ஆணி

Posted: ஏப்ரல் 19, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:,

சர்தார் வீடு கட்டிக் கொண்டிருந்தார்.. அவரே தச்சு வேலையும் செய்தார்.. ஒரு சன்னலைப் பொறுத்துவதற்காக ஆணி அடித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு செய்யும்போது… சில ஆணிகளை அடிப்பார்..சிலவற்றை தூக்கிப் போட்டுவிடுவார்.. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்..

” இந்த ஆணியெல்லாம் நல்லாதானே இருக்கு.. ஏன் தூக்கிப் போட்டுட்டே..?

” முட்டாள்.. நல்லா பாரு.. கூர் முனை என் பக்கம் இருக்கற ஆணியா இருந்தா எப்படி அடிக்க முடியும்..? கொண்டைப் பக்கம் என்னை நோக்கி இருந்தால் தானே அடிக்க முடியும்..?

இதை கேட்ட அந்த நண்பர் சொன்னார்
” ஹா… ஹா… இதுக்குதாண்டா நாமன்னா எல்லாரும் ஏளனம் பண்றாங்க.. அறிவு கெட்டவனே.. கூர் முனை நம்ம பக்கம் இருந்தா அதெல்லாம் சுவற்றுக்கு அந்தப் பக்கம் அடிக்கிற ஆணி..அதை வீட்டுக்கு உள்பக்கம் அடிக்க வேண்டியது தானே.. ஏன் தூக்கி போடறே..??!!!

Courtesy: FB

பின்னூட்டங்கள்
  1. ஹா… ஹா… நல்ல நண்பர்… நல்ல அறிவுரை…!

  2. வினோத் சொல்கிறார்:

    அருமையான பகிர்வு படித்தேன் ரசித்தேன்….

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!