வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.
அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாது அப்பா
இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு?
நீதி: சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை.
ஆங்கில மூலம்: http://rammalar.wordpress.com


வேலைக்காரனின் வாக்குமூலத்தால் தான், பிரச்னை பற்றிய தீர்விற்கான வழிகிடைத்தது. புரிந்து வாழ வேண்டுமென்பதனை சொல்லாமல் சொல்லிய நண்பருக்கு வாழ்த்துக்களும்…பாராட்டுதல்களும்!
வருகைக்கும் கமேண்டிற்கும் நன்றி அட்சயா!
வேலைக்காரன் சொல்வதும் சரிதானே
சுவாரஸ்யமான வித்தியாசமான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்
summa nachunnu irukku, kudumba thalaivarukku nethiadi kodutha velaikkaran
வருகைக்கும் கமேண்டிற்கும் நன்றி முபாரக்!
hallo kathai nalla iruku tamilil comment poduvathu eppadi?
நான் கூகிளின் transliteration உபயோகிக்கிறேன். அங்க போய் டைப் பண்ணிட்டு காப்பி – பேஸ்ட் பண்ணிக்கலாம்.
வருகைக்கும் கமேண்டிற்கும் நன்றி சிட்டுகுருவி