தும். ஏனெனில்…

____________________________________________________________________________

அதே பேருந்தில் இருக்கையில் அம‌ர்ந்திருப்பேன். ம‌ற்ற‌ இருக்கைக‌ளில் அம‌ர்ந்திருக்கும் எவ‌ரும் தூங்காம‌ல் இருப்ப‌ர். ஆனால் என் ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருக்கும் ஆசாமி ம‌ட்டும் தூங்கி வ‌ழிந்து, அடிக்க‌டி என் தோளில் வ‌ந்து இடித்துக்கொண்டிருப்பார். நான் இன்னும் கொஞ்ச‌ம் த‌ள்ளி உட்கார்ந்து கொள்வேனே த‌விர‌ எதுவும் சொல்ல‌மாட்டேன். ஏனெனில்…

“இதுவே ப‌க்க‌த்துல‌ ஒரு பொண்ணு இருந்தா…” என்றெல்லாம் பின்னூட்ட‌ம் வேண்டாம் பாஸ். ப‌திலைத் தெரிந்துகொண்டே கேள்வியைக் கேட்டால் நானென்ன சொல்ல‌?…;))

____________________________________________________________________________

ஒரு முறை தி.ந‌க‌ருக்கு அவ‌ச‌ர‌மாக‌ செல்ல‌ வேண்டிய‌ சூழ்நிலை. ப‌ஸ் ஸ்டாப்பில் வெகு நேர‌மாய் நின்று கொண்டிருந்தேன். தி.ந‌க‌ருக்கு செல்ல‌ வேண்டிய‌ பேருந்துக‌ள் அனைத்தும்‌, கூட்ட‌ மிகுதியால் பைசா கோபுர‌ம் போல் ஒரு ப‌க்க‌மாய் சாய்ந்து கொண்டே வ‌ர‌, ச‌ரி ஆட்டோவில் போய்விட‌லாம் என்று முடிவு செய்தேன். சிறிது நேர‌த்தில் ஆட்டோ ஒன்று வ‌ர‌, நான் கேட்ப‌த‌ற்கு முன் அருகில் நின்றுகொண்டிருந்த‌வ‌ர் “டி.ந‌க‌ர் போக‌ணும்…..எவ்ளோ” என்று கேட்டார். அந்த‌ ஆட்டோ டிரைவ‌ர் ம‌ற‌ந்து, யூனிஃபார்மோடு ம‌ன‌சாட்சியையும் கழ‌ற்றி வைத்துவிட்டார் போல‌. ச‌ர்வ‌ சாதார‌ண‌மாக‌ “ஒன் ஃபிஃப்டி குடுங்க‌” என்றார். அந்த‌ ந‌ப‌ர் ஆட்டோ வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கி நின்று கொண்டார். அவ‌ருட‌ன் பேசி ஒரே ஆட்டோவை பிடித்து தி.ந‌க‌ருக்கு சென்று ஆட்டோ சார்ஜை ஷேர் செய்திருக்க‌லாம். ஆனால் நான் செய்ய‌வில்லை. ஏனெனில்…

____________________________________________________________________________


அடையார் ஆன‌ந்த‌ ப‌வ‌ன் ரெஸ்டார‌ண்ட்டுக்கு சென்று ஆசையாக‌ ஒரு ஆனிய‌ன் ர‌வாவை அள்ளி அள்ளி உள்ளே த‌ள்ளிக்கொண்டிருப்பேன். 80% முடித்த‌பின்பு மீத‌ம் இருக்கும் தோசைக்கு தொட்டுக்கொள்ள‌ சாம்பாரும் இருக்காது, ச‌ட்னியும் இருக்காது. ச‌ர்வ‌ரிட‌ம் கூப்பிட்டு கேட்டால், ‘இம்மாத்துண்டு தோசைக்கு ஒரு க‌ப்பு சாம்பார் கேக்குதா’ என்று அழ‌கு சென்னைத் த‌மிழில், பார்வையாலேயே ந‌ம் இராசி, ந‌ட்ச‌த்திர‌ம் கேட்காம‌ல் அர்ச்ச‌னை செய்வார். செய்தால் என்ன‌? என் ப‌சிக்கு சாப்பிடுகிறேன். என‌க்கு தேவை இர‌ண்டு க‌ப் சாம்பார், ச‌ட்னி என்றால் அவ‌ர் த‌ர‌வேண்டும். ஆனால் கேட்க‌மாட்டேன். வெறும் தோசையையே அள்ளி ம‌டித்து, ச‌மோசா ஷேப்புக்கு கொண்டு வ‌ந்த‌ பின், பூலோக‌த்தை வாயினுள் காட்டிய‌ க‌ண்ணன் போல் வாயைத் திற‌ந்து, வெற்றிலை போடுவ‌து போல் உள்ளே த‌ள்ளிவிடுவேன். ஏனெனில்…

____________________________________________________________________________

ஒரு அழ‌கான‌ பெண்ணை பார்த்து சைட் அடிக்கும்போது இருக்கும் தைரிய‌ம், அதே பெண்ணிட‌ம் முத‌ல் முறை பேசும்போது இருப்ப‌தில்லை. முத‌ல் முறை ம‌ட்டும். அது போல், பெற்றோரோ, உற‌வின‌ரோ அருகில் இருக்கும்போது, ஒரு பேஏஏஏர‌ழ‌கி க‌ட‌ந்து போனாலும், போக்கிரி விஜ‌ய் ரேஞ்சிற்கு முக‌த்தில் எந்த‌வித‌ ரியாக்ஷ‌னும் காட்டாம‌ல் இருப்ப‌துண்டு. ஏனெனில்…

கேள்வி:    நீங்கள் என்ன சாப்பிவிரும்புகிறிர்கள்? பழஜூஸ்,சொக்கலேடே , சோடா ,டி

பதில்             டீ மட்டும்

கேள்வி         இலங்கை டி ,மூலிகை டி,ஏலம கலந்த டி,புஷ் டீ ,கிரீன் டி ?

பதில் :         சிலோன் டி

கேள்வி :    அதிலும் வெள்ளை டி ,கருப்பு டி ?

பதில் ;       வெள்ளை

கேள்வி :  பால் அதிகம் விட்டோ இல்லை குறைத்தோ?

பதில் ;      பால் சேர்த்து

கேள்வி :  ஆட்டு பால் ,பசுப்பால் ,ஓட்டக பால் எது தேவை ?

பதில் :      பசும பாலே போதும் டீ கொண்டு வாங்க.

கேள்வி  :இனிப்புக்கு என்ன ?சீனி  இல்லாவிடின் கரும்பு சாறு

பதில் :சீனி

கேள்வி :கட்டி சீனி யா ?இல்லை தூள் சீனியா ?

பதில் :தூள் சீனி

கேள்வி :வெள்ளை சீனி ,பிரவுன் சீனி ,மஞ்சள் சீனி எது வேண்டும் ?

பதில் :தம்பி டியே வேணாம் கொஞ்சம் தண்ணீ கொண்டு வா ?

கேள்வி :மினரல் வாட்டர் வேணுமா ? இல்ல நார்மல் தண்ணிர் போதுமா?

பதில் :மினரல் வாட்டர்

கேள்வி :சுவை சேர்த்த நீரோ இல்லாமல வெறும் நீரோ ?

பதில் :::::::::::::::::::::::;;ஆணியே புடுங்க வேணாம் நான் போறன்

(சீனி =சக்கரை )

ரசித்த இடம்: http://sangarfree.blogspot.com/

  1. காலையில் எழுந்ததும் உங்க தங்கமணி கடைக்குப் போகச் சொல்வாங்க. பர்சை எடுத்து பாக்கெட்டில் வைத்தபின் பழக்க தோஷத்தில் ID கார்ட எடுத்து கழுத்துல மாட்டுவீங்களே!
  2. ஒருநாளும் இல்லாத திருநாளா ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிடச் செல்வீர்கள். சாப்பிட்டு முடித்ததும் அலுவலக பழக்கத்தில் தட்டை கையிலெடுத்துக் கொண்டு கை கழுவப் போவீர்கள்!
  3. அப்படிப் போகையில் தங்கமணி முறைத்து தவறைச் சுட்டியதும் தட்டை டேபிளில் வைத்துவிட்டு கை கழுவப் போவீர்கள். அங்கு போய் அலுவலக ஞாபகத்தில் கையை நீட்டிக் கொண்டு காத்திருப்பீர்கள்….தானே தண்ணீர் வருமென்று!
  4. ரொம்ப நாள் கழித்து உங்க நண்பர் தொலைபெசியிருப்பார். ஊர் கதை உலகக் கதையெல்லாம் அடித்துவிட்டு போனை வைக்கும் போது பழக்க தோஷத்தில் ‘ஓகே பை பை, ஏதாவது பிரச்சனைனா திரும்பக் கூப்பிடறேன்’ என்பீர்கள்!
  5. நாள் முழுதும் அவசரம் அவசரம்னே பேசிக்கேட்ட பழக்கத்தில் வீட்டில் சாப்பிடும் போது உங்க மனைவியிடம் அர்ஜென்ட்டா ஒரு தோசை கொடு என்பீர்கள். வெந்தா தான் தர முடியும் ரொம்ப அவசரம்னா தோசைய நேரடியா தட்ல தான் வார்க்கனும்னு சொல்வாங்களே!
  6. உங்க பிறந்த நாளுக்கோ அல்லது கல்யாண நாளுக்கோ உங்க பாஸ் வாழ்த்து அனுப்புவார். அதை படிக்காமலே பழக்க தோஷத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவருக்கு “please review & discuss ” என்று பார்வார்ட் செய்வீர்கள்!
  7. கைப்பேசியில் SMS எதையோ டெலீட் செய்துவிட்டு அவுட்லுக் ஞாபகத்தில் செல்போனில் “deleted items ” தேடுவீர்கள்!
  8. வேக வேகமாய் வீட்டுக்கு வந்து சாவியை எடுத்து பூட்டைத் திறக்காமல் கதவு திறக்க கார்டை நீட்டுவீர்களே!  (இதை யாரும் பார்கவில்லை என்றாலும் சுயமாய்க் கொடுக்கும் சூப்பர் பல்பு இது.)
  9. ரொம்ப நாளைக்குப் பிறகு சினிமாவுக்குப் போயிருப்பீங்க. இடைவேளையின் போது உங்க மனைவி டைம் என்னங்கன்னு கேட்பாங்க. அதுக்கு நீங்களோ கடிகாரம் பார்க்காமல் திரையின் வலது புறம் கீழ் மூலையைப்  பார்ப்பீர்கள்!
  10. ரொம்ப நாள் யோசிச்சு இந்த மாதிரி ஒரு ஐடியா க்ளிக்காகும். சரி ஒரு பதிவ தேத்தலாம்னு ஜிமெயில் லாகின் செய்வீர்கள். பாஸ்வார்ட் இன்வாலிட் என்று வரும். அப்ப தான் தெரியும் நீங்க போட்டது ஆபீஸ்  USER ID என்று!
இந்தப் பத்தில் ஐந்து உங்களுக்கு நடந்திருந்தால்….அட நீங்க நம்மாளு!
ரசித்த இடம்: http://somayanam.blogspot.com

உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

ரசித்த இடம்: http://tharaasu.blogspot.com

மறக்காம தங்கமணி பதில்களையும் பாத்துட்டு போய்டுங்க

எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.

கடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் மருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.

இதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.

தனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.

உள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.


எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்
இந்தக் கண்ணாடிக் கடைக்காரருக்கு
அமோக வியாபாரம்.
“என்ன எனது எடை அதிகரித்துவிட்டதே!”

“சோறு சாப்பிடாமல் கேக் சாப்பிட்டு,
பால் குடியாமல் கோக் குடித்து,
மீன் சாப்பிடாமல் சொசேசஸ் சாப்பிட்டு
பத்தியம் இருந்தும் இப்படியாகிவிட்டதே”

என அதிசயித்த பெண்ணுக்கு தனது எடை உயர்ந்ததற்கான காரணம் இப்பொழுது புரிந்தது!!!!!

பிள்ளைகள் கொழுப்பதற்கு எத்தனையோ காரணங்கள்.

ஆனால் இந்த அம்மாவின் குழந்தை, கவலையால் கொழுத்ததாம்
இவர் தனது உணவில் மிகக் கவனம்.
அதிகம் சாப்பிடுவதில்லை.
சின்னச் சாப்பாடுதானாம்.
அதிகம் சமைப்பதும் இல்லை.
ஆனாலும் எப்படி எடை அதிகரிக்கிறது என்பது அவருக்கும் புரியவில்லை.

இந்த அம்மா எடையைக் குறைப்பதற்கு காலை முதல் இரவு வரை முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

முழுநேர உடற் பயிற்சிதான். உடற் தசைகளுக்கு. ஆயினும் அவளது எடை குறையவில்லை.

காலை முதல் இரவு வரை கால்களுக்குப் பயிற்சி.

உட்கார்ந்த இடத்திலிருந்து கால்களை ஆட்டியபடியே இருக்கிறாள்.

அது மட்டுமல்ல மற்றொரு தொகுதி தசைகளுக்கும் ஓயாத பயிற்சி.

ஆம் வாய்த் தசை நார்களுக்குத்தான்.

மகன் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்ற கவலை இந்த அம்மாவுக்கு.
தனது ஆசை தீர மகனுக்கு உணவு அளிக்கிறாள்.
ஆனாலும் சாப்பிடுவது வலு குறைவென்ற கவலை.

ரசித்த இடம்: மறந்து போகாத சில

காலேஜ் விழாக்களில் ஃபிகர்களின் முகங்களிலும் ,உடம்பிலும் தங்கி விடும் ஜிகினாக்கள் அவர்களை தேவதைகள் ஆக்குகின்றன
#ஜெண்ட்ஸாலஜி
பெண்கள் இடையில் ஒட்டியாணம் அணிவது நாம் ஒட்டியாணத்தை ரசிக்க அல்ல,அந்த சாக்கில் கூச்சம் இல்லாமல் அவர்கள் இடையை ரசிக்க
#ஜெண்ட்ஸாலஜி
கலகலப்பாக சிரித்துப்பேசும் பெண்ணை விட அமைதியாக இருக்கும் ஃபிகர் தான் அட்ராக்டிவ்
#ஜெண்ட்ஸாலஜி

இடையில் செருகும் சேலைக்கொசுவத்துக்கான சேஃப்டி பின்னில் கூட டிசைண்டு பின்னாக செலக்ட் பண்ணுவது ஹை க்ளாஸ் ஃபிகரின் நுட்பமான மெனக்கெடல்
#ஜெண்ட்ஸாலஜி

சைட் அடிக்கும் ஃபிகர் மாடர்ன் கேர்ளாகவும், தாலி கட்டும் ஃபிகர் குடும்பப்பாங்காக சேலை கட்டியும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆண்கள் மனசு
#ஜெண்ட்ஸாலஜி

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி விட்டு திருமணத்துக்கு மறுப்பதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்
#செட்டில்மெண்ட் எவ்வளவு வேணும்?

சீமான்  3 வருடங்களாக பழகி ஏமாற்றி விட்டார் என நடிகை 4 பக்கங்கள்  புகார் கடிதம்
#அடச்சே,வெறும் 4 தடவை தான் ஏமாத்துனாரா?

நான் ஒரே ஒரு முறை தான் அந்த நடிகையை சந்தித்தேன் -சீமான்
#ஓஹோ ஒரு தடவை சந்திச்ச பின் 3 வருஷம் பிரியாமயே இருந்தீங்களா?

ஜெ ஆட்சிக்கு வந்ததும் திருட்டு விசிடி கடைகள் மூடப்பட்டு விட்டன – கலைப்புலி ஜி.சேகரன்
#அண்ணன் செம ஜால்ராவா இருக்காரே..எந்த கச்சேரிலண்ணே?

தனது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தைரியம் உள்ள டைரக்டர் யாராவது இருந்தா என்கிட்ட வாங்க-.நடிகை சோனா
#நீளப்படமா இருந்தா ம்ஹூம்,நீலப்படம்னா ஓஹோ

 

வைகோ-ம.தி.மு.க., வளர்வது தமிழகத்திற்கு நல்லது; நாங்களும் ஒரு நாள், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம்
#நல்ல வேளை ராம்தாஸ் மாதிரி தேதி சொல்லல

விஜயகாந்த்: எனது தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பணத்தில், ஒரு நையா பைசா கூட எடுக்க மாட்டேன்
#ஓப்பனிங்க் நல்லாதான் இருக்கு

நாற்பதை தொட்ட த்ரிஷா#40 வது படமா?வயசு 40 ஆச்சா?40 வயசான தொழில் அதிபரை தொட்டாரா?எந்த விளக்கமும் இல்லாம ஹெட்டிங்க் போட்டா எப்படி? 
#சந்தேகம்

கனிமொழியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு 
#செய்தில கிக்கே இல்லையே? நாளை ஆ ராசாவுடன் குஷ்பூ சந்திப்புன்னு நியூஸ் வந்தா ஓக்கே#எக்ஸ்பெக்டேசன்

ஆஸ்காருக்கு பணம் கொடுத்தாரா ரஹ்மான்? : கிளம்பியது சர்ச்சை
#இசைஞானிக்கு கொண்டாட்டமான நியூஸ் ஆச்சே..இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே பாடுவாரோ?

முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: விஜய்! 
#நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தா போதும் சார்,தானா வலு ஆகிடும்

காதலன்:  எனக்கு 24 மணி நேரமும் உன் நினைப்புத்தான்….

காதலி: பொய் சொல்லாதீங்க..  அப்படி நீங்க என்னை நினைச்சிருந்தா எனக்கு விக்கல் வந்திருக்குமே?
—————————————
குப்பன்: அவருக்கு ஏகப்பட்ட பசங்களாம்..
சுப்பன்: இருக்கட்டும்.. அதுக்காக ராம்சாமி 1, ராம்சாமி 2 , ராம்சாமி 3 …… அப்படியா வைப்பாங்க?
——————————–
குப்பன்: நீ அவ கிட்டே ஐ லவ் யூ சொன்னியா?

சுப்பன்: சொன்னேன்.. ஆனா அது நடக்காது..
குப்பன்: ஏன்?
சுப்பன்: அவ வேற யாரோ 2 பேரை லவ் பண்றா போல.. ஐ லவ் டூ அபடின்னாளே..?
குப்பன்: அட வெளங்காதவனே.. ஐ லவ் TWO என சொல்லலை.. ஐ லவ் TOO  அப்படின்னு சொன்னா.. அப்டீன்னா அவளும்  உன்னை லவ் பன்றா-னு அர்த்தம்…
—————————-
குப்பன்: அவன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
சுப்பன்: பள்ளிக்கல்வியில் மாற்றங்கள் வந்த மாதிரி புதிய ஆட்சியில் பள்ளியறைக்கல்வியிலும் மாற்றங்கள் வருமா?ன்னு கேட்கரானே!
————————–
குப்பன்:  தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எதை எதை கேட்கனும்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சு..
சுப்பன்: ஏன்?
குப்பன்: தலைவர் தேர்தல்ல ஏன் தோத்தாருனு கேட்டு மனு குடுத்திருக்காங்க./..

க்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..

“சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?”

“இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!”

ஆசிரியர்:ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??

மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.
மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

 நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு

மாணவன்: பி, சி, டி,எப்

ஆசிரியர்: டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??

மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்
ஜோன்ஸ் : படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்

பீன்ஸ் : யார் வில்லனா?? கதாநாயகனா??

ஜோன்ஸ்: தயாரிப்பாளர்
இயக்குனர் :,இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,

அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்

திரும்பிடுது!”

கதாநாயகன் :”படத்தோட பேரு?”

இயக்குனர் “ஜிம்மி ரிடர்ன்ஸ்!”
ஜோன்ஸ் : என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.

பீன்ஸ் :இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.
ஜோன்ஸ் : இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.

பீன்ஸ் :பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா…?

ஜோன்ஸ் : ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.
டுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?

‘Addres’
ஜோன்ஸ் : பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

பீன்ஸ் :துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.

ஜோன்ஸ் : இவர் பழக இனிப்பானர்

பீன்ஸ் :என்ன செய்றார்?

ஜோன்ஸ் : ஸ்வீட் கடை வச்சிருக்கார்.
ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.
ஜோன்ஸ் : ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?

பீன்ஸ் :அது வாயில்லா ஜீவன்.
லோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?

உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.

பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே…!

ரசித்த இடம்: பனித்துளி ஷங்கர் 

“தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே…ஏன்?”
“அந்த மீடிங்க்ல நோட்டு மாலையா போடுறத சொலிட்டு,ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டி போட்டுடங்களாம்…”

“திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு ஏன் போலீஸ் வந்திச்சி?”
“சிறந்த நீலப்பட விருதுகளும் வழங்கிநாங்களாம்!”

“தலைவர் செம கோபமா இருக்காரே?..ஏன்
“அவர் எழுதின காதல் கடிதங்களை எல்லாம் தொகுத்து மகளிர் அணி தலைவி தனி புத்தகமாக வெளியிட்டுடாங்களாம்…”

“கணக்கு பரீட்சை எழுதசொன்ன ஏண்டா டான்ஸ் ஆடுறாய்?”
“ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் மார்க்க உண்டென்னு நீங்கதானே சொன்னிங்க சார்”..அது தான் ஆடுறன்..

“தொகுதியில தண்ணி கேட்டு மறியல் பண்ணியவங்க கிட்ட தலைவர் போய் என்ன சொல்லிடாரென்று அவங்க கோபபட்டாங்க?…”
“உங்களுக்கெல்லாம் என்னென்ன “பிராண்டு” வேணும்னு கேட்டாராம்…”

“மன்னர் மினரல் வாட்டர் பாட்டிலை அரியணையில் வைத்து தாளம் போடுறாரே..ஏன்?”
“தண்ணியடிக்க போக வேண்டும்,சீக்கிரமாக அரசவை கூட்டத்தை முடியுங்கள் என்று சிம்பாலிக்காக சொல்கிறாராம்…”

“நீதிபதி ஏன் அந்த வக்கீலை கண்டிக்கிறார்?”
“போலி டாக்டர்,போலி மருந்து என போலிகள் பெருகிவிட்ட இந்த யுகத்தில்,போலி சாட்சிகளையும் நீதிமன்றத்தில் அனுமதிக்கணும் யுவர் ஆனார்னு பேசிட்டாராம்…”

“தலைவர் “கிளினிக்”குக்கு போலாமான்னு கேக்கறாரே…. உடம்புக்கு முடியலையா?”
“ம்ஹும்… அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்ததுலயிருந்து, கட்சி ஆபீஸ் போறதை இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு!”

“கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா… அப்படி என்ன செய்தான்?”
“திருடப் போற இடத்துல எல்லாம், “என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு நன்றி”ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!”

கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?”
“பின்னே…. ‘கபாலி சென்னைக்குப் போயிருக்கான்’கிறதை ‘களவாணி மதராசபட்டினம் போயிருக்கு’ன்னு சொல்றாளே!”

“எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?”
“அவரோட போன படத்துல, டைரக்டறோட “டச்”சே இல்லைன்னு விமர்சனம் எழுதிட்டாங்களாம்…. அதான்….!”

ரசித்த இடம்: தமிழ் ஜோக்ஸ்!

1. எலெக்‌ஷன்ல  தோத்த  பிறகும்  கூட  தலைவர்  எதுக்காக  மக்கள்ட்ட  நிதி  திரட்டறாரு?

டெபாசிட்  கூட  கிடைக்கலை.  என்ன  பண்ணுவாரு?  இழந்த  பணத்தை  எப்படி  மீட்டெடுப்பது?

—————————-

2. குடிமக்களின்  நன்மதிப்பைப்  பெற  வேண்டும்ங்கற  எண்ணம்  தலைவரோட  தேர்தல்  அறிக்கைல  தெரியுது.

எப்படி  சொல்றே?

நடமாடும்  டாஸ்மாக்  கடை  அமைத்து  வீட்டுக்கு  வீடு  சரக்கு  சப்ளை  டோர்  டெலிவரி  செய்யப்படும்கறாரே?

—————————–

3. அவர்  ஒரு  பரம்பரைக்  குடிகாரர்-னு  எப்படி  சொல்றே?

இனிமே  நான்  சரக்கடிக்க  மாட்டேன்…  இது  குவாட்டர்  பாட்டில்  மேல  சத்தியம்  அப்டீன்னாரே?

————————–

4. நாங்க  பொண்ணு பார்க்க  வந்தப்ப  நீ  ஒரு  ஸ்வீட்  வெச்சியே…  அது  ரொம்ப  கேவலமா  இருந்துச்சு…அதை  ஏன்  அப்பவே  சொல்ல்லை?அம்மா  சொன்னாங்க…  பொண்ணே  ரொம்ப  கேவலமாத்தான்  இருக்கு;  ஸ்வீட்  கேவலமா  இருந்தா  என்ன?-னு…

——————————

5. சேலை  இல்லாத  பெண்களுக்கு  லேப்டாப்  ஃப்ரீனு  தலைவர்  அறிக்கை  விட்டிருக்காரே?

வேலை இல்லாத  ஆண்களுக்கு  மட்டும்தான்  வேலை  வாய்ப்பா?-னு  யாரும்  கேள்வி  கேட்டுடக்  கூடாதே?

———————————

6. தலைவர்  எப்பவும்  மேடைல  டபுள்  மீனிங்லதான்  பேசுவாராம்.

அதுக்காக  டபுள்  டிஜிட்ல  சீட்  வேணும்னு  கூட்டணி  கட்சி  கிட்டே  நிர்ப்பந்தம்  விதிச்சா  எப்படி?

————————————

7. நாட்டில்  இருக்கிற  எல்லா  கள்ளர்  இன  மக்களையும்  தலைவர்  தொகுதிக்கு  கூட்டிட்டு  வந்து  இறக்கிட்டாரே! ஏன்?

கள்ள  ஓட்டுக்கள்  போடனும்னா  கள்ளர்கள்  போடற  ஓட்டு-னு  நினச்சுட்டார்.

————————————

8. தலைவருக்கு  ரெண்டே  ரெண்டு  சின்ன  வீடுதான்  இருக்காம்.  அதுலயும்  ஒரு  சின்ன  வீட்டுக்கு  மட்டும்தான் போய்ட்டு  இருக்காராம்.

ஓஹோ…  ஒன்றுக்கு  மேல்  இப்போது  வேண்டாம்…  இரண்டுக்கும்  மேல்  எப்போதும்  வேண்டாம்-னு  சொல்றாங்களே… அதை  ஃபாலோ  பண்றார்  போல…

———————————

9. தலைவரோட  தேர்தல்  அறிக்கை  நம்பற  மாதிரி  இல்லையாமே?  ஏன்?

வீட்டுக்கு  வீடு  ஜிப்சி  ஜீப்  இலவசம்ங்கறாரே?

——————————-

10.  தலைவருக்கு  சினிமா  நாலெட்ஜ்  கம்மின்னு  எப்படி  சொல்றே?பவர்  ஸ்டாரின்  லத்திகா  படம்  லத்திகா  சரணின்  சுயசரிதையா?  அப்டினு  கேட்கறார்.ரசித்த இடம்: சட்னி-சாம்பார் 

அண்ணே

என்னடா தம்பி எங்கேடா செல்ல போயிருந்தே..

நான் ஆட்சியைப் பிடிச்சுட்டேன் அதான் பிசி

டேய் கோணமண்டையா என்னடா சொல்றே நீ ஆட்சியைப் பிடிச்சியா
நெசமாத்தான் சொல்றேண்ணே நான்.ஆட்சியைப் பிடிச்சுட்டேன்…
எந்த கட்சியிலே நின்னு பிடிச்சேடா .முள்ளம்பண்ணித் தலயா
அண்ணே! மரியாதை மரியாதை…
ரெண்டுதரம் சொன்னா உனக்கு மரியாதை கொடுத்துடுவேனா …சொல்லுடா எப்படா பிடிச்சே

நேத்துதாண்ணே

யார்டா உனக்கு ஓட்டு போட்டது,எந்த கட்சியிலே நின்னே..

ஆட்சியைப் பிடிக்க எதுக்குண்ணே கட்சி கொடி எல்லாம்…  ஓட்டு. ஹி ஹி சரியான தேங்கா மடையனா இருக்கீங்களே  ஐயோ ஐயோ நினைச்சாலே சிரிப்பாணி சிரிப்பாணியா  வருது

மரமண்டையா சிரிக்காதேடா…ஓட்டு இல்லாம எப்படிடா ஆட்சியை பிடிக்க முடியும்
அதெல்லாம் வேண்டாண்ணே..

எப்டிடா..
அதெல்லாம் வேஸ்ட்ண்ணே..

சரி யார்டா உனக்கு பீரங்கி பிரச்சாரம் பண்ணினது,என்ன சின்னம்டா உன்னுது ஐய்யோ மண்டையப் பிச்சுக்கலாம்னு இருக்குடா…

எதுக்குண்ணே இப்படி தேவையில்லாத டென்சன்லே குதிச்சுட்டு வாரீங்க… சின்னம் ஓட்டு பிரச்சாரம் ..அதெல்லாம் ஆட்சியை பிடிக்க, திறமை இல்லாதவங்களுக்குத்தாண்ணே வேணும் எனக்கு இதெல்லாம் பஞ்சுமிட்டாய் .ஜுஜூபி…ரெண்டாவது லட்டுண்ணே..ஒண்ணும்தெரியாத அப்ராணியா இருக்கீங்களே…உங்ககிட்டே போய் அடியும் உதையும் வாங்கினதை நினைச்சா ஷேம் ஷேம் வெக்கம் வெக்கம்

டேய் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறே….

நான் சொல்ல்றேன் ஆனா இந்த ஐடியாவை வச்சு நீங்களும் ஆட்சியைப் பிடிக்கக்கூடாது ஆமா சொல்லிட்டேன்.

இல்லடா செல்லம்  பிடிக்க மாட்டேன் ஆட்சியை நீயே வச்சுக்க..சொல்லுடா சொல்லுடா

அண்ணே நேத்து நான் வீட்டுக்குப் போனேனா

அங்கே வச்சுதான் ஆட்சியை பிடிச்சேன்…
என்னடா சொல்றே வீட்ல வச்சு ஆட்சியைப் பிடிச்சியா…
ஆமாண்ணே எங்க ஆட்சி ஊர்லேருந்து வந்திருந்தாங்ஹ…அவங்யளைப் பார்த்ததும் நாம வெளையாடுவோமே டிங்கிலோனா அதுமாதிரி ,நானும் ஆட்சியும்  ஓடிப்பிடிச்சு விளையாடுறது ஞாபகத்துக்கு வந்துச்சு, ஒரே ஃப்ளாஷ் பேக்கா வந்துச்சா ஒரே ஓட்டமா ஓடிப்போய் ஒரே ’லபக் ’ஆட்சியை பிடிச்சுட்டேன்..
டேய் நீ இவ்வளவு நேரமா ஆட்சி ஆட்சின்னு சொன்னது உன்னோட ஆட்சியா…டேய் அது ஆட்சி இல்லடா அது ஆ.+..ச்..+.சி =ஆச்சி…
ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் பாக்கப்ப்டாதுண்னே….ஆட்சின்னும் எழுதலாம் ஆச்சின்னும் எழுதலாம் ரெண்டு ஒண்ணுதாண்ணே…
டேய் அரை வேக்காடு உனக்கு ஆச்சியும் ஆட்சியும் ஒண்னாடா…
ஐயோ யாராவது துணைக்கு வாஙகளேன் …ஒண்டியா இந்த மாங்கா மடையனைச் சாத்தமுடியாது…ஐயா !தாய்மார்களே அம்மா !தகப்பன்மார்களே…வாங்க வாங்க…

ரசித்த இடம்: ஹா ஹா ஹாஸ்யம்

 

தருமி: பிரிக்க முடியாதது என்னவோ?
ராசா: ஊழலும், காங்சிரசும்

தருமி: பிரிய கூடாதது?
ராசா: அன்னையும், தாத்தாவும்

தருமி: சேரக்கூடாதது?
ராசா: அன்னையும், அம்மாவும்

தருமி: சேர்ந்தே இருப்பது
ராசா: பணமும், அரசியல்வாதியும்


தருமி: சேராமல் இருப்பது
ராசா: காங்கிரசும், காந்தியமும்

தருமி: பார்க்கக்கூடாதது?
ராசா: தணிக்கைகுழு முடிவு

தருமி: பார்த்து ரசிப்பது
ராசா : மக்களின் வயிற்றெரிச்சல்

தருமி: சொல்லக்கூடாதது
ராசா : பத்திரிக்கையிடம் ரகசியம் 

தருமி: சொல்லக்கூடியது

ராசா : மக்களிடம் பொய்

தருமி: பதவியில் சிறந்தது
ராசா : மத்திய அமைச்சர்

தருமி: அமைச்சருக்கு அழகு
ராசா:  ஊழல் செய்வது

 தருமி: ஊழல் என்பது
ராசா:  அரசியலுக்கு மறுபெயர்
 
தருமி: அரசியலென்பது

ராசா : ஏமாற்றுவது

தருமி: ஏமாற்றுவதற்கு
ராசா: நான்

தருமி: ஏமாறுவதற்கு
ராசா: நீ

============================
ரசித்த இடம்: நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

எந்திரன் பாகம்-3 ல் மீண்டும் இணைகிறது சூப்பர் ஸ்டார், ஷங்கர் கூட்டணி.கதாநாயகி யார்? நடிகை மீனாவின் மகளா ? ஐஸ்வர்யா ராயின் மகளா??அதிருகிறது… கோடம்பாக்கம்…

“எனது உயிர் இத்தாலியில் தான் போக வேண்டும்- மனம் திறக்கிறார் சோனியா காந்தி- மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றார் டி.ஆர்.பாலு” தமிழகத்தில் பரபரப்பு.

“அந்த அம்மாவுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை, மக்கள் பாடம் புகட்டுவார்கள்…”திமுக பொதுக்கூட்டத்தில் குமுறும் வைகோ…

“நடிகர் விஜய கட்சிடன் கூட்டணி அமைக்க மாட்டேன், சாகும் வரை தனியாகவே நிற்பேன்…” மனம் திறக்கிறார் கேப்டன்.

“யாரும் நடுவராக கூப்பிடுவதில்லை…பேரக்குழந்தைகளுக்கு வீட்டில் “கெமிஸ்ட்ரி” கற்றுக்கொடுக்கிறேன்” கலா மாஸ்டர் குமுறல்…

“வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும்…??!!”- மனம் திறக்கிறார் நயன்தாரா

“சமீபத்தில் நல்ல தெலுங்கு படங்கள் எதுவும் வெளியாகவில்லை” தனது மார்க்கெட் டவுன் பற்றி மனம் திறக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

“மு.க.அழகிரி அ.தி.மு.க(அழகிரி திராவிட முன்னேற்ற கழகம்) பெயரில் கட்சி ஆரம்பிக்ககூடாது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வேன்” ஜெயலலிதா ஆவேசம்…

“எங்கள் கட்சி தனித்து அமைக்கும் ஆட்சி…பார்க்கத்தான் போறிங்க அந்த காட்சி… இதுக்கு ஆண்டவனே சாட்சி” மிரட்டுகிறார் விஜய டி.ராஜேந்தர்.

“முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து திமுக இளைஞரணி தலைவராக தொடர்வார்…வேறு யாருக்கும் தகுதி இல்லை” ஆற்காடு வீராசாமி பரபபரப்பு பேட்டி….

“பொள்ளாச்சி பேரன்- நான் போட்ட ரீமிக்ஸ் ஆட்டம்” – தனது புதிய படம் பற்றி கூறுகிறார் நடிகர் சத்யராஜ்.

 

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்ட பதிவு. இப்பவும் சரியாய் இருக்கு.

நம்ம மங்குனிக்கு ஒரு போஸ்ட் (அட லெட்டர்தாங்க) வந்துச்சு,

போஸ்ட்மேன்: சார் உங்க ஒருத்தருக்காக அஞ்சு கிலொமீட்டர் வரேன்

மங்குனி: யோவ் ஏன்யா இப்படி வேஸ்ட்டா அலையறே? பேசாம போஸ்ட் பண்ணிட வேண்டியதுதானே?

*****

சிரிப்பு போலீஸ்: என்னடா டெர்ரர் பாண்டி, ஜெராக்ஸ் எடுக்க போயிட்டு இவ்வளவு நேரம் கழிச்சி வர்ரே? ஜெராக்ஸ் எடுக்க கொடுத்த காச முறுக்கு வாங்கி தின்னுபுட்டியா?

டெர்ரர் பாண்டியன்: பின்ன, நீ பாட்டுக்கு 10 பக்கத்த கொடுத்துட்டே, ஜெராக்ஸ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் வந்திருக்கான்னு எல்லாத்தையும் படிச்சி  செக் பண்ணி பார்க்க வேணாமா?

*****

நம்ம இம்சை பாபு இல்ல, அவரு ஒரு பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணாரு,

அதுக்கு அந்த பொண்ணு, எனக்கு உங்களவிட ஒரு வயசு ஜாஸ்திங்க…

இம்சை அரசன் பாபு: சரி, அப்போ அடுத்த வருசம் வர்ரேன்….!

*****

சிரிப்பு போலீஸ்: ஏன்டா நரி.. ஏன் கண்ணாடிக்கு முன்னாடி இப்படி கண்ண மூடிக்கிட்டு ரொம்ப நேரமா நிக்கிறே? ஏதாவது புதுசா யோகா பண்ணி திருந்தி வாழ முயற்சி பண்றியா?

நரி: அட போ மச்சி… அதுலாம் ஒண்ணுமில்ல…. நான் தூங்கும் போது எப்படி இருப்பேன்னு பாக்க ட்ரை பண்றேன் மச்சி, நீயும் வேணா ட்ரை பண்ணி பாரேன்…..!

*****

டெர்ரர் பாண்டியன்: ஏன் எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்காங்க…?

மங்குனி: இது ஓட்டப்பந்தயம், ஜெயிக்கிறவருக்கு கப்பு கொடுப்பாங்க…!

டெர்ரர்: அப்போ ஏன் மத்தவங்க ஓடுறாங்க…?

மங்குனி: ??????!!!!!!! %&^%^%$%

*****
மங்குனி : ஏண்டா டெரரை போட்டு இந்த அடி அடிக்கிற?
சிரிப்பு போலீஸ்: நம்ம புரோக்கர் கூடஅக்ரிமென்ட் போடுறதுக்கு பத்திர பேப்பர் வாங்கிட்டு வாடான்னா வெறுங்கைய வீசிட்டு வந்து நிக்கிறான். ஏன்னு கேட்டா பத்திர பேப்பர் பத்திரமா இருக்கட்டும்னு பேங்க் லாக்கர்ல வச்சிட்டேன்னு சொல்றான்.
டெரர் : நான் சரியாதான செஞ்சேன். எதுக்கு என்னை அடிக்கிறான். !#@@@@

*****

நம்ம நரி ஒரு இண்டர்வியூவுக்கு போயிருந்தான் (வேறெதுக்கு… வேலைக்குத்தான்…!). அங்க துரதிர்ஷ்டவசமா சிரிப்பு போலீசுதான் டேமேஜரு…!

சிரிப்பு போலீசு: இப்போ ஒரு கேள்வி கேப்பேன், கரெக்டா பதில் சொல்லனும்!

நரி: கேளுங்க சார், அதுக்குத்தானே வந்திருக்கேன்!

சிரிப்பு போலீசு: நான் உங்களுக்கு மொதல்ல ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி, அப்புறம் ரெண்டு பெருச்சாளி தந்தா, இப்போ உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்…!

நரி: ம்ம்ம்…. ஏழு சார்…!

சிரிப்பு போலீசு: தம்பி அவசரப்படாம யோசிச்சு பதில் சொல்லனும், நான் உங்களுக்கு மொதல்ல….. ரெண்டு பெருச்சாளி…….., அப்புறம் ரெண்டு பெருச்சாளி……….., அப்புறம் ரெண்டு பெருச்சாளி….. தந்தா, இப்போ……….. உங்ககிட்ட எத்தன பெருச்சாளி இருக்கும்…!

நரி: இப்பவும் ஏழு தான் சார்…..!

சிரிப்பு போலீசு: (என்ன எழவுடா இது…. ஒண்ணு ரெண்டு கூட எண்ணத்தெரியாம காலங்காத்தால வந்து நம்ம உயிரெடுக்கிறானுக…!), அது எப்படி தம்பி ஏழு வரும்….?

நரி: ஏன்னா என்கிட்ட ஏற்கனவே ஒரு பெருச்சாளி இருக்கே…!

சிரிப்பு போலீசு: %^#&& ^&^%%^$%

*****
கேப்டன்… வேணாம்…. விட்ருங்க…. !
ரசித்த இடம்: http://shilppakumar.blogspot.com/

 

நம்ம போலிசுக்கு எப்பவுமே தான் ஒரு டேமேஜர் அப்படீங்கிற கர்வம் அதிகம்..  இவருக்கு மட்டும் இல்ல! அடுத்தவன் உழைப்பில் குளிர்காயும் இவரைப்போல பலபேரு இப்பிடித்தான்! என்னதான் வேலை செய்யுறவன் முன்னாடி கெத்தா திரிஞ்சாலும் அவரும் இங்க்ரிமென்டுக்கும் பிரமோசனுக்கும் அவரு முதலாளி கால்ல விழுகிறது பல பேருக்கு தெரியாமலே போயிருது! அவரின் இந்த முகமூடிய கிழிக்கும் பொருட்டு சமீபத்தில் நம்ம போலிஸ் அவரின் முதலாளி கால்ல விழுந்து சம்பள உயர்வுக்கு கெஞ்சியதையும் அவரின் முதலாளி அவரு மூஞ்சில காறி துப்பி விரட்டி அடிச்ச உரையாடலை நமது கும்மியின் உளவுப்பிரிவு பதிவு செய்தது! உலக பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக அந்த உரையாடலின் தொகுப்பு உங்களுக்காக தரப்படுகிறது! படித்துவிட்டு நீங்களும் காறி துப்பிரவேண்டாம்.. பிளீஸ் சொன்னா கேளுங்க.. காறி துப்பிராதிங்க!

சிரிப்பு போலிஸ்       : பாஸ் எனக்கு நீங்க கூட்டித்தரனும்…..அதாவது சம்பளத்த……(எதா இருந்தாலும் ஓக்கேதான்.. ஹி..ஹி)

அவரின் முதலாளி   : நீ இங்க ஒரு நாள் கூட வேலையே செய்யல நான் எப்படி உனக்கு சம்பளம் தர முடியும்

சிரிப்பு  போலிஸ்       : என்னது… நான் ஒரு நாள் கூட வேலையே செய்யலையா…? (உண்மை தெரிஞ்சிருச்சா?)

அவரின் முதலாளி  : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள்…?

சிரிப்பு  போலிஸ்       : ஏன் உங்களுக்கு தெரியாதா? 365 நாளு…. நாலு வருஷத்துக்கு ஒரு வாட்டி 366 நாளு…

அவரின் முதலாளி  : இதெல்லாம் வக்கனையா சொல்லு….ஒரு நாளுக்கு எத்தன மணி நேரம் ?

சிரிப்பு  போலிஸ்       : 24 மணி நேரம் ( சரிதானே?)

அவரின் முதலாளி  : ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்வே….

சிரிப்பு  போலிஸ்       : (நான் ஏன் செய்யணும்?) காலையில 10 மணியில இருந்து சாய்ந்திரம் 6 மணி வரைக்கும்… அதாவது 8 மணி நேரம் வேலை செய்றேன்….

அவரின் முதலாளி  : அதாவது ஒரு நாளைக்கு மூனுல ஒரு பங்கு ( 8/24=1/3) வேலை செய்யுற…

சிரிப்பு  போலிஸ்       : ஆமா… (நம்பிட்டானோ?)

அவரின் முதலாளி  : சரி…. அப்போ ஒரு வருஷத்துக்கு 366 நாளுல மூனுல ஒரு பங்கு எவ்வளவு …?

சிரிப்பு  போலிஸ்       : (கணக்கு கேட்டே கொல்றானே?) 122 நாளு… ( 1/3 * 366 =122)

அவரின் முதலாளி  : சனி, ஞாயிறுக்கிழமை வேலைக்கு வரியா…?

சிரிப்பு  போலிஸ்       : இல்ல… (எனக்கு என்ன கெரகமா? அதான் தொழிலாளி பசங்க இருக்காங்களே?)

அவரின் முதலாளி   : ஒரு வருஷத்துக்கு எத்தனை  சனி, ஞாயிறு வருது…?

சிரிப்பு  போலிஸ்        : 52 சனி கிழம, 52 ஞாயிறு கிழம… மோத்தம் 104 நாள் வருது.. (அவ்வவ்.. சம்பளம் கேட்டது தப்பா?)

அவரின் முதலாளி   : அப்போ 122 நாளுல…. 104 நாள் கழிச்சிடு…

சிரிப்பு  போலிஸ்       : 18 நாள் வருது…. (சரியாத்தானே சொல்றேன்?)

அவரின் முதலாளி  : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள் லீவ் தராங்க…

சிரிப்பு  போலிஸ்       : ரெண்டு வாரம்…. 14 நாள் (பாவம் அவரே கொன்புயீஸ் ஆயிட்டாரு போல?)

அவரின் முதலாளி  : சரி… 18 நாளுல…. 14 நாள் கழிச்சிக்கோ… எவ்வளவு வருது…?

சிரிப்பு  போலிஸ்       : 4 நாள்…. (முடியல…ஸ்..ஸ்..)

அவரின் முதலாளி   : சுதந்திர தினம், குடியரசு தினம் வேலை செய்யுரியா….

சிரிப்பு  போலிஸ்       : இல்ல… (வேலை நாள்லே செய்யுறதில்ல.. இதுல லீவு நாள்ல..?)

அவரின் முதலாளி  : 4 நாள… 2 நாள் கழிச்சிக்கோ

சிரிப்பு  போலிஸ்       : 2 நாள் வருது… ( நல்லா சொல்றாருயா டீட்டைலு)

அவரின் முதலாளி  : தீபாவளி, பொங்கல் அன்னைக்கு வேலை செய்யுரியா….

சிரிப்பு  போலிஸ்       : இல்ல…. ( அன்னிக்குதான்யா பல ஓசி சாப்பாடு கெடைக்கும் என் வென்று!)

அவரின் முதலாளி  : இப்போ… அந்த 2 நாளையும் கழிச்சிக்கோ

சிரிப்பு  போலிஸ்       : கழிச்சாச்சு.. கழிச்சாச்சு….. (எத்தன?)
அவரின் முதலாளி   : இப்போ… எத்தன நாளு இருக்கு…

சிரிப்பு  போலிஸ்        : எல்லா நாளும் கழிஞ்சிடுச்சு…
அவரின் முதலாளி    : இப்போ சொல்லு நான் எதுக்கு உனக்கு சம்பளம் தரனும்…

சிரிப்பு  போலிஸ்       : ஆ…..ஆ….

அவரின் முதலாளி   : இதுக்கே ஆன்னா.. எப்பிடி இன்னும் இருக்கு….

சிரிப்பு  போலிஸ்        : இன்னுமா?

அவரின் முதலாளி    : ஆமா… இதுல பாதிநாளு அவன் வர்றான் இவன் வர்றான்னு பல இடத்துக்கு ஓசி சாப்பாட்டுக்கு போயிற.அந்த கணக்குல பார்த்தா கூட ரெண்டுநாள் வேலை பார்க்கணும்! உனக்கு எப்பிடி வசதி? சம்பளம் கூட வேணுமா?

சிரிப்பு  போலிஸ்       : என்னைய மன்னிச்சிருங்க பாஸ்.. இனிமே எப்பிடி வேலை பார்க்கனும்னு வைகை.. டெரர் மாதிரி உள்ள தொழிலாளி பசங்கள்ட்ட இருந்து அவங்க கால்ல விழுந்தாவது கத்துக்கிறேன்! என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிராதிங்கோகோகோ!!!

என்ன மக்களே.. இது ஒரு கதையல்ல.. போலிஸ் மாதிரி உள்ள டேமேஜர்களுக்கு ஒரு எச்சரிக்கை……!

ரசித்த இடம்: http://terrorkummi.blogspot.com/

 

( புதிதாக பள்ளியில் 6 -ஆம் வகுப்பில் சேர வரும் மாணவியிடம், தனியார் பள்ளி நடத்தும் இண்டர்வியூ)
ஆசிரியை(கணக்கு):உன் அம்மா ஐந்து சாக்லெட்  வாங்கி   
                                            வருகிறார்.அதில்  ஒன்றை தம்பிக்கு கொடுத்தால்   
                                            உனக்கு என்ன வரும்?
மாணவி: கோபம் வரும்

ஆசிரியை: அட…இரண்டு மாங்காய் இருக்கு.ஒரு மாங்காய் சாப்பிட்ட      
                         பின்னால் மீதி என்ன் இருக்கும்
மாணவி: ஒரு கொட்டை, ஒரு மாங்காய்


ஆசிரியை(ஆங்கிலம்):இப்படியெல்லாம், பதில் சொல்லக்கூடாது…சரி எ,பி,சி,டி எத்தனை எழுத்து?

மாணவி:நாலு…

ஆசிரியை: சனியனே… மொத்தம் எவ்வளவு?

மாணவி: “மொத்தம்” நாலு தான்…

ஆசிரியை:முட்டாள்…

மாணவி:அதுவும் நாலு எழுத்து தான்.
ஆசிரியை(அறிவியல்):ஊர்வனவுக்கு ஒரு உதாரணம் கொடு

மாணவி:பல்லி

ஆசிரியை:இன்னொரு உதாரணம் கொடு

மாணவி இன்னொரு பல்லி
ஆசிரியை:(தமிழ்):நான் அழகா இருக்கேன்.. எந்த காலம்?

மாணவி: இறந்தகாலம்
ஆசிரியை:(வர்லாறு):நமக்கு கிழக்கே கடல்,தெற்கே கடல்,வடக்கு என்ன இருக்கு?

மாணவி:(திரும்பி பார்த்து) பள்ளிக்கூடத்து கதவு டீச்சர்…

(அனைத்து ஆசிரியர்களும் வடக்கு நோக்கி ஓடுகிறார்கள்…)

எல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா?  பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே !? இவைகள் ஒன்றும் ” பீலா ” இல்லை. 

மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே. பீர் அருந்துவது உடலுக்கு நல்லது. கவனிக்கவும்- அருந்துவது. வயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை  மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.


1 . பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மை 
பொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்.
2 .  பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.
1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர்அருந்தும்
பழக்கமுள்ளவர்களுக்கு 20 – 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.
3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.
பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L – High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)
4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber) 

இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார்60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.
5 . பீர் வைட்டமின் செறிந்தது. ( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) 
பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,பொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின்,
போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.
6 . பீர் மாரடைப்பை தடுகிறது.
2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள்அதிகரிக்கிறது.
 7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது. 
2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு – Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40%குறைவாக உள்ளது .
 8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது. 
மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் “வளர் சிதை மாற்றம் ” காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன  This is from Beer Net Publication, April 2001 Biological Institute.
 9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia) 
லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில்இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.
10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. 
நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைதடுக்கிறதாம்.
****************************************
என்ன, ரொம்ப குஷியா ?? 
சரி சரி அளவோட இருந்தா தான் இதெல்லாம்.
இல்லன்னா ஆசுபத்திரி கேசுதான்.
ரசித்த இடம்: சட்னி-சாம்பார்

’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக்  குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.

ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!

ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும்  கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.

‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!

’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?

இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!

*************************

பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?

ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.

சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:

”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”

ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.

”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. ‘ஆறு’ என்றால் வழி; ‘ஆற்றுப்படுத்துதல்’ என்றால் ‘வழிகாட்டுதல்’. ‘ஆற்றுவடை’ என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, “அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்” என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.

’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட ‘ஆறுபடை வீடு’ அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், ‘ஆறு திருப்பதி’ ‘அறுபத நிலை’ ‘ஆறு நிலை’ போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. ‘ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே’ என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்… ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”

இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.

இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.

சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.

’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’

ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.

திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:

”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.

’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.

இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.

சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”

சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”

வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.

**********************

”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”

”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்‌ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”

இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?

”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”

இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.

“இந்த மசால் வடை – செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.

இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.

செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?

இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.

ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.

நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”

எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.

இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!

ரசித்த இடம்: லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்


காலைல அவசரம் அவசரமாக  என் மகளை பள்ளிக்கு கூட்டி  செல்லும் அவசரத்தில் பைக்ல அவளை ஏற்றினேன் .முன்னாடி இருந்து கொண்டு

என் மகள் :அப்பா இந்த பாலம் ரொம்ப பெருசு இல்லையாப்பா என்றாள்
நான் :ஆமாம் கோவில்பட்டில   ரெண்டு பாலம் இருக்குன்னு சொன்னேன்
என் மகள் :ஆமாம் ரெண்டு பெரிய பாலம் நிறைய குட்டி பாலம் இருக்கு என்றாள்
நான் :இல்லையே குட்டி பாலமே இங்கே கிடையாது என்று சொன்னேன் …..
என் மனைவி :வண்டில இருந்துகிட்டு பேசாம அப்பாவும் ,மகளும் வாங்க என்று சத்தம் போட்டாள்(எலேய் உன் மண்டைல கொட்டினார்கள்ன்னு சொல்லு ன்னு கமெண்ட்ஸ் போடா கூடாது)
நானும் அமைதியா வண்டிய ஓட்டி  என்னோட ஆபீஸ் வந்துட்டோம் .
என் மகள் :அப்பா பாலம்ன  என்ன……….?(தொடர்ந்து விடாம கேள்வி கணைகள் என் மகள் ஆயிற்றே )
நான் :கீழ ட்ரைன்,ஆறு இப்படி போகும் நாம மேல போவோம் அப்படின்னு சொன்னேன்
என் மகள் :ரோடுல மேலே  ஏறி கீழ இறங்கனும் அப்படி தானே என்றாள் .(என்னை மாதிரி என் புள்ள ரொம்ப அறிவாளி டக்குன்னு பாயிண்டுக்கு  வந்துட்டாள் )
நான் :ஆமாம் என்றேன் …….
என் மகள் :நாம ஸ்கூல்க்கு  போகும் போது  மூணு குட்டி  பாலம் வரும் நான் கான்பிக்குறேன் பாருங்க என்றாள் ….
நான் :இல்லை மக்கா குட்டி பாலம் கிடையாது .என்றேன்
என் மனைவி :அவள் வேற எதையோ சொல்லுறா உங்களுக்கு தான் விளங்க மாட்டுது ன்னு சொன்னால்
நான் அதை பற்றி மறந்துவிட்டேன் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றேன் …அவள் போகும் வழியில்
என் மகள் :அப்பா இந்த இருக்கு பாரு மூணு பாலம் என்றாள் .
நான் :அவள் கண்பித்ததை பார்த்து தலை சுற்றியது எனக்கு  இது பாலம் இல்லை மக்கான்னு சொன்னேன்

என் மகள் :பைக் ஏறி தானே இறங்குது ….அது பெரிய பாலம் …..இது குட்டி பாலம் …நான் சொல்வது தான் சரி என்கிறாள்(என் தலைல லாரி யே ஏறி இறங்கினது மாதிரி ஒரு பீலிங் )

அப்படி அவள் என்னதாண்ட காண்பித்தாள்  என்று எல்லோரும் கேக்குறீங்களா ………?
SPEED BREAKER  மக்கா ….காலைலேயே ………ஆரம்பிச்சுட்டா இனி ஸ்கூல் விட்டு வந்து கேப்பா கரெக்ட் விடை சொல்லணும்
ரசித்த இடம்: இம்சை அரசன் பாபு

2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்…

தமிழ்

முதலில் “கடவுள் வாழ்த்து”
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றிஅடுத்து மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன.  2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.
21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.
 கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக   பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.
1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது.  2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர்.  முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

 வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது.  முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார்.  அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.
கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது.  உதயகுமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.
கருணாநிதிக்கு மூன்று மகன்கள்.  ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன்.  அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார்.  21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்….

ரசித்த இடம்: சாம்பார் சட்னி

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி ” டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. ” அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி ” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே…!!

******************************

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில்
விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து
[த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி…

ஜிம்மி ; லொள்.. லொள்..

த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]

த.க.நி. ; ஜாக்கி….

ஜாக்கி ; லொள்..லொள்..

த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியே
செய்கிறது ]

த.க.நி. ; மாதவ்..

மாதவ் சிங் ; லொள்..லொள்..

த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற
எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்
புரியாது..!

*****************************************

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது
அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

************************************

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?

*********************************

நம்ம சர்தார் ஆபீஸில் இருந்து வரும்போது ஒரு சிறுவன் தன் தொப்பியை ஸ்டைலாக
திருப்பிப் போட்டிருப்பதைப் பார்த்தார். இவருக்குதான் எல்லாவற்றையும் தானும்
செய்யவேண்டும் என்ற ஆவல் ஆயிற்றே.. தன்னுடைய தலைப்பாகையையும் திருப்பி வைத்துக்
கொண்டார். வீட்டு அருகில் வரும்போது பக்கத்து வீட்டு சர்தார் கேட்டார்..

ஓயே.. ஆபீஸுக்கு போய்க்கிட்டு இருக்கியா? வந்துக்கிட்டு இருக்கியா..?

********************************

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக்
கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர்
சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு.
அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து
கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே
திரும்பினார்..

நண்பர் கேட்டார்..” எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?’

சர்தார் சொன்னார்.. ” எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான்
என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு…!

***************************************

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. ” மாமியாரின் அன்புப்
பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார்
வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே
இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்.. “போய்த் தொலை..
எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து
வச்சிருக்க..?” மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..”
மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!

***********************************

ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை
கொடுத்து ‘காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி
பேரை**சொல்லிட்டு போவோம்…!

ரசித்த இடம் : வால்பையன் 

* 16 வயதினிலே படத்துல இருந்தே வெளியூர்க்காரனோ, வெளிநாட்டுக்காரனோ நமக்கு எப்பவுமே இளப்பம்தான். வெளிநாட்டுல இருந்து வர்ற மாப்பிள்ளைன்னாவே சாம்பார்தான். ரெண்டு சீன்ல மட்டுதான் வருவானுங்க, அப்புறமா கண்டிப்பா அல்வா பொட்டலம் கட்டி குடுத்தனுப்பிருவாங்க.

* வெளிநாட்டுல இருந்து ஊருக்குப் போறேன்னு போன் பண்ணி சொன்னாவே போதும், “மாப்ளே சரக்கோட வந்திருடா”ன்னு கண்டிப்பா சொல்லுவானுங்க. நாமளும் நல்லதா சரக்கு வாங்கிட்டு போய் குடுத்தா “மாப்ள, இது டாஸ்மாக்ல இருக்கிற சரக்க விட மட்டமா இருக்கேடா. இதைப் போய் எப்பிடிறா சப்பி சப்பி குடிக்கிறீங்க”ன்னு கடுப்பாக்குவானுங்க. சரி, வாங்கிட்டு போவலைன்னா “வெளிநாடு போயிட்டாவே எங்களை மதிக்க மாட்டீங்களேடா”ம்பாங்க.

டேய், நாதாரிங்களா நாம எல்லாம் வேலி ஓரத்துல திருட்டுத் தெளுவு குடிச்ச குரூப்டா.

* ”மாப்ள. அங்கதான் லட்சமா லட்சமா சம்பாரிக்கிறியே. ஒரு 10 இருந்தா குடுத்துட்டு போடா அப்புறமா தர்றேன்”ம்பாங்க. நாமளும் சரி பத்தாயிரம்தான்னு நினைச்சு குடுத்தா, “டேய், பத்தாயிரத்துக்கா நான் சிங்கி அடிக்கிறேன்? என்னடா நெனச்சுகிட்ட என்னை? பத்து லட்சம்டா நான் கேட்டது”ம்பாங்க.

டேய், பத்துலட்சத்துக்கு நான் சிங்கி அடிக்கனும்டா.

* வெயில் பட்டைய கிளப்பும், கால தரையில வெக்க முடியாது. ஊர்ல எவனும் மத்தியானத்துல வரமாட்டானுங்க. ஆனா நம்மளால ஒன்னுஞ் சொல்ல முடியாது. . வீட்ல மின்சாரம் கட் ஆவும், வேத்து புளுங்கும், அப்பக்கூட நாம சிரிச்சாப்ல இருக்கனும். மகா மட்டமான சாப்பாடு இருந்தாலும் சிரிச்சிகிட்டே சாப்பிட்டாகனும். இதுல ஒன்னுல நாம கொஞ்சம் முகஞ்சுளிச்சாலும் “வெளிநாட்டுல வேலை பார்க்கிற திமிரு”ம்பாங்க. இல்லைன்னா ரொம்ப மாறிப் போயிட்டடா’ம்பானுங்க

டேய், பீத்த ரப்பர் செருப்புக்கே சிங்கி அடிச்ச கோஷ்டிடா நாம.

* நாம் எதை வேணுமின்னாலும் இங்கே போட்டுகிட்டு திரியலாம். ஆனா நண்பர்களுக்கு துணி வாங்கிட்டு போவும்போது பார்த்து வாங்கிட்டு போவனும். Made in Indiaவோ, பங்களாதேசோ, பாகிஸ்தானோ இருந்திடக் கூடாது. மானம் போயிரும். “ஏண்டா, இதை ஏன் அங்க இருந்து வாங்கிட்டு வர்ற. நம்ம சந்தைக்குப் போனா இதை விட நல்லதாவே கிடைக்குமே. அட நம்ம திருப்பூர் மூர்த்தி கடைக்கு போனா சும்மா குடுப்பான்டா. வாங்கிட்டு வரானாம் அங்கேயிருந்து” அப்படிம்பாங்க தேவையா?

டேய், ஒத்த டீ சர்ட்டுக்காக PD சார்கிட்ட கெஞ்சி கூத்தாடி 16 மைல் மாரத்தான் ஓடினவங்கடா நாம.

* சோமாலியாவுல பிச்சையெடுத்தாலும் அவன் NRIதான்,. ஆட்டோக்காரங்க, ரியல் எஸ்டேட்காரங்கலிருந்து பார்பர் வரைக்கும் டபுள் ரேட் போடுவாங்க.

* வெளிநாட்டுல கஞ்சிக்கே சிங்கியடிச்சாலும் இவுங்கள மட்டும் நடுத்தர ஓட்டலுக்கு கூட கூட்டிட்டு போவ கூடாது. ஸ்டார் லெவல் ஓட்டலுக்குத்தான் சாப்புட கூட்டிட்டு போயாவனும். நறுக்குன்னு சாப்பிட்டு பில்லை நம்ம தலையில கட்டுவானுங்க. அதுவும் பில் வந்தா கண்டுக்காம நம்ம பக்கம் தள்ளிவிட்டுருவானுங்க.

டேய் நாமெல்லாம் இதே ஸ்டார் ஓட்டலுக்கு முன்னாடி இருக்கிற கையேந்தி பவன்லதாண்டா அக்கவுண்ட் வெச்சி சாப்பிட்டோம்.

* வெளிநாட்டுல கிடைக்காத சில விசயங்களை ஊர்ல இருந்து வாங்கிப்போவோம். அப்பவும் அதுக்கு கிண்டல் வரும் “வெளிநாடு போனாலும் நீ திருந்தலையாடா? ”

டேய், பாதானிக்கா அடிக்க சைக்கிள் எடுத்துட்டு அடுத்த ஊருவரைக்கும் ட்ரிபில்ஸ் அடிச்சவங்கடா நாம.

*ஊருக்கு கிளம்பும்போது எல்லாரும் ஒரு லிஸ்ட் வேற குடுத்து அனுப்புவாங்க. எதுக்கு தெரியுங்களா? லிஸ்ட்ல இருக்கிறத எல்லாம் வாங்கி,  யாராவது வந்தா அங்கேயிருந்து இந்தியா வந்தா குடுத்து  அனுப்பனும், காசு கேட்க கூடாது. அதுக்கு நாம எத்தனைப் பேர கெஞ்ச வேண்டியிருக்கனும்னு அவுனுங்களுக்குத் தெரியாது. பொருள் போய் சேர்ந்துச்சான்னும் நாமதான் போன் போட்டு கேட்டு உறுதிப்படுத்தின்னும்.

டேய், எனக்கு குடுத்த 30 ரூபா வாங்க எத்தனை முறை வீட்டுக்கு நடையா நந்திருப்பே?
ரசித்த இடம்: விவசாயி
  • Rajinikant got 150 questions in exam paper asking – “Solve any 100 questions” He solved all 150 and wrote, ” Rascalla!, CHECK ANY 100!”
  • “Rajnikanth doesn’t breathe…air comes to hide in his lungs”
  • Once a photo of Rajnikant was givenfor Xerox. Don’t even try to guess what happened… We got two copies of the Xerox machine.
  • All scientists failed to answer this but rajnikanth did… Ques: Which liquid turns solid on heating? Ans: Dosa… mind it!!!
  • One day Rajani thought to play cricket in monsoon and rain stopped due to play….
  • Once Rajnikanth gone for a walk and after one hour police arrested him u know why He reached USA and having No Visa with him
  • One day Rajnikanth bunked school. Since then it is known as Sunday.
  • Warne to Rajini: I can spin a ball on my finger for over two hours. Can you? Rajini: Rascala, how do you think the earth spins!?
  • Roger Federer: I know everything about tennis. You can ask me anything. Rajnikanth: Ok. Tell me, how many holes are there in the NET??
நன்றி: நண்பர் குழந்தை 
ரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க வுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்வாரா என கேள்விக்கணைகள் அவரை துளைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வலைப்பதிவர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்…சென்னையில் அவரது அலுவலகத்தில் சில முக்கிய பதிவர்கள் கலந்துகொண்டனர்…நடிகர் கவுண்டமணியும் உடன் இருந்தார்..அதை பற்றிய ஒரு கவர் ஸ்டோரி;
 
விஜய்;வணக்கங்கண்ணா…தமிழர்களுக்கு ஒரு கஸ்டம்னா என்னால தாங்க முடியாது..அதனால தமிழர்களை காப்பாத்த நான் கட்சி தொடங்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…
கவுண்டமணி; ஆமா இவர் மட்டும்தான் தமிழர்களை காப்பாத்த கட்சி தொடங்குறாரு..கலைஞர் ராசாவையும்,கனிமொழியையும் காப்பாத்த கட்சி தொடங்குனாரு…சரிடா விஷயத்தை சொல்லு
விஜய்; நான் நிறைய ஓட்டு வாங்கி முண்ணனிக்கு வரணும்….
ரஹீம் கஸாலி; அது ரொம்ப ஈஸி..உங்களை நம்பித்தான் கட்சி தொடங்கியிருக்கேன்..மறக்காம வந்து ஓட்டு போடுங்கன்னு சாட் மெஸேஜ் பண்ணினா முண்ணனிக்கு வந்துடலாம்…
விஜய்;நம்ம கட்சி பலமுள்ள கட்சியா வளரணும்….மக்கள் என் பின்னால் அணி வகுத்து வரணும்…

பன்னிகுட்டி ராமசாமி;அப்ப நமீதாவை முன்னாடி நடக்க விடுங்க தலைவரே….
விஜய்; வேற ஐடியா சொல்லுங்க ராமசாமி
கவுண்டமணி;அப்போ சங்கவிய நடக்க வுடு….
பன்னிகுட்டி ராமசாமி; சபாஷ் கவுண்டரே..நான் மறந்துட்டேன் அவங்களை
கவுண்டமணி; அதெல்லாம் மறக்கலாமா தம்பி…விஜய்யை மறந்தாலும் சங்கவியை மறக்க கூடாது
சி.பி.செந்தில்குமார்;நமீதா கட்சிக்கு வர்றாங்களா..அப்போ லட்சம் ஓட்டு கன்ஃபார்ம்..சங்கவியும் வந்தா இரண்டு லட்சம் ஓட்டு கன்ஃபார்ம்
கவுண்டமணி; தம்பி …இன்னிக்கு எதுவும் புதுப்படம் ரிலீஸ் ஆகலையா…பேப்பரும் பேனாவும் எடுத்துகிட்டு கிளம்பு…ஜோதியில அருமையான பிட்டு படம் ரிலீஸ் ஆகியிருக்காம்…
பன்னிகுட்டி ராமசாமி; செந்தில்,உங்க பதிவுலக..வரலாறுல உங்களை யாரும் இந்தளவுல இறக்கலை போல….ஹஹா.
விஜய்;  சார் என் கட்சியை பத்தி பேசுங்க….
கவுண்டர்;  ஆங்..எதுல விட்டோம்…
பன்னிகுட்டி ராமசாமி;நமீதா வுல விட்டீங்க..சரியா சொன்னேனா?.
கவுண்டர்; தம்பி..நீ வந்ததுல இருந்து ராங்காவே பேசுற..வார்த்தை குளறக்கூடாது…விஜய் தம்பி நம்மை நம்பி வந்துருகாப்புல…பாவம்..
விஜய்;எப்போ கட்சி ஆரம்பிக்கலாம்…..?
தொப்பி..தொப்பி; சீக்கிரம் முடிங்க……கலைஞரை நாறடித்த நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள் னு நல்ல நேரம் சதீஷ் ஒரு பதிவு ரெடி பண்ணிட்டாராம்..அதை நக்கலடிச்சி நான் 50 கமெண்ட் போடணும்..
ரஹீம் கஸாலி;ஆமா நானும் அம்மாவை காய்ச்சி ஒரு எதிர் பதிவு போடணும்…
கவுண்டமணி;உன்னை வாழ்த்துற பதிவர் ஒருத்தனும் இல்ல போல…
பன்னிகுட்டி ராமசாமி;ஏண்ணா நான் இருக்கேனே டாக்குடர் விஜய் வாழ்க…ங்கிற என்னோட போஸ்ட் .அகில உலக பேமஸ்….

கவுண்டர்;இல்லையே அதுல தம்பியை ரொம்ப கேவலப்படுத்தி இருந்ததா பேசிகிட்டாங்களே…
விஜய்;சரி அதை விடுங்க…என்னை கோமாளி ஆக்கி பார்க்குறதே இந்த பதிவர்களுக்கு வேளையா போச்சி..கட்சியில யாருக்கு என்ன பதவி கொடுக்கலாம்..?கட்சி சின்னம் என்ன?.
கவுண்டர்;நமீதா கொள்கை பரப்பு செயலாளர்
பன்னிகுட்டி ராமசாமி;அண்ணே சங்கவியை அரசியல் அனாதை ஆக்கிடாதீங்க..?
கவுண்டர்;       விட்ருவனா…சங்கவி துணை  பொது செயலாளர்…
விஜய்;         எங்கப்பாவுக்கு..?
கவுண்டர்;    அவனுக்கு நீயே எதாவது கொடுத்துடு..நாகையில நல்லா கூட்டத்தை கட்டுபடுத்துனார்..கட்சி செக்யூரிட்டி படை தலைவராக்கிடு…
விஜய்;    அவர்கிட்டியே இதை நீங்க சொல்லிடுங்க..

கவுண்டர்;அவனை பார்த்தா எனக்கு வாமிட் வாமிடா வரும்..நீயே சொல்லிடு..
பன்னிகுட்டி ராமசாமி; எனக்கும்தான்..ஆனா நமிகிட்டியும் சங்கவிகிட்டியும் நானும் என் தலைவர் கவுண்டமணியும் தான் சொல்வோம்…
கவுண்டர்; நீதான் என் தளபதி…
விஜய்;   கட்சிக்கு எதிர்ப்பு வருமா…?

ஜாக்கிசேகர்;நாமதான் மாஸ் ஆச்சே….எவனாவது கண்டிப்பா எதிர்ப்பான்..அப்ப..ங்கோத்தா நான் லோக்கல்..எவனும் மயிரை கூட புடுங்க முடியாதுன்னு சவுண்ட் விடுங்க..அப்படியே அலறுவானுக…
விஜய்;நான் தமிழக சட்டசபையில முதல்வரா அமர்வேனா?..மோசமான அரசியலை திருத்துவனா…?
டெரர் பாண்டியன்;த்தூ..முதல்ல நீங்க திருந்துங்கடா அப்புறம் நாட்டை திருத்தலாம்
ரசித்த இடம்: நல்ல நேரம்

செல்வா ஒரு முறை தனது தொலைபேசியைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்தார். வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே தனது நண்பர்களிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தார்.

” டேய் பிரபு , என்னோட போன காணோம் , நீ பார்த்தியா ? “
” நீ உண்மைலேயே லூசா , இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா ? ” என்றார் பிரபு சற்று கோபமாக.
” ஏண்டா ? “
” என்ன நோண்டா , இனிமேல் என்கிட்டே போன காணோம் , கீன காணோம் சொல்லிப்பாரு ” என்று கோபமாக கூறினார் பிரபு.
” போடா , உன்னோட போன் தொலைஞ்சா தெரியும் “
” போன் தொலைஞ்சா எப்படி தெரியும் ? லூசு மாதிரி பேசு ! ” என்று சிரித்தார் பிரபு.
” போடா , உங்கிட்ட கேட்டேன் பாரு ” என்று கூறிவிட்டு அவரது மற்றொரு நண்பரிடம் கேட்டார்.
” மச்சி , என்னோட போன பார்த்தியா ? “
” இல்ல , ஏன் காணாம போச்சா ? எப்ப இருந்து காணோம் ? அது காணாம போகும் போது என்ன கலர் டிரஸ் போட்டிருந்தது ? “
“ங்கொய்யால , போன் எப்படிடா டிரஸ் போடும் ? “
” ஒ , சாரி , வழக்கம்போல கேட்டுட்டேன். சரி அத எப்படி கண்டுபிடிக்கிறது ? “
” அதான் எனக்கும் தெரியல ,ஆ , ஐடியா .. உன்னோட போன்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் விடேன் , அத வச்சு கண்டுபிடிச்சிடலாம்ல ” என்றார் செல்வா சற்று மகிழ்ச்சியாக.
” மிஸ்ட் கால எதுக்கு கண்டுபிடிக்கணும் ? “
” டேய் , மிஸ்ட் கால கண்டுபிடிக்கல , என்னோட போன கண்டுபிடிக்கலாம்னு சொன்னேன் ! “
” சரி , இரு விடுறேன் …. ஐயோ என்னோட போன்ல பேலன்ஸ் இல்ல மச்சி , சாரிடா ” என்றார் அவரது நண்பர்.
” ச்சே , சரி விடு , நானே தேடிப்பாக்குறேன் ” , என்று காணமல் போனதாகத் தேடிக்கொண்டிருந்த தொலைபேசியின்  இணைப்பைத் துண்டித்தார் செல்வா.
ரசித்த இடம்: செல்வா கதைகள்: http://selvakathaikal.blogspot.com

நேற்று தேர்தல் முடிவுகள் வெளிவந்ததால் வந்து விழுந்த ட்விட்டுக்கள் ஏராளம்.  அந்த சமயத்தில் பிளாக்கர் வேறு வேலை செய்யாததால் நிறைய வலையுலக பிரபலங்கள், தமிழக அரசியல் பிரபலங்களை குத்தகைக்கு எடுத்து கலாய்த்தனர், அதற்காக ஒருசிறப்பு வலைப்பாயுதே..

@bewithsureshm  திமுக – மூன்றெழுத்து, ஊழல் – மூன்றெழுத்து, ஆப்பு – மூன்றெழுத்து, ஜெயில் – மூன்றெழுத்து, பெயில் – மூன்றெழுத்து, தூக்கு – மூன்றெழுத்து.
@drraman07 சத்தியமூர்த்தி பவன் – பிச்சிக்கிச், அறிவாலயம் – நட்டுகிச், போயஸ் கார்டன் – பளிச், பளிச் #அறிவாலயத்துக்கு மேல் பாலம் கட்டும் பனியில் கேப்டன்.

@rahimgazali: தான் தோற்கும் ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு மிசினை குறை சொல்லும் ஜெயலலிதா இப்போது என்ன சொல்வார்# டவுட்டு.

@karaiyaan: டேய் ராகுலு ! நம்ம பஞ்சாயத்து (தங்கபாலு) பாலிடாயிலை குடிச்சிட்டாண்டா !

@settaikaaran கூட்டணியில் இருந்தாலும் அம்மாவுக்கு எதிர்கட்சி தலைவர் ஆகும் வாய்ப்பு நம்ம கேப்டனுக்கு கிடைத்த வெற்றி டாஸ்மாக் சங்கத்துகு கிடைத்த வெற்றி.

@imcheenu: டாய் செவல தாவுடா தாவு : எங்க தாவுரது நானே தவழ்ந்துக்கிட்டு இருக்கேன் #ராமதாஸ்.

@bharathiee: எரிகிற இரண்டு கொள்ளிகளில் சிறந்த கொள்ளியாக அதிமுகவை தேர்வு செய்துள்ளனர் # இனியாவது மக்கள் தலைதப்புமா?

@kekkepikkuni  நேற்று வரை திமுக கூட்டணி வெல்லும்னு கருத்துக் கணிப்பு சொன்ன மீடியா கம்பெனிகளின் இன்றைய விளக்கம் என்ன?
@imayabharathi பெரிய திருடர்களிடமிருந்து தப்பித்து சின்ன திருடர்களிடம் மாட்டிக்கொண்டோம் #அவ்வளவு தான் வித்தியாசம்.
 @jillthanni  விடுதலைச் சிறுத்தைகள் 10 இடங்களிலும் அதிர்ச்சித் தோல்வி #ஆமாம் இவிங்க பெரிய வீனஸ் வில்லியம்சு பாரு.
@rajeshjothi என்ன தான் சந்தோசமா இருந்தாலும் “இந்தம்மா” வந்து என்னென்னல்லாம் பண்ண காத்திருக்கோனு ஒரு பயம் இருக்க தானே செய்யுது?#மனசாட்சி
@raghuji  இனி கூடிய சீக்கிரம் 500 கோடி செலவில் “சசிகலா பிக்சர்ஸ்” பெருமையுடன் வழங்கும் “எந்திரன் பார்ட் 2”-வை எதிர்பார்க்கலாமா?#prediction.

@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!

@umakrishh ஏதோ அடிமைகள் போல வீட்டு வாசலில் காவல் காத்தவர்களுக்கு உயிர் கொடுத்த சகாயம் அவர்களுக்கு ஒரு சபாஷ்..
@Alex_Pandian இந்தத் தேர்தலில் மிகவும் வருத்தப்படிருக்கக் கூடிய ஒரு நபர் ஸ்டாலின், அவரது உழைப்பெல்லாம் சகோதர, சகோதரியின் செயல்களால் வீண்
@Pattapatti ஊழல் பண்ணீட்டு.. வெட்கமேயில்லாமல் ஓட்டு கேட்டால் இதுதான் கதி..( இது அம்மாவுக்கு பொருந்தும் உடன்பிறப்பே..வெட்கம் தவீர்)
@gbsivakumar RT : ரஜினி கிரிக்கெட் பார்க்க போனார். இந்தியா வென்றது. ரஜினி அதிமுகவுக்கு ஓட்டு போட்டார். அதிமுக வெல்கிறது. ரஜினி ராக்ஸ். #fb
நக்கீ கோவாலுவின் மீசை முடிகளை மொத்தமாக கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு கொடுக்கப்படும்!

@writermugil யாராவது ‘வளர்ப்பு மகன்’கள் எங்கேயாவது இருந்தால், உடனே எந்தப் பெண்ணையாவது இழுத்துக் கொண்டு போயஸுக்கு ஓடவும். கல்யாணம் செய்து வைக்கப்படும்.
@nirujah தோல்வியை பார்த்த போது ஒரு நிமிடம் கண்கள் பனித்தன. பழைய வடுக்களின் வெளிப்பாடோ! பழிதீர்த்த திருப்தியோ! #ஓர்_ஈழத்தமிழன்_உணர்வு
@kavi_rt ஏன் அதிமுக ஜெயிக்கும்போது மட்டும் மிருகபல மெஜாரிடி கிடைக்கிறது? இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
நன்றி தமிழருவி மணியன்! உங்க பேச்சக்காட்டிதான் வீட்ல கொஞ்சம் பேர்த்த திமுகவுக்கு எதிரா வாக்களிக்க வைக்க முடிஞ்சது.

@vg_s திமுக வீழ்ச்சிக்குக் கொண்டாடும் நாம், அதிமுக தோற்று திமுக ஜெயிப்பதற்கும் கொண்டாட வேண்டியிருக்கும். இரண்டுமே விஷத்தில் புழுத்த புழுக்கள்.
@naiyandi நான் தாவி விட்டால் அது நடந்து விட்டால்..# என்ற ராம்தாஸ் பாடலுக்கு பின்னணி கொடுக்க வருகிறார் வீரமணி
@RajanLeaks  திருடுனதாலயும் தான் திமுக,காங். தோத்துச்சு! ஆனா திருடுனதால மட்டும் இல்ல! – கபில் சிபல் # சூப்பர் கருத்துமுத்து.

@rajarajan_r: சட்டு புட்டுன்னு ஒரு ஸ்கூல் ல இல்லேன்னா காலேஜ் ல join பண்ணனும் # லேப்டாப் கிடைக்கும்.

@senthilcp நான் சட்ட சபைக்கு கோட் சூட் அணிந்தே வருவேன்,ஓப்பனிங்க் ஃபைட் ரொம்ப முக்கியம் -கேப்டன் நிபந்தனை,கவர்னர் திகைப்பு.
@TBCD செயா , செயா + ல் நிறுத்தாமல் விளம்பரங்களா ஓடுது…டேய் 5 ஆண்டுகள் இருக்கு…..மெதுவா சம்பாதிங்க..இப்ப செய்தியயைப் போடுங்க !
நன்றி நண்பர் பாரத் பாரதி: http://bharathbharathi.blogspot.com
 இனி அஞ்சு வருசம் அவன் கைல சிக்காம எப்படி ஓட்டுவேன்……..அவ்வ்வ்வ்வ்வ்வ்……….!
அவன எங்கேய்யா தேடுறது? சிக்க மாட்டாங்கிறானே? ஒருவேள கூகிள்ல தேடிப் பாக்கலாமா?
 என்னது சிக்கிட்டானா? அவனை அப்படியே புடிச்சு வைங்கய்யா இதோ வந்துடறேன்…!
 அப்பாடா இனி தைரியமா அடிக்கலாம், மொதல்ல ஒரு நல்ல பீர் கப்பு வாங்கனும்…!
அந்தப் பய மட்டும் மாட்டுனான்னா இனி ஸ்ட்ரெயிட்டா ஷூட்டிங் சார்ஜ்தாண்டா……..!
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கமா.. சட்டசபைக்கு போய்ட்டு உடனே ஓடி வந்திடுறேன்..!
போய்ட்டானா….?

நேரம் இருந்தா பாகம் 2 படிச்சுட்டு போங்க1