அரசியல்வாதி (மேடையில்) : விலைவாசி உயர்வு திரும்பக்
குறையும் வரை நான் சாகாவிரதம் இருக்கப் போகிறேன்
என்பதை மக்களே, உங்கள்முன் உறுதியிட்டுக் கூறிக் கொள்கிறேன்!!!
………………………………………………………………………………………………………………………………
தொண்டர் 1 : பதவி பெருசா, குடும்பம் பெருசா?
தொண்டர் 2 : பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெருசு!
……………………………………………………………………………………………………………………………..
தளபதி: மன்னா, காளைப் படை ஒன்றை நமது படையில்
சேர்ப்போமா?
மன்னர்: நான்தான் காலையே படையாக வைத்து
இருக்கிறேனே, காளைப் படை என்று எதற்கு தனியாக?
இருக்கிறேனே, காளைப் படை என்று எதற்கு தனியாக?
……………………………………………………………………………………………………………………………
தலைவர் : நாங்கள் போனமுறை 500 கோடி ஊழல் செய்தோம்;
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்…
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்…
தொண்டன் 1: தலைவர் என்னப்பா சொல்றாரு?
தொண்டன் 2: இது கொள்ளை விளக்க பொதுக் கூட்டமாம்!
………………………………………………………………………………………………………………………….
அரசன் (செய்தி கொண்டுவந்த புறாவைப் பார்த்து ) : புறாவே,
வா! உன்னை வறுக்க வறுக்க என்று வரவேற்கிறேன்.
வா! உன்னை வறுக்க வறுக்க என்று வரவேற்கிறேன்.
…………………………………………………………………………………………………………………………
விமான நிலைய அதிகாரி: சார் நீங்க அளவுக்கு அதிகமாகக்
குடித்திருக்கிறீர்கள். உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது.
பயணி: அப்படின்னா சரக்கு விமானத்திலயாவது ஏத்திக்குங்க சார்!
………………………………………………………………………………………………………………………….
தலைவர் ( மேடையில்) : நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக இலவச அவல்
திட்டம் கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
………………………………………………………………………………………………………………………….
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக இலவச அவல்
திட்டம் கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
………………………………………………………………………………………………………………………….
–தூங்கும்போது செல்போன் பேசறாமாதிரி கனவு
கண்டேன்டா..
கண்டேன்டா..
–அப்புறம் என்ன ஆச்சு?
–விடிஞ்சதும் போன்ல பேலன்ஸ் இல்லடா!
………………………………………………………………………………………………………………………..
நண்பன் 1: காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுரமாதிரி
வசதி செஞ்சி வச்சிட்டுப் போயிருக்காரு எங்க தாத்தா!
நண்பன் 2: அவ்வளவு சொத்து வசதியா?
நண்பன் 1: இல்லடா, நல்ல ஸ்ட்ராங்கா மர பெஞ்ச் செஞ்சி வச்சிட்டாரு…!
…………………………………………………………………………………………………………………………
சேவகன்: மன்னா, போர் நிறுத்தம் ஆகிவிட்டது…மன்னன்: கண்கள் பனித்தன! இதயம் இனித்தது!!
ரசித்த இடம்: நிஜாம் பக்கம்
Advertisements